Paathipugal
By Vaasanthi
()
About this ebook
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Read more from Vaasanthi
Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Sariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Plum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Naan Budhanillai Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsAakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsVittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Oru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Thunaivi Rating: 2 out of 5 stars2/5Indre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsAmerica Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Karai Seratha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsKizhakkey Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyellam Shenbaga Poo Rating: 0 out of 5 stars0 ratingsYugangal Marumpothu Rating: 0 out of 5 stars0 ratingsIdaiveligal Thodarkindrana Rating: 5 out of 5 stars5/5
Related to Paathipugal
Related ebooks
Meeravin Kannan Meeravidamey! Rating: 0 out of 5 stars0 ratingsThinnai Vaitha Veedu Rating: 5 out of 5 stars5/5Deivam Thantha Poove Rating: 0 out of 5 stars0 ratingsNee Naan Naam Vazhave Rating: 3 out of 5 stars3/5Devan Varuvara? Rating: 0 out of 5 stars0 ratingsThavazhum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Ninaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsPudhaikapadum Unmaigal Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Naadugalil Arubathu Naal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsYaar Kadavul Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Malligai Rating: 0 out of 5 stars0 ratingsKollathey Yaarum Paarthal! Rating: 5 out of 5 stars5/5Adai Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsAllopathiyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsமனிதமும் அறியாமையும் Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Ullam Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSuvadugalum Suvadigalum Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsIthu Engal Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsNinaivey Sangeethamai... Rating: 4 out of 5 stars4/5Indha Pookkal Unakkaga Rating: 4 out of 5 stars4/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsSumai Thaangi Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 1 Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratings100 Oru Pakka Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsதாம்பத்ய சர்க்கஸ்! Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNaaladi Gopurangal...! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Paathipugal
0 ratings0 reviews
Book preview
Paathipugal - Vaasanthi
http://www.pustaka.co.in
பாதிப்புகள்
Paathipugal
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பாதிப்புகள்
2. அனுமானங்கள் நம்பிக்கைகள்
3. சதுரங்கம்
4. நியாயங்கள்
5. பயணம்
6. திரிசங்கு
7. பிறவி
8. தனிவழிப்பாதைகள்
9. எல்லைகள்
10. வழக்கு
11. வடிகால்
12. சுத்தம்
1. பாதிப்புகள்
பச்சை சிக்னலுக்குப் பொறுமையாகக் காத்திருந்தபோது அவன் காருக்கு முன்னால் அந்த ஸ்கூட்டர் நின்றிருந்தது. ஓர் இளைஞன் - இளம் மனைவி அவனை அணைத்தபடி. முன்னால் ஹாண்டில் பாரைப் பிடித்தபடி சின்ன சுருண்ட தலைமுடி தெரிய ஒரு குழந்தை. மூன்று வயது இருக்கும், நிற்கிறது கால் கடுக்க.
முன்னும் பின்னும் பயங்கர ஆகிருதியுடன் லாரிகள். 'குழந்தையையும் ஏன் இவர்கள் இழுத்துச் செல்கிறார்கள் இந்த மாலை மங்கும் வேளையில்' என்று அவன் கவலைப்பட்டான். டில்லி அப்பா அம்மாக்களுக்கு குண்டுதைரியம். சாதாரணமாக இன்றும் இரண்டு குழந்தைகளும் கூட இருக்கும். ஒன்று அம்மாவின் மடியில், ஒன்று அம்மாவுக்குப் பின்னால். பின்னால் அமர்ந்திருக்கும் பொடிசு கண்ணயர்ந்துவிட்டால் என்ன ஆகும் என்று இவனுக்குத்தான் அடித்துக்கொள்ளும். பதட்டம் ஏற்படும்.
பச்சை சிக்னல் தலைக்கு நேர்மேலாகப் பளிச்சிட தூங்கிப் போயிருந்த போக்குவரத்து சிலிர்த்துக் கொண்டு நகர ஆரம்பித்தது. 'ஹைவே' என்று பெயர். பயங்கர மேடு பள்ளங்கள்… முக்கியமாக நாற்சந்தி திருப்பத்தில் முக்கி முனகித் திரும்பும் சமயத்தில் அந்த ஸ்கூட்டருக்கு இடையில் மகா அவசரத்துடன் ஒரு ஆட்டோ நுழைந்தது. அதிலிருந்து தப்ப ஸ்கூட்டர் இடப்பக்கம் நகர… எதிர்பாராமல் லாரி வலப்பக்கம் திரும்… கண்சொடுக்கும் நேரத்தில் நிகழ்ந்தது அந்த விபத்து.
