Sugamana Sumaigal
()
About this ebook
நேர்த்தியான 'கதைக் குழந்தைகள்' என நண்பர்கள் பாராட்டியது போலவே, ஒரு பெரிய பாராட்டு எல்லோரிடமிருந்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
சமூக அக்கறையோடு புனையப்பட்ட கதைகளின் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் நானறிந்தவர்களே. இவர்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு உதவ முடிந்தாலும் உதவுங்கள்.
ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் நான் செய்ய வேண்டியதை செய்திருக்கிறேன்.
Read more from Mk.Subramanian
Sila Mugangalin Mugavarigal Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Manithargal... Rating: 0 out of 5 stars0 ratingsVetrigalin Vilasangal Rating: 0 out of 5 stars0 ratingsMuruga Peruman Kathai Rating: 0 out of 5 stars0 ratingsMunnetram Adaya Muthana Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratingsManam Sinthanai Seyalpadu Rating: 0 out of 5 stars0 ratingsNalla Kudumbam Amaya... Rating: 0 out of 5 stars0 ratingsIniya Vazhvirku Irubathu Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsArivuraigal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsRamapiran Kathai Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsVaanga Sirikkalam Rating: 0 out of 5 stars0 ratingsMagizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sugamana Sumaigal
Related ebooks
Nenjellam Nerunji Mul Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Appusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsInimeal Charumathi Rating: 0 out of 5 stars0 ratingsOru Maalai Nera Maranam Rating: 5 out of 5 stars5/5Appusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsIntha Pookkal Parippatharkkalla Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsNeethana... Nijamthana? Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Sirikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsNaanaa Ponathum Thaanaa Vandhathum Rating: 0 out of 5 stars0 ratingsNadana Nila Rating: 0 out of 5 stars0 ratingsAV.M. Thantha SP.M. Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsSenganthal Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsHands - Up Rating: 0 out of 5 stars0 ratingsOnpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsThoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Kannai Nambathey Rating: 3 out of 5 stars3/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsChidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Maamarathu Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsKuberasamy Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sugamana Sumaigal
0 ratings0 reviews
Book preview
Sugamana Sumaigal - MK.Subramanian
http://www.pustaka.co.in
சுகமான சுமைகள்
(சிறுகதைகள்)
Sugamana Sumaigal
(Sirukathaigal)
Author:
எம்.கே. சுப்பிரமணியன்
M.K. Subramanian
For more books
http://www.pustaka.co.in/home/author/mk-subramanian
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ராமர் வேஷம்
ரங்க ராட்டினம்
ஆட்களைப் பிடிக்கிறவர்கள்
வாடகை வீடு
வார்த்தை வியாபாரம்
மாட்டுக்கார முருகேசனும் ஒத்து ஊதும் முனியப்பனும்
நல்ல காலம் பொறக்குது
நாற்றம்
சுமக்காத சுமைகள்
மணி
வண்டிக்காரன்
முதல் வியாபாரம்
அக்கரைப் பச்சை
எரு மட்டைக்காரி......
கூலிக்காரி
கொய்யா பழக்காரி
எச்சில்
நல்லதோர் வீணை செய்தே!
ஆட்டோக்காரன்
தொண்டன்
சூது – வாது
வேட்டி வாத்தியார்
ஏர் ஓட்டுவதும் கார் ஓட்டுவதும்
அணிந்துரை
இலக்கியவீதி. இனியவன், சென்னை.
ஒரு சிறுகதை எந்தவித நயத்துடனோ, அல்லது எந்த வித நெறிமுறைகளுடனோ இருக்க வேண்டுமோ... அந்த வித நயத்துடனும், நெறிமுறைகளுடனும் அமைந்திருக்கின்றன எம்.கே. சுப்பிரமணியனின் சிறுகதைகள்.
'சுகமான சுமைகள்' என்கிற இந்தத் தொகுப்பில் காணப்படும் அத்தனைக் கதைகளுமே முத்திரைக் கதைகளாகும்.
அபாரமாக எழுதியுள்ளார், நண்பர்.
இதில் சிறப்புச் செய்தியும் ஒன்று உள்ளது. அத்தனைக் கதைகளிலுமே உலா வரும் கதைமாந்தர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்கள்கள்தாம் என்பதே அச்செய்தி.
கூத்துக் கலைஞர், ராட்டினம் சுற்றுபவர், கருவாடு விற்பவர், கொய்யா பழக்கூடை சுமப்பவள், எருமட்டை தட்டி விற்பவள், பேப்பர் போடுபவர், குடுகுடுப்பைக்காரர், மூட்டைத் தூக்குபவர் என்று பலதரப்பட்ட கீழ்மட்ட மக்களின் பிரச்சினைகளை கதைகளின் வழியே பேசுகிறார், நூலாசிரியர். அவர்களுடைய வாழ்க்கையில்தான் எத்தனை பிரச்சினைகள்! எத்தனை சிக்கல்கள்!
இவற்றைச் சொல்வதன் மூல எம்.கே. சுப்பிரமணியன் அவர்களின் பிரதிநிதிய இருப்பதை உணர முடிகிறது.
சமூகமும், அரசும் இந்த வித பேர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என் கருத்து இழையோடுவதை நாம் உணர வேண்டியுள்ளது.
அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கிற மனிதர்களுக்கு சமூகம் பதில் சொல்லவேண்டு அவர்களின் வாழ்க்கைக்கு வசந்தம் வர வேண்டும். புதிய விடியல்கள் தென்படவேண்டும்.
