Sundal Chellappa
()
About this ebook
நவராத்திரி, கடற்கரை, பஜனை மடம் போன்றவற்றுடன் பரவசத்துடன் இணைத்துப் பேசப்பட்டு, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு ஆர்வத்துடன் கொரிக்கப்படும் சுண்டல்களிலும் நகைச்சுவையைப் போன்று பலவகைகள் உண்டு. பட்டாணி, கடலைப் பருப்பு, கொத்துக்கடலை, வேர்க்கடலை, பாப்கார்ன் போன்ற பல திருநாமங்களுடன் கச்சிதமாக முடையப்பட்ட தொன்னைகளில் வழங்கப்படும் சுண்டல்களும், நகைச்சுவையைப் போன்று சுண்டிய முகங்களை செந்தாமரையாக மலரவைக்கும் திறனுடையது. சுண்டல், கிண்டல் இரண்டும் ஒலி ஓசையில் ஒத்திருக்கும் உடன்பிறவா சகோதர வார்த்தைகள்.
வெந்தால்தான், கடலைகளோ, பருப்புகளோ சுண்டலாக முடியும். தான் வெந்து, உண்பவரை வேக வைக்காது மகிழவைக்கும் சுண்டல், கொறிக்கும் வகை சிற்றுண்டிகளில் பேராண்டி, எவ்வாறு, கடற்கரையும் காதலும், வெண்ணிலாவும் வானும் போல இணைந்து இருக்கின்றனவோ, அவ்வாறே காதலும் சுண்டலும் பிணைந்து இருக்கின்றன என்று சொன்னால், சில காதலர்கள் சண்டைக்கு வருவார்கள். காரணம், நறநற மணலை அரிந்துகொண்டே கடலை போடும்போது, தேங்காய், மாங்காய் பிணைந்த பட்டாணி சுண்டலை விற்கும் சிறுவர்கள், செவ்வனே ஆரம்பித்து, ருசிகரமாக நடந்துகொண்டிருக்கும் சிவபூஜையில் கரடியாக மூக்கை நுழைப்பதால்தான். இருப்பினும், காதல் கனிந்து கல்யாணத்தில் முடிய, காதலர்கள் சுண்டல் உண்ண வேண்டும் என்று பட்டினப்பாக்க கிளிஞ்சல் சித்தர், சுண்டலுடன் நகைச்சுவையையும் பரிமாற்றக்கொள்ள வேண்டும் என்று செப்பி அருளியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோவில்களில் பக்தர்களுக்கும், கடற்கரைகளில் காதலர்களுக்கும் கிடைக்கும் சுவையான சுண்டலின் பெயரைத் தாங்கியிருக்கும் இந்தப் புத்தகத் தொன்னையில் வழங்கப்படும் கட்டுரைகள், 'தமாஷா வரிகள்’ என்கிற தலைப்பில் ஒன்றாக வெளிவந்தவை. கொறிக்கவும், கொறித்துக் கொண்டே சிரிக்கவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
இந்த விநியோகத்தை ஸ்பான்ஸர் செய்த வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஓவியர் நடனம் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த கையோடு, விரைவில் ஜீரணம் ஆகிவிடும் (அல்லது பல நாட்கள் ஆகிவிடாத) ஒரு மாலைப்பொழுதின் சிற்றுண்டிக்காகவே பெரிய தொகையை, தற்காலத்தில் பள பள 'பவன்’களில் செலவழிக்க அஞ்சாத நெஞ்சங்கள், இப்புத்தகத்தை வாங்க சிறுதொகையை ஒதுக்கி, பரிவுடன் வழங்கப்படும் சுண்டல் சுவைத்து இன்புற வேண்டுகிறேன்.