சடாரென்று பிரேக் போட்டு காரை நிறுத்தினான். பனங்காய் உருளுவது போல் ஸ்கூட்டர் உருளுவது கண்டு… புருஷன், மனைவி, குழந்தை மூவரும் க்ளோஸ் என்ற வயிற்றைக் கவ்வின பயத்துடன் அவன் கண்களை மூடிக் கொண்டான்.
சுற்றிலும் எழும்பிய குழப்பத்துக்கும் இரைச்சலுக்கும் நடுவில் குழந்தையின் அழுகை தனியாக ஓலமிட்டது. நாடி நரம்பெல்லாம் ஜில்லிட்டுப் போயிற்று. அவனுக்கு அந்த அழுகையில் தொனித்த பயத்தைப் பூரணமாக உணர முடிந்தது. அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். கூட்டத்தை விலக்கிப் பார்த்தான். இளைஞனும் அவன் மனைவியும் ரத்தவெள்ளத்தில் கண் மூடிய நிலையில் இருந்தார்கள். மூச்சு இல்லை நிச்சயமாக. இரண்டு போலிஸ்காரர் களும், போக்குவரத்து கான்ஸ்டபிளும் ஜனங்களை விலக்கிப் போக்குவரத்தைத் திருப்புவதில் ஆயத்தமாகியிருந்தார்கள்.
குழந்தை அலறிக் கொண்டிருந்தது. பரிதவிப்புடன் கூட்டத்தைப் பார்த்தது… அவனுக்கு உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று. நெற்றி வியர்த்துக் கண்களில் நீர் துளிர்த்தது.
ஒரு போலிஸ்காரர் அருகில் வந்து ஏதோ சமாதான வார்த்தைகள் சொல்லிக் குழந்தையைத் தூங்கினார். அது கையையும் காலையும் உதைத்துக் கொண்டு இன்னும் பெரிதாக அழுதது. கண்களில் தெரிந்த பீதி சமாதானத்துக்கு அப்பாற் பட்டதாக இருந்தது.
போலீஸ் சாமர்த்தியமாகப் போக்குவரத்தைச் சீர்செய்தது. ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து பார்வையைத் திருப்பி இயங்க ஆரம்பித்தது.
யாருடைய வண்டி இந்த சிவப்பு மாருதி?
அவன் நகர்ந்தால்தான் பின்னால் இருப்பவன் நகர முடியும். அவன் வண்டியில் அமர்ந்தான். மிகுந்த பிரயாசையுடன் கிளம்பினான். குழந்தையின் அலறல் பின்னால் கேட்டது.
'அலறு! இன்றைய அனுபவமே உனது ஞானஸ்தானம். மூணு வயதிலேயே உலகத்தைப் புரிந்துகொள்வாய். ஞானப்பால் எதுவும் வேண்டியதில்லை.'
அவன் வீடு போய்ச் சேர்ந்து லிஃப்ட் பொத்தானை அமுக்கினான். லிஃப்டுக்குள் மூச்சு முட்டிற்று.
மூணு வயசுதான் இருக்கும். பாவம்! இளைஞனுக்கு இருபத்தெட்டுக்கு மேல் இருக்காது. அவளுக்கு இருபத்தைந்தே அதிகம். சாவைக் கண்டு நிச்சயம் ஒரு விநாடி அதிர்ந்திருப்பார்கள்.
அவன் தளத்தை அடைந்து வெளியேறியதும் மீண்டும் திடும்மென்று குழந்தையின் அலறல் கண்முன் நின்றது. அதன் பீதி அவனை நிறைத்தது.
என்ன ஆச்சு உனக்கு? பேயைக் கண்டாப்ல இருக்கு முகம்?
என்றாள் மாமி கதவைத் திறந்ததும்…
அவன் பதில் ஏதும் சொல்லாமல் அட்டாச்சியை தீவானில் வைத்து ஆயாசத்துடன் திண்டில் சாய்ந்து அமர்ந்தான்…
என்ன ராஜு, உடம்பு சரியில்லையா?
உடம்புக்கு ஒண்ணும் இல்லே.
இந்தா.
அவன் கண்களைத் திறந்து மாமி நீட்டிய காபியை வாங்கிக்கொண்டான். காபியுடன் பிளேட்டில் முறுக்கும் சிப்ஸும் இருந்தன.
இதெல்லாம் வேண்டாம்
என்று அவன் நகர்த்தி வைத்தான்.
