Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pavithra
Pavithra
Pavithra
Ebook147 pages52 minutes

Pavithra

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேதம் படித்த கனபாடிகளின் மகள் பவித்ரா, அமெரிக்காவில் வேலை பார்க்கும் கிரீன் கார்ட் ஹோல்டரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். அவளின் ஆசை நிறைவேறியதா? பவித்ராவை ஒருதலையாக விரும்பும் கணேசனின் எண்ணம் ஈடேறியதா? திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தத்தைவிட மெடிக்கல் சர்டிபிகேட் முக்கியம் என்பதை காண வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateMay 20, 2023
ISBN6580136909140
Pavithra

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Pavithra

Related ebooks

Reviews for Pavithra

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pavithra - Kalaimamani Kovai Anuradha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பவித்ரா

    (பெண்ணே... ஏழு அடிகள் எடுத்துவை... என் பின்னே...)

    (மேடை நாடகம்)

    Pavithra

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கதைச்சுருக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்டி 12

    காட்சி 13

    காட்சி 14

    காட்சி 15

    காட்சி 16

    காட்சி 17

    காட்சி 18

    காட்சி 19

    கதாபாத்திரங்கள்

    1. மகாதேவ கனபாடிகள் - வயது 55.

    2. வேதாம்பாள் - கனபாடிகள் மனைவி வயது 50.

    3. பவித்ரா - கனபாடிகள் பெண் – வயது 25.

    4. கணேசன். - கனபாடிகள் உதவியாளர் - வயது 30.

    5. காலண்டர் கோபாலன் - மச்சினன் - வயது 45.

    6. சங்கர பாரதி - கனபாடிகள் மாப்பிள்ளை – வயது 30.

    7. பஞ்சமூர்த்தி - சங்கர பாரதியின் தந்தை - வயது 62.

    8. ருத்ரன் - அமெரிக்காவில் வாழ்பவர் - வயது 30.

    9. சர்வர் சுந்தரம் - கனபாடிகளின் நண்பர் - வயது 55.

    கதைச்சுருக்கம்

    மகாதேவ கனபாடிகள் வசதியுள்ள, செல்வாக்கான புரோகிதர். ஆச்சார சீலர். ஊரில் எல்லோராலும் போற்றப்படுபவர். அவரின் சொல்படி நடக்கும் தர்மபத்தினி வேதாம்பாள். அவர்களுக்கு பவித்ரா என்ற அழகிய பெண். எம்.சி.ஏ. படித்த பவித்ரா அமெரிக்க கனவுகளில் மிதக்கிறாள். அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு க்ரீன் கார்டு ஹோல்டர் மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறாள். ஆனால் கனபாடிகளுக்கு தன் ஒரே பெண்ணை கடல் கடந்து கொடுப்பதில் விருப்பமில்லை. இது குடும்பத்தில் பிரச்சினையாக இருக்கிறது.

    கனபாடிகளின் சிஷ்யன் கணேசன்... நன்கு வேதம் படித்தவன், எம்.ஏ. பட்டதாரி. மனதார பவித்ராவை விரும்புகிறான். தான் குடுமி வைத்த புரோகிதன்... தன்னை பவித்ரா விரும்புவாளா என்பதில் அவனுக்கு சந்தேகம். ஆகையால் ஒரு தலையாக தன் காதலை வளர்த்து வருகிறான்.

    காலண்டர் மாமா என்று அன்போடு அழைக்கப்படும் கோபாலன் கனபாடிகளின் மச்சினன். திறமையான ஜோஸ்யன். ஆனால் அவனின் ஜோஸ்யத்தை கனபாடிகள் மதிக்கமாட்டார்.

