Vinothamanavaley - Part 2
()
About this ebook
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி சொல்லவே இந்த கதை... உண்மை சம்பவங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது... லீனாவின் கடந்த காலம் தெரிந்த பின்னும் அவளையும் ஜான்னையும் விக்டரின் குடும்பம் ஏற்றுக்கொள்ளுமா? என்று தெரிந்துகொள்ள வாசியுங்கள் இந்த வினோதமானவளை...
Read more from Karthi Sounder
Aabasamalla Rating: 0 out of 5 stars0 ratingsUyirkolli Rating: 0 out of 5 stars0 ratingsVallavanukku Vallabi - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPaangi Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thindraai Rating: 0 out of 5 stars0 ratingsVallavanukku Vallabi - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSuvadugalum Thadangalum Rating: 0 out of 5 stars0 ratingsThottachinungi - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAttha Rating: 0 out of 5 stars0 ratingsVinothamanavaley - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsTabutharan Rating: 0 out of 5 stars0 ratingsThottachinungi - Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vinothamanavaley - Part 2
Related ebooks
Velli Nilave Vinotha Rating: 5 out of 5 stars5/5Yaar Kadavul Rating: 0 out of 5 stars0 ratingsVeetla Vibareethanga Rating: 0 out of 5 stars0 ratingsRaajinama! Rating: 0 out of 5 stars0 ratings100 Oru Pakka Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKangalin Jalangal Rating: 5 out of 5 stars5/5Pulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsIvarkalum Avarkalum Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Thedal Rating: 0 out of 5 stars0 ratingsதாம்பத்ய சர்க்கஸ்! Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 0 out of 5 stars0 ratingsNinaivey Sangeethamai... Rating: 4 out of 5 stars4/5Antha Ponnu Vendaam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Malligai Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solli Vilayadu... Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Idhazhil Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsAllopathiyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsUn Manaivi, En Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsYerikkadiyil Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsEn Kannin Oli Neengal Andro Rating: 0 out of 5 stars0 ratings1990’il Veliyana Aazhamana Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Ondru Than Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Petti Rating: 0 out of 5 stars0 ratingsChandra Pravaagam Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyor Thaalattu Paadava? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vinothamanavaley - Part 2
0 ratings0 reviews
Book preview
Vinothamanavaley - Part 2 - Karthi Sounder
https://www.pustaka.co.in
வினோதமானவளே - பாகம் 2
Vinothamanavaley - Part 2
Author:
கார்த்தி சௌந்தர்
Karthi Sounder
For more books
https://www.pustaka.co.in/home/author/karthi-sounder
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
ஜான் சொன்ன விஷயம் செவி வழியே கேட்டு மூளைக்குள் சென்று அதற்கு திரும்ப என்ன பதில் எதிர்ச்செயல் செய்வது என்பதுகூட மறந்துபோய் விக்டரின் பெற்றவர்கள் நிற்க, முதலில் தன்னிலை உணர்ந்து விக்டரின் அப்பா,
நீ என்னப்பா சொல்ற நாங்க...
என்று குழம்பியபடியே அவர் ஜானையும் விக்டரையும் மாறிமாறி பார்க்க,
நீங்க கேட்டது சரிதான். ஜான் லீனாவுக்கு பிறந்த பையன். நீங்க நினைச்சுட்டு இருக்குற மாதிரி அவளோட தம்பி கிடையாது.
என்று சொல்ல, அந்த உண்மையில், அதிலும் தன் மகனின் வாயில் இருந்தே கேட்ட அவனது அம்மா இன்னுமொருமுறை சிலிர்த்து,
என்னடா சொல்ற. ஜான் லீனாக்கு பிறந்த பையன்னா. அப்போ லீனா உன்னோட உண்மையான வயசு என்ன?
என்று அவர் கேட்க,
அவ என்னோட காலேஜ் ஜூனியர்தான். அவளுக்கு என்னோட ரெண்டு வயசு கம்மி. எனக்கு 33 வயசுன்னா அவளுக்கு 31 வயசு.
என்று விக்டர் எரிச்சலுடன் பதில் சொன்னான். லீனாவின் கடந்த காலம் பற்றி அவன் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று எண்ணியிருக்க, இன்று அவன் முன்னே எல்லாம் நடந்து முடிந்தது.
என்னடா சொல்ற. அப்புறம் எப்படி ஜான் அவ பையன். ஜானுக்கு 25 வயசாச்சே.
என்று யோசிக்க, விக்டர் ஒரு பெருமூச்சுவிட, ஜான் தொடர்ந்தான்.
எங்க அம்மா அப்பா பேரு பியூலா ஆரோன்’ன்னு உங்களுக்கு தெரியும். ஆனா அவங்க பழைய பேரு மீனாட்சி லட்சுமணன்.
