Vayalin Vidwangal
()
About this ebook
ஓரிரு ஆண்டுகளாக தொடர்ந்து இதழ்களில் எழுதி வந்த நேர்காணல்களைத் தொகுத்து 'வயலின் வித்வான்கள்' என்னும் தலைப்பில் நூல் வடிவில் உங்கள் கையில் கொடுத்துள்ளேன்.
இந்த நேர்காணல்களே உன்னதமாக தங்கள் வயல்களின் சாதனை புரியும் விளம்பரம் அறியாப் பேர்களை விளம்பரப்படுத்துவதோடு - இயற்கை வேளாண்மையை மேலும் செம்மைப்படுத்துவதுதான்.
இவர்களோடு நான் மட்டுமல்ல நீங்களும் பேசலாம். அதற்காகத்தான் அவர்களின் முகவரியும், கைபேசி எண்களும் கொடுத்துள்ளேன்.
படியுங்கள் - பயன் பெறுங்கள் - மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள்.
அன்புடன்
அரு.சோலையப்பன்
Read more from Dr. Ar. Solayappan
Payir Kaakum Uyir Urangal Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Oru Mooligai Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsPasumaiyai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsPasumai Vilaivugalin Pangaaligal Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vazhiyil Vivasaaya Vettrigal Rating: 0 out of 5 stars0 ratingsKarumbellam Kettupaar... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vayalin Vidwangal
Related ebooks
Kambarin Yerzhubathu Rating: 0 out of 5 stars0 ratingsSoozhal Kaapom Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Payir Valartha Pathinmoovar Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Thirukkural Rating: 0 out of 5 stars0 ratingsKarumbellam Kettupaar... Rating: 0 out of 5 stars0 ratingsArivuraigal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Thadai Neekkum Deiveega Thiruthalam Rating: 0 out of 5 stars0 ratingsHindu Pandigaigalum Samayal Muraigalum! Rating: 0 out of 5 stars0 ratingsPugai Naduvinile... Rating: 0 out of 5 stars0 ratingsNan Ramaseshan Vanthirukkiren Rating: 5 out of 5 stars5/5Tharunam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Malligai Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Thooralgal Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsOma Nathi Rating: 0 out of 5 stars0 ratingsVandimaadu Rating: 0 out of 5 stars0 ratingsSollattuma Konjam? Rating: 0 out of 5 stars0 ratingsMarangalum Athan Payangalum Rating: 0 out of 5 stars0 ratingsTheevugal Rating: 0 out of 5 stars0 ratingsArivoottum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsManaiviyanen Magaley! Rating: 0 out of 5 stars0 ratingsமின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள் Rating: 0 out of 5 stars0 ratingsMinnalaai vaa vivek Rating: 4 out of 5 stars4/5Ini Vazhkkai Inikkum! Rating: 0 out of 5 stars0 ratingsVirpanai Pookal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Thottu Vidum Thooram Thaan Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsYaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean - part 2 Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Vayalin Vidwangal
0 ratings0 reviews
Book preview
Vayalin Vidwangal - Dr. AR. Solayappan
http://www.pustaka.co.in
வயலின் வித்வான்கள்
(இது இசை சம்பந்தப்பட்ட நூலல்ல - வாழ்வியலில் வளம் சேர்க்கும் வேளாண்மை - அதிலும் குறிப்பாக இயற்கை வேளாண்மை சம்பந்தப்பட்டது)
Vayalin Vidwangal
Author:
முனைவர் அரு. சோலையப்பன்
Doctor Aru. Solaiappan
For more books
http://www.pustaka.co.in/home/author/drarusolaiappan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. ஊனமே உன்னதமாக
2. விருதுகளுக்குச் சொந்தக்காரரின் வேளாண்மை
3. சாதிக்கப் பிறந்தவர்
4. 'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே'
5. பரிசு பெற்ற விவசாயி
6. விளையும் பயிர் விதையில் தெரியும்
7. தேடுதல் நிறைந்த திறமைசாலி
8. ஊருக்கு உபகாரி
9. 'திருக்குறள் பரப்பும் திருவருட்செல்வர்கள்'
10. வேளாண்மை செய்ய வேண்டும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும்
11. கம்சலாபுரம் என்னும் கலங்கரை விளக்கம்
12. அதிசய மாமரமும் அற்புத மனிதர் நாட்டார் ராமலிங்கமும்
13. தென்னையில் ஊடு சாகுபடி
14. இயற்கை நோக்கி ஓர் இளைய விவசாயி
15. விளையாட்டல்ல... விவசாயம்
16. நம்மாழ்வார் அய்யா வழியில்...