அன்புடன்,>br/> ஜே.எஸ்.ராகவன்
Read more from J.S. Raghavan
Gopikaikalum Jangirikalum Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Varaali Rating: 0 out of 5 stars0 ratingsThirumathi Thirupathi Crorepathi Rating: 0 out of 5 stars0 ratingsSivasamiyin Sabatham Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsThamasha Varigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMaavadu Ramudu Rating: 0 out of 5 stars0 ratingsKanna Mango Thinna Asaiya Rating: 0 out of 5 stars0 ratingsKichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Sandaikozhiye! Rating: 0 out of 5 stars0 ratingsYahoo Kalam Rating: 0 out of 5 stars0 ratingsVari Variyaga Siri Rating: 0 out of 5 stars0 ratings‘Jolly’ an wala ‘Bag’ Rating: 0 out of 5 stars0 ratingsComedy Cocktail Rating: 0 out of 5 stars0 ratingsThamasha Varigal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsBoogola Rambai Rating: 0 out of 5 stars0 ratingsSarida Saridi Rating: 0 out of 5 stars0 ratingsReady Joot Rating: 0 out of 5 stars0 ratingsSivasamiyin Sabatham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sundal Chellappa
Related ebooks
Kanna Mango Thinna Asaiya Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsThinathorum Deiveegam Rating: 0 out of 5 stars0 ratingsThaayar Sannathi Rating: 0 out of 5 stars0 ratingsNeram Nam Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsT. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsComedy Cocktail Rating: 0 out of 5 stars0 ratingsKannan Varuvan Rating: 0 out of 5 stars0 ratingsVanamalli Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5Udanai Nirkindraan Rating: 0 out of 5 stars0 ratingsPhone Off Pannittu Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsApoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal Rating: 5 out of 5 stars5/5Thalaiyali Rating: 0 out of 5 stars0 ratingsVisiri Vaazhai Rating: 0 out of 5 stars0 ratingsChapparam Thokki Rating: 0 out of 5 stars0 ratingsNesathil Nanaintha Nenjangal Rating: 5 out of 5 stars5/5Vinnappa Kalivenba Rating: 0 out of 5 stars0 ratingsSiddhargalin Sorga Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsNilavil Uravadu Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Parisu Rating: 0 out of 5 stars0 ratingsUraintha Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsVazhigal Moodapattullana Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nagal Rating: 0 out of 5 stars0 ratingsVidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsAlaiyadum Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Sundal Chellappa
0 ratings0 reviews
Book preview
Sundal Chellappa - J.S. Raghavan
http://www.pustaka.co.in
சுண்டல் செல்லப்பா
Sundal Chellappa
Author:
ஜே. எஸ். ராகவன்
J.S. Raghavan
For more books
http://pustaka.co.in/home/author/js-raghavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. திருப்பள்ளி எழுச்சி!
2. கிட்டு மாமா
3. ராப்பிச்சை!
4. புருவமே கண்ணாயினார்!
5. தலைக்கு வந்தது!
6. அஃறிணையும் உயர்திணையும்!
7. தீபாவளிஃபைல்
8. கணக்கு சரியாப் போச்சு!
9. மகா டிராமா
10. சுண்டல் செல்லப்பா
11. மழையா? வெயிலா?
12. சாந்தி நிலவ வேண்டும்!
13. சுவற்று வாசகங்களின் மறுபக்கம்!
14. 1.1.11
15. கட்டாயம் காதல் கல்யாணம்தான்!
16. புத்தக 'சிந்தை'
17. பரிகாரங்கள்
18. கைக் கட்டு!
19. ஜானி வாக்கர்!
20. கையை அசைக்காதீங்க!
21. பூஜ்ஜியத்திலே ஒரு ராஜ்ஜியம்?
22. மூக்கைப்பிடிக்க...
23. திருவண்ணாமலைக்கிளி!
24. பிளாக்பெரி
25. மேலே பாய்ந்த பூனை!
26. மீண்டும் மியாவ்!
27. முட்டியோட ஒரு முட்டி மோதல்!
28. காக்க... காக்க...
29. சோறு போடும் சுத்தம்
30. கிரிக்கெட்டும் நடனமும்!
