Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thamasha Varigal Part - 1
Thamasha Varigal Part - 1
Thamasha Varigal Part - 1
Ebook214 pages1 hour

Thamasha Varigal Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையின் வட்டார ஏடுகளில் மிகப் பிரபலமான 'அண்ணாநகர் டைம்ஸ்' இதழின் ஆசிரியர் திரு. கே.எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் என்னை வாரம் வாரம் அப்பத்திரிகையில் தமிழில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதப் பணித்த காரணத்தினால், 'அண்ணா நகர் டைம்ஸ்' மற்றும் அதன் சகோதர இதழ்களான 'மாம்பலம் டைம்ஸ்,' 'அசோக்நகர் - கே.கே. நகர் டைம்ஸ்,' 'கீழ்ப்பாக்கம் - புரசை டைம்ஸ்'களில் என்னுடைய படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு வாரம் வாரம் விநியோகிக்கப்படும் இவ்விதழ்களில் இதுவரை வெளிவந்த முப்பத்தி ஆறு கட்டுரைகளின் தொகுப்பே உங்கள் கரங்களில் இப்போது தவழ்கிறது.

ஒவ்வொரு வார இறுதியிலும் ஆவலோடு எதிர் பார்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்படும் இப்பத்திரிகைகளில் எழுதுவதை நான் மிகப் பெரும் பாக்கியமாகக் கருதி, அதற்கு வாய்ப்பளித்த உன்னத ரசிகரும், நிர்வாகத் திறமையில் ஜொலிக்கும் பண்பாளருமான திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓயாத பணிகளுக்கிடையே என்னுடைய நிர்ப்பந்தங்களால் சிறிதும் சலிப்படையாமல் ஒவ்வொரு வாரமும் உயிரோட்டமுள்ள, அற்புதமான கேலிச் சித்திரங்களைத் தன் மந்திரத் தூரிகையால் வரைந்து, வாசகர்களின் கவனத்தைக் கட்டுரை மீது ஒரு பளிச்சிடும் நியான் விளக்கு போலச் சுண்டி இழுக்கச் செய்து வரும் திரு. 'நடனம்' அவர்களுக்கு என் நன்றிகள்.

'சிரிப்பே மருந்து' என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் தான் எழுப்பும் சிரிப்பலைகளால் உடல் மற்றும் மன உபாதைகளை வெற்றிகரமாக விரட்டியடிக்கும் 'நகைச்சுவை வைத்திய ரத்தினம்’ திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள், நகைச்சுவை எழுத்தாளர்களைப் பாராட்டி கெளரவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். தன் எழுத்தால் மட்டுமன்றி நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் கேட்பவர்களை விலாப்புடைக்கச் சிரிக்க வைத்துவிடும் அவர் இத்தொகுப்பிற்கு மனமுவந்து எழுதித் தந்த முன்னுரைக்கு என் நன்றிகள்.

கட்டுரைகளை 'வரிகள்' விடாமல் படித்த கையோடு என்னுடன் தவறாமல் தொலைபேசி மூலமாகவோ அல்லது சந்திக்கும்போது நேர்முகமாகவோ என் எழுத்தை நெஞ்சாரப் பாராட்டி ஒரு அன்யோன்யத்துடன் ஆதரித்து வரும் வாசக நண்பர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

தமாஷா 'வரிகள்' படிப்பவர்களின் மனச்சுமைகளை ஓரளவாவது இறக்கி - அதை லேசாக்க உதவுகின்றன என்று வாசகர்கள் கருதினால் அதற்கு என்னை ஊக்குவிக்கும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களும், எழுதப் பயிற்சியை அளித்த என் மானசீக ஆசான்களான பி.ஜி. உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி. ஜானகிராமன் அவர்களும், தொடர்ந்து எழுத அருள் புரியும் எல்லாம் வல்ல இறைவனுமே காரணம் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

- ஜே.எஸ். ராகவன்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127204446
Thamasha Varigal Part - 1

Read more from J.S. Raghavan

Related to Thamasha Varigal Part - 1

Related ebooks

Related categories

Reviews for Thamasha Varigal Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thamasha Varigal Part - 1 - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    தமாஷா வரிகள் பாகம் - 1

    Thamasha Varigal Part -1

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அது அது அவன் அவன் செயல்!

    பின் ஜாக்கிரதை

    கண்ணீர் கங்கை

    இது 'நாய’மா?

    ஷூ போடு!

    மிஸ்டர் முகமூடி

    வாய் 'ஜொள்'ளில் வீரரடி!

    'நடை'ச்சுவை விருந்து!

    சிக்கனமும் கைப் பழக்கம்!

    தபால் 'புறா’ணம்

    அருள்மிகு ஸ்ரீ கரண்ட்டீஸ்வரி

    செல்லம்மா!

