Nalla Kudumbam Amaya...
()
About this ebook
சமூகம் என்பது ஒரு மேம்பட்ட கட்டமைப்பு, அதன் உள்உறுப்பு குடும்பங்களாகும்.
நல்ல குடும்பங்கள் வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்கமுடியாது. குடும்பத்தின் உறுப்பினர்கள் இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெற்றென கூற முனைந்திருக்கிறேன்.
எதையும் உற்று நோக்கி நுகரும் தமிழ் வாசகர்களின் இதயத் துடிப்பை நான் நன்கறிவேன். அந்த வகையில் படிப்பவர்களின் தரத்திற்கு ஈடு கொடுத்து நூலைச் செதுக்கியிருக்கிறேன்.
எனது சம கால இலக்கியவாதிகள் என்கிற யாவர்க்கும் நன்றி பாராட்டி, தமிழ் இலக்கிய உலகிற்கு நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
Read more from Mk.Subramanian
Vetrigalin Vilasangal Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsSila Mugangalin Mugavarigal Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Manithargal... Rating: 0 out of 5 stars0 ratingsVaanga Sirikkalam Rating: 0 out of 5 stars0 ratingsMagizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsMuruga Peruman Kathai Rating: 0 out of 5 stars0 ratingsRamapiran Kathai Rating: 0 out of 5 stars0 ratingsManam Sinthanai Seyalpadu Rating: 0 out of 5 stars0 ratingsArivuraigal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Sumaigal Rating: 0 out of 5 stars0 ratingsIniya Vazhvirku Irubathu Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratingsMunnetram Adaya Muthana Vazhigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nalla Kudumbam Amaya...
Related ebooks
Mallikavin Veedu Rating: 5 out of 5 stars5/5Ilaiya Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsPetrorgale Kavaniyungal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsBodhimara Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPenmozhi Rating: 0 out of 5 stars0 ratingsMazhalai Ulagu Rating: 0 out of 5 stars0 ratingsMouna Vetri Rating: 0 out of 5 stars0 ratingsOppanaikalin Koothu Rating: 0 out of 5 stars0 ratingsAval Chinna Penna? Rating: 0 out of 5 stars0 ratingsGnanathin Vaayil Rating: 0 out of 5 stars0 ratingsSaarana Iyakka Thanthai Baden Powell Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Arul Anandham Rating: 0 out of 5 stars0 ratingsMari Varum Pengal Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsThinathorum Deiveegam Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Siragukal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsYetho Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsSivasankari Sirukathaigal Irandam Thoguppu Rating: 5 out of 5 stars5/5Makkal Sol Keleer..! Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vaazhga Rating: 0 out of 5 stars0 ratingsYaanaikku Uthaviya Erumbugal Rating: 0 out of 5 stars0 ratingsParisu Tharum Perumai! Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAgavarigal Rating: 0 out of 5 stars0 ratingsSaathanai Santhippugal Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vanam Rating: 0 out of 5 stars0 ratingsThalaiyali Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nalla Kudumbam Amaya...
0 ratings0 reviews
Book preview
Nalla Kudumbam Amaya... - MK.Subramanian
https://www.pustaka.co.in
நல்ல குடும்பம் அமைய...
Nalla Kudumbam Amaya…
Author:
எம். கே. சுப்பிரமணியன்
MK. Subramanian
For more books
https://www.pustaka.co.in/home/author/mk-subramanian
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தாய்மார்கள்
2. நண்பர்கள்
3. மேலதிகாரிகள்
4. திரைப்பட பாத்திரங்கள்
5. தலைக்கனம் பிடித்தவர்கள்
6. தந்தையர்கள்
7. அரசியல்வாதிகள்
8. அருகாமை குடித்தனக்காரர்கள்
9. தரகர்கள்
10. கூலிக்காரர்கள்
11. துறவிகள்
12. படித்தவர்கள்
13. பொதுமக்கள்
14. ஆசிரியர்கள்
15. சமூக ஆர்வலர்கள்
16. பெரியவர்கள்
17. குழந்தைகள்
18. வியாபாரிகள்
19. கோபக்காரர்கள்
20. தாழ்வு மனப்பான்மையுடையவர்கள்
21. துஷ்டர்கள்
அணிந்துரை
புலவர். க. தங்கவேலு
மாநில மற்றும் தேசிய நல்லாசிரியர்,
மதுராந்தகம்.
