Namathu Mooligaigal Part - 1
()
About this ebook
மூலிகை என்பவை மனிதனின் ஆதிகாலம் தொட்டே மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு உறுதுணையாக இருந்தவை, எல்லா நாடுகளிலும் மருத்துவ வரலாறு மூலிகைகளை அடிப்படையாக கொண்டே அமைந்தன, ஒவ்வொரு நாகரீகமும் செழித்து வளர நோயில்லா வாழ்வு மிக அவசியம், மனிதன் தோன்றிய முதலே அவனுடன் கர்ம வினை மற்றும் சில காரணங்களால் நோய்கள் அவனை வாட்டின, நோய் என்பது மனிதன் அடுத்த படி நிலைக்கு செல்லாமல் தடுத்து அவனை முடக்கும் வகையில் இருந்தன, எல்லாவற்றுக்கும் இயற்கையை நம்பியே இருந்த மனிதன் நோய் நீங்கவும் இயற்கையை நம்பியே இருந்தான், அப்படி இருந்தபோது அவனுக்கு முதலில் உதவியது முலிகைகளே, மூலிகைகளை அடிப்படையாக வைத்து பாரத திருநாட்டில் சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி உள்ளிட்ட முறைகளும், சீன மருத்துவம், எகிப்திய மருத்துவம், பழங்குடி மருத்துவம் என எல்லா தேசங்களிலும் நோய் நீக்கும் முறைகள் இருந்தன.
Related to Namathu Mooligaigal Part - 1
Related ebooks
Idhu Oru Mooligai Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsParambariyam Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsVainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsOru Mahaanin Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsAndrada Vazhvil Mooligaigalin Pangu Rating: 0 out of 5 stars0 ratingsIshwaryam Tharum Athirsta Karkal Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Agarathi Rating: 0 out of 5 stars0 ratingsNalam Tharum Naayagiyin Naamangal Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsSakthiyulla Udalai Adaiyungal Rating: 5 out of 5 stars5/5Sidhargal Pithargala? Rating: 0 out of 5 stars0 ratingsஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை Rating: 0 out of 5 stars0 ratingsசர்க்கரை நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Veettil Oru Doctor Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsThiyanathaal Ulakai Vellungal Rating: 0 out of 5 stars0 ratingsதேடல்கள் Rating: 5 out of 5 stars5/5Arutperunjothi Agaval Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Rating: 4 out of 5 stars4/5Thathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Leelai Rating: 0 out of 5 stars0 ratingsEnnangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5Aboorva Slokangal Rating: 0 out of 5 stars0 ratingsSiddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5
Reviews for Namathu Mooligaigal Part - 1
0 ratings0 reviews
Book preview
Namathu Mooligaigal Part - 1 - Maru.Ve. Nammazhwar
https://www.pustaka.co.in
நமது மூலிகைகள் பாகம் – 1
Namathu Mooligaigal Part – 1
Author:
மரு.வீ. நம்மாழ்வார்
Maru.Ve. Nammazhwar
For more books
https://www.pustaka.co.in/home/author/maruve-nammazhwar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
என்னை உருவாக்கிய
மாதா பிதாவிற்கும்...
உயர்வாக்கிய
ஆசிரியப் பெருமக்களுக்கும்...
அருளாசி வழங்கிய
தாத்தா அழகிரிசாம் நாயுடு அவர்களுக்கும்...
மருத்து உலகிற்கு
அறிமுகம் செய்த தினமலர் நாளிதழுக்கும்...
இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்.
அடியேன்
வீ. நம்மாழ்வார்
Cell: 99945 90900
மதிப்புரை
Dr.G.G. ராம்குமார் BSMS., MD(S)
சித்த மருத்துவர், வர்மக்கலை சிகிச்சை நிபுணர்
ஸ்ரீ சிவா வர்மா கிளினிக், மதுரை.
மொபைல்: 94861 24555
மூலிகை என்பவை மனிதனின் ஆதிகாலம் தொட்டே மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு உறுதுணையாக இருந்தவை, எல்லா நாடுகளிலும் மருத்துவ வரலாறு மூலிகைகளை அடிப்படையாக கொண்டே அமைந்தன, ஒவ்வொரு நாகரீகமும் செழித்து வளர நோயில்லா வாழ்வு மிக அவசியம், மனிதன் தோன்றிய முதலே அவனுடன் கர்ம வினை மற்றும் சில காரணங்களால் நோய்கள் அவனை வாட்டின, நோய் என்பது மனிதன் அடுத்த படி நிலைக்கு செல்லாமல் தடுத்து அவனை முடக்கும் வகையில் இருந்தன, எல்லாவற்றுக்கும் இயற்கையை நம்பியே இருந்த மனிதன் நோய் நீங்கவும் இயற்கையை நம்பியே இருந்தான், அப்படி இருந்தபோது அவனுக்கு முதலில் உதவியது முலிகைகளே, மூலிகைகளை அடிப்படையாக வைத்து பாரத திருநாட்டில் சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி உள்ளிட்ட முறைகளும், சீன மருத்துவம், எகிப்திய மருத்துவம், பழங்குடி மருத்துவம் என எல்லா தேசங்களிலும் நோய் நீக்கும் முறைகள் இருந்தன.