    சிகாகோ அங்கிள்

    வாஸ்கோட மாமா

    'சளிப் பெயர்ச்சி' பலன்கள்

    (மாப்)பிள்ளை யார்?

    இரட்டைக் கிழவிகள்

    யானைப் பசிக்கு 'சோலா பூரி!’

    அம்மா + ஆசை = பெளர்ணமி

    மகா‘போளி’புரம்!

    குடும்ப டாக்டர்

    பொருள் விளங்கா உருண்டை

    பி.பி.சி. மாமி

    தீபாவளி மல்லர்கள்

    உத்தி‘ராட்சஸ'ப் பூனை

    ஒரு கட்டுக்கதை

    பத்தியம் - தாம்பத்தியம்!

    வடு மாம்பழம்

    மாமோய்

    'லொட லொட' பதநிஸ

    குட்டு வைக்காத 'எட்டு'

    வார்த்தை நயாகரா

    ஊர் (பெயர்) வம்பு!

    மாமி அவார்ட்ஸ்

    கங்காரு அம்மா

    ஜரகண்டி

    என்னுரை

    சென்னையின் வட்டார ஏடுகளில் மிகப் பிரபலமான 'அண்ணாநகர் டைம்ஸ்' இதழின் ஆசிரியர் திரு. கே.எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் என்னை வாரம் வாரம் அப்பத்திரிகையில் தமிழில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதப் பணித்த காரணத்தினால், 'அண்ணா நகர் டைம்ஸ்' மற்றும் அதன் சகோதர இதழ்களான 'மாம்பலம் டைம்ஸ்,' 'அசோக்நகர் - கே.கே. நகர் டைம்ஸ்,' 'கீழ்ப்பாக்கம் - புரசை டைம்ஸ்'களில் என்னுடைய படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு வாரம் வாரம் விநியோகிக்கப்படும் இவ்விதழ்களில் இதுவரை வெளிவந்த முப்பத்தி ஆறு கட்டுரைகளின் தொகுப்பே உங்கள் கரங்களில் இப்போது தவழ்கிறது.

    ஒவ்வொரு வார இறுதியிலும் ஆவலோடு எதிர் பார்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்படும் இப்பத்திரிகைகளில் எழுதுவதை நான் மிகப் பெரும் பாக்கியமாகக் கருதி, அதற்கு வாய்ப்பளித்த உன்னத ரசிகரும், நிர்வாகத் திறமையில் ஜொலிக்கும் பண்பாளருமான திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஓயாத பணிகளுக்கிடையே என்னுடைய நிர்ப்பந்தங்களால் சிறிதும் சலிப்படையாமல் ஒவ்வொரு வாரமும் உயிரோட்டமுள்ள, அற்புதமான கேலிச் சித்திரங்களைத் தன் மந்திரத் தூரிகையால் வரைந்து, வாசகர்களின் கவனத்தைக் கட்டுரை மீது ஒரு பளிச்சிடும் நியான் விளக்கு போலச் சுண்டி இழுக்கச் செய்து வரும் திரு. 'நடனம்' அவர்களுக்கு என் நன்றிகள்.

    'சிரிப்பே மருந்து' என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் தான் எழுப்பும் சிரிப்பலைகளால் உடல் மற்றும் மன உபாதைகளை வெற்றிகரமாக விரட்டியடிக்கும் 'நகைச்சுவை வைத்திய ரத்தினம்’ திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள், நகைச்சுவை எழுத்தாளர்களைப் பாராட்டி கெளரவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். தன் எழுத்தால் மட்டுமன்றி நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் கேட்பவர்களை விலாப்புடைக்கச் சிரிக்க வைத்துவிடும் அவர் இத்தொகுப்பிற்கு மனமுவந்து எழுதித் தந்த முன்னுரைக்கு என் நன்றிகள்.

    கட்டுரைகளை 'வரிகள்' விடாமல் படித்த கையோடு என்னுடன் தவறாமல் தொலைபேசி மூலமாகவோ அல்லது சந்திக்கும்போது நேர்முகமாகவோ என் எழுத்தை நெஞ்சாரப் பாராட்டி ஒரு அன்யோன்யத்துடன் ஆதரித்து வரும் வாசக நண்பர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

    தமாஷா 'வரிகள்' படிப்பவர்களின் மனச்சுமைகளை ஓரளவாவது இறக்கி - அதை லேசாக்க உதவுகின்றன என்று வாசகர்கள் கருதினால் அதற்கு என்னை ஊக்குவிக்கும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களும், எழுதப் பயிற்சியை அளித்த என் மானசீக ஆசான்களான பி.ஜி. உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி. ஜானகிராமன் அவர்களும், தொடர்ந்து எழுத அருள் புரியும் எல்லாம் வல்ல இறைவனுமே காரணம் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

    ஜே.எஸ். ராகவன்.