17. சிக்கன விவசாயம்
18. வருத்தமில்லா விவசாயம்
19. இளைய விவசாயி
20. பனையின் காவலன்
21. கல்வியும் - கழனியும்
முன்னுரை
நான் ஓரிரு ஆண்டுகளாக தொடர்ந்து இதழ்களில் எழுதி வந்த நேர்காணல்களைத் தொகுத்து 'வயலின் வித்வான்கள்' என்னும் தலைப்பில் நூல் வடிவில் உங்கள் கையில் கொடுத்துள்ளேன்.
இந்த நேர்காணல்களே உன்னதமாக தங்கள் வயல்களின் சாதனை புரியும் விளம்பரம் அறியாப் பேர்களை விளம்பரப்படுத்துவதோடு - இயற்கை வேளாண்மையை மேலும் செம்மைப்படுத்துவதுதான்.
இவர்களோடு நான் மட்டுமல்ல நீங்களும் பேசலாம். அதற்காகத்தான் அவர்களின் முகவரியும், கைபேசி எண்களும் கொடுத்துள்ளேன்.
படியுங்கள் - பயன் பெறுங்கள் - மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள்.
அன்புடன்
அரு.சோலையப்பன்
email: arsolayappan@yahoo.com
கைபேசி: 9443331393
*****
1. ஊனமே உன்னதமாக
இந்த முறை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்காவிலுள்ள பெருவளூர் கிராமத்திற்குச் சென்றேன். அங்கு 90 சதவிகிதம் காது கேளாத விவசாய இளைஞரான திரு. வே. ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன். எனக்கு அவரைப் பார்க்கப் பார்க்க - அவருடன் பேசப் பேச ஆச்சர்யமாக இருந்தது.
இவர் ஊனத்தை உன்னதமாக்கிக் கொண்டார். அடுத்தவர்களுடன் வெட்டிப் பேச்சு பேசி வீண் பொழுது கழிக்காத ஒரு செயல் வீரர்.
பெருவளூர் கிராமம் சேத்துப்பட்டு, ஆரணி வழியில் செஞ்சியிலிருந்து 20 கிலோ மீட்டரில் உள்ளது.
இவரிடம் நஞ்சை 2.00 ஏக்கர்களும், புஞ்சை 1.50 - ஏக்கரும், இது தவிர மதுராந்தகம் தாலுக்கா ஜமீன் எண்டத்தூரில் குத்தகை நிலம் 1.50 ஏக்கருமுள்ளது.
இவர் பூசணி வகைச் சாகுபடியில் அற்புதம் படைப்பவர். இவர் பூசணி சாகுபடி தவிர இதர விவசாயிகளிடம் பூசணி கொள்முதல் செய்து கர்நாடகா, அஸ்ஸாம், கல்கத்தா வரை லாரிகளில் கொண்டு சென்று வியாபாரம் செய்பவர்.
தற்போது இவரிடம் சாம்பல் பூசணி 1.00 ஏக்கர் உள்ளது. மீண்டும் மாசி மாதத்திற்குப் பின்பு பங்குனியில் இதர இடங்களிலும் பூசணி சாகுபடி செய்வார்.
இவர் பூசணியில் -
சாம்பல் பூசணி
மஞ்சள் பூசணி
தர்பூசணி
பறங்கிக் காய் - என்று எல்லாவிதப் பூசணிகளும் சாகுபடி செய்வார்.
இவர் நிலத்தில் மண் கட்டிகள் சன்னமாகும் விதத்தில் நன்கு புழுதியாக உழவு செய்வார். பிறகு 7 அடிக்கு ஒன்று இருக்கும் வகையில் கால்வாய் எடுப்பார். பார் ஓட்டும் போதே டி.ஏ பி 1 மூட்டை, பொட்டாஷ் 20 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 20 கிலோ, ஜிப்சம் 1 மூட்டை ஏருக்குப் பின்னால் போடுவார். இவை எல்லாமுமே ஒரு ஏக்கருக்கான அளவு.