பண்டைய காலத்தில் மனிதனை மிகவும் பாதித்தவை போர்களும் கொள்ளை நோய்களும், அந்த சூழ்நிலைகளில் ஒரு இனமே அழியும் வகையில் அவற்றின் தாக்கங்கள் இருந்தன. எந்த இனத்தில் மருத்துவமுறை நன்கு வளர்ச்சி அடைந்து இருந்ததோ அந்த இனமே வாழ்வாங்கு வையத்தில் தழைத்து வளர்ந்தது. அந்த வகையில் பாரத நாட்டில் சித்த ஆயுர்வேத முறைகள் தழைத்து இருந்த காரணத்தினால் தான் பாரத இனங்களும் நன்கு வளர்ச்சி அடைந்தன. ஒரு இனம் தழைத்து வளர காரணமாக இருந்த மூலிகைகளின் முக்கியத்துவம், மகத்துவம் சில ஆண்டுகளாக நம்மால் மறக்கப்பட்டு இருந்தன, ஆனால் இன்றைய சூழ்நிலையில் மனிதன் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்கள், மூட்டு வலி, சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பல நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு போக்கிடம் இன்றி அலைந்து திரிகிறான். எனவே இப்போது தான் நம் பண்டைய சித்த ஆயுர்வேத முலிகைகளின் பால் ஈர்க்கப்படுகிறான்.
மூலிகைகளின் மகத்துவம்பற்றி பல நூல்கள் வந்தபோதும் எளிமையாக உள்ள நூல்கள் மிகமிக குறைவு. அந்த வகையில் அய்யா நம்மாழ்வார் அவர்களின் மூலிகை பற்றிய இந்நூல் மிக வெளிப்படையாக எவ்வித ரகசியமும் இன்றி மூலிகைகளை கொண்டு நோய் தீர்க்கும் முறைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மூலிகை விதம், வழங்கும் அளவு, வழங்கும் முறை, வழங்க வேண்டிய நாள் உள்ளிட்ட எல்லா குறிப்புகளும் உள்ளன, மேலும் அன்றாடம் நாம் படும் பலவித நோய்களுக்கு எளிய குறிப்புகளும் உள்ளன. இந்நூலானது அய்யா மட்டும் அல்லாமல் அவருடைய மனைவியும் இணைந்து கர்மா சித்தையுடன் உருவாக்கி உள்ளனர், எனவே இந்த அறிய நூலை அனைவரும் பயன்படுத்தி நோயின்றி வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவானாக.
திரு. Dr.G.G. ராம்குமார் BSMS., MD(S)
மதுரை.
மதிப்புரை
திரு. பலராம கோவிந்த தாஸ்
நிர்வாக இயக்குநர்
தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட்
மதுரை.
ஓம் நமோ பகதே வாஸீதேவாய...
தன்வந்தரையே அம்ருத கலச ஹஸ்தாய...
ஸர்வாமய வினாவினாய த்ரைலோக்ய...
நாதாய ஸ்ரீ மாஹாவிஷ்ணவே நமஹ...
தனது கைகளில் அம்ரு கலசத்தையுடைய முழுமுதற்கடவுளான மஹா விஷ்ணுவை நான் வணங்குகிறேன். நமது நோய்களையும் எல்லா துன்பங்களையும் போக்குபவரான, இந்த மூவுலகிற்கும் நாதனான தன்வந்திரியை வணங்குவோமாக.
இந்த மனித பிறவியானது மிகவும் மதிப்புமிக்கது, அரிதானது. அதிலும் எந்தவித நோய், குறை இன்றி பிறத்தல் அதிலும் அரிது. இப்படிப்பட்ட இந்த அரிய மனித உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நம் கடமையல்லவா? சாஸ்திரங்களில் இந்த மனித பிறவியை ஒரு கடலை கடப்பதற்கு உதவும் படகாய் ஒப்பிடப்படுகிறது, அதுவே இந்த பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எனும் மிகப்பெரிய சம்ஸாரம் எனும் கடலை கடப்பதற்கு உதவுகிறது. அத்தகைய மனித உடலை நல்ஆரோக்யத்துடன் வைத்துக்கொள்ள இந்த உடலை படைத்த பகவானே பல அரிய மூலிகைகளையும், மருந்தாகவும், விருந்தாகவும் உள்ள உணவுப்பொருட்களையும் படைத்துள்ளார்.
