Payir Kaakum Uyir Urangal
()
About this ebook
'பயிர் காக்கும் - உயிர் உரங்கள்' - இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொரு விவசாயியும், வேளாண் கல்வி படிக்கும் மாணவரும் படிக்க வேண்டிய நூலாகும். இதில் நாம், ஆர்வக் கோளாறு காரணமாய் மண்ணைப் பலவித இரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தி புண்ணாக்கி விட்டோம் என்றும், அப்பேர்பட்ட மண்ணுக்கு எப்படி மறுவாழ்வு கொடுக்கலாமென்று ஆசிரியர் தெளிவாகக் கூறியுள்ளார்.
டாக்டர் அரு. சோலையப்பன் அவர்கள் இயற்கை விவசாய முன்னோடிகளில் மிகவும் முக்கியமானவர். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இயற்கை விவசாயத்திற்காக ஈந்தவராவர்.
அவரது - இந்நூல் பல அரிய செய்திகளைச் சொல்வதோடு - எல்லோருக்கும் பயன்படக்கூடிய அளவில் அமைந்துள்ளது.
படியுங்கள் - பலன் பெறுங்கள் - நீங்கள் பெற்ற பலனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பரிமாறிக் கொள்ளுங்கள்.
Read more from Dr. Ar. Solayappan
Idhu Oru Mooligai Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsVayalin Vidwangal Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vazhiyil Vivasaaya Vettrigal Rating: 0 out of 5 stars0 ratingsPasumaiyai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsPasumai Vilaivugalin Pangaaligal Rating: 0 out of 5 stars0 ratingsKarumbellam Kettupaar... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Payir Kaakum Uyir Urangal
Related ebooks
Parambariyam Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Gramathu Virunthu Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNamathu Mooligaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAndrada Vazhvil Mooligaigalin Pangu Rating: 0 out of 5 stars0 ratingsSiddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsKoluppu Sathu Illatha Aarokiya Samayal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsNavadhaniya Samaiyal Rating: 5 out of 5 stars5/5Thirikadukam Rating: 0 out of 5 stars0 ratingsஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaiyil Vetri Pera 38 Padigal Rating: 0 out of 5 stars0 ratingsAsathal Thozhilgal 64 Rating: 0 out of 5 stars0 ratingsBala Thiripurasundari Rating: 0 out of 5 stars0 ratingsசர்க்கரை நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsParanjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Tharum Dhyanam Rating: 1 out of 5 stars1/5Sikkal Singaravelava Jeevanai Sivanakkiduvai Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsAandavan Maruppum Aanmeegamey! Rating: 0 out of 5 stars0 ratingsPathitru Pathu Rating: 0 out of 5 stars0 ratingsEngalin Ennangal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Tips Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar Rating: 0 out of 5 stars0 ratingsMuransuvai Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsNaanarintha Aanmeegam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Payir Kaakum Uyir Urangal
0 ratings0 reviews
Book preview
Payir Kaakum Uyir Urangal - Dr. AR. Solayappan
http://www.pustaka.co.in
பயிர் காக்கும் உயிர் உரங்கள்
இயற்கை வழி இடு பொருள்கள்
Payir Kaakum Uyir Urangal
Author:
முனைவர் அரு. சோலையப்பன்
Doctor Aru. Solaiappan
For more books
http://www.pustaka.co.in/home/author/drarusolaiappan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
காணிக்கை
பதிப்புரை
1 பயிர் காக்கும் உயிர் உரங்கள்
2 பணத்தை மிச்சப்படுத்தும் உயிர் உரங்கள் I
3 பணத்தை மிச்சப்படுத்தும் உயிர் உரங்கள் II
4 உயிர் உரத்தால் பயிருக்குப் பாதுகாப்பு!
5 மண்ணுக்கு மறுவாழ்வு
6 இயற்கை வழி திரவ (உயிரியல்) இடுபொருள்கள்
7 கரும்புப் பயிருக்கு உரத்தேவையும் – உயிர் உரங்களும்
8 கரும்புத் தோகை மூலம் தரமானதொரு உயிர் உரம்
9 இயற்கை வழியில் கந்தகச் சத்து நமது பயிர்களின் இன்றையத் தேவை
10 நிறைவாக
காணிக்கை
என்னை ஊக்கமும் - உற்சாகமும் கொடுத்து மேலும்… மேலும் எழுத வைத்த என் இனிய கரிம விவசாயக் கட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும்.
