Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maamiyaar 65@hotmail.com
Maamiyaar 65@hotmail.com
Maamiyaar 65@hotmail.com
Ebook141 pages51 minutes

Maamiyaar 65@hotmail.com

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பம் என்பது அழகான மண்டபம் மாதிரி. அதுல குடும்ப உறுப்பினர்கள்தான் தூண்கள். எல்லா தூண்களும் சமமான வேலைப்பளுவைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இதனையறிந்த கல்யாணராமன், தன் மனைவி ஜானகிக்காக எடுத்த முடிவு என்ன? ஜானகியின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் காண வாசிப்போம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580136909139
Maamiyaar 65@hotmail.com

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Maamiyaar 65@hotmail.com

Related ebooks

Related categories

Reviews for Maamiyaar 65@hotmail.com

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maamiyaar 65@hotmail.com - Kalaimamani Kovai Anuradha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாமியார் 65@hotmail.com

    (நகைச்சுவை மேடை நாடகம்)

    Maamiyaar 65@hotmail.com

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha
    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 18

    காட்சி - 19

    காட்சி - 20

    காட்சி - 1

    இடம்: ஜானகியின் வீடு.

    பாத்திரங்கள்: ஜானகி, லோகபுஷ்களா, கல்யாணராமன், சங்கர், (பிச்சைக்காரன் குரல்) அசரீரி மனிதன்.

    (லோகபுஷ்களா பாட்டி 85 வயது. பிச்சோடா. அதில் மல்லிகைப் பூ. கயிறு கட்டிய ஒரு கோல்ட் பிரேம் மூக்கு கண்ணாடி. இரண்டு வடம் செயின் இரண்டு, தாலிக் கொடி. கையில் வாக்கிங் ஸ்டிக். நைட்டி. இந்த வயதிலும் மிடுக்கான நடை. ஆனால் கொஞ்சம் சாய்த்து சாய்த்து நடக்கும் அழகு.)

    (பாட்டி டென்ஷனுடன்அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருக்கிறாள்.)

    (கல்யாணராமன் கையில் ஒரு பையுடன் ரேஷன் கடைக்குப் போவதற்கு வெளியே வருகிறார். அம்மாவிற்கு நமஸ்காரம் செய்துவிட்டு போவது அவர் வழக்கம்.)

    கல்யாணராமன்: அம்மா.... நான் போயிட்டு வரேன்....

    (கல்யாணராமன் விழுந்து வணங்க முயற்சிக்க, லோகாம்பாள் வேறு பக்கம் டென்ஷனுடன் போதல். இரண்டு முறை முயற்சி மூன்றாவது முறை பொறுமையிழந்த கல்யாணராமன்)

    கல்யாணராமன்: என்னம்மா இது.... வெளிய போகும் போது ஆசீர்வாதம் வாங்கிண்டு போகலான்னா... கோவில் யானை மாதிரி ஒரு எடத்துல நிக்க மாட்டேங்கறயே...

    லோகாம்பாள்: உனக்கு நான் இன்னைக்கு ஆசீர்வாதம் பண்ணமாட்டேன்டா...

    கல்யாணராமன்: ஏம்மா...?

    லோகாம்பாள்: என்னோட பிரச்சனை புரியாம நீ வெளிய போறயே...

    கல்யாணராமன்: இல்லம்மா... நான் ரெண்டு மூணுதரம் போன் பண்ணியாச்சு... இப்ப ஆயிடும்... அப்ப ஆயிடும்னு சொல்றான்... ஆனா இழுத்தடிக்கிறான்...

    லோகாம்பாள்: சரி... உன்னால முடியலே... இந்த ஜானகி ஸ்டெப் எடுக்கக் கூடாது? ஜானகி... ஜானகி... இங்க வா...

    ஜானகி: (உள்ளேயிருந்து வந்து) என்னம்மா?

    லோகாம்பாள்: ஏண்டீ... நீயாவது அந்த உலகநாதனை ஒரு நடை நேரில பார்த்து சொல்லிட்டு வரக்கூடாதா?

    ஜானகி: காய் வாங்கப் போகும்போது அந்த வழியாத்தான் போனேன்... ஆனா ஆபீஸ் திறக்கலேம்மா... செல் பண்ணினா... ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான்...

    லோகாம்பா: நீ மேலோட்டமா பார்த்திருப்பே... ஆபீஸ் பக்கம்தானே வீடு. ஒரு எட்டு போயி சொல்லிட்டு வந்திருக்கலாமோல்லியோ... எல்லாம் தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்...

    கல்யாணராமன்: என்னம்மா... ஒரு நாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கக் கூடாதா?

    லோகாம்பாள்: உங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்டா... ஆனா... எனக்கு தலையைப் பிய்ச்சிக்கிற மேட்டர்... என் வயசுல இருந்தால்தான் உங்களுக்கு அந்த கஷ்ட்டம் தெரியும்...

    (அப்போது பேரன் சங்கர் அங்கே டவலுடன் குளிக்க போகிறான்.)

    சங்கர்: என்ன இங்க கலாட்டா...?

    ஜானகி: எல்லாம் உன் பாட்டி பிராப்ளம்தான்...

    லோகாம்பாள்: ஆமாண்டியம்மா... என்னோட விஷயம்னாலே உங்களுக்கு பிராப்ளமாதான் தெரியும்...

    சங்கர்: அட விஷயத்தைச் சொல்லு பாட்டி...

    லோகாம்பாள்: காலையில இருந்து கேபிள் வரலேடா... சுப்ரபாதம், காலை மலர் பார்க்கலேன்னாலும் தொலைஞ்சு போறது... 10½மணியில இருந்து சீரியல் ஆரம்ப்பிச்சிருவான்... இப்பவே 9, நான் என்ன பண்ணுவேன்... உடம்பெல்லாம் ஒரு ஆட்டம் ஆடறது...

