Junior Tej Page – 3
By Junior Tej
()
About this ebook
“சிறுகதைகளில் பலப் பரிமாணங்களில் சிற்பியாக வலம் வருகிறார் ஜூனியர் தேஜ். சிக்கலானக் கதாபாத்திரங்களைக் கூட, கண்ணைக் கூச வைக்கும் அளவுக்கு பளிச் எனத் பிரகாசித்து அடங்கும், கேமரா ஃப்ளாஷ் போன்ற, ஒளி வெள்ளத்துடனும், வளத்துடனும் தெளிவாய் வாசகனுக்குத் தருகிறார். ரஜினி சொல்வது போல ”யார் பக்கமும் சாயாத பாபா” வாய் நடுநிலை எழுத்து இவரது.” என்கிறார், 15 சிறுகதைகளைத் தாங்கிய இந்த மூன்றாம் தொகுப்பிற்கு வாழ்த்துரை வழக்கிய கோவைக் கல்லூரி நூலகர் முனைவர் கரு. செந்தில்குமார் அவர்கள். வாசிப்பை சுவாசிப்பாய் நேசிக்கும் வாசகர்களாகிய நாம் நடுநிலை எழுத்தாளர், ஜூனியர் தேஜ் அவர்களின் சிறுகதைகளை வாசித்து மகிழ்வோமே!
Read more from Junior Tej
Junior Tej Page - 5 Rating: 0 out of 5 stars0 ratingsJunior Tej Page – 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaliyan Mathavu Rating: 0 out of 5 stars0 ratingsJunior Tej Page – 4 Rating: 0 out of 5 stars0 ratingsJunior Tej Page – 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Junior Tej Page – 3
Related ebooks
Petha Manam Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal Patriya Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsSilaiyum Neeye Sirpiyum Neeye Rating: 0 out of 5 stars0 ratingsThamasha Varigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsNermai Oru Kuttrama? Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsIndia Ilainane! Un Kadamaigal Ivai!! Rating: 0 out of 5 stars0 ratingsPatta Kettu Manu Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthapadatha Theerpugal Rating: 0 out of 5 stars0 ratingsAlaiyadum Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsThaatha Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam Rating: 0 out of 5 stars0 ratingsBommai Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Parisu Rating: 0 out of 5 stars0 ratingsVizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Kanakaalam Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Vizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Iravu Rating: 5 out of 5 stars5/5Kaadhalenum Theevinile Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarum Kaalam Rating: 2 out of 5 stars2/5Veril Pazhutha Palaa Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Junior Tej Page – 3
0 ratings0 reviews
Book preview
Junior Tej Page – 3 - Junior Tej
https://www.pustaka.co.in
ஜூனியர் தேஜ் பேஜ் – 3
(சிறுகதைகள்)
Junior Tej Page – 3
(Sirukadhaigal)
Author:
ஜூனியர் தேஜ்
Junior Tej
For more books
https://www.pustaka.co.in/home/author/junior-tej
பொருளடக்கம்
அணிந்துரை
வாழ்த்துரை
வாழ்த்துரை
என்னுரை
1. குன்றென நிமிர்ந்து நில்
2. ஆனந்தி
3. சரஸ்வதி பூஜை
4. ஸ்ரீ
5. தீபாவளி பர்சேஸ்
6. கரணம் தப்பினால்...
7. கம்ப்யூட்டரும் டைப்ரைட்டரும்
8. ஓ.பீ சீட்டு
9. முருங்கைக் கிழங்கு
10. போன்ஸாய்
11. பொழி
12. புத்தாண்டுச் சபதம்
13. வெட்டுவா
14. நியூட்ரல்
15. ரெட் லெட்டர் டே
பெற்றோர்க்குச் சமர்ப்பணம்
A ஜானகி - V அருணாசலம் (தேஜ்)
குரு வணக்கம்
அணிந்துரை
திரு பூபதி பெரியசாமி - சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர்
நல்ல எழுத்தாளரின் அடையாளம் இத்தொகுப்பு.
தமிழில் சிறுகதைகள் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து எழுதப்பட்டும், வாசிக்கப்பட்டும் வருகிறது. 1908 ஆம் ஆண்டில் வா வே சு ஐயர் ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற கதையை அறிமுகம் செய்து வைத்தார். இது சிறுகதைக்கெல்லாம் முன்னோடி என கருதப்படுகிறது.
ஜூனியர் தேஜ் பேஜ் 3 வது தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளும் பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பில் உள்ள கதைகள் எளிய நடையில் வழக்கு மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. இதில் உள்ள 15 சிறுகதைகளும் தனித்தன்மை வாய்ந்தவை.
நூலாசிரியர், அடிப்படையில் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதால், மாணவர் குழந்தைகள் இவர்களை பெரும்பாலான கதைகளில் கதை மாந்தர்களாகக் காட்டியிருக்கிறார்.
அறிஞர்களின் கோட்பாடுகள், கருத்துக்கள் எல்லாம் பல்வேறு படைப்புகளில் ஆங்காங்கே விரவியுள்ளது சிந்தனைக்கு விருந்தாகிறது.
‘சரஸ்வதி பூஜை’ எனும் சிறுகதையில், பார்வைக் குறைபாடு உள்ள தம்பதியர், தன் குழந்தையோடு எதிர் இருக்கையில் இருக்க, சக பயணியான ரேவதி, அந்தக் குழந்தையோடு ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கத்தை வெகு இயல்பாகக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இறுதியில் ரேவதி என்ற கதாபாத்திரத்தின் மனநிலையில் உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் ஏற்படும் தலைகீழ் மாற்றம் பவித்ர அகங்காரம் என்ற வரட்டுச் சம்பிரதாயங்களை உடைத்துப் புதுமை புகுத்துவது சிறப்பினும் சிறப்பு.
