Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aabasamalla
Aabasamalla
Aabasamalla
Ebook78 pages1 hour

Aabasamalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண் என்பவள் தனது ஆடையை கவர்ச்சியான ஆடையாகத்தான் பார்க்கவேண்டும் என்ற சமுதாயத்தின் ஆகச்சிறந்த ஆடை அரசியலை பெண்கள் புரிந்துகொண்டால் நலமாக இருக்கும் என்று சொல்லவே இந்த படைப்பு. இது என்னுடைய ஏழாவது படைப்பு.

Languageதமிழ்
Release dateApr 22, 2023
ISBN6580164309709
Aabasamalla

Read more from Karthi Sounder

Related to Aabasamalla

Related ebooks

Reviews for Aabasamalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aabasamalla - Karthi Sounder

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆபாசமல்ல

    Aabasamalla

    Author:

    கார்த்தி சௌந்தர்

    Karthi Sounder

    For more books

    https://www.pustaka.co.in/home/author/karthi-sounder

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    Epilogue

    1

    புலர்ந்தும் புலராத காலைவேளையில் வீட்டிற்குள் இன்னும் ஒருவரும் எழுந்துகொள்ளவில்லை என்பதற்கிணங்க அமைதியான சத்தத்தின் நடுவே படிகளில் கொலுசொலி கேட்க, அந்த வீட்டின் பெண் பிள்ளை ரம்யா தான் கீழே இறங்கி வந்துகொண்டிருந்தாள். M.Sc படிக்கும் பெண் என்றாலும் வெளியுலகம் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே பொத்திவைத்து வளர்க்கப்பட்டவள். ரம்யாவிற்கு அண்ணன் சந்தோஷ் சென்னையில் ஒரு கார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறான். அவளது தந்தை ராஜகோபால் என்ஜினீயர், தந்தை கோமதி இல்லத்தரசி. ரம்யாவிற்கு M.Sc முடித்த கையோடு M.phil சேர்ந்து விரிவுரையாளராக ஆக வேண்டும் என்ற எண்ணம். அவள் அம்மா கோமதிக்கோ இவள் படித்தது போதும், இவளுக்கு திருமணம் முடிக்கவேண்டும் என்ற எண்ணம்.

    ரம்யாவின் அண்ணன் சந்தோஷ் வேலைக்கு சென்று 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவனுக்கும் வயது 26 என்பதால், ரம்யாவிற்கு இப்போது திருமணம் முடித்தால் தான், அவனுக்கும் 27 வயதில் சரியாக மணம்முடிக்க முடியும் என்று பெற்றவர் கணக்குப்போட்டு வைத்திருந்தார். அவருக்கு ராஜகோபாலும் ஆமாம் சாமி போட, எப்போதும் தனக்கு ஆதரவாக பேசும் தந்தை இப்போது தாய்க்கு பரிந்துபேசுவது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

    எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம்ப்பா... என்று கெஞ்சினாள்.

    நான் இன்னும் கொஞ்சம் நாள் இங்கயே இருந்தா உங்களுக்கென்ன... என்று திட்டினாள்.

    உங்களுக்கு உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னா அவனுக்கு பண்ண வேண்டிதான... என்ன எதுக்கு கல்யாணம் பண்ண சொல்றீங்க... என்று ஆதங்கப்பட்டாள்.

    எதற்கும் பயனில்லாமல் போக, இன்று அவளை பெண் பார்க்க வருகிறார்கள். அவளுக்கு பாத்திருந்த பையன் அரவிந்த் பெங்களூரில் IT நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான் என்றும் பையன் வீடும் இவர்கள் ஊருக்கு பக்கத்துக்கு ஊர்தான் என்றும் அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட எல்லாம் பேசி முடிவாகிவிட்டது என்பதால் இன்று பூ வைக்க வருகிறார்கள். அதோடு பையனும் பொண்ணும் இன்னும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கவில்லை என்ற காரணத்தால் இருவரும் இன்று முதல் முறையாக பார்க்கப்போகிறார்கள்.

    விதி அவர்களுக்கு என்ன வைத்திருந்தது என்பதை தெரிந்துகொள்ள நாமும் அவர்களோடு பயணிப்போம்.

    2

    ரம்யாவின் படிப்பு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது என்று ஏற்கனவே பையன் வீட்டிற்கு தெரிவித்திருந்ததால், சம்பந்தத்தை உறுதிப்படுத்திக்கொள்ள பூ மட்டும் வைத்துக்கொள்வோம் என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள். ரம்யாவின் வீட்டில் அவள் படிப்பு முடிந்த பின்பே திருமணம் என்ற எண்ணம் இருந்தாலும், அரவிந்தின் வீட்டில் பெண்ணை மிகவும் பிடித்திருக்க, அவர்களுக்கு இந்த சம்பந்தத்தை விட்டுவிட மனதில்லை. அதனால் இரண்டு மாதங்கள் என்ன மூன்று மாதங்கள் சென்றாலும் பரவாயில்லை என்று சொல்லி, இன்று பார்க்க வருவதாக தகவல் சொல்லிவிட்டிருந்தனர். இவர்கள் தரகர் மூலமாய் வந்த வரன் அல்ல. ரம்யாவின் மாமாவிற்கு அரவிந்தின் அப்பா நெருங்கிய நண்பர். அரவிந்திற்கு பெண் பார்க்கிறோம் என்று அவரிடம் சொல்லிவைக்க, எனது மருமகளே பொருத்தமாகத்தான் இருப்பாள், அதுவும்போக நண்பர்களாய் இருக்கும் நாம் உறவாகிக்கொள்வோம் என்று அவர் ஆரம்பித்து வைத்த புது உறவு தான் இதெல்லாம். இரண்டு வீட்டு குடும்பங்களுக்கும் ஒருவரை பற்றி ஒருவர் நல்ல புரிதலும் விசாரிப்புகளும் இருந்திருக்க, இரண்டு தரப்பிலுமே திருப்தியாக இருந்தது. மனதில் சஞ்சலத்தோடு அழைந்துக்கொண்டு திரிந்தவள் ரம்யா மட்டுமே.

    இன்றும் பையன்... பையன் என்ன? மாப்பிள்ளை என்று முடிவே செய்துவிட்டார்களே! மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருகிறார்கள் என்று மனதிற்குள் கலவரம்

    Enjoying the preview?
    Page 1 of 1