என்று சொல்ல,
யாருன்னு தெரியுதாம்மா உனக்கு.
என்று விக்டர் இடுப்பில் கைவைத்தபடி சொல்ல,
அப்போ. நீ... நீ... தேவகி...? தேவியா...?
என்று அவர் லீனாவை பார்த்துக்கேட்க, அவள் ஆம் என்பது போல தலையசைத்து குனிந்து அழுதாள்.
அந்த குழந்தை.
என்று விக்டரின் அப்பா கேட்க,
அது நான்தான் ஜான்.
என்று ஜான் அவரைப் பார்க்க,
என்னடா சொல்றீங்க.
என்று நெஞ்சில் கைவைத்தபடி விக்டரின் தாய் அங்கேயே அமர்ந்துவிட்டார்.
அத்தை.
என்று லீனா பதற,
உன்னத்தான் என் மருமகளா என் வீட்டுக்கு கொண்டுவந்தேனா. அய்யோ கடவுளே இத்தனை நாளும் இது தெரியாம போச்சே.
என்று அவர் முந்தானையை முகத்தில் பொத்தியபடி அழுக, விக்டரின் அப்பா கூட எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டார்.
ஆம்... நாம் நினைப்பது சரியே. லீனா பத்து மாதம் தன் கர்ப்பத்தில் சுமந்து பிரசவித்த குழந்தைதான் ஜான். வெளியுலகம் இவர்களை வயதின் வித்தியாசம் கொண்டு அக்கா தம்பி என்று நினைத்தாலும், உண்மையில் அவர்கள் உறவு தாய் மகன் உறவு ஆகும். லீனா வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது என்று நாம் அவளது குழந்தைப்பருவத்தை திருப்பிப்பார்த்துவிட்டு வருவோமா?
விக்டர் ஊரையே சொந்த ஊராகக் கொண்ட மீனாட்சி, லட்சுமணன் தம்பதிக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து பிறந்தவள்தான் தேவகி. தங்கள் ஒரே மகளை செல்லமாக வளர்க்க, அவள் பிறந்த எட்டாவது மாதத்தில் அவளுக்கு முதல் முறையாக உதிரப்போக்கு ஏற்பட்டது. 8 மாத குழந்தைக்கு உதிரப்போக்கு ஏற்பட்டதும் அவளது பெற்றோர் பயந்துபோய் மருத்துவர்களை அணுக, அவர்கள் அவளுக்கு என்ன பிரச்சனை என்று இங்கு வைத்து கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவளை சென்னை பட்டணத்திற்கு அழைத்து சென்று பார்க்கும்படி சொல்ல, பெற்றவர்களும் பிள்ளையை தூக்கிக்கொண்டு சென்னை பட்டணம் சென்றனர்.
மருத்துவர்கள் அவளை பரிசோதித்து, அவளுக்கு Precocious puberty (முன்கூட்டிய பருவமடைதல்) என்னும் ஒரு வகையான மருத்துவ நிலை இருப்பதை தெரிவித்தனர். மருத்துவ உலகில் அரிதாக என்றாலும் இந்த நிலை உண்டு என்று விவரித்து சொல்ல, பெற்றவர்கள் அதிர்ந்து பேச்சற்று நின்றனர்.
என்ன சார் சொல்றீங்க. எங்களுக்கு புரியல.
என்று லட்சுமணன் தேவகியை பரிசோதித்த மருத்துவரை கேட்க,
பொதுவா மூளைல டியூமர் கட்டி அல்லது ஏதாச்சும் பலமா அடிபட்டா இப்டி நடக்கும்னு மருத்துவ உலகத்துல சொல்றாங்க. ஆனா அந்த மாதிரி இல்லாமகூட இப்டி நடக்கலாம். 12 வயசுக்கு மேல வயசுக்கு வர்ற பொண்ணுங்க ஒரு சில நேரங்கள்ல 10 வயசுலயே பெரிய மனுஷி ஆகுறது இல்லையா. அந்த காலத்துலதான் 18 வயசு வரைகூட ஒரு சில பெண்கள் வயசுக்கு வராம இருப்பாங்க. ஆனா இப்போ சீக்கிரமே எல்லாம் பெரிய புள்ளைங்க ஆகிடுறாங்க. உங்க பொண்ணு இன்னும் கொஞ்சம் சீக்கிரமே பெரிய மனுஷி ஆகிறுக்குறா அவ்ளோதான் மத்தபடி நீங்க பயப்படுற மாதிரி எதுவும் இல்ல.
சார் நீங்க ஏதேதோ சொல்றீங்க... ஆனா பிள்ளைய இப்டி ரத்தத்தோடு பாத்து பயமா இருக்கு சார்.
