Iyarkai Vazhiyil Vivasaaya Vettrigal
()
About this ebook
நான் தொடர்ந்து ‘தமிழக விவசாயி உலகம்' இதழில் எழுதி வந்த இயற்கை விவசாயக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
சுமார் 45 ஆண்டுகளாக இந்தியாவை வாழவைக்கப் போகும் ஒரே விவசாய முறை இயற்கை வழிதான் என்பதை ஆணித்தரமாக எத்தனையோ அரங்குகளிலும் - அரசினிடமும் தனிப்பட்ட வேளாண் பெருமக்களிடமும் எடுத்தியம்பி வந்துள்ளேன்.
அழுதாலும் - தொழுதாலும் அதுதான் எங்கள் தொழில் என்று இன்றளவும் சொல்லி - இயற்கை வழியில் - விவசாயத்தில் செயல்படுத்தி வரும் எண்ணற்ற வேளாண் பெருமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கி - அவர்களது வெற்றியில் அடியேனும் பங்கு பெற்று ஆனந்தப்பட்டு வாழ்ந்து வருகிறேன்.
இந்த இயற்கை வழி விவசாயத்தின் மூலம் பசுமை விளைவின் பங்காளிகளாகத் திகழும் உயிர் உரங்களைப் பற்றியும், உயிரியல் இடு பொருட்கள் பற்றியும் - அவைகளைப் பயன்படுத்தி விவசாய வெற்றியாளர்களாய்த் திகழும் வேளாண் பெருமக்கள் பற்றியும் இந்த நூலில் விளக்கமாய் படிப்பவர் பயனுறும் வகையில் கூறியுள்ளேன்.
படியுங்கள் - பயன் பெறுங்கள்.
Read more from Dr. Ar. Solayappan
Payir Kaakum Uyir Urangal Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Oru Mooligai Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsPasumai Vilaivugalin Pangaaligal Rating: 0 out of 5 stars0 ratingsPasumaiyai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsVayalin Vidwangal Rating: 0 out of 5 stars0 ratingsKarumbellam Kettupaar... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Iyarkai Vazhiyil Vivasaaya Vettrigal
Related ebooks
Andrada Vazhvil Mooligaigalin Pangu Rating: 0 out of 5 stars0 ratingsThirikadukam Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Thirukkural Rating: 0 out of 5 stars0 ratingsNamathu Mooligaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsParambariyam Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsVeettil Oru Doctor Rating: 0 out of 5 stars0 ratingsSiddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Hindu Madha Ponmozhigal Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Part-2 Rating: 0 out of 5 stars0 ratingsSirupanjamoolam Rating: 0 out of 5 stars0 ratingsMaruthuva vingyaanigal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Agarathi Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Ottangal Rating: 0 out of 5 stars0 ratingsPanmuga Nokkinil Vaniyal Sinthanaigal Rating: 0 out of 5 stars0 ratingsManapenne Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsSelvam Chezhikka - Gems, Vaasthu, Vazhigal! Rating: 0 out of 5 stars0 ratingsதிருக்குறள் கூறும் மருத்துவம் Rating: 0 out of 5 stars0 ratingsMaranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsSakthiyulla Udalai Adaiyungal Rating: 5 out of 5 stars5/5Setril Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsInnilai Rating: 5 out of 5 stars5/5Palakkadu Iyer Parambariya Samayal Rating: 0 out of 5 stars0 ratingsUllangai Ariviyal Rating: 0 out of 5 stars0 ratingsSidhargal Pithargala? Rating: 0 out of 5 stars0 ratingsBhagavath Geethaiyil Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsSikkal Singaravelava Jeevanai Sivanakkiduvai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Iyarkai Vazhiyil Vivasaaya Vettrigal
0 ratings0 reviews
Book preview
Iyarkai Vazhiyil Vivasaaya Vettrigal - Dr. AR. Solayappan
http://www.pustaka.co.in
இயற்கை வழியில் விவசாய வெற்றிகள்
(பசுமை விளைவின் பங்காளிகள்)
Iyarkai Vazhiyil Vivasaaya Vettrigal
Author:
முனைவர் அரு. சோலையப்பன்
Doctor Aru. Solaiappan
For more books
http://www.pustaka.co.in/home/author/drarusolaiappan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
காணிக்கை
1. பணத்தை மிச்சப்படுத்தும் உயிர் உரங்கள்!
2. உயிர் உரங்கள் வளர்ந்த கதை
3. உயிர் உரத்தில் - பஞ்சகவ்யா
4. உயிர் உரத்தால் பயிருக்கு பாதுகாப்பு!
5. மண்ணை வாழவைக்கும் இயற்கை விவசாயம்
6. விவசாயத்தையும் வியாபாரமாக்கி லாபம் பார்க்கும் காஞ்சி கமலசேகரன்
7. சாகுபடி சங்கடங்கள் தீர - வழிகாட்டும் சாத்தணன் சேரி தனபால்!
8. இரசாயன உரத்துக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போடும் புதுவை அனந்த கிருஷ்ணன்
9. மாடுகளால் மகத்துவம்
10. மண்புழுவால் மகத்துவம்
11. அதிசய மனிதர் - அரியனூரார்
12. கூட்டுக்குடும்பத்தால் கோபுரமானவர்கள்
13. வரம் தரும் தாவரம்
14. இவரைப் போன்ற இளைஞர்கள்தான் இந்தியாவுக்கு வேண்டும்!
