Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Soozhal Kaapom
Soozhal Kaapom
Soozhal Kaapom
Ebook95 pages24 minutes

Soozhal Kaapom

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன்.

வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே.

உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள்.

என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580115601926
Soozhal Kaapom

Read more from G. Kalayarassy

Related to Soozhal Kaapom

Related ebooks

Related categories

Reviews for Soozhal Kaapom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Soozhal Kaapom - G. Kalayarassy

    http://www.pustaka.co.in

    சூழல் காப்போம்

    Soozhal Kaapom

    Author:

    ஞா. கலையரசி

    G. Kalayarassy

    For more books
    http://www.pustaka.co.in/home/author/g-kalayarassy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இன்று சிட்டுக்குருவி! நாளை நம் சந்ததிகள்!

    2. சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க,

    3. எங்கெங்கு காணினும், சீமைக்கருவேலம்!

    4. சீனா மாஞ்சாவைத் தடைசெய்ய, ஒத்துழைப்பு நல்குவோம்!

    5. நீர்நிலைகளை நஞ்சாக்கும் செயற்கை வண்ணச்சிலைகள்!

    6. பசுமைப் புரட்சியின் வன்முறை

    7. பறவைகள் வீட்டில் வளர்க்கப் பழக்கப்பட்டவையல்ல

    8. பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது

    9. பார்க்குமிடமெல்லாம், பார்த்தீனிய நச்சுச்செடி!

    10. மரங்களைக் காப்பாற்றுங்கள்

    11. மறுசுழற்சிக் கலை

    12. மாகி நூடுல்ஸில் மட்டும் தான், காரீய நச்சு இருக்கின்றதா?

    13. முட்டையிலிருந்து என்ன வரும்?

    1. இன்று சிட்டுக்குருவி! நாளை நம் சந்ததிகள்!

    (20/03/2015 சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு ‘நான்கு பெண்கள்’ தளத்தில் வெளியான என் கட்டுரை)

    (படம் நன்றி – இணையம்)

    சிட்டுக்குருவி தினம் கொண்டாடுவதால், ஏதேனும் பலன் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது. 20/03/2010 அன்று முதன்முதலாக இத்தினம் கொண்டாடப்பட்ட பின்னரே, இக்குருவி அழிவின் விளிம்பிலிருந்த உண்மை வெளியாகி, நாடுமுழுதும் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டது. . 

    அதுவரை இளம்வயது தோழர்களாய், கூட்டங்கூட்டமாக நம்மோடு கூடவே வளர்ந்த இக்குருவிகள், நம்மூரில் மட்டும் தான் இல்லை என்று நினைத்திருந்த பலருக்கு, இவை எங்குமே இல்லை, எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்தது.

    1. சிட்டுக்குருவி மனிதரை அண்டியே வாழுமினம். அக்காலத்தில் இவை கூடு கட்ட, நம் ஓட்டு வீடுகளில் சந்து, பொந்து, மாடம், பரண், பனஞ்சாத்து, சுவரில் தொங்கிய புகைப்படங்கள் போன்ற மறைவிடங்கள் பல இருந்தன. 

    மேலும் தோட்டத்திலிருந்த புதர்ச்செடிகளும், குறுமரங்களும் காகம், கழுகு போன்ற பெரிய பறவைகளிடமிருந்து சரியாகப் பறக்கத் தெரியாத இளங்குஞ்சுகளுக்கு (FLEDGLING)அடைக்கலம் கொடுத்தன.

    இன்று கான்கிரீட் வீடுகளில், இவை கூடு கட்ட மறைவிடம் ஏதுமில்லை. காணுமிடமெல்லாம் பெருகி வரும் அடுக்கக வீடுகளில், தோட்டத்துக்கு ஏது இடம்?

    2. இயற்கை வேளாண்மையைக் கைவிட்டு நாம் வயல்களில் அளவுக்கதிகமான இரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாகப் புழுக்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. எனவே உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மிக்க புழுக்களை மட்டுமே இரையாகக் கொள்ளும் இளங்குஞ்சுகளுக்குக் கடுமையான உணவுப் பற்றாக்குறை. மேலும் இத்தானியங்களைத் தின்னும் குருவிகள், இரசாயன வீரியம் தாங்காமல் இறந்துவிடுகின்றன.

    3. அரிசி, நெல் போன்ற வறண்ட தானியங்களை உண்ணும் இவற்றுக்குத் தண்ணீர் அதிகம் வேண்டும். ஆனால் வெயில் காலங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை.

    4. செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இது ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை.

    காலத்துக்கேற்ப ஓட்டு வீட்டை, கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றிக் கொண்ட நாம், நம்மை அண்டியே அதுவரைக் குடித்தனம் நடத்தி வந்த இந்தச்

    Enjoying the preview?
    Page 1 of 1