என்று மீனாட்சி பதற,
நீங்கதான் ரத்தத்தை பாத்து பதறுனீங்க. ஆனா குழந்தை அழவே இல்லையே எப்போவும் போலதான் நார்மலா இருக்குறா நீங்க மூணாவது நாள் கூட்டிட்டு வந்துருக்கீங்க அப்டினா மூணு நாள் உங்க பொண்ணு நல்லா சாப்பிட்டு தூங்கி உயிரோடதான இருந்துருக்குறா நீங்க யோசிக்கலையா?
இல்ல டாக்டர் தூங்கிட்டே இருந்தா எனக்கு பயமா இருந்தது.
1 வயசு வரை குழந்தைங்க பொதுவா ஒரு நாளைக்கு 12-16 மணி நேரம் தூங்குவாங்க அப்டி பாத்தா உங்க பொண்ணு நார்மலாதான் இருக்குறா.
வேற எதுவும் பிரச்சனை இல்லையே டாக்டர்.
எந்த பிரச்சனையும் உங்க பொண்ணு கிட்ட இல்ல. ஆனா உங்கள சுத்தி இனிமே நெறய பிரச்சனைகள் வரலாம். அதுக்கு நீங்க முன்னெச்சரிக்கையா இருக்கணும்.
புரியல டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க.
நம்ம வழக்கமா பொண்ணு பெரிய மனுஷி ஆனா சடங்கெல்லாம் வச்சு விழா நடத்துவோம் அது மாதிரி உங்க பொண்ணுக்கு பண்ண முடியாது சரியான வயசு வர்ற வரை நீங்க வெளிய சொல்லாம இருக்குறதே நல்லது. இல்லனா அத ஒரு குறை மாதிரி நினைச்சு உங்க பொண்ணுக்கு தாழ்வு மனப்பான்மை வர்ற மாதிரி ஆகிடும். அதவிட இன்னும் ரொம்ப முக்கியமான விஷயம், உங்க பெண்ணுக்கு ஒரு வயது வந்த பெண்ணின் பரிமாண வளர்ச்சி எப்படி இருக்குமோ அப்படிதான் உடல் அளவில் மாற்றம் இருக்கும் அப்டின்றதால நீங்க உங்க பொண்ணுக்கு ஏத்த மாதிரி டிரஸ் யூஸ் பண்ணனும்.
என்று இன்னும் அவர்களுக்கு ஏதேதோ அறிவுரைகள் கூறி அனுப்பிவைக்க, அவர்கள் வாழ்க்கையில் விதி வேறு ஒரு விளையாட்டை தீர்மானித்திருந்தது. அதையறியாமல், எப்போதும் போல அவளுக்கு குழந்தைகளுக்கான நாப்கின் அணிந்தே பழகினார்கள். கிராமத்தில் யாராகிலும் கேட்டால் கூட, ஒரே பெண் செல்லப்பெண் இந்த அளவு கூட செலவு செய்யவில்லை என்றால் எப்படி என்று மழுப்பிக்கொண்டிருந்தனர். தேவகியின் முதல் வருட பிறந்தநாளுக்கு பாட்டுபாவாடை உடுத்தி அவளை அலங்கரிக்க, உண்மையில் அழகுசிலையாய் நின்றாள். அக்கம் பக்கத்து வீடுகள், உறவினர்கள் என்று எல்லோருமே அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது சேர்த்து சொன்ன ஒரே விஷயம், ‘உன் பொண்ணு இப்போவே பெரிய மனுஷி மாதிரி கொள்ளை அழகா இருக்குறா. இன்னும் பெரிய பொண்ணு ஆனா எவ்ளோ அழகா இருப்பாளோ.’ என்றுதான். அந்த கூற்றில் மகிழ்ந்தாலும், பெற்றவர்களாய் பெண்ணின் பாதுகாப்பு குறித்து பயந்தே இருந்தனர் பெற்றவர்கள்.
நான்கு வயது வரை கைக்குள்ளயே வைத்து பழகியவர்கள் பெண்ணை நாலாம் வயதில் பள்ளியில் சேர்த்தனர். எப்போதும் போல எல்லோருக்கும் போலதான் அவர்கள் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருந்தது. சிறுவயதில் குண்டாக கொழுகொழுவென இருந்த பிள்ளையை அள்ளி தலைக்குமேல் தூக்கி தட்டாமாலை சுத்திதான் தன் பிள்ளையை கொஞ்சுவார் லட்சுமணன். அவளது உடலளவில் மாற்றம் இருந்தாலும் அவள் இன்னும் அவர்கள் வீட்டின் குழந்தை, செல்ல ராணி என்று அவர்கள் இருவருக்கும் எல்லாமுமாக இருந்தாள். தனது 5-வது வயதில் ஓர் நாள் பள்ளி சென்றவள், வயிறு வலிக்கிறது என்று வீட்டிற்கு பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டாள்.