    கனபாடிகள் பார்க்கும் வரனை எல்லாம் பெண் பார்க்கும் படலத்திலேயே செல்போட்டு தடுத்து நிறுத்தி விடுகிறாள் பவித்ரா. இது யாருக்கும் தெரிவதில்லை... ஏற்பாடு செய்த வரனெல்லாம் தட்டிப்போவது குறித்து கனபாடிகள் கவலைப்படுகிறார். என்றாவது ஒரு நாள் அப்பா அமெரிக்கா மாப்பிள்ளைக்கு பச்சைக்கொடி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாள் பவித்ரா.

    இதற்கு நடுவில் ஜோஸ்யர் மாமா கணேசனின் ஜாதகத்தைப் பார்த்து, அவனுக்கு நிச்சியம் விரும்பிய பெண்தான் மனைவியாக வருவாள் என்று அடித்துச் சொல்கிறார். கணேசன் பவித்ராவுடன் கனவு காண்கிறான். அவன் தன் விருப்பத்தை பவித்ராவிடம் சொல்ல வரும்போது, பவித்ரா அவனிடம் தன் அமெரிக்க கனவைச் சொல்ல, தன் ஆசைகளை அப்படியே மனதில் போட்டு புதைத்து விடுகிறான் கணேசன். அப்போது கல்யாண ஏற்பாடுகள் நின்றுபோவது பவித்ராவினால்தான் என்பதையும் தெரிந்து கொள்கிறான். கனபாடிகளுடன் பேசி எப்படியாவது அமெரிக்க மாப்பிள்ளைக்கு சம்மதிக்க வைப்பதாகவும் இனிமேல் எந்த வரனையும் செல்போன் செய்து தடுத்து நிறுத்த கனபாடிகளை நோகடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறான்.

    கனபாடிகள் மாமா மேல் கணேசன் வைத்திருக்கும் பாசத்தினாலும், பவித்ராவின் மேல் வைத்திருக்கும் தூய அன்பினாலும் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ முயற்சி எடுக்க முடிவு எடுக்கிறான்.

    முதலில் கனபாடிகளை அமெரிக்க மாப்பிள்ளைக்கு சம்மதிக்க வைக்கிறான். பிறகு பஞ்சமூர்த்தி என்பவரின் மகன் சங்கர் பாரதியின் ஜாதகத்தை வாங்கி வருகிறான். சங்கர் பாரதி எம்.எஸ் படித்துவிட்டு அமெரிக்காவில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் மாப்பிள்ளை. அமெரிக்க கனவில் இருக்கும் பவித்ரா அவனுக்கு கழுத்தை நீட்ட சம்மதிக்கிறாள். பெண் பார்க்கும் படலம் நடந்து முகூர்த்தமும் குறிக்கப்படுகிறது.

    ஆனால் வெளியூர் சென்றிருக்கும் ஜோஸ்யர் கோபாலன் போன் மூலம் சங்கர் பாரதியின் ஜாதகத்தைக் கேள்விபட்டு, அது சேராது... கல்யாணத்தை நிறுத்து என்று கணேசனிடம் கூறுகிறார். ஆனால் கணேசன் அதை மறைத்துவிடுகிறான். ஏனென்றால் தன் மனதுக்கு பிடித்த பெண்தான் மனைவியாக வருவாள் என்று சொன்ன ஜோஸ்யர்தானே...? அதுவே பலிக்கவில்லை... இது மட்டும் எவ்வாறு பலிக்கும் என்ற நினைத்துவிடுகிறான். எப்படியோ பவித்ரா சந்தோஷமாக அமெரிக்கா செல்வதை கெடுப்பானேன் என்றும் நினைத்து விடுகிறான்.

    பல இடங்கள் பார்த்து நொந்துபோன கனபாடிகள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பார்த்த ஜாதகப் பொருத்தத்தையே நம்பிவிடுகிறார். கோபாலனின் வேண்டுகோள் எடுபடுவதில்லை. கல்யாணத்திற்குகூட வரமுடியாமல் கோபாலன் ஒரு விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டி வந்ததால், இங்கு நடந்தது ஒன்றுமே அவருக்கு தெரிவதில்லை.