31. 'இந்த வருஷம் வெய்யில் அதிகம்'
32. பிரசவவேதனை!
33. செல்லும் சொல்லும்!
34. பேஸ்புக்கில்உதிராத முத்துக்கள்
35. டமால்! டுமீல்!
36. நானொரு விளையாட்டு பொம்மையா?
முன்னுரை
நவராத்திரி, கடற்கரை, பஜனை மடம் போன்றவற்றுடன் பரவசத்துடன் இணைத்துப் பேசப்பட்டு, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு ஆர்வத்துடன் கொரிக்கப்படும் சுண்டல்களிலும் நகைச்சுவையைப் போன்று பலவகைகள் உண்டு. பட்டாணி, கடலைப் பருப்பு, கொத்துக்கடலை, வேர்க்கடலை, பாப்கார்ன் போன்ற பல திருநாமங்களுடன் கச்சிதமாக முடையப்பட்ட தொன்னைகளில் வழங்கப்படும் சுண்டல்களும், நகைச்சுவையைப் போன்று சுண்டிய முகங்களை செந்தாமரையாக மலரவைக்கும் திறனுடையது. சுண்டல், கிண்டல் இரண்டும் ஒலி ஓசையில் ஒத்திருக்கும் உடன்பிறவா சகோதர வார்த்தைகள்.
வெந்தால்தான், கடலைகளோ, பருப்புகளோ சுண்டலாக முடியும். தான் வெந்து, உண்பவரை வேக வைக்காது மகிழவைக்கும் சுண்டல், கொறிக்கும் வகை சிற்றுண்டிகளில் பேராண்டி, எவ்வாறு, கடற்கரையும் காதலும், வெண்ணிலாவும் வானும் போல இணைந்து இருக்கின்றனவோ, அவ்வாறே காதலும் சுண்டலும் பிணைந்து இருக்கின்றன என்று சொன்னால், சில காதலர்கள் சண்டைக்கு வருவார்கள்.
காரணம், நறநற மணலை அரிந்துகொண்டே கடலை போடும்போது, தேங்காய், மாங்காய் பிணைந்த பட்டாணி சுண்டலை விற்கும் சிறுவர்கள், செவ்வனே ஆரம்பித்து, ருசிகரமாக நடந்துகொண்டிருக்கும் சிவபூஜையில் கரடியாக மூக்கை நுழைப்பதால்தான். இருப்பினும், காதல் கனிந்து கல்யாணத்தில் முடிய, காதலர்கள் சுண்டல் உண்ண வேண்டும் என்று பட்டினப்பாக்க கிளிஞ்சல் சித்தர், சுண்டலுடன் நகைச்சுவையையும் பரிமாற்றக்கொள்ள வேண்டும் என்று செப்பி அருளியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோவில்களில் பக்தர்களுக்கும், கடற்கரைகளில் காதலர்களுக்கும் கிடைக்கும் சுவையான சுண்டலின் பெயரைத் தாங்கியிருக்கும் இந்தப் புத்தகத் தொன்னையில் வழங்கப்படும் கட்டுரைகள், 'தமாஷா வரிகள்' என்கிற தலைப்பில் ஒன்றாக வெளிவந்தவை. கொறிக்கவும், கொறித்துக் கொண்டே சிரிக்கவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
இந்த விநியோகத்தை ஸ்பான்ஸர் செய்த வட்டாரஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஓவியர் நடனம் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த கையோடு, விரைவில் ஜீரணம் ஆகிவிடும் (அல்லது பல நாட்கள் ஆகிவிடாத) ஒரு மாலைப்பொழுதின் சிற்றுண்டிக்காகவே பெரிய தொகையை, தற்காலத்தில் பள பள 'பவன்'களில் செலவழிக்க அஞ்சாத நெஞ்சங்கள், இப்புத்தகத்தை வாங்க சிறுதொகையை ஒதுக்கி, பரிவுடன் வழங்கப்படும் சுண்டல் சுவைத்து இன்புற வேண்டுகிறேன்.