தோசையாவது சாப்பிடறியா…
எதுவுமே வேண்டாம் மாமி. சாப்பிடணும் போல இல்லே.
என்னடா ஆச்சு உனக்கு?
என்றாள் மாமி மறுபடி…
எனக்குகொண்ணும் ஆகலே. மூணு வயசுக் குழந்தை ஒண்ணு இன்னிக்கு அநாதையாப் போச்சு
ஆக்ஸிடெண்டா?
ஆமாம்.
மாமி அவனை யோசனையுடன் பார்த்தாள்.
நீ அதிலே சம்பந்தப்படலியே?
அவன் திடுக்கிட்டு மாமியை நிமிர்ந்து பார்த்தான்.
நீங்கள் கவலைப்படற மாதிரி இல்லே.
எப்படி ஆச்சு?
ஒரு ஆட்டோவுக்கும் லாரிக்கும் நடுவிலே ஒரு ஸ்கூட்டர் மாட்டிக்கிட்டு அதிலே இருந்த புருஷன் பெண்டாட்டி க்ளோஸ்! முன்னாலே இருந்த சுமார் மூணு வயசுக் குழந்தை மட்டும் அதிசயமா எப்படியோ தப்பிச்சுட்டது.
மாமி பதில் ஏதும் பேசாமல் அவனை அனுதாபத்துடன் பார்த்தாள்.
குழந்தை அலறிக்கிட்டேயிருந்தது. என்னை மட்டும் ஏன் விட்டு வெச்சே என்கிற மாதிரி. சாகறவரைக்கும் இது புதிராகத்தான் இருக்கும் அதுக்கு.
மாமி அருகில் வந்து அவன் தோளைப் பற்றினாள்.
"இதைப் பத்தியே நீ நினைச்சுக்கிட்டிருக்கக் கூடாது. ஒரு தூக்க மாத்திரைப் போட்டுக்கிட்டு கொஞ்ச நேரம் படுத்துக்க. தினமும் இந்த மாதிரி நடந்துகிட்டிருக்கு. என்ன செய்ய முடியும் சொல்லு…
அவன் எழுந்தான்.
அந்தக் குழந்தையைக் கவனிச்சுக்க யாராவது இருப்பாங்களோ… இல்லையோ?
எல்லாருக்கும் ஏதாவது வழி வெச்சிருப்பார் பகவான்.
'அந்த பகவானின் வழிகளையெல்லாம் நான் என்றுமே புரிந்து கொண்டதில்லை. 'ஏன்' என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்ததில்லை. ஆனால், எல்லா 'ஏன்'களுக்கும் காரணத்தைச் சுலபமாகக் கண்டுபிடிப்பதிலும், 'இரண்டும் இரண்டும் நான்கு' என்று தீர்மானமாகச் சொல்வதிலும் மாமி எக்ஸ்பர்ட்!'
அவன் உடுப்பை மாற்றிக் கட்டிலில் சாயும்போது மாமி மீண்டும் சொன்னாள்.
எதையாவது நினைச்சுக்கிட்டிருக்காதே. கொஞ்ச நேரம் தூங்கு.
மாமி மெல்லக் கதவைச் சாத்திக் கொண்டு போனதும் அவன் உடம்பைத் தளர்த்தி கண்மூடிப் படுத்தான்.
மனசின் தட்டாமாலை ஆட்டத்தை இன்று கட்டுப்படுத்த முடியாது. சுழன்று சுழன்று திரும்பும்போது மையத்தில் குழந்தை நின்று அழுதது. பீதியுடன் சுற்றிலும் இருந்த கும்பலைப் பார்த்தது.
வெகுநேரத்துக்கு அப்பாவும் அம்மாவும் ரத்தத்தில் நடுரோட்டில் கிடந்தார்கள்; கண்களை மூடிய நிலையில் பக்கத்தில் சென்று எழுப்ப வேண்டும் போல் இருந்தது. 'எழுந்திருங்க லாரி வருது, கார் வருது, மேல ஏறிடும்.'
போலீஸ்காரர் இறுக்கிப் பிடித்தார். அழாதே பையா. இந்தா பிடிப்பா… இந்தக் குழந்தையைச் சமாளிக்க முடியாது…
ஒருவர் மாற்றி ஒருவர் எத்தனை இடுப்புகள். 'அலறினால் விட்டுவிடுவார்கள்...' என்கிற எண்ணம் பலிக்கவில்லை.