இந்த உடல் நமக்கு சொந்தமானது அல்ல, இந்த உடலை படைத்து, காத்து, பேனிவரும் பகவானுக்கு சொந்தமானது. எனவே இந்த உடலின் நல் ஆரோக்யத்தை பார்த்துக்கொள்வது நமது கடமை. பகவான் மிகவும் அற்புதமானவர், அவரது செயல்களும் அற்புதமானவை, இவ்வுடலை படைத்து, இதை வளர்க்க உணவை படைத்து அந்த உணவே இந்த உடலை பல்வேறு நோய்களில் இருந்து காப்பாற்றும் மருந்தாகவும் வைத்தார்.
அத்தகைய உணவே மருந்து என்ற விஷயத்தை இந்த புத்தகத்தில் காட்டியுள்ளோம்.
கடவுளால், கடவுளிடம் இருந்து கடவுளுக்காக! கடவுளால் படைக்கப்பட்ட இந்த உடல், இந்த உடலை பராமரிக்கும் உணவு, அதில் உள்ள மருத்துவ குணம், இந்த மருத்துவ குணம் அனைத்தும் கடவுளிடம் இருந்தே தோன்றியது.
இவை அனைத்தையும் நாம் இறுதியில் கடவுளுக்காகவே உபயோகிக்க வேண்டும். இவ்வுடலை நல்லாரோக்கியத்துடன் வைத்திருப்பது. இவ்வுடலை நமக்களித்த கடவுளின் சேவைக்காக மட்டுமே.
அவ்வாறு கடவுளின் சேவையில் இருக்கும் ஒருவரின் உடல் நலத்தை அந்த பகவானே பார்த்துக் கொள்கிறார்.
எளிய மருத்துவம், உயர்ந்த நோக்கம்
திரு. பலராம கோவிந்த தாஸ்
மதுரை.
பாராட்டுரை
திரு. இரா. இராஜா கோவிந்தசாமி
இயக்குநர், சுயநிதி பிரிவு
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,
மதுரை.
பெருமதிப்பிற்குரிய எங்கள் மாமா திரு. யோகா வீ.நம்மாழ்வார் அவர்கள் கிட்டதட்ட 2000 தமிழ் மருந்து குறிப்புகளை நமது மூலிகைகள்
என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலை நாட்டு மருத்துவத்திற்கு மாற்றாக உள்ள இந்த தமிழ் மருத்துவ குறிப்புகள் வருமுன் காப்பு என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வந்தபின் சிகிச்சை என்ற உடனடி நடவடிக்கையாகவும் அமைந்துள்ளன. அவர் பல ஆண்டுகளாக மூலிகைகள், காய், கனிகள் பற்றி செய்துள்ள ஆய்வுகளின் வெளிப்பாடாக இந்த நூல் சிறப்பாக அமைந்துள்ளது. இவர் கூறும் மருத்தவ ஆலோசனைகள் மூலம் எளிய சிக்கன முறைகளில் நலம் பெறலாம் என்பது நமக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் விஷயமாகும்.
அனைத்துவகையான உடல் உபாதைகளுக்கும் இவர் தரும் உபாயங்களைப் பின்பற்றினோமேயானால் நம் உடல் ஆரோக்கியத்துடனும் மனவலியில்லாமலும் வாழலாம். இவரது மருந்துக்குறிப்புகளின் வழியாக அவரே தயாரித்து விற்பனை செய்யும் மருந்துகளை நான் பயன்படுத்தி நலமடைந்துள்ளதால் இந்தப் புத்தகத்திற்கும் அவரது சிகிச்சை முறைகளுக்கும் நான் பாராட்டுரையும், பரிந்துரையும் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது மருத்துவ ஆராய்ச்சி மேன்மை பெறவும் அதன் மூலமாக அவர் தர இருக்கும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் நாம் நலம் பெறவும் அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.
தான் பெற்ற இன்பம் இந்தவையகம்பெற வேண்டும்
என்ற நல்லெண்ணத்துடன் இதனை ஒரு நூலாக வெளியிட்டுள்ள எங்கள் மாமா அவர்களை மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.
நோயற்ற வாழ்வே... குறைவற்ற செல்வம்.
திரு. இரா. இராஜா கோவிந்தசாமி
மதுரை.
மதிப்புரை
திரு. S. மாதவன் ML.,
Srinivasa Krubha
Sri Nagar, lyer Bungalow,
Madurai - 17.
மூலிகை மருத்துவம், சித்த மருத்துவம், ஆயூர்வேத மருத்துவம் போன்றவை நம் நாட்டில் தோன்றிய அறிய விசயமாகும். இதனை போற்றுவதை விட்டுவிட்டு நாம் அயல்