Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arivuraigal Aayiram
Arivuraigal Aayiram
Arivuraigal Aayiram
Ebook87 pages34 minutes

Arivuraigal Aayiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீண்ட நாட்களக அறிவுரைகள் சொல்வதான நூல் எழுத வேண்டுமென்கிற உந்துதல் இருந்து வந்தது. அறிவுரைகளை கடைப்பிடிப்பது மட்டுமல்ல, சொல்வது கூட கடினம்தான் என்று உணரவந்தது.

இந்நூலில் ஏறக்குறைய 1000 அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன. ஏதாவதொரு அறிவுரை யாருக்கேணும் ‘டர்னிங் பாயிண்ட்’டாக ஆகிறது என்றாலே எனக்கு மகிழ்ச்சிதான். ‘நல்ல புத்தகங்கள் மனிதனைச் செதுக்குவன’ என்பர் அறிஞர். இந்நூல் அந்த அரிய பணியை செய்ய முனைந்திருக்கிறது.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580130907969
Arivuraigal Aayiram

Read more from Mk.Subramanian

Related to Arivuraigal Aayiram

Related ebooks

Reviews for Arivuraigal Aayiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arivuraigal Aayiram - MK.Subramanian

    https://www.pustaka.co.in

    அறிவுரைகள் ஆயிரம்

    Arivuraigal Aayiram

    Author:

    எம்கே.சுப்பிரமணியன்

    MK.Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mk-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அணிந்துரை

    புலவர். க. தங்கவேலு மாநில மற்றும் தேசிய நல்லாசிரியர், மதுராந்தகம்.

    நண்பரும், எம் மாணவருமாகிய எம்.கே. சுப்பிரமணியன் அறிவுரைகள் -1000 என்கிற தலைப்போடு மகத்தான அறிவுரை நூலை தந்திருக்கிறார்.

    நூல் ஒரு கற்கண்டுக் குவியலாக கிடைத்திருக்கிறது. எந்தப் பக்கம் கடித்தாலும் சுவை தருவதாக. நம் வாழ்க்கையின் அன்றாட அலுவல்கள் தொடர்பான சங்கதிகளே அறிவுரைகளாக பேசப்பட்டுள்ளன. ரொம்பவும் உபயோகமான நூலாகும் இஃது.

    ‘வலிகளை தாங்குபவர்கள்தான் மேலே வரமுடியும்’ என்று வலிகளை மனிதர்கள் தாங்க வேண்டுவதன் தேவையை கூறுகிறார்.

    ‘அவமானத்தை வெற்றி கொண்டால் வெகுமானம் கிடைக்கும்’ என்று மனிதர்கள் வெகுமானம் பெறும் வழிமுறையை ஓரிடத்தில் கூறுகிறார்.

    இன்னோர் இடத்தில், ‘அறிவாளிகளுக்கு அரிவாள் தேவையில்லை; அறிவால் சாதித்துக் கொள்வர்’ என்று அரிவாள் கலாசாரம்: ஒழிய கூறியுள்ளார்.

    ‘உண்மைகள் எங்கும் போய் விடாது; பொய்களின் பின்னால் அவை ஒளிந்திருக்கக் கூடும்’ என்று வாய்மையின் திறத்தை அறிவுரையாக ஆக்கியிருப்பது எழுதியவரின் திறமைக்கு நல்லதொரு சான்று.

    ‘வண்டியில் போகிற போது சாலையில் போகிறவனை குறை சொல்லாதே; சாலையில் போகிற போது வண்டி ஓட்டுகிறவனை குறை சொல்லாதே’ என்கிற அறிவுரையில் வாழ்க்கையின் யதார்த்தத்தை பறை சாற்றியிருக்கிறார், ஆசிரியர்.

    ‘குறுக்கு வழியில் நூறு ரூபாய் சம்பாதிப்பதில் இன்பம் இல்லை; நேர் வழியில் பத்து ரூபாய் சம்பாதிப்பதில்தான் இன்பம் இருக்கிறது’ என்னும் அறிவுரையில் மனிதர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் வாழவேண்டுவதன் தேவையை இயம்பியுள்ளார்.

    ‘பொங்கி எழும் ஒரு நிமிடம் பொறுத்திருந்த நூறு நிமிடங்களை வீணாக்கி விடுகிறது’ என்னும் அறிவுரையில் பொறுமையின் மேன்மை பேசப்படுகிறது.

