Pudhaikapadum Unmaigal
()
About this ebook
என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன்.
வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே.
உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள்.
என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்.
Read more from G. Kalayarassy
Soozhal Kaapom Rating: 0 out of 5 stars0 ratingsPudhiya Vergal Rating: 0 out of 5 stars0 ratingsBonzai Valarpu Rating: 0 out of 5 stars0 ratingsEurope - Suvaiyana Payana Anubavangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pudhaikapadum Unmaigal
Related ebooks
Neela Nira Malligai Rating: 0 out of 5 stars0 ratingsThedal Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Raajinama! Rating: 0 out of 5 stars0 ratingsPhoenix Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsPenmaiyin Niram Venmai Rating: 0 out of 5 stars0 ratingsThullatha Manam Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsIru Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsUn Arukil Naan Rating: 4 out of 5 stars4/5100 Oru Pakka Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThavazhum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைக் கரம் பிடித்தே... Rating: 0 out of 5 stars0 ratingsIlamai Ennum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 5 out of 5 stars5/5Paathipugal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Thaniye Vida Matten Rating: 0 out of 5 stars0 ratingsNinaivey Sangeethamai... Rating: 4 out of 5 stars4/5மௌனம் பேசட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsMounam Pesattum Rating: 5 out of 5 stars5/5அழைத்தால் வருவேன்! Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsVanna Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsVizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsIrai Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5இரை தேடும் பறவைகள் Rating: 0 out of 5 stars0 ratingsNaanendrum Neeyendrum...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pudhaikapadum Unmaigal
0 ratings0 reviews
Book preview
Pudhaikapadum Unmaigal - G. Kalayarassy
http://www.pustaka.co.in
புதைக்கப்படும் உண்மைகள்
Pudhaikapadum Unmaigal
Author:
ஞா. கலையரசி
G. Kalayarassy
For more books
http://www.pustaka.co.in/home/author/g-kalayarassy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. அன்னையர் தினம்
2. உண்ணாவிரதம்
3. உறவுகள்
4. ஒரு சொட்டுக் கண்ணீர்
5. செயல் வீரன்
6. தண்டனை – சிறுகதை
7. தீபாவளி உடை - தலைமுறை இடைவெளி
8. நம்பிக்கை – சிறுகதை
9. புதைக்கப்படும் உண்மைகள்
10. பெண்ணெனும் இயந்திரம்
புதைக்கப்படும் உண்மைகள்
1. அன்னையர் தினம்
அம்மா! நான் தாம்மா கெளரி பேசறேன்.
என்னம்மா? காலங் கார்த்தால போன்? மாப்பிள்ளை, குழந்தை எல்லாரும் செளக்கியம் தானே?
எல்லாரும் நல்லாத்தான்மா இருக்காங்க. அது சரி. ஒங்கக் குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு. உடம்பு, கிடம்பு சரியில்லையா?பிரஷர் நார்மலாத் தானே இருக்கு?
அதெல்லாம் ஒன்னுமில்லை. மணி எட்டாகுது. இப்பத்தான் படுக்கையிலேர்ந்து எழுந்திருச்சேன். அதான் குரல் கொஞ்சம் கம்மியிருக்குது. விடிகாலையில எழுந்து, நான் யாருக்குச் சாப்பாடு கட்டப் போறேன்? நீங்கள்லாம் போன பிறகு, எனக்குச் சமைக்கப்புடிக்கலே. சாப்பிடப் புடிக்கலே. வர வர வாழ்க்கையே, ரொம்ப போரடிச்சிப் போயிடுச்சு!
ஏம்மா சலிச்சிருக்கிறீங்க? இவ்ளோ நாள் ஓடியாடி நீங்க வேலை செஞ்ச வரைக்கும் போதும். இனிமே நீங்க ஓய்வெடுக்கிற வயசு. நல்லாத் தூங்கி நல்லாச் சாப்பிட்டு சந்தோஷமா இருங்க. சரி. சொல்ல வேண்டிய விஷயத்தை மறந்துட்டு என்னென்னமோ பேசிக்கிட்டிருக்கேன். இன்னிக்கு அம்மாக்கள் தினம். அதான்,ஒங்களுக்கு வாழ்த்துச் சொல்லக் கூப்பிட்டேன்
.
