Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaanaikku Uthaviya Erumbugal
Yaanaikku Uthaviya Erumbugal
Yaanaikku Uthaviya Erumbugal
Ebook126 pages45 minutes

Yaanaikku Uthaviya Erumbugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்றாடம் சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் நிறைய இருக்கின்றன என்பதைக் கூறும் கதைகள்தாம் இந்நூலில் உள்ளவை. தினமணி "சிறுவர் மணியில்" வெளியாகிப் பலருடைய பாராட்டுகளைப் பெற்ற கதைகளும் வேறு சில கதைகளும் இடம்பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580156008694
Yaanaikku Uthaviya Erumbugal

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Yaanaikku Uthaviya Erumbugal

Related ebooks

Reviews for Yaanaikku Uthaviya Erumbugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaanaikku Uthaviya Erumbugal - Edaimaruthour Ki Manjula

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    யானைக்கு உதவிய எறும்புகள்

    Yaanaikku Uthaviya Erumbugal

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. குப்பி

    2. நிலைக்கண்ணாடியும் நிம்மியும்!

    3. மகனிடம் கற்ற பாடம்!

    4. கரப்பான்பூச்சியின் கேள்வியும் பல்லியின் பதிலும்!

    5. யாழினி பாப்பாவின் யோசனை!

    6. காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்!

    7. யானைக்கு உதவிய எறும்புகள்

    8. பொய் சொல்லக் கூடாது!

    9. ரௌடி எறும்பும், மூன்று கொசுக்களும்!

    10. கனவில் வந்தாள் கற்றுத் தந்தாள்!

    11. சிறியோர் எல்லாம் சிறியோர் அல்லர்!

    12. தாமதம் தந்த தங்கம்!

    13. நான்சியின் ‘நாளை’ பாட்டு!

    14. ரஞ்சித்தின் தியாகம்

    15. ஏழைக்கு இரங்கு!

    16. புவியரசனும் புறாவும்!

    17. தந்தை சொல் மிக்க...

    18. நான்கு வழிப் பாதை

    19. டிங்குவும் வாழைப்பழமும்

    20. எளியாரும் வலியாரும்!

    21. அதிக படிப்பு ஆபத்து!

    22. அணிலின் கருணை!

    முன்னுரை

    அன்றாடம் சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் நிறைய இருக்கின்றன என்பதைக் கூறும் கதைகள்தாம் இந்நூலில் உள்ளவை.தினமணி சிறுவர் மணியில் வெளியாகிப் பலருடைய பாராட்டுகளைப் பெற்ற கதைகளும் வேறு சில கதைகளும் இடம்பெற்றுள்ளன.

    தினமணி சிறுவர்மணியில் வெளியான என்னுடைய நாடகங்கள். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு நாடோடிக் கதைகள் பலவற்றைப் படித்து ரசிக்கும் முதன்மை ரசிகை கோதை, ஒரு முறை தொலைபேசியில், நிலைக் கண்ணாடியும் நிம்மியும் கதையைப் படித்துவிட்டு, ஆன்டி உங்களோட அடுத்த கதை எப்போது ஆன்டி சிறுவர் மணியில் வெளியாகும்... படிக்க ஆவலா இருக்கு ஆன்டி என்று கூறி, எனக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்து என்னை மேலும் பல கதைகளை எழுத வைத்தவர்.

    பெரியவர்களுக்கு எழுதுவதைவிட தற்போது சிறார்களுக்கு எழுதுவதையே பெரிதும் விரும்புகிறேன். காரணம், அறிவியல் தொழில்நுட்பத்தின் காரணமாகப் பல கருவிகளுடனேயே வாழ்ந்து, தங்களுடைய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் இன்றைய சிறார்களை நல்வழிப்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் சிறார் இலக்கியம் படைக்கும் படைப்பாளிக்கு உண்டு.

    இந்தத் தொழில்நுட்ப உலகில் பல வகையில் கவனச் சிதறள்களுக்கும், மனச்சிதறல்களுக்கும் உள்ளாகும் இன்றைய சிறார்களை நினைத்தால் பயமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. இன்றைக்கு அவர்களைத்தான் நாம் நல்வழிப்படுத்தியாக வேண்டும். அதுமட்டுமல்ல, அந்தக் கடமையைச் சிறிதாவது செய்ய என்னையும் அந்தக் கலைவாணி ஆளாக்க வேண்டும் என்றே அவளிடம் இறைஞ்சுகிறேன்.

