Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deivam Thantha Poove
Deivam Thantha Poove
Deivam Thantha Poove
Ebook94 pages32 minutes

Deivam Thantha Poove

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரோஜா ஒரு ஏழை வீட்டு பெண். வாடகை தாயாக இருந்து ஒரு குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தைக்கு நேர்ந்தது என்ன? அந்த வாடகைத் தாயின் அன்பு பொய்த்துப்போகுமா? வாருங்கள் வாசிப்போம் இந்த தெய்வம் தந்த பூவே...

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580137109465
Deivam Thantha Poove

Read more from R. Sumathi

Related to Deivam Thantha Poove

Related ebooks

Reviews for Deivam Thantha Poove

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deivam Thantha Poove - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தெய்வம் தந்த பூவே

    Deivam Thantha Poove

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    ‘சரோஜா... ஏய் சரே...’

    முத்துவின் மெல்லிய கிசுகிசுப்பான குரல் காதில் விழுந்தாலும் தூங்குவதைப் போல் நடித்தாள் சரோஜா.

    கும்மிருட்டில் இடையே படுத்திருந்த மூன்று பிள்ளைகளையும் தாண்டி அவனுடைய கை நீண்டு அவளுடைய தோளை தொட்டு அசைத்தது.

    ஏய்... புள்ளே...

    என்னய்யா... என்றாள் அவளும் அதே கிசுகிசுப்பில்.

    எழுந்திரிச்சு வந்து பக்கத்துல படேன்.

    எதுக்கு இப்ப பக்கத்துல...?

    முணு புள்ளைய பெத்தவளாட்டமா பேசறே? என்னமோ நேத்துதான் வயசுக்கு வந்த பாப்பா மாதிரி கேட்கறே?

    போதும். இந்த கிளு கிளு பேச்செல்லாம். மூணுபுள்ளை பெத்த பொம்பளையா லட்சணமா நான் ஒழுங்காத்தான் இருக்கேன். நீதான்... என்னமோ நேத்துதான் தாலிகட்டின மாதிரி மாப்பிள்ளை கணக்கா இருக்கே.

    இப்ப பக்கத்துல வரப்போறியா இல்லையா?

    என்னால முடியாது. காலையில எழுந்து வேலைக்கு போவணும்.

    நீ வரமாட்டே! நான் வர்றேன்.

    மறுநிமிடம் இருட்டில் தட்டு தடுமாறி குழந்தைகளைத் தாண்டிக் கொண்டு வந்து அவளருகே படுத்தான்.

    அவளை இழுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

    விடுய்யா! உனக்கு கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாது. என் மனசுக்குள்ள எவ்வளவு கவலையிருக்குத் தெரியுமா?

    "கவலைப்படறதுக்கு நேரமா இல்லை. காலையிலிருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் எவ்வளவு நேரம் இருக்கு. அதுக்குள்ள உன் கவலைகளை பட்டு முடிச்சிடு. ராத்திரி பத்து மணிக்கு மேல கவலைப்படாதே.

    அவளை முத்தமிட முயன்றான்.

    அவனுடைய முகத்தை நெட்டித் தள்ளிய அவள் ஒரு பொறுப்புள்ள அப்பன் மாதிரியா பேசறே? உன் பேச்சை கேட்டு மூணு புள்ளைக்கு தாயாகிட்டேன். இதுங்களை எப்படி வளர்த்து ஆளாக்கறதுன்னு தினம் தினம் கவலைப்படறேன். இதெல்லாம் உனக்கெங்கத் தெரியப் போகுது.

    கவலைப்பட்டு என்னாகப் போகுது? மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்.

    ஆமாம்! மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு நீ பாட்டுக்கு பெத்து போட்டுக்கிட்டேயிரு. நகர்ந்து படுய்யா

    ஏண்டி இப்படி விரட்டறே?

    பின்னே விரட்டாம என்ன பண்ண சொல்றே? உன் தொல்லை தாங்க முடியாம பேசாம ஆபரேஷனை பண்ணி தொலைச்சுக்கிட்டு வரலாம்ன்னா நாலு நாளு படுத்து ரெஸ்ட் எடுக்க முடியுமா இங்கே? பார்க்க எடுக்க எனக்கு யார் இருக்கா? நானும் வேலைக்கு போனாதான் எல்லாரும் வஞ்சனை இல்லாம வயிறு நிறைக்கலாம்.

    ஏண்டி இப்படி புலம்பறே? வேலைக்கு போய்ட்டு அலுத்து சலித்து வர்ற ஆம்பளைக்கு இது ஒண்ணுதான்டி நிம்மதி. இதிலேயும் மண்ணை போடறியே! என்னமோ இவளுக்குத்தான் புள்ளைங்க மேல பொறுப்பு இருக்கிறமாதிரியும், எனக்கு எதுவும் இல்லாத மாதிரியும்...

    ஆமா! பொறுப்பு உள்ள ஆளாயிருந்தா இப்படி மூணு புள்ளைக்கு தாயாகியிருப்பியா? ஒண்ணோட நிறுத்தியிருக்கமாட்டே!

    கரிச்சுத்தான் கொட்றா. புள்ளை மூணு இருக்கு மூணுயிருக்குன்னு! கரி நாக்கை வச்சுக்கிட்டு இப்படி கரிச்சு கொட்டாதே. புள்ளைங்களுக்கு ஏதாவது ஆகிடப் போவுது.

    ஆமா! கோழி மிதிச்சுதான் குஞ்சு முடமாயிடப்போவுது போ...

    உனக்கெல்லாம் குழந்தையோட அருமை தெரியமாட்டேங்குது. எங்க முதலாளியம்மாவை பாரு. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது. இன்னும் ஒரு புள்ளை இல்லை. முதலாளியும் முதலாளியம்மாவும் தினம் ஒரு கோவிலு. தினம் ஒரு ஆஸ்பத்திரின்னு அலையறாங்க. சொத்து கணக்கு வழக்கு இல்லாம குவிஞ்சு கிடக்கு. ஆனா ஆள வாரிசு இல்லை. என்ன பண்றது? கடவுள் சொத்து இருக்கற இடத்துல குழந்தையை கொடுக்க மாட்டேங்கறான். ஒண்ணும் இல்லாத வீட்ல ஒண்ணுக்கு முணா கொடுக்கறான்.

    அவனிடம் கடுப்படித்துவிட்டு திரும்பி படுத்திருந்த சரோஜா அவன் தன்னுடைய முதலாளியம்மாவைப் பற்றி பேசியதும் அவன் பக்கம் திரும்பி படுத்தாள்.

    "இந்த நேரத்துல அவங்களை ஏன்யா ஞாபகப்படுத்தறே? மனசுக்கு கனமாயிருக்கு.

    Enjoying the preview?
    Page 1 of 1