இதற்குப் பிறகு எரு கொட்டுவார். அதன் பிறகு உழவு செய்வார். இப்பொழுது ஒரு பக்கக் கரையில் - போட்ட உரம் நின்று விடும். ஆட்கள் வைத்து மண் தள்ளுவதில்லை. ஏர் மாட்டை வைத்தே போட்ட உரத்தை மூடி விடுவார்.
கரையை ஒட்டி (நீர் பாய்ச்சும் கால்வாயின் புருவத்தில்) ஒரு அடிக்கு ஒரு விதை நடுவார். இது சாம்பல் பூசணிக்கு - பறங்கி விதைகள் என்றால் இரண்டடிக்கு ஒரு விதை நட வேண்டுமென்கிறார். இதன் பிறகு நீர் பாய்ச்ச வேண்டும். நீர் பாய்ச்சிய 8 நாட்களுக்குப் பின் சாம்பல் பூசணி முளைத்து வரும். பறங்கிப் பூசணி 5 நாட்களுக்குப் பின் முளைத்து வரும் என்கிறார்.
சாம்பல் பூசணி விதைகளை பாண்டிச்சேரியிலும், பறங்கிப் பூசணி விதைகளைக் கர்நாடகா அல்லது ஆந்திராவில் வாங்குகிறார்.
பறங்கிப் பூசணியில் இவர் சாகுபடி செய்வது சிந்தாமணி ரகம். இதன் ஒரு காயின் எடை 15 முதல் 20 கிலோ வரை இருக்கும்.
பூசணி முளைத்து வரும்போது விதை இலைகளைச் சேர்க்காது மேலும் இரண்டு இலைகள் வந்த பிறகு (15 நாட்களுக்குப் பின்) எத்திரால் 10 லிட்டர் நீரில் இரண்டரை மில்லி என்று கணக்கில் கலந்து தெளிக்கிறார்.
பூசணியைச் சிவப்பு வண்டுகள் தாக்க வாய்ப்புண்டு என்றும் அதற்காக 'நாக்' என்ற இயற்கை எண்ணெய் மருந்து அல்லது வேப்பெண்ணெய்க் கரைசல் தெளிப்பேன் என்கிறார்.
25 முதல் 30 நாட்களில் கொடி கீழே காயும்படி வருமென்கிறார். இதற்கு முன்னரே களை எடுத்துவிட்டு ஏக்கருக்கு யூரியா 40 கிலோ, பொட்டாஷ் 20 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 20 கிலோ கொடுக்க வேண்டுமென்கிறார்.
இந்த உரங்களை இட்டபின்பு கால் மடித்து தண்ணீர் பாய்ச்ச வேண்டுமாம். தண்ணீர் பாய்ச்சிய பின்பு சூழலுக்கு ஏற்ப இயற்கை வளர்ச்சி ஊக்கியான சிங்ரோவேலர் மற்றும் சிங்க்ரோ ஸ்ப்ரெட்டை கலந்து கொடுக்கலாமென்கிறார்.
இப்படி 2 அல்லது 3 முறைகள் பயன்படுத்தும் போது (10 நாட்களுக்கு ஒரு முறை) 45 நாட்களில் பிஞ்சு விடத் துவங்குமென்கிறார். அதன் பின்பு 15 நாட்களில் காய் உருவாகிவிடும் என்கிறார்.
காய் - வெள்ளைப் பூசணியாக இருந்தால் குண்டாய் 5 கிலோவிற்கு மிகாமல் வரவேண்டுமென்கிறார். காரணம், பூசணி வாங்குபவர்களில் பெரும்பாலோனோர் உடைப்பதற்காகவே வாங்குகின்றனர். அவர்களுக்கு எளிதாகத் தூக்கி உடைக்க ஏதுவாக இருக்க வேண்டும்மென்கிறார்.
பறங்கிப் பூசணியாக இருந்தால் காயின் பருமன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறார்.
75 முதல் 90 நாட்களுக்குள்