எங்கெங்கோ அழைத்துப் போனார்கள். போலீஸ்காரர்கள், டாக்டர்கள் கேள்வி கேட்டார்கள். பயமாக இருந்தது. அப்பா, அம்மாவை எங்கே அழைத்துப் போனார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ வீட்டுக்கு அழைத்துச் சென்றார் போலீஸ்காரர்.
ஹைய்யா வீட்டுக்கு வந்துட்டோம்
என்றார். வீட்டைத் திறந்து உள்ளே சென்றதும் வீடு காலியாக இருந்தது. மேஜை மேல் அம்மா செய்த சாப்பாடு மூடிவைத்திருந்தது.
அம்மா… அம்மா
என்று அறை அறையாகத் தேடியும் அம்மாவைக் காணவில்லை.
ஏதாவது சாப்பிடறியா பையா?
அவருக்குப் பதில் சொல்லக் கூடப் பிடிக்கவில்லை. அவருடைய மீசையைக் கண்டாலே பயமாக இருந்தது. இவர்தான். அம்மா, அப்பாவை அப்புறப்படுத்தினவர். பிறகு கண்களில் காட்டவில்லை. சோபா மூலையில் சுருண்டு படுத்துவிட்ட நிலையில் பேச்சுக் குரல்கள் கேட்டன…
பையா, யார் வந்திருக்காங்க பாரு…
விடுக்கென்று தூக்கிப் போட்டுக் கண் விழித்தது. சித்தப்பாக்கள், சித்திகள்… குப்பென்று மனசில் சந்தோஷம் பூத்தது. சித்தப்பாவின் நீட்டிய கரங்களில் குழந்தை லாவகமாகத் தாவினான். எல்லோரும் அழுதார்கள்.
குழந்தை எதுவுமே சாப்பிடலேம்மா. சோறு போடுங்க
என்றார் போலீஸ்காரர்.
சித்தி கண்களைத் துடைத்துக் கொண்டு ரசம் சூடு பண்ணி சாதம் ஊட்டினாள். சாப்பாடு லபக் லபக்கென்று உள்ளே போயிற்று. சிரிப்பு வந்தது.
சித்தி, சித்தப்பாவுக்கு நடுவில் இரவு படுக்கும்போது அம்மாவின் நினைவு வந்தது. குமுறித் துக்கம் பொங்கிற்று. சித்தப்பா சித்தி ஏதோ பேசிக்கொண்டே மாற்றி மாற்றி முதுகைத் தட்டினார்கள்.
காலையில் கண் விழித்தபோது எல்லோரும் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சண்டை போடுவதுபோல்… குழந்தைக்குப் புரியாமல் அழுகை வந்தது. சித்தப்பா தூக்கிச் சமாதானப்படுத்தினார்.
அப்புறம் பேசிக்கலாம். இப்போதைக்குக் குழந்தையைக் கவனிங்க
என்றார். எல்லோரும் திடீரென்று விலகி நிற்பது போல் தோன்றிற்று. பால் குடித்தவுடன் யாரிடமும் செல்லத் தயங்கிக் கொண்டு சோபாவின் மூலைக்குப் பிள்ளை சென்றான்.
இந்த வாட்ச் நான் எடுத்துக்கறேன்…
டைப்ரைட்டர் எனக்கு வேணும்…
அலமாரியில் இருக்கும் சாமான்கள், சுவரில் தொங்கும் படங்கள், மேஜையில் இருக்கும் சாமான்கள் அனைத்தையும் சித்தப்பாக்கள் பரபரப்புடன் எடுத்து வைத்துக் கொண்டார்கள்.
பையன் குழப்பத்துடன் படுக்கையறைக்குச் சென்றான். அலமாரி திறந்திருந்தது. அம்மாவின் புடவைகள் பரத்தியிருந்தன. குழந்தை புடவையை அணைத்துக் கொண்டு அம்மா
என்றான்.
ஆமாண்டா! அம்மாதான். வந்துடுவாங்க
என்றாள் சித்தி. சொல்லிக் கொண்டே பெட்டிக்குள் புடவைகளை வைத்துக்கொண்டாள். அலமாரியில் இருக்கும் மற்றதும் பெட்டிக்குள் சென்றன. பெட்டிகளைப் பூட்டி எல்லோரும் தயாராகி அமர்ந்தார்கள்.
இரவு தூக்கம் கண்களைச் சுழற்றிற்று. தூங்கினால் இவர்கள் எங்கே விட்டு விட்டுப் போய்விடுவார்களோ என்று குழந்தைக்கு பயமாக இருந்தது. சித்தப்பாவின் மடியில் படுத்துக்கொண்டான்.