    இன்றைய காலகட்டத்தில் தனிமனித சுயக்கட்டுப்பாடு என்பது மிகமிக அவசியம். ஒவ்வொருவரும் அதைத் தொழில்நுட்பக் கருவிகள் விஷயத்தில் கடைப்பிடிக்கத் தொடங்கினால், நல்ல, மிகச்சிறந்த, அறிவான சந்ததியினரை உருவாக்க முடியும்.

    "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

    இந்த நாடே இருக்குது தம்பி…

    சின்னஞ்சிறு கைகளை நம்பி

    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி"

    என்ற கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் சிறார்களை வழிநடத்த வேண்டியதன் முதன்மையை உணர்த்துகின்றன. இதற்கு பெற்றோர், ஆசிரியர், அரசு மூவரின் பங்களிப்பு இன்றியமையாதது.

    சிறுவர்களை.... சிறுவர்களாக, அவர்களின் குழந்தைத்தன்மையோடு வாழ அனுமதியுங்கள். இளம் வயதிலேயே அவர்களுக்கு ஒüவையார், மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தர், காந்தியடிகள் ஆகியோரின் நன்னெறிகளை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துங்கள்.... இனிவரும் தலைமுறையினராவது மனச்சிதறல்கள் இல்லாத மகிழ்வான வாழ்க்கையை குழந்தைத் தன்மையோடு வாழட்டும்!

    ஆயிரம் சொற்கள் சொல்ல வேண்டிய செய்திகளை ஓர் ஓவியம் சொல்லிவிடும். என் தந்தை ஓர் அற்புதமான ஓவியர். இன்றைக்கு அவர் இருந்திருந்தால், தன் செல்ல மகளின் கதைகளுக்கெல்லாம் அவரே ஓவியம் வரைந்து வரைந்து மகிழ்ந்திருப்பார்; அழகு பார்த்திருப்பார்; என்னையும் மகிழ்வித்திருப்பார். அந்த நல்வாய்ப்பு எங்கள் இருவருக்குமே அமையாமல் போனது விதியின் சதி என்றுதான் கூறவேண்டும்.

    ஆனாலும், என் மனக்குறையைத் தீர்ப்பது போல, மிகச் சிறந்த ஓவியரான திரு.சுமன்(மணி) அவர்களின் கைவண்ணம் என் கதைகளுக்கு மெருகூட்டி சிறப்பு சேர்த்துள்ளது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. என் கதைகள் வெளியிடத் தகுதியானவை என்பதை அறிந்து, தேர்ந்தெடுத்து, ஓவியத்துடன் வெளியிட்டமைக்கு சுமன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, கேட்டவுடன் வரைந்து கொடுக்கும் ஓவியர் டி.நம்பிராஜன் (தினமணி தமிழ்மணி ஓவியர்) அவர்கள் மற்ற கதைகளுக்கும் ஓவியங்கள் வரைந்து கொடுத்து கதைகளுக்கு மேலும் மெருகூட்டியுள்ளார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக என் எழுத்துத் திறமை அறிந்து என் நூல்களைப் பதிப்பித்த மணிவாசகர் பதிப்பகத்தாரும், திரு இராம குருமூர்த்தி அவர்களும் இந்நூலையும் மனமுவந்து வெளியிட இசைந்தமைக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    குழந்தைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து,

    இந்த நூல் முதன்முறையாக... இ புத்தகமாக... புஸ்தகா வெளிவருவதில் பெரும் மகிழ்ச்சி. புஸ்தகா குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி.

    குழந்தை இலக்கியத்தை பல வகைகளில் வளர்த்தெடுத்து வரும் நண்பர் திரு கன்னிக்கோயில் ராஜா அவர்களின் பக்க வடிவமைப்பிலும், கைவண்ணத்திலும் இதோ இந்நூல் உங்கள் கண்ணுக்கும் கருத்தும், சிந்தனைக்கும் விருந்து படைக்க வெளிவந்து விட்டது. ககோராவுக்கு என் மனமார்ந்த நன்றி...!

    இன்ப அன்புடன்

    இடைமருதூர் கி.மஞ்சுளா

    (8.3.2021)

    1. குப்பி

    Enjoying the preview?
    Page 1 of 1