அன்புடன்,
ஜே.எஸ்.ராகவன்
1. திருப்பள்ளி எழுச்சி!
ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக்கற; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கற என்ற பழமொழியைக் கடைப்பிடிக்கும் பூந்தமல்லி வக்கீல் குமாஸ்தா குமாரசாமி, பொழுது விடிந்தவுடன், மரவட்டையாகச் சுருண்டிருக்கும் தன் மூன்று மகன்களுக்குத் தந்தையாக ஆற்றும் முதற் பணி, அவர்களை விரித்த பாய்களிலிருந்து எழுந்து உட்காரவைப்பதே.
'டேய் துக்காராம், எந்திரி, எத்திரி, எந்திரி' என்று மூன்று தடவை, ஒரு கோர்ட் பியூனின் குரல் வளத்துடன் கூப்பிடும் சத்தம் அக்கம் பக்கம் கேட்டால், அவருடைய மூத்த மகனை எழுப்ப, பெரிய பிள்ளையார் சுழி போட்டுவிட்டார் என்று பொருள். ஆனால், துக்காராம் எளிதாக எந்திரிக்கமாட்டான், சுமார் ஆறு அல்லது ஏழு தடவை, எந்திரி, எந்திரி, எந்திரி என்று ரிபீட் அலாரமாக, ஆரோகணத்தில் அடித்தால்தான் அவன் கண்ணை விழித்துப் பார்ப்பான், எந்திரிச்சவுடன் அவனுக்குப் பசி எடுத்து விடும் என்பதால், ஒரு சொம்பு காப்பித் தண்ணியைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், துக்காராம் சினம் கொண்டு, மறுபடியும் கும்பகர்ணனாகத் தூங்கப் போய்விடுவான்.
ஒரு வழியாக, துக்காராமை விழிப்பு நிலைக்குக் கொண்டு வந்தவுடன், பஸ் ஸ்டாப்பிலிருந்து வெளியே தள்ளப்பட்ட நீண்ட தலைவாழைத் தாராகத் தூங்கும் அடுத்த பிள்ளை லெச்சுமணனிடமிருந்து, ஆட்டம் பாம் வெடிக்கும் சிறுவனாகத் தள்ளி நின்று அவனை எழுப்ப முயலுவார். காரணம், பெயருக்கு ஏற்ப லெச்சுமணன் கோவக்காரன், தூக்கத்திலிருந்து எழுப்புபவர் யாராக இருந்தாலும், முதற்கண் பளாரென்று அறைந்துவிடுவான்.
லெச்சுமணனை எழுப்ப, குமாரசாமிக்கு மரத்திலிருந்து மாவிலையைப் பறிக்க உபயோகிக்கும் துரடு தேவைப்படும், மேற்படி துரட்டைக் கையில் ஏந்தி, அவனிடமிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்க முடியுமோ அவ்வளவு தூரம் எட்டி நின்று, வலது பாதத்தை துரட்டின் கூர்மையான பகுதியால், சுமார் ஆறு தடவை நெருடுவார். எழாவது தடவை முயற்சிக்கும் முன், லெச்சுமணன் துள்ளி எழுந்து, தன்னை எழுப்பிய நைனாவை அடிக்க வரும் முன், கையில் உள்ள தண்ணீர் சொம்பை அவனை நோக்கி வீசுவதுபோல் பாய்ச்சல் காட்டுவார்.
தண்ணீர் என்றால் அலர்ஜியான லெச்சுமணன், எதிர்முனைத் தாக்குதலாக, ஒரு சொம்பு குளிர்ந்த நீர் தன் மூஞ்சியில் விழுந்து தன்னைச் சுத்தப்படுத்தி விடுமோ என்று நடுங்கி, பாம்பாக அடங்கி, ஊரே கேட்கும் அளவிற்கு, சத்தமாக கொட்டாவி விட்டுவிட்டு, கடன்களைக் கழிக்க, கொல்லைப் புறத்துக்கு நடையைக்கட்டுவான்.
