Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaatha Sonna Kathaigal
Thaatha Sonna Kathaigal
Thaatha Sonna Kathaigal
Ebook85 pages28 minutes

Thaatha Sonna Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“தாத்தா சொன்ன கதைகள்” எனும் இந்நூல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் கிட்டுத் தாத்தா என்பவர், அங்கு வசிக்கும் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல அமைந்துள்ளது. இந்தக் கதைகளம் இதுவரை யாரும் கற்பனைகூட செய்து பார்க்காதது. இதில், தாத்தா சொன்ன கதைகளாக மதி இழந்த மந்தி, மனசு மாறிய பாட்டி, தேன் சிட்டும் எறும்பும். சோமுவும் சுண்டைக்காயும், காக்காவும் ஜனனியும், சூப்பர்மேன் சுரேஷ் முதலிய சிறுகதைகள் மிகச்சிறப்பானவை.

வருங்கால சந்ததியினரின் வளமான நல்வாழ்வு கருதி தாவர வகையின் சிறப்பைக் கூறும்போது, “சுண்டைக்காய் விஷயம்”தானே எனக் கருதாமல், சுண்டைக்காயின் மருத்துவ நற்குணங்கள் பற்றி விரிவாகச் சொல்லியுள்ளது வியக்க வைக்கிறது! இக்கதையைப் படிக்கும் சிறார்கள் மட்டுமல்ல... பெரியோரும் இனி சுண்டைக்காய் சாப்பிட மிகவும் ஆசைப்படுவார்கள்.

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580156008623
Thaatha Sonna Kathaigal

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Thaatha Sonna Kathaigal

Related ebooks

Reviews for Thaatha Sonna Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaatha Sonna Kathaigal - Edaimaruthour Ki Manjula

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தாத்தா சொன்ன கதைகள்

    (சிறுவர் கதைகள்)

    Thaatha Sonna Kathaigal

    (Siruvar Kathaigal)

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அணிந்துரை

    முன்னுரை

    கிட்டுத் தாத்தாவின் அறிமுகம்

    1. மதி இழந்த மந்தி!

    2. மனசு மாறிய பாட்டி!

    3. தேன்சிட்டும் எறும்பும்!

    4. சோமுவும் சுண்டைக்காயும்

    5. கல் எறிந்தவனுக்கும் கருணை

    6. அரிய ஐவர்

    7. குறும்புக்கார தம்பி

    8. நூறு முத்தைவிட உயர்ந்த பாடம்!

    9. காக்காவும் ஜனனியும்!

    10. பேச்சுக் கலை

    11. சூப்பர் மேன் சுரேஷ்

    வாழ்த்துரை

    விழிப்புணர்வு ஊட்டும் கதைத் தொகுதி

    குழந்தை இலக்கியச் செல்வர்

    பி. வெங்கட்ராமன்

    இனிதே இளம் தளிர்களுக்கான இலக்கியம் படைப்பதில் இடையறா நல்லுழைப்புடன் இயங்கிவரும் முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்களின் இலக்கியப்பணி அர்ப்பணிப்புடன் கூடிய நற்பணி.

    தினமணியிலும், சிறுவர்மணி பகுதியிலும் மணிமணியான படைப்புகளால் தனக்கென பிரம்மாண்டமான வாசகர் வட்டத்தையே கொண்டிருப்பவர் இவர். எழுத்தில் எளிமை, நடையில் குளுமை, கதை சொல்லும் பாங்கில் இனிமை இவைதான் இவருடைய நூல்களின் பெரும் சிறப்பு.

    இவரது உண்மை தந்த பரிசு நூல் - அற்புத சிறுவர் கதைகள் கொண்ட நன்னூல். இவரது சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும் நூல் அருமையான ஆய்வுக் கட்டுரை நூல் மட்டுமல்ல, சிறுவர் இலக்கியம் தொடர்பாக அனைத்தும் தொகுக்கப்பட்ட பெருமைமிகு அற்புத ஆவணம்.

    தாத்தா சொன்ன கதைகள் எனும் இந்நூல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் கிட்டுத் தாத்தா என்பவர், அங்கு வசிக்கும் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல அமைந்துள்ளது. இந்தக் கதைகளம் இதுவரை யாரும் கற்பனைகூட செய்து பார்க்காதது. இதில், தாத்தா சொன்ன கதைகளாக மதி இழந்த மந்தி, மனசு மாறிய பாட்டி, தேன் சிட்டும் எறும்பும். சோமுவும் சுண்டைக்காயும், காக்காவும் ஜனனியும், சூப்பர்மேன் சுரேஷ் முதலிய சிறுகதைகள் மிகச்சிறப்பானவை.

    வருங்கால சந்ததியினரின் வளமான நல்வாழ்வு கருதி தாவர வகையின் சிறப்பைக் கூறும்போது, சுண்டைக்காய் விஷயம்தானே எனக் கருதாமல், சுண்டைக்காயின் மருத்துவ நற்குணங்கள் பற்றி விரிவாகச் சொல்லியுள்ளது வியக்க வைக்கிறது! இக்கதையைப் படிக்கும் சிறார்கள் மட்டுமல்ல... பெரியோரும் இனி சுண்டைக்காய் சாப்பிட மிகவும் ஆசைப்படுவார்கள்.

    நாம் இரைதேடும் பறவைகளாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பறவைகள் சோம்பிக் கிடப்பதே இல்லை. தேன்சிட்டு எவ்வளவு சுறுசுறுப்பாக உழைத்து சேமிக்கத் தொடங்கிவிட்டன. நாமும் இப்படித்தான் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேன் சிட்டும் எறும்பும் கதையில், ஒளவையின் ஆத்திசூடியில் வைகறைத் துயிலெழு. சோம்பித் திரியேல், சோம்பலுள்ளவர் சோம்பித்திரிவர் என உள்ளதை மேற்கோள் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தொழில்நுட்ப சூழலால், காட்சி ஊடகங்களாலும், கார்ட்டூன் தொடர்களாலும் சிறுவர் - சிறுமியர்களின் வாசிப்பு பாதிக்கப்பட்டிருந்தாலும், கருத்துள்ள படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அற்புத கருத்துக்களுடன் விழிப்புணர்வு ஊட்டும் இவரது கதைத் தொகுதிக்கு அபார வரவேற்பு இருக்கும் என்பது திண்ணம்.

    ஓவியர் திரு டி.என். ராஜன் அவர்களின் ஓவியங்கள், திரு கன்னிக்கோயில் இராஜா அவர்களின் நிகரற்ற வடிவமைப்பு, விழியன் அவர்களின் அணிந்துரை, ஆகியவை இந்த நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. இதுபோன்ற பல படைப்புகளை நூலாசிரியர் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்கள் சிறார் உலகுக்குத் தரவேண்டும் என்று கூறி, அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    "குழந்தை

    Enjoying the preview?
    Page 1 of 1