எம். கே. சுப்பிரமணியன் என்கிற என் மாணவர். பக்கத்து ஊர்க்காரர். அதுவும் கிராமத்துக்காரர். இலக்கியம் சமைப்பதில் படு கெட்டிக்காரர். இலக்கியத்தின் அனைத்து வகைப்பாடுகளிலும் எழுதும் ஆற்றல் பெற்றவர். 'நல்ல குடும்பம் அமைய...!' என்னும் வாழ்வியல் கட்டுரைகளைக் கொண்ட புதிய நூலைக் கொணர்ந்திருக்கிறார்.
மகத்தான படைப்பு. நூல் முழுதும் அனேக வாழ்வியல் செய்திகளை கூறியிருக்கிறார். தத்துவார்த்தமான விஷயங்களை எல்லாம் யதார்த்தமான முறையில் இயம்பியிருக்கிறார்.
தமிழுக்கு இந்நூல் ஒரு அலங்காரம். தமிழும், தமிழர்களும் பெருமைப்படலாம்.
தாய்மார்கள், தந்தையர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்து குடித்தனக்காரர்கள், திரைப்படத்து பாத்திரங்கள், முதியோர்கள் என நூல் முழுக்க குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களின் கடமைகளை நூலில் எடுத்துக்கூறியுள்ளார்.
இவர் சொல்கிற மாதிரி ‘இந்த வித பேர்வழிகள்' மட்டும் நடந்து கொள்வார்களேயானால் குடும்பம் மட்டுமல்ல; சமூகமும் மேம்படும்.
நூல் நுவலும் செய்திகள் அத்தனை அற்புதம்!
எழுதியவரைப் போற்றுகிறேன். மனதார பாராட்டுகிறேன். இவர் இதுபோல இன்னமும் பல நூல்கள் புனைய வேண்டும் என்கிற என் அவாவையும் இந்நேரத்தில் வெளிப்படுத்துகிறேன்.
நூல் பற்றிய ஆய்வை உற்று நோக்குங்கால் ஒன்றை மட்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தாய் என்பவள் அவதாரம்; தாரம் என்பவள் அரிதாரம்! என்கிற வரிகளே அவை. நூலில் இதுபோல அனேக செய்திகள் இருந்தாலும் என் நெஞ்சம் இவ்வரிகளினின்று இன்னமும் வெளிவர இயலவில்லை.
நூலில் நீங்கள் உள்புகுக. அத்தன சுவையையும் பருகிக்களிக்க! வழிப்பறி செய்வதற்கு நான் யார்?
அன்பன்
க. தங்கவேலு
என்னுரை
சமூகம் என்பது ஒரு மேம்பட்ட கட்டமைப்பு, அதன் உள்உறுப்பு குடும்பங்களாகும். நல்ல குடும்பங்கள் வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்கமுடியாது.
குடும்பத்தின் உறுப்பினர்கள் இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெற்றென கூற முனைந்திருக்கிறேன்.
எதையும் உற்று நோக்கி நுகரும் தமிழ் வாசகர்களின் இதயத் துடிப்பை நான் நன்கறிவேன். அந்த வகையில் படிப்பவர்களின் தரத்திற்கு ஈடு கொடுத்து நூலைச் செதுக்கியிருக்கிறேன்.
அணிந்துரை செய்தோர், பதிப்பித்த நல்லோர், எனது சம கால இலக்கியவாதிகள் என்கிற யாவர்க்கும் நன்றி பாராட்டி, தமிழ் இலக்கிய உலகிற்கு நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
என்றும் உங்கள்
எம். கே. சுப்பிரமணியன்
11, பள்ளப்பேட்டை,
கருங்குழி, மதுராந்தகம் - 603 303.
செல்: 9994193964.
1. தாய்மார்கள்
உலகத்தில் தாய்க்கு இணையான உறவு இன்னமும் உருவாகவில்லை. தன் உதிரத்தை பாலாக்கி, சேயை ஆளாக்குபவள் தாய்.
ஜீவராசிகள் எழுப்பும் முதல் ஒலி 'அம்மா’தான்.