எழுத்தாளரின் நோக்கு, நமக்கும் வர வேண்டும். இந்தத் தொகுதியை படித் முடித்ததும் அச்சிந்தனை வரவே செய்கிறது.
எனவே, எம்.கே. சுப்பிரமணியனை நான் பாராட்டுகிறேன். நீங்களும் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வண்ணம்
இனியவன்
என்னுரை
இந்தத் தொகுதியிலுள்ள கதைகளை நான் நீண்ட காலம் கருவுற்றிருந்தேன். அந்த தவத்தின் அப்பால் பவித்ரமாய் பிரசவிக்கவும் செய்துள்ளேன்.
நேர்த்தியான 'கதைக் குழந்தைகள்' என நண்பர்கள் பாராட்டியது போலவே, ஒரு பெரிய பாராட்டு எல்லோரிடமிருந்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
சமூக அக்கறையோடு புனையப்பட்ட கதைகளின் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் நானறிந்தவர்களே. இவர்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு உதவ முடிந்தாலும் உதவுங்கள்.
ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் நான் செய்ய வேண்டியதை செய்திருக்கிறேன்.
நீங்கள் செய்ய வேண்டியதை செய்க.
என் முயற்சிக்கு துணை நின்ற - நிற்கும் அனைவரையும் நன்றி பாராட்டுகிறேன்.
என்றும் உங்கள்
எம் கே. சுப்பிரமணியம்
ராமர் வேஷம்
முப்பது வருடங்களுக்கும் அதிகமாக இருக்குமென்று நினைக்கிறேன், ராமசாமியைப் பார்த்து.
'ராமனாக வாழ்வேன்... அப்பா சொல் கேட்பேன்.... ஏக பத்தினி விரதனாக இருப்பேன்...' என்று நெஞ்சம் நிமிர்த்தி சொன்ன அந்த களங்கமற்ற மனிதனின் முகம் நேற்றுதான் பார்த்து, பேசி பழகிய மாதிரி பசுமையாய் நினைவில் வந்தது.
என் நினைப்பு பொய்க்கவில்லை. மருமகள் சுபாவின் அண்ணன் கல்யாண ரிசப்ஷனுக்காக இந்த ஊருக்கு வர நேர்ந்த எனக்கு ராமசாமியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆள் முன்பிருந்ததை விடவும் பன்மடங்கு மாறியிருந்தான்.
அவன்தான் மாறியிருந்தானே தவிர மற்ற எந்த மாற்றமும் அந்த ஊரில் உருவாகியிருப்பதாகத் தெரியவில்லை. அதே சிதிலடைந்த வீடுகள்... அடர்த்தி ததும்பும் மரங்கள்... குடி தண்ணீர் கொடுக்கும் பொதுக் கிணறு... கேட்பாரின்றி உலா வரும் ஆடு -மாடுகள்... தெருக்கோடியில் ரௌத்ரமாக உயர்ந்து நிற்கும் பிடாரிசாமி... என்கிற எல்லா அடையாளங்களும் அப்படியே இருப்பதக அறிவித்தன; ராமசாமியைத் தவிர.
ஆமாம். ராமசாமிதான் அடியோடு மாறி போயிருந்தான். கம்பீரமான-சௌந்தர்யமான தோற்றம் போன இடம் தெரியவில்லை. இளைத்துப் போய், எலும்புகள் துருத்தி கொண்டு, மழிக்கப்படாத தாடியும் தலைக்குமேல் ஒரு கூடையை கவிழத்த மாதிரி முடியுமாக... அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தான். ரொம்ப நாட்கள் கழித்து பார்த்தாலும் என்னால் அவனை தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. என் ஆழ் மனசில் தங்கிப் போயிருந்த அவன் முகம் சட்டென்று நினைவில் அரங்கேறியது. அதை விட இந்த ஊருக்கு போகப்போகிறோம் என் பயணம் குதிர்ந்த உடனேயே, 'ராமசாமியை பார்ப்போமா?' என்கிற சபலம் எனக்கு ஆரம்பித்திருந்தது.
ராமசாமி கூத்துக் கலைஞன். கலைவான நாடக மன்றத்தின் பிரதான ஹீரோ. அப்போது நான் எனது சொந்த கிராமத்தில் வசித்து கொண்டிருந்த நேரம். ஊரில் ஏதாவதொரு கோயிலில் என்னவோவொரு விசேஷம் நடந்து கொண்டேயிருக்கும். விசேஷங்களின் உச்சமாக இரவுகளில் தெருக் கூத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். ஜனங்களின் ரசனை கூத்துக் கலையில் தீவிரமாக ஐக்கியப்பட்டிருந்தது.
கூத்துக்காரர்களை 'புக்' பண்ண ஊர்க்காரர்கள் என்னைத்தான் அனுப்புவார்கள். 'வெளியுலகம் தெரிஞ்ச மனுஷன்' என்கிற நினைப்பு. மக்களின் நம்பிக்கையை புறக்கணிக்காமல் நானும் கிளம்பிப் போவேன்.
அந்தக் காலத்தில் முன்னூறு ரூபாய் பணத்திற்கு பதினைந்து பேர்கள் வந்து ஆடுவார்கள். என்னே வசனம்! என்னே பாட்டு! என்னே தாளம்! மந்திரம் போட்ட மாதிரி ஊர்க்