‘ஸ்ரீ’ என்ற சிறுகதையில் ஒரு ‘அதெலெட்’ மாணவிக்கும் பயிற்சியாளருக்கும் நடக்கும் நிகழ்வுகளை அழகாக எடுத்துரைத்து, ஒரு விபத்தையும் அதில் காட்சியாக வடிவமைத்து SPORTIVE SPRIT என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்த விதம் அருமை.
கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் ஒரு முதியவர் நகரில் உள்ள ‘மால்’க்குச் செல்லும்போது நடக்கும் நிகழ்வுகளை இயல்பாக விவரித்து, இறுதியில் போக்குவரத்து சிக்னலில் தன் மகன் செய்யும் காரியத்தை பார்த்து பெருமைப்படும் எதிர்பாராத திருப்பத்தை தரும் சிறுகதை ‘தீபாவளி பர்ச்சேஸ்’.
அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சர்க்கஸ் கலை தொடர்பான ‘கரணம் தப்பினால்’ என்ற கதையிலும், கம்ப்யூட்டரும் டைப்ரைட்டரும் என்ற கதையிலும் ஜூனியர் தேஜ் அவர்களின் கற்பனை ஓட்டம் சிறப்பாக வெளிப்படுகிறது. ஒரு தட்டச்சு எந்திரமும் கணினியும் அதை பயன்படுத்துபவோரோடு பேசுவதுபோல சித்தரித்திருப்பது அழகான எதார்த்தம்.
‘ஓபி சீட்டு’ - என்ற சிறுகதையில் மருத்துவமனையில் நடக்கும் சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து மனதை உருக்கும் முடிவோடு அமைத்திருப்பது பாராட்டுக்குறியது.
இதே போல ‘போன்சாய்’ மற்றும் ‘பொழி’ என்ற கதைகளும் அவரது எழுத்துக்குத் திறமைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.
‘புத்தாண்டு சபதம் என்ற சிறுகதையில் ஒவ்வொரு மனிதனும் புத்தாண்டு தினத்தன்று எடுக்கும் பலவிதமான சபதங்களையெல்லாம் கூறி, இறுதியில்
அதுக்கு முடிவு கட்டுவேன், இதுக்குத் தலை முழுகுவேன், அதை நிறுத்துவேன், இதை ஒழிச்சுக் கட்டுவேன்... ன்னு புத்தாண்டு சபதம் செய்யறோமே. அந்தக் கெட்டப் பழக்கத்தை இந்தப் புத்தாண்டுலேர்ந்து நிறுத்தப் போறேன்!" - என்று அதிரடியான ஒரு முடிவைக் கூறிய பாங்கு ரசனைக்குறியது.
‘வெட்டுவா’ என்ற கதையில் காட்டபட்டுள்ள, ஒரு சிறுமியின் உண்மையான ஆதங்கமும், உயிர் இரக்கமும் உணர்வுபூர்வமாக வடிவமைக்கப்பட்டு, உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கிறது.
இக்காலத்தில் சிறுகதை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் இதழ்களில் வெளியான நல்ல படைப்புகளை எல்லாம் தொகுத்து நூலாக வெளியிடும் எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்கள் இத்தொகுப்பின் மூலம் குன்றென நிமிர்ந்து நிற்கிறார். அவரது முயற்சிக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பூபதி பெரியசாமி,
மேனாள் துணை இயக்குநர், கல்வித்துறை, புதுச்சேரி அரசு
சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர்
23.01.2023
வாழ்த்துரை
பாரதி பணிச் செல்வர் – ந சண்முகம். எம்.ஏ., எம்.ஏ.,
நந்தினி பதிப்பகம், மாவட்டத் தலைவர் – அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், 117- புறவழிச்சாலை – திருவண்ணாமலை – 606 601. அலைப்பேசி 9843823777
இனிய நண்பர் – இதய நண்பர் – சீர்காழி தந்த சிந்தனைச் செல்வர் ஜூனியர் தேஜ் அவர்களின் சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன்.
நாம் அன்றாடம் சந்திக்கின்ற மனிதர்களிடம் இருக்கும் பல்வகை குணாதிசயங்களை உள்வாங்கி அதனுடன் சிறிது கற்பனை கலந்து – ரசிக்கத் தக்க வகையில் எழுத்து நடை அமைத்து – சமுதாயத்திற்கு நல்லதொரு கருத்தைக் கூறுவதுதான் "சிறுகதை’ வடிவத்தின் சிறப்பு.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர் வரதராஜன் அ.ஜூனியர் தேஜ்
எனும் புனைப் பெயரில் இங்கே சிறுகதைகளைத் தந்திருக்கிறார். இக்கதைகள் அனைத்தும் தமிழகத்தின் பிரபலமான ஆனந்த விகடன், கல்கி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றவை.
பல்வகை வாசனைமிகு மலர்களை, வண்ண மாலையாக அமைப்பது போல், ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு சிறப்புப் பெற்ற சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வழங்கி, சிறுகதை உலகிற்கு நல்ல தொண்டினை ஆற்றியிருக்கிறார்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் படிப்பவர்களை தன்பால் ஈர்த்து மகிழும் வண்ணம் எழுதியிருப்பது இவரின் தனிச் சிறப்பு.
எடுத்துக்காட்டாக, ‘புத்தாண்டுச் சபதம்" என்ற சிறுகதையில், ஒவ்வொரு மனிதரும் புத்தாண்டு அன்று