    ‘உண்மைக்காக எதையும் இழக்கலாம்; எதற்காகவும் உண்மையை இழக்கலாகாது’ என்கிற அறிவுரை வாழ்க்கையின் நிதர்சனமாக விளங்குகிறது.

    இப்படி நூற்றுக்கணக்கான அறிவுரைகள் நூலை அலங்கரித்திருக்கின்றன. நண்பரின் முயற்சி போற்றுதலுக்குரியது. இவரது ஒவ்வொரு படைப்பையும் நான் நன்கறிபவன். இன்னும் சில காலங்களில் இவர் புகழ் உச்சிக்குச் செல்வார் என்றே எனக்குப்படுகிறது. எளிமையாய் இருந்து கொண்டு, இமயமாய் சாதிக்கும் இவரை வியந்து போற்றுகிறேன்.

    அன்பன்

    க. தங்கவேலு

    என்னுரை

    நீண்ட நாட்களக அறிவுரைகள் சொல்வதான நூல் எழுத வேண்டுமென்கிற உந்துதல் இருந்து வந்தது. அறிவுரைகளை கடைப்பிடிப்பது மட்டுமல்ல, சொல்வது கூட கடினம்தான் என்று உணரவந்தது.

    இந்நூலில் ஏறக்குறைய 1000 அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன. ஏதாவதொரு அறிவுரை யாருக்கேணும் ‘டர்னிங் பாயிண்ட்’டாக ஆகிறது என்றாலே எனக்கு மகிழ்ச்சிதான். ‘நல்ல புத்தகங்கள் மனிதனைச் செதுக்குவன’ என்பர் அறிஞர். இந்நூல் அந்த அரிய பணியை செய்ய முனைந்திருக்கிறது. நல்ல வாசகர்களும் பெருகி வருகிறார்கள். என் வாசகர்களின் தேவையை சரியாக கணித்து எழுதி வருகிறேன்.

    என்னை என்றும் ஆதரிக்கும் வாசகர்கள் இந்நூல் வாயிலாகவும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இந்த இனிய நேரத்தில் என் இலக்கிய ஆசான்கள், சமகால இலக்கியவாதிகள், இனிய வாசகர்கள் என்கிற யாவர்க்கும் நன்றி பாராட்டுகிறேன்.

    உங்கள் வழி காட்டுதலோடு...

    என்றும் உங்கள்

    எம்.கே. சுப்பிரமணியன்

    11, பள்ளப்பேட்டை,

    கருங்குழி, மதுராந்தகம் - 603 303.

    செல்: 9994193964.

    அறிவுரைகள் - 1000

    கோயிலுக்குச் செல்லும் பழக்கம் கோடி ரூபாய் பெறும்.

    * போலிசாரைப் பார்த்து திருடர்கள் தான் பயப்படவேண்டும். பொதுமக்கள் பயப்படக் கூடாது.

    * திருமணத்தில் பொருத்தங்கள் பார்க்கலாம்; எவ்வளவு தேறும் என்று பார்க்கக்கூடாது.

    * நீயாக விழுந்தால் நீயாகத்தான் எழுந்திருக்க வேண்டும். இன்னொருவர் தயவை நாடக்கூடாது. இன்னொருவர் அருகிலிருக்கும்போது அவர் உதவியைப் பெறுகின்ற நீ, யாரும் இல்லாத இடத்து விழுந்தால் என்ன செய்வாய்?

    * சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் வர நேர்கையில் ‘சாப்பிடுங்கள்’ என்று கேட்பது அவரை சாப்பிட வைக்க அல்ல பண்பாடு காரணமாக.

    * பைத்தியக்காரன் நம்மைக் கல்லால் அடிக்கலாம். நாம் பைத்தியக்காரனை கல்லால் அடிக்கக் கூடாது.

    * இறைவன் கரங்களைக் கொடுத்தது சாப்பிட மட்டுமல்ல, உதவிகள் புரிவதற்காகவும்தான்.

    * நேர விரயம் பண விரயத்தை விட மோசமானது.

    * உன்னைப் பெற்றவர்களைக் கும்பிடு. உன் தெருவிலிருக்கும் சாமியைக் கும்பிடு. உலகத்து சாமியை எல்லாம் கும்பிட்ட பலன் கிடைக்கும்.

    * வாங்கும் போது இனிப்பாகவும், திருப்பித் தரும்போது கசப்பாகவும் இருப்பது கடன்.

    * மணம் இருப்பதால்தான் மல்லிகைக்குப் பெருமை.

    Enjoying the preview?
    Page 1 of 1