    *****

    விஷய(ம)ம் தெரிந்த நகைச்சுவை எழுத்தாளர்

    நகைச்சுவையாக எழுதுவதற்கு, நகைச்சுவை உணர்வோ, பேனா பேப்பரோ ஒரு எழுத்தாளருக்குத் தேவையில்லை. சிண்டு என்று ஒன்று இருந்தால் போதும்.

    இந்த நவீன காலத்தில் சர்வம் கிராப் மயம். சிண்டுக்குப் பதில் கிராப் இருந்தாலும் போதும்.

    அதைப் பிய்த்துக் கொண்டு எழுதினால்தான் கதையோ, கட்டுரையோ வரும் என்பார்கள்.

    பெரும்பாலான எழுத்தாளர்கள் பிரசவத்தின் போது குய்யோ முய்யோ என்று கூக்குரலிட்டு அமர்க்களம் பண்ணுவார்கள்.

    சமர்த்தாகக் குழந்தை பெற்றுக் கொள்ளும் அபூர்வ பெண்மணிகளின் ரகத்தில் நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ். ராகவனைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

    சென்னையிலிருந்து வெளிவரும் வட்டார ஏடுகளில் சக்கைபோடு போடுபவை 'அண்ணாநகர் டைம்ஸ்' மற்றும் 'மாம்பலம் டைம்ஸ்'. ஆங்கிலத்தில் வரும் அந்தப் பத்திரிகைகளில் ஜே.எஸ்.ஆர். தமிழில் 'தமாஷா வரிகள்' என்கிற 'நகைச்சுவை காலம்' எழுதி வருகிறார். அனாயாசமாக வாரம்தோறும் வாசகர்களின் வயிற்றைக் குலுங்கச் செய்யும் கட்டுரைகளைச் சோர்வில்லாமல் வாரத்துக்கு வாரம் கூடுதலான சங்கதிகளுடன் எழுதி வருகிறார். அவர் எழுதிய முப்பத்தி ஆறு கட்டுரைகளின் தொகுப்பே இந்தச் சிரிப்பு நூல்.

    தாய்மொழி தமிழ். ஆனால் கரைத்துக் குடித்தது ஆங்கில நகைச்சுவை இலக்கியத்தை. ரீடர்ஸ் டைஜஸ்டில் ராகவனின் கட்டுரைகள் வெளி வந்திருக்கின்றன.

    ஆனால் ஒரு தமிழனுக்குத் திருப்தி, அவன் தமிழில் எழுதி அதைத் தமிழ் தெரிந்த வாசகர்கள் ரசிப்பதில் தான் உள்ளது.

    ஆங்கிலத்தில் ஊறி, நகைச்சுவைக் கட்டுரைகளை மேல்நாட்டு நகைச்சுவையாளர் கையாளும் முறைகளை ஜே.எஸ்.ஆர். ஆழமாக ஆராய்ச்சி செய்தவர்.

    இல்லாவிட்டால் வெடுக்வெடுக்கென்று குத்தல்களும் நவீன நயங்களும் மேற்கோள்களும் சொல்லில் விஷமங்களும் உதாரணங்களும் அப்படி வந்து விழுமா என்ன?

    எடுத்துக் கொள்ளும் விஷயங்கள் அநேகமாகத் தமிழ்நாட்டில் ஊறிய சரக்கு. அதை ஜே.எஸ்.ஆர். சிரிப்புக் காலமாக எழுதும்போது மேற்கத்திய தரத்தை அடிக்கடி தொட்டுக் காட்டுகிறார்.

    அவர் யாரைப் போல் எழுதுகிறார்?

    அவர், அவரைப் போலத்தான் எழுதுகிறார்.

    அவருடைய ரசனைகளும் நகைச்சுவைக் கண்ணோட்டமும் மகா மகா ஒரிஜினல்.

    திருப்பதி க்யூவில் ஆந்திர சகோதரர்கள் ஒலிக்கும் ஜரகண்டியை வைத்து ஒரு பம்ப்பர் குலுக்கல் செய்திருப்பதைப் பாருங்கள். யார் மனசையும் நோகடிக்காத, விவகாரம் பண்ணாத ஒரு கிண்டல்.

    திருப்பதி அனுபவம் அதிகம் இல்லாதபோது கட்டுரை ஆசிரியருக்கு என்ன தோன்றிற்றாம்... இந்த ஜரகண்டி யாராக இருக்கும்? பிருகு முனிவர், ஜாபாலி முனிவர், ஜமதக்னி முனிவர் போன்று ஜரகண்டி என்றொரு முனிசிரேஷ்டர் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் நாமத்தைப் பெருமாள் சன்னதியில் உச்சரிக்காமல் இருப்பது அபசாரமான செயல் என்றும் நினைத்தாராம்.