    சங்கர்: (தூ என்று துப்புவது போல அவன் செய்ய)

    லோகாம்பாள்: என்னடா... உனக்கு நான் பார்க்கிற சீரியல் கிண்டலா தெரியறதா...? உங்களை மாதிரி நான் நைட் 12 மணி வரைக்கும் ஜாமக் கோடங்கி மாதிரி மிட்நைட் மசாலாவா பார்க்கறேன்.

    சங்கர்: (சமாளித்து) பாட்டி... வாயில ஏதோ தூசி பாட்டி... அதுதான் துப்பினேன்... உன் சீரியலை பழிச்சி துப்பலே... கவலைப்படாதே... விட்டுப்போன எபிசோட்டை எல்லாம் நெட்ல டவுன்லோட் பண்ணி நான் உனக்கு காட்டறேன்...

    லோகாம்பாள்: ஆமாண்டா... செத்ததுக்கு வான்னா... பத்துக்கு வந்து நின்ன கதையாதான் இருக்கு... இங்க பாருங்கோ... இன்னிக்கு அனுபல்லவி ஆரம்பிக்கறதுக்குள்ள கேபிள் வரலே... நான் உண்ணாவிரதம்தான்... சொல்லிப்பிட்டேன்.

    கல்யாணராமன்: என்னம்மா... அரசியல் கட்சி மாதிரி ஆரம்பிச்சிட்டே?

    ஜானகி: ஆமா... போன மாசம் 10 ந்தேதி கூடத்தான் கேபிள் வரலே... உண்ணாவிரதம்னு அனொன்ஸ் பண்ணினேள்... அப்புறம் நாங்க எல்லாம் வெளியே போயிட்டு திரும்பி வந்தப்போ பார்த்தா கிச்சன்ல வச்சிருந்த 4 அடை அவியல் மிஸ்சிங்...

    லோகாம்பாள்: சரிடி... அபூர்வமா நீ அடை அவியல் பண்ணினே... நான் அது தெரியாம உண்ணாவிரதம்னு சொல்லிட்டேன்... அதை பெரிசு பண்ணாதே...

    (அப்போது டீபாயில் உள்ள செல் ஒலிக்க, கல்யாணராமன் எடுத்து பேசுகிறார்.)

    கல்யாணராமன்: உறலோ... அப்படியா...? வெரிகுட்... உயிரே இப்பத்தான் வந்துது... தேங்ஸ் சார்... அம்மா... கேபிள் சரிபண்ணியாச்சாம்... இன்னும் 5 நிமிஷத்துல வந்துருமாம்... போருமா...?

    லோகாம்பாள்: உலகநாதன் ரொம்ப நல்லவன்... தெய்வே மனுஷ்ய ருபேனன்னு அவன்தான் எங்க மாதிரி வயசானவாளுக்கு எல்லாம் தெய்வம்... சரி ஜானகி... டிபனைக் கொண்டா... முடிச்சுண்ட்டா. சீரியலுக்கு உட்கார சரியா இருக்கும்...

    ஜானகி: எடுத்துண்டு வரேன்...

    (தலையில் அடித்துக்கொண்டு சங்கர், பல் துலக்கபோக, ஜானகி உள்ளே போக.)

    கல்யாணராமன்: சரிம்மா... என்னை ஆசீர்வாதம் பண்ணு... வெளிய போறேன்...

    லோகாம்பாள்: ஏண்டா... கல்யாண ராமா... போருக்கா போறே...? ரேஷன் கடைக்குதானே போறே? நமஸ்காரம் எதுக்கு?

    கல்யாணராமன்: அம்மா... இப்போ... ரேஷன் கடையில க்யூ இருக்கக் கூடாது... இருந்தாலும் நம்ம டர்ன் வரும்போது சக்கரை தீர்ந்து போகக்கூடாதுன்னு வேண்டிண்டு நமஸ்காரம் பண்றேன். உனக்கென்ன...? ஆசீர்வாதம் பண்ணி அனுப்பேன்... காசா...? பணமா?

    லோகாம்பா: நல்லா இருடா... வரும்போது ஞாபகமா ரெண்டு புளிப்பு மிட்டாய் வாங்கிண்டு வா...

    கல்யாணராமன்: ஜானகி... நான் ரேஷன் கடைக்கு போயிட்டு வரேன்... ஜானகி...

    ஜானகி: (வந்து கொண்டே) இதோ வந்துட்டேன்னா... அம்மா... இவரை நான் அனுப்பிச்சிட்டு வந்துடறேன்... அடுப்புல பால் வச்சிருக்கேன். கொஞ்சம் அடுப்புகிட்ட இருங்களேன்... வந்து இட்லி எடுத்துண்டு வரேன்...

    லோகாம்பா: (ஒன்றும்பேசாமல் பெஞ்சில் சென்று உட்கார்ந்து விடுகிறார்.)

    ஜானகி திரும்பி வந்து

    ஜானகி: என்ன இது...? தீய்ஞ்ச நாத்தம் வருது...

    (உள்ளே ஓடி, பின் திரும்பி வந்து, இட்லியை வைத்த தட்டை மாமியார் கையில் கொடுத்துவிட்டு) சாப்பிடுங்கோ...

    ஏம்மா... கொஞ்சம் அடுப்புக்கு பக்கத்துல இருங்கோன்னேன்... பாலை பொங்க விட்டுட்டேளே...

    லோகாம்பா: இங்க பாருடீம்மா... நான் மாமியார்... நீ போன்னா போகணும்... வான்னா வரணுமா? அது அதுக்கு வயசு

    Enjoying the preview?
    Page 1 of 1