இயல்பிலேயே சற்று பருமனாக இருந்த குழந்தை, அதோடுகூட அவளது உடலிலும் பருவப்பெண்ணின் மாற்றங்கள் இருந்தது. அவள் வயிறு வலிக்கிறது என்று சொன்னதும் ஒரு வேளை வெகுநாட்கள் கழித்து இந்த முறை மாதவிடாய் வலியுடன் வருகிறதுபோல என்று எண்ணி அவளை அழைத்து வந்தனர் அவளது பெற்றோர். வீட்டிற்கு வந்தும் அவளுக்கு மாதவிடாய் ஏற்படவில்லை, ஆனால் அவ்வப்போது வலிக்கிறது என்று சொன்னதால், மருத்துவரை அணுக, வயிறு சற்றே பெரிதாக வீங்கிருப்பதுபோல தோன்றியதால் ஸ்கேன் எழுதி அனுப்பினார்.
ஸ்கேன் ரிசல்ட் பார்த்துவிட்டு மருத்துவர் திகைத்தே போய்விட்டார், காரணம் சிறு பெண்ணிற்கு ஏதோ கட்டி வந்திருக்கும் போல என்று அவர் யூகித்திருக்க, வந்திருந்த ரிப்போர்ட்டில் அவள் 7 மாதம் கர்ப்பம் என்றும், அவளது கர்ப்பப்பையில் உள்ள சிசுவின் புகைப்படமும் சேர்த்து இணைக்கப்பட்டிருக்க, மருத்துவருக்கோ பெற்றவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. தலையை குனிந்து ரிப்போர்ட்டில் கண்கள் பதித்தபடி முன்நெற்றியை நீவிக்கொண்டிருந்தவரை பார்த்த லட்சுமணன் பயந்து போனார்.
என்ன சார். என் புள்ளைக்கு மறுபடியும் ஏதாச்சும் பெரிய பிரச்சனையா?
என்று லட்சுமணன் கலங்கிப்போய் கேட்க, தன் 5 வயது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டே புலம்பினார் மீனாட்சி.
ஐயோ கடவுளே... என் புள்ளய மட்டும் ஏன் இப்டி சோதிக்குற. என் புள்ளைக்கு என்ன டாக்டர் ஆச்சு ஏற்கனவே மாசாமாசம் பீரியட்ஸ் வந்து இந்த வயசுல கஷ்டப்படுறா இப்போ கொஞ்ச நாளாதான் அப்டி இல்லாம இருந்துச்சு.
என்று புலம்ப,
என்னமா சொல்றீங்க.
என்று டாக்டர் மறுபடியும் கேட்க, அவளது மருத்துவக்குறிப்புகள், சென்னையில் பார்த்துவந்த விவரம் எல்லாம் சொல்ல, அதன் பிறகு இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை அந்த மருத்துவரால்.
உங்களுக்கு என்ன சொல்றதுன்னு எனக்கு புரியல எப்படினு கேட்கவும் முடியல.
என்று டாக்டர் சொல்ல,
என்னவாயிருந்தாலும் சொல்லுங்க டாக்டர்.
என்று லட்சுமணன் சொல்ல,
உங்க பொண்ணு கர்ப்பமா இருக்குறா. அவ வயிறு பெருசா இருக்குறது கட்டின்னால இல்ல 7 மாச குழந்தை அவ வயித்துல இருக்குது குழந்தையோட அசைவுகளதான் என்னனு சொல்லத் தெரியாம உங்க பொண்ணு வயிறு வலின்னு சொல்லிருக்குறா நான் ரிப்போர்ட்ஸ் தப்பா மாத்தி கொடுத்துட்டாங்களோனு யோசிச்சா நீங்க சொல்றத எல்லாம் வச்சு பாக்கும் போது, இந்த ரிப்போர்ட்ஸ் பொய் இல்லனு உறுதியாகிடுச்சு.
என்ன டாக்டர் சொல்ரீங்க.
என்று மீனாட்சி அதிர்ந்து கேட்க,
உங்க பொண்ணு... சாரி... ஏதோ தப்பு நடந்துருக்கு ஸ்கூல்ல இல்லனா எங்கன்னு யாருன்னு பாருங்க.
என்று சொல்ல,
"ஐயோ என் பொண்ணு இப்போதான சார் UKG படிக்குறா அவங்க ஸ்கூல்ல பிரின்சிபால் கூட லேடிதான அது எலிமெண்டரி ஸ்கூல்.