அம்மாக்களிடம்தான் அன்பு, பண்பு, பாசம் என்கிற யாவும் சுரக்கின்றன - பிறக்கின்றன. தாயின் மடியில் படுத்துக்கிடக்கிற வரை துயரம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறோம். தாயின் அன்யோன்யம் விலக விலகத்தான் ஒவ்வொரு துயரங்களும் உருவாகின்றன - தலை தூக்குகின்றன.
கர்ப்ப காலத்தில் தாய்க்கு அமைகிற மனப்போக்கே பிள்ளைகளிடம் பிரதிபலிக்கிறது என்கின்றனர். தாய்மைக் காலத்தில் பெண்மணிகள் நல்ல தன்மைகளுடன் இயங்கவும் - இருக்கவும் வேண்டும். நல்ல இசை கேட்கலாம். நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம். நல்ல நல்ல சம்பவங்களிலும், சூழல்களிலும் பிள்ளைப்பேறு உருவானவர்கள் தங்களை பிணைத்துக் கொண்டிருக்க வேண்டும். கர்ப்பகாலம் என்பது வேள்விக்காலம் போன்றது. அதை ஒருவித புனிதத்தன்மையுடன் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
தாய்மையின் மூலம் தான் பெண்மை முழுமையடைகிறது. குழந்தையைப் பெற்றெடுப்பதனால் தாய் படைப்புத் தொழில் புரியும் பிரம்மாவுக்கு ஈடாகிறாள்.
'நூலைப்போல் சேலை;
தாயைப் போல் பிள்ளை'
என்று சொல்வார்கள்.
எந்தக் குழந்தையும் தாயின் தன்மைகளோடு ஒத்திருப்பதே நடைமுறையாய் உள்ளது. எனவேதான் தாய்மார்கள் குழந்தை வளர்ப்பில் சிரத்தையோடு விளங்க வேண்டும். குழந்தைகளை நல்ல வழியில் செலுத்தாவிட்டால் வழி மாறிய கப்பலாய் குழந்தைகள் கண்டபடி சுற்ற நேரிடும். குழந்தைகளின் திசையும், இலக்கும் நல்லவிதமாக இருக்க தாயின் வழிகாட்டுதல் நூறு சதவீதம் தேவை.
சேயை வெறுத்து ஒதுக்குகிற தாயை உலகத்தில் காண இயலாது.
'காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு' என்று உணரப்படும். மண்ணின் நிறத்தை ஒட்டியே நீரின் நிறம் அமையும். நீருக்கு தனியே நிறம் இருப்பதில்லை. அது போலத்தான் சேயும். தாயின் குணங்களை ஒட்டியே சேயின் செயல்பாடுகள் அமையும்.
'என் மகன் குற்றவாளி' என்று சொல்கிற தாயை உலகத்தில் காண இயலாது. ஒருத்தி, கணவனைக் கூட காட்டிக் கொடுப்பாள்; தனையனைக் காட்டிக் கொடுக்க மாட்டாள்.
பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசுகிற தாய்மார்கள் கோடியில் ஒருத்திகளாக இருக்கலாம்; அன்னவர்களை நாம் கணக்கில் கொள்ளக் கூடாது, குடும்பம், சமூகம், நாடு என்பனவற்றைச் சாராத அவர்களை நாம் தாய்மார்களின் பட்டியலிலிருந்து கழற்றி விடுவோம்.
உண்மைத் தாய்மார்கள் குடும்பங்களையும், சமூகத்தையும் மிக அழகாக அலங்காரம் செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
பெண்களுக்கு தாய்மைக் காலத்தில்தான் பொறுமை, அடக்கம், ஒப்புரவு போன்ற உயர்ந்த குணங்கள் உருவெடுக்கின்றன.
எந்தத் தாய்க்கும் தன் குழந்தை சரியாக சாப்பிடாத மாதிரிதான் தோன்றும்; இளைத்துப் போயிருப்பதாகவும்தான் தோன்றும். தாய்மையின் பார்வை அப்படி. தாயாய் இருப்பது கடினம். தாயின் சுகத்தை அனுபவிப்பது சுலபம். ஆடவர்கள் தாயின் கஷ்டத்தை உணராதவர்களாக இருக்கலாம்; தெரியாதவர்களாக இருக்கக் கூடாது. தாய்க்கு மதிப்பையும், விசுவாசத்தையும் செலுத்த வேண்டுவது ஒவ்வொரு