    உத்திராட்ச(ஸ)ப் பூனையில் -

    ஆசிரியருக்கு ஒரு நியாயமான சந்தேகம். இரண்டு தோசையைப் பூனை தின்றுவிட்டுப் போய்விட்டதற்காக அதைத் திட்டலாகாது என்று கருதிய ஜே.எஸ்.ஆர். அந்தப் பூனையைக் குற்றவாளியாக்கி அதைக் கூண்டில் நிறுத்தி அதன் கட்சியை அதன் வாயாலேயே - அவனருளாலே அவன் தாள் போற்றி - மாதிரி பூனையைக் கொண்டே பூனைகளின் கட்சியை சரித்திர சான்றோடு பேச வைக்கிறார்.

    எங்கள் சேவையை உதாசீனப்படுத்தும் வகையில் மனிதர்கள், எலியைப் பிடிக்க எலிப்பொறிகளையும், பாஷாணத்தையும் நாடுவது அநியாயம். மசால் வடைகள், சுட்ட தேங்காய்ப் பத்தைகள், உரித்த வெங்காயங்களுக்காகத் தேசிய அளவில் செலவழிக்கப்படும் தொகை நாங்கள் (பூனைகள்) திருடித் தின்பதாகச் சொல்லப்படும் உணவுப் பொருட்களின் மதிப்பை விட நூற்று எண்பத்தெட்டு புள்ளி ஒன்பது ஒன்பது விழுக்காடுகள் அதிகம் என்று ஒரு 'பில்லி' விவரம் (அதாவது புள்ளி விவரம்) கூறுகிறது...

    இப்படி உபரிமிதமாக அபரிமிதமாக நகைச்சுவை அவரது சகல கட்டுரைகளிலும் வழிந்தோடுகிறது. பாங்கியில் பணம் பெறும் போது கீழே நோட்டு விழுந்திருக்கிறது கவனியுங்கள் அல்லது அடடே, உங்கள் சட்டை மேலே காக்கா எச்சம் என்று எச்சரிப்பது போல ஏமாற்றுகிறவர்களிடம் ஏமாறாமலிருக்க ஒரு ஜாக்கிரதைப் பேர்வழி முயலுவதை இதைவிட நகைச்சுவையாக ஒருத்தரால் பின்ன முடியாது.

    ஜே.எஸ்.ராகவனின் நகைச்சுவை அடிக்கடி பெய்து கொண்டே இருக்க வேண்டும்.

    சென்னையில் தண்ணீர் இல்லா விட்டால் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று குரல் எழுப்புவது போல் பத்திரிகையில் நகைச்சுவை குறையும் போதெல்லாம் வாசகர்கள் 'ராகவா! ராகவா!' என்று பிரார்த்திக்கலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்.

    பாக்கியம் ராமசாமி.

    *****

    அது அது அவன் அவன் செயல்!

    விநாயகா! உன் அருளாலே எல்லாம் நல்லபடியா அமையணும்.

    அட இன்னிக்குப் பிள்ளையாரா?

    ஆமாம்! தங்கு தடையில்லாமல் தொடர்ச்சியாக எழுத வியாச பகவானே நாடியது விக்னேஸ்வரரைத் தானே? அதனால்தான் கணபதிக்குப் பிரார்த்தனை!

    அப்படியா? அப்போ, வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு கடவுள்களை வேண்டிக்கணுமா?

    ஆமாம். அதானே சரி. அதுக்காகத்தானே அத்தனை கடவுள்கள் இருக்காங்க.

    சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூடவா?

    கட்டாயமா.

    நேத்திக்கு. உன் பெண்டாட்டியை கோபாக் கிரகத்திலேயிருந்து வெளியே கொண்டு வர அவளுக்குப் பிடிச்ச மாம்பழம் வாங்கப் போனியே, அப்போ...?

    அப்போ கூடத்தான்! மாம்பழ விஷயத்திலே நான் 'பழம் தின்னு கொட்டை போட்டவன்' தான். ஒத்துக்கிறேன். ஆனாலும் சரியான விளைச்சல் இல்லாத இந்த வருஷத்தில் ஊர் பூரா தேடி அலைஞ்சு வாங்கிய 'அல்ஃபோன்ஸா' ருசியாக இல்லாமல் போனால், அவ என்னை நார்நாராக கிழிச்சி எறிந்துடுவாளே

    "கடைத் தெருவிற்குப் போகிற வழியிலே பிரார்த்தனை பண்ணிக் கொண்டேன். உலகத்தை மயில் மேல் ஏறிச் சுற்றி வந்தும் அபூர்வ மாம்பழத்தைக் கோட்டை விட்டவர் முருகன். ஆனால் சிவனையும், பார்வதியையும் மூன்று முறை சுற்றி வந்து பழத்தைப்

    Enjoying the preview?
    Page 1 of 1