நாங்கள்லாம் சம்சாரிங்க. இந்தப் பொறுப்பையும் எங்களாலே சுமக்க முடியாது. உங்களுக்குக் குழந்தை இல்லை. உங்களாலேதான் முடியும்.
பையன் கண்களைத் திறந்து பார்த்தான். அதிகம் பழக்கமில்லாத மாமாவும், மாமியும். மாமா குலுங்கக் குலுங்க அழுதார். மாமி கை நீட்டி அழைத்தாள்.
இன்னும் பேச்சுக்கூட வரலையா… பாவம்?
பேச்சு வரலையே தவிர ரொம்பக் கூர்மை.
மாற்றி மாற்றி முத்தம் கொடுத்து விட்டுச் சித்தப்பாக்கள் சித்திகள் கிளம்பினார்கள். கலவரத்துடன் குழந்தை அழ ஆரம்பித்தது. மாமி அணைத்துக் கொண்டாள்.
பயப்படாதேடா கண்ணா! நாங்க இருக்கோம். பயப்படாதே.
எல்லாருக்கும் ஏதாவது வழி வெச்சிருப்பார் பகவான்.
எல்லா அநாதைகளுக்கும் நீயேதான் நான். நானேதான் நீ. பகவான் என்று யாரும் கிடையாது. எதிர்பாராமல் பொழியும் கருணை மழைதான் கடவுள்.
ராஜு… ராஜு!
அவன் மிகப் பிரயாசையுடன் கண்களைத் திறந்தான். பளீரென்ற விளக்கு கண்களைக் கூசிற்று. ஜன்னலுக்கு வெளியே கும்மிருட்டு.
எதிரில் நின்ற மாமியின் முகத்தில் கலவரம் தெரிந்தது. ராஜு, மாமாவுக்கு உடம்பு சரியில்லடா.
அவன் விருட்டென்று கட்டிலை விட்டு இறங்கினான்.
உடம்புக்கு என்ன...?
மார்பு வலிங்கறார்.
மாமா மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். திக்கென்றது. அடிவயிற்றில் ஏதோ கழன்றது போல் இருந்தது. மாமியின் தோளை ஆதரவாகத் தட்டி. உடனே டாக்டருக்கு போன் செய்தான். மாமியின் கண்களில் புகுந்து விட்ட பீதிக்கும் அந்தக் குழந்தையின் கண்களில் தெரிந்து பீதிக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தோன்றிற்று.
மாமாவின் வேதனையைப் பார்க்கப் பார்க்க நாபியிலிருந்து ஏதோ பொங்கி நெஞ்சுவரை நிறைத்து. இவர் இல்லாவிட்டால் அவன் நடுத்தெருவில் உலர்ந்திருக்க வேண்டியவன். அவனுக்குக் கிடைத்த கருணை மழை இவர்.
டாக்டர் வருவதற்குள் மாமி வெங்கடாஜலபதிக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்தாள். மாமாவின் நெற்றியில் பரபரப்புடன் விபூதி இட்டாள். மாமாவோ தயாராகிப் போனவர் போல் முகம் வெளுத்திருந்தார். டாக்டர் பரி சோதனை செய்து விட்டு, எல்லாம் நார்மலாயிருக்கே… வெறும் காஸ் ப்ராப்ளம்தான்
என்ற போது நம்பக்கூட முடியவில்லை. சட்டென்று மாமாவின் முக வெளுப்பு மறைந்தது. சீராக மூச்சு வந்தது.
டென்ஷன் குறைந்ததும் மாமி அழ ஆரம்பித்தாள். மாமியின் தோளைப் பற்றினான். அவன்.
மாமாவுக்கு ஒண்ணுமில்லே மாமி… பயப்படாதீங்க!
மாமி தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
ஒரு நிமிஷம் கையும் காலும் வெலவெலத்துப் போச்சு எனக்கு. யாருக்கு என்ன எப்போ வரும்னு தெரியலையே.
மாமி அவனை நிமிர்ந்து நன்றியுடன் பார்த்தாள். நீ இல்லேன்னா நாங்க என்ன பண்ணுவோம் ராஜு?
அவன் சிரித்தான்.
நீங்க இல்லேன்னா நான் என்ன செஞ்சிருப்பேன்?
எல்லாத்துக்கும் காரணம் இருக்கு
என்றாள் மாமி ஞானத்துடன்.
- ஆனந்த விகடன் 1989.
2. அனுமானங்கள் நம்பிக்கைகள்
அந்தப் பெரிய கம்பி ஜன்னலுக்கு ஒரு கனமான