மூன்றில் இரண்டு பேரை, அசம்பாவிதம் இல்லாமல் எழுப்பிவிட்ட திருப்தியுடன், குமாரசாமி அடுத்த மகனை எழுப்புவதில் கவனம் செலுத்துவார். தூக்கத்திற்காக கண்களை மூடின கையோடு, தன் இரு செவிப்பறைகளையும் இறுக மூடிவிடும் மூன்றாவது வாரிசான கண்ணப்பாவிற்கு, 'எந்திரி', 'துரடு' போன்றவை துரும்புகள். அவற்றுக்கு அவன் லேசில் மசியமாட்டான்.
இவனை எழுப்ப, ஒரு பித்தளைத் தாம்பாளமும், இரண்டு பவுண்டு சுத்தியும் தயாராக இருக்கும். சிவன் கோவிலில், சாயரட்சை பூஜை கற்பூர ஆரத்தியின்போது, டங், டங்கென்று அடிக்கப்பெறும் பெரிய ஜால்ராவின் ரேஞ்சிலும், அடுத்த சில நிமிடங்களில் ஸ்டேஷனுக்கு வரப்போகும் பாசஞ்சர் வண்டிக்காக, தண்டவாளத்துண்டில் அடிக்கப்படும் மணியின்
நாதத்தை ஒத்தும், குமாரசாமி தாம்பாளத்தில் சுத்தியால்டங் டங்கென்று சத்தம் எழுப்புவார்.
மூன்று மணி அடித்தவுடன், கண்ணப்பா கண்களைத் திறந்து, முழிச்சி 'அட நிறுத்துங்கப்பா' என்று சொல்லி, அநேகமாக உட்கார்ந்து விடுவான்.
குமாரசாமிக்கு மனைவி இல்லை, இரண்டாம் தாரமாக, கல்யாணம் செய்துகொள்ளவிருப்பமும் இல்லை. ஏனென்றால், முதல் மனைவியால் தாம்பத்தியத்தைக் கண்டு அவ்வளவு மிரண்டுபோயிருந்தார்.
சுமார் பத்து வருஷங்கள் கழித்து, பூந்தமல்லியிலிருந்து வந்திருந்த நண்பன் ஜெகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கமான, தேரடி பாச்சா, கணக்கு வாத்தியார் கொத்தமல்லி, பவழமல்லி வீட்டு ஆம்பளை பேபியைப் பற்றிய சுவாரசிய அரட்டை முடிந்தவுடன், குமாரசாமி டாபிக்குக்குள் நுழைந்தோம். அவரோட பசங்களை, இன்னும் அப்படித்தான் எழுப்பிக்கொண்டிருக்கிறாரா? என்று கேட்டேன்.
சிரித்துக்கொண்டிருந்த ஜெகன், வழக்கமில்லாமல் சரியாகி விட்டான். 'இல்லே, ராகவா, அது ஒரு சோகக்கதையா முடிஞ்சிடுத்து. கல்லு மாதிரி இருந்த குமாரசாமி, திடீர்னு ஒருநாள் படுத்துட்டார். கோமா வந்து, ஒரு மாசம் பேச்சு மூச்சு இல்லாம கிடந்தார்'.
'அட!? அப்புறம் என்ன ஆச்சு?'
அதான் ஐரனி. மூணு பசங்களும், ஒரு மாசமா அப்பாபடுக்கை பக்கத்திலேருந்து, அப்பா எந்திரிங்கப்பா, எந்திருங்கப்பா, எழுந்து, 'இப்படிச் சோம்பேறியா வளர்ந்த எங்களை தாம்பாளத்தில் சுத்தியாலே அடிக்கிறா மாதிரி அடிங்கப்பா'ன்னு புலம்பிண்டிருந்தாங்க. ஆனா,