    திருமணம் முடிந்த கையோடு அமெரிக்கா புறப்படுகிறாள் பவித்ரா. போய் சேர்ந்த தகவல் தவிர வேறு எந்த போனும் வருவதில்லை. ஒரு மாதம் கழித்து அம்மாவிற்கு போன் செய்து அழுகிறாள். விவரம் கேட்பதற்குள் லைன் கட் ஆகிவிடுகிறது.

    தான் ஆசையாக வளர்த்த மகளுக்கு என்னவாயிற்றோ என்று கனபாடிகள் குடும்பம் கலங்குகிறது. அடுத்த வாரம் இன்னொரு போன்... சங்கர் பாரதியிடம் இருந்து வருகிறது... அதில்... உங்கள் மகளின் நடவடிக்கை சரியில்லை... அவளை 4 நாட்களாக காணவில்லை என்று கூறுகிறான். துடித்துப் போகிறார் கனபாடிகள். ஆசையாக வளர்த்த மகளுக்கு இப்படி ஒரு கதியா என்று புலம்புகிறார். தவறு மாப்பிள்ளை மீதா. பெண் மீதா என்ற தெரியாமல் குழம்புகிறார்கள்.

    கனபாடிகள் வெளியூர் வேலையாகச் சென்றிருக்கிறார். அப்போது பவித்ரா, சங்கர் பாரதியிடம் சொல்லாமல் அமெரிக்காவில் தன் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கும் ருத்ரன் என்பவருடன் இந்தியா வந்து விடுகிறாள்.

    ஊரில் இருந்து வந்த கனபாடிகள் அவளின் செய்கையைக் கண்டிக்கிறார். அனுசரிச்சிப்போக புத்திமதி சொல்கிறார். ஆனால் பவித்ராவோ பிடிவாதமாக சங்கர் பாரதியைப் பிடிக்கவில்லை என்றும்... அவனுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்றும் கூறிவிடுகிறாள்.

    பின்னாலேயே சங்கர் பாரதி இந்தியா வந்துவிடுகிறான். கனபாடிகளின் வீட்டிற்கு வந்த அவனும், அவன் அப்பா பஞ்சமூர்த்தியும்... கனபாடிகளின் பெண் இப்படி நடந்து கொள்ளலாமா என்று கத்துகிறார்கள். சப்தபதி முதலான மந்திரங்களைச் சொல்லி கைபிடித்த ஒரு கணவனை உதாசீனம் செய்து வேறு ஒருவனுடன் வந்துவிட்ட பவித்ராவை புத்தி சொல்லி அமெரிக்கா அனுப்புமாறும், இல்லையென்றால், கனபாடிகள் குடும்பத்தில் இப்படி நடந்துவிட்டது என்று நோட்டீஸ் அடித்து ஊர் பூராவும் தந்து மானத்தை வாங்கிவிடுவேன் என்ற பயமுறுத்திவிட்டு செல்கிறார் பஞ்சமூர்த்தி. பத்தாம் தேதி அமெரிக்கா செல்ல நாள் குறித்துவிட்டு செல்கிறான் சங்கர் பாரதி.

    கனபாடிகள் என்ன கூறியும் பவித்ரா மறுக்கிறாள். சங்கர் பாரதி தன்னை அமெரிக்காவில் கொடுமைப்படுத்துகிறான் என்றும் கண்டிப்பாக தான் அங்கு செல்லமாட்டேன் என்றும் கூறுகிறாள். கனபாடிகளோ கடைசி ஆயுதமான உயிர்த் தியாகத்தை எடுக்கிறார். அவள் மாப்பிள்ளையுடன் செல்லவில்லை என்றால், தான் தற்கொலை பண்ணிக்கொள்வேன் என்று கூறுகிறார்.

    இரவில் தனிமையில் அழும் பவித்ராவிடம் வந்த வேதாம்பாள், தனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1