15. திக்குத் தெரியாதவர்களுக்கு வழிகாட்டும் சதாசிவம்
16. சுருட்டுப் புழுக்களைச் சுத்தமாகக் கட்டுப்படுத்தும் ரகு
17. இயற்கையில் சாதனை படைக்கும் புஷ்பகிரி கிருபாகரன்
18. சிங்கம் பட்டியில் சிறப்பு மிகு விவசாயம்
என்னுரை
நான் தொடர்ந்து ‘தமிழக விவசாயி உலகம்' இதழில் எழுதி வந்த இயற்கை விவசாயக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
சுமார் 45 ஆண்டுகளாக இந்தியாவை வாழவைக்கப் போகும் ஒரே விவசாய முறை இயற்கை வழிதான் என்பதை ஆணித்தரமாக எத்தனையோ அரங்குகளிலும் - அரசினிடமும் தனிப்பட்ட வேளாண் பெருமக்களிடமும் எடுத்தியம்பி வந்துள்ளேன்.
அழுதாலும் - தொழுதாலும் அதுதான் எங்கள் தொழில் என்று இன்றளவும் சொல்லி - இயற்கை வழியில் - விவசாயத்தில் செயல்படுத்தி வரும் எண்ணற்ற வேளாண் பெருமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கி - அவர்களது வெற்றியில் அடியேனும் பங்கு பெற்று ஆனந்தப்பட்டு வாழ்ந்து வருகிறேன்.
இந்த இயற்கை வழி விவசாயத்தின் மூலம் பசுமை விளைவின் பங்காளிகளாகத் திகழும் உயிர் உரங்களைப் பற்றியும், உயிரியல் இடு பொருட்கள் பற்றியும் - அவைகளைப் பயன்படுத்தி விவசாய வெற்றியாளர்களாய்த் திகழும் வேளாண் பெருமக்கள் பற்றியும் இந்த நூலில் விளக்கமாய் படிப்பவர் பயனுறும் வகையில் கூறியுள்ளேன்.
படியுங்கள் - பயன் பெறுங்கள்.
இந்தக் கட்டுரைகளை அழகிய முறையில் வெளியிட்டு உதவிய தொழில் உலகம் பப்ளிகேஷன்ஸைச் சேர்ந்த ‘தமிழக விவசாயி உலகம்’ ஆசிரியர் திருமிகு. விஜயகுமார் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் - குறிப்பாக திரு. முருகேசன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.
அன்புடன் என்றும்
அரு.சோலையப்பன்
*****
காணிக்கை
எனது களப் பணிக்கு ஊக்கப்படுத்திவரும்
தனலெட்சுமி சீனிவாசன். - கல்விக் குழுமம், பெரம்பலூரைச் சேர்ந்த
திருமிகு. சீனிவாசன் – தலைவர்
திருமிகு. சீ.கதிரவன் - துணைத்தலைவர்
திருமிகு. நீல்ராஜ் - செயலாளர்
ஆகிய அன்பு உள்ளங்களுக்கு
அன்புடன்
அரு.சோலையப்பன்
*****
1. பணத்தை மிச்சப்படுத்தும் உயிர் உரங்கள்!
தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இந்த மூன்று முக்கிய பயிர் சத்துக்களும் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் - பயிர்களுக்குத் தேவையான மிக முக்கியமான பயிர் உணவுகளாக விவசாய பெருமக்கள் கருதுகின்றனர். இரசாயன உரத் தொழில் இயல்பாகவே இந்த மூன்று வகைப் பயிர் உணவுகளும் தயாரிக்க பெட்ரோலிய சேமிப்புகளைச் சார்ந்துள்ளது. இதே நிலைதான் எதிர்காலத்தில் இன்னும் அரை நூற்றாண்டுக்குத் தொடரும். ஆனால் இந்தச் சேமிப்புகள் கிட்டத்தட்ட காலியாகிவிட்டன.
அதே தருணத்தில் நம்மால் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் மனிதர்கள் மற்றும் மண்ணின் தேக நலனையும் பாதிக்கிறது.
இந்தச் சூழலில்தான் இரசாயனப் பயிர் உணவுகளுக்கு மாற்று பற்றி சிந்திக்கப்படுகிறது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 106 கோடியைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் பயிர் சாகுபடியோ சுமார் 190.6 மில்லியன் ஹெக்டேரில் மட்டுமே உள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் உணவு தானியங்களின் அளவு சுமார் 190.3 டன்களாகும்.
இந்தியாவில் 2025 எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை 150 கோடிகளாகும். இவர்களுக்கெல்லாம் பட்டினி, பஞ்சமின்றி உணவளிக்க வேண்டுமானால் நம்மால் 310 டன்கள் உணவு உற்பத்தி செய்ய வேண்டும். சாகுபடியிலுள்ள நிலப்பரப்பை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.
நாம் உவர் மற்றும் களர் நிலங்களை திருத்தினால் இன்னுமொரு 10 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு கிடைத்து மொத்தம் சாகுபடியிலுள்ள நிலம் 200 மில்லியன் ஹெக்டேர்களாக மாறும் வாய்ப்பு மட்டுமே உள்ளது.
இந்தச் சூழலில் நாம் என்ன