ஓ! இன்னிக்கு மே எட்டாம் தேதியா? வர வர நாள், கிழமை எதுவும் ஞாபகம் இருக்க மாட்டேங்குது. வாழ்த்துக்கு ரொம்ப நன்றிம்மா
.
சரிம்மா. அவசரமா ஆபீசுக்குக் கிளம்பிக்கிட்டுருக்கேன். அப்பாவைக் கேட்டதாச் சொல்லுங்க அப்புறமா போன் பண்றேன்
.
அடுத்தநிமிடம், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
யாரு போன்ல? கெளரியா? என்ன காலங் கார்த்தால?
கதிரவன் கேட்டார்.
இன்னிக்கு அம்மா தினமாம். அதுக்கு வாழ்த்துச் சொல்லத்தான் கூப்பிட்டா
.
அது சரி. வெள்ளைக்காரனுங்க தான், ஒவ்வொன்னுக்கும் ஒரு நாளை ஒதுக்கி வைச்சிக் கொண்டாடுறாங்கன்னா, நம்ம புள்ளைகளும், அதை அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டுதுங்களே. இந்த மாதிரி பெத்த அம்மாவுக்கும், வருஷத்துக்கு ஒரு நாளை ஒதுக்கி வைச்சு, அன்னிக்கு அவசர அவசரமா ஒரு போன் பண்ணி வாழ்த்து சொல்றதோட, தங்களோட கடமை முடிஞ்சிடுதுன்னு நினைக்குதுங்க போலேயிருக்கு
.
சரி வுடுங்க. இந்த மாதிரி, ஒரு நாளை ஒதுக்கி வைச்சிருக்கிறதினாலே யாவது, பசங்களுக்கு நம்ம ஞாபகம் வருதில்லே. அதை நினைச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்
.
சரி. அவ்ளோ வேலையிலேயும், எம்பொண்ணு எவ்வளவு ஞாபகமா போன் பண்ணுது பாரு. ஒம் பையனும் இருக்கானே, அவன் போன் பண்ணினானா? அவனுக்கெங்கே, இதெல்லாம் ஞாபகம் இருக்கப் போகுது?
சும்மா இருக்கிற என்னைத் தூண்டிவிட்டுப் பார்க்கிறதில, அப்பிடி என்ன சந்தோஷம் ஒங்களுக்கு? அவனுக்கு என்ன அவசர வேலையோ? அவனுக்கு நான்னா உசிரு. காலையில பண்ணாட்டியும், எப்படியும், சாயங்காலத்துக்குள்ளாற பண்ணுவான் பாருங்க
.
என்னமோ போ. பையனை விட்டுக் கொடுக்க மாட்டியே. மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனவன் தான். குழந்தைக்கு ரெண்டு வயசு முடிஞ்சிட்டுது. பேரக்குழந்தையை இன்னும் நம்ம கையால தூக்கிக் கொஞ்சமுடியல. போட்டோவிலேயும், கம்ப்யூட்டரிலேயும் பார்க்கிறதோட சரி. ஒரு தடவை வந்து, கண்ணுல காட்டிட்டுப் போடான்னு சொன்னா, விமான டிக்கெட்டுக்குச் செலவு பண்ண, கணக்குப் பார்க்கிறான். அதுக்குப் பயந்துட்டு தான், பயணத்தை ஒத்திப் போட்டுக்கிட்டே போறான். எப்பத்தான் வரான்னு பார்ப்போம்
.
சரி சரி... அவனைக் குத்தம் சொல்லலேன்னா, உங்களுக்குப் பொழுது போகாது
.
கணவரிடம் மகனுக்காகப் பரிந்து பேசினாலும், பையன் இப்போது மிகவும் மாறித்தான் போய்விட்டான் என்று அவள் உள்மனம் கூறியது. வெளிநாடு போன புதிதில், இரண்டு நாட்களுக்கொருமுறை, போன் பண்ணி