- ஆசிரியர்
*****
பதிப்புரை
'பயிர் காக்கும் - உயிர் உரங்கள்' - இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொரு விவசாயியும், வேளாண் கல்வி படிக்கும் மாணவரும் படிக்க வேண்டிய நூலாகும். இதில் நாம், ஆர்வக் கோளாறு காரணமாய் மண்ணைப் பலவித இரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தி புண்ணாக்கி விட்டோம் என்றும், அப்பேர்பட்ட மண்ணுக்கு எப்படி மறுவாழ்வு கொடுக்கலாமென்று ஆசிரியர் தெளிவாகக் கூறியுள்ளார்.
டாக்டர் அரு. சோலையப்பன் அவர்கள் இயற்கை விவசாய முன்னோடிகளில் மிகவும் முக்கியமானவர். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இயற்கை விவசாயத்திற்காக ஈந்தவராவர்.
அவரது - இந்நூல் பல அரிய செய்திகளைச் சொல்வதோடு - எல்லோருக்கும் பயன்படக்கூடிய அளவில் அமைந்துள்ளது.
படியுங்கள் - பலன் பெறுங்கள் - நீங்கள் பெற்ற பலனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பரிமாறிக் கொள்ளுங்கள்.
இது அறிவுச் சோலையின் 13வது வெளியீடாகும்.
அன்புடன்
பெருநலம் பழனியப்பன்
அறிவுச் சோலைக்காக
ஜோதி நகர்
சிட்லப்பாக்கம்
சென்னை - 600 064.
*****
1. பயிர் காக்கும் உயிர் உரங்கள்
தழைச் சத்து
மணிச் சத்து
சாம்பல் சத்து
இந்த மூன்று முக்கிய பயிர் சத்துகளும் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் - பயிர்களுக்குத் தேவையான மிக முக்கியமான பயிர் உணவுகளாக வேளாண் பெருமக்கள் கருதுகின்றனர்.
இரசாயன உரத் தொழில் இயல்பாகவே இந்த மூன்று வகைப் பயிர் உணவுகளும் தயாரிக்க பெட்ரோலிய சேமிப்புகளைச் சார்ந்துள்ளது. இதே நிலை தான் எதிர்காலத்தில் இன்னும் அரை நூற்றாண்டுக்குத் தொடரும். ஆனால் இந்தச் சேமிப்புகள் கிட்டத்தட்ட காலியாகிவிட்டன.
அதே தருணத்தில் நம்மால் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதுடன் மனிதர்கள் மற்றும் மண்ணின் தேக நலனையும் பாதிக்கிறது.
இந்தச் சூழலில்தான் இரசாயனப் பயிர் உணவுகளுக்கு மாற்று பற்றி சிந்திக்கப்படுகிறது.
இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 106 கோடியைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் பயிர் சாகுபடியோ சுமார் 190. 6 மில்லியன் ஹெக்டேரில் மட்டுமே உள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் உணவு தானியங்களின் அளவு சுமார் 190. 3 மில்லியன் டன்களாகும்.
இந்தியாவில் 2025ல் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை 150 கோடிகளாகும். இவர்களுக்கெல்லாம் பட்டினி, பஞ்சமின்றி உணவளிக்க வேண்டுமென்றால் நம்மால் 310 டன்கள் உணவு உற்பத்தி செய்ய வேண்டும்.
சாகுபடியிலுள்ள நிலப்பரப்பை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. நாம் உவர் மற்றும் களர் நிலங்களைத் திருத்தினால் இன்னுமொரு 10 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு கிடைத்து மொத்தம் சாகுபடியிலுள்ள நிலம் 200 மில்லியன் ஹெக்டேர்களாக மாறும் வாய்ப்பு மட்டுமே உள்ளது.
இந்தச் சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்?
தனி ஒரு ஹெக்டேரில் கிடைக்கும் உணவு உற்பத்தியளவை அதிகரித்தால் மட்டுமே தன்னிறைவைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இப்பொழுது ஒரு ஹெக்டேரில் உற்பத்தியாகும் 13 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி இன்னும் 30