Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

‘Jolly’ an wala ‘Bag’
‘Jolly’ an wala ‘Bag’
‘Jolly’ an wala ‘Bag’
Ebook167 pages54 minutes

‘Jolly’ an wala ‘Bag’

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'வாரக் கடைசியில் சின்ன வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு கறி, மைசூர் ரசம், கெட்டித் தயிர், பொறித்த அப்பளம் கூட்டணியை ஒரு பிடி பிடித்துவிட்டு மணக்கும் கையோடு உங்கள் கட்டுரைகளைப் படித்து சிரித்து ரீசார்ஜ் ஆகி, திங்கள் கிழமை அலுப்புகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் தயாராகிறேன்' என்று விமரிசனம் செய்யும் வாசகர்களுக்கும், பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தொடர்ந்து எழுத இடமளிக்கும் வட்டார ஏடுகளின் ஆசிரியர் கே. எஸ். ராமகிருஷ்ணனுக்கும், வெற்றி எட்டு திக்கும் எட்ட என் உளமார்ந்த நன்றிகள். 'என்னிடம் நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்' என்ற காந்தியை, 'உமக்கு ஏனய்யா அந்த வேலை? நான் செய்து முடிக்கிறேன்' என்று சுட்டார் ஓர் இந்தியக் குடிமகனார். காழ்ப்புணர்ச்சியான tumour-ஐ தன் இதயத்திலிருந்து கிள்ளி எறிந்து விட்டு humour-ஐ ஜெனரல் டயர் வளர்த்திருந்தால் ஜாலியன் வாலாபாக் என்கிற களத்தில் காலத்தால் கழுவ முடியாத ரத்தக் கறைகள் படிந்திருக்காது அல்லவா? இதயத்தை கனக்க வைத்த ஜாலியன்வாலாபாகை, லேசாக்கும் ‘Jolly'யன் வாலா Bag - ஆக மாற்றியுள்ளேன்.

- ஜே.எஸ். ராகவன்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580127204597
‘Jolly’ an wala ‘Bag’

Read more from J.S. Raghavan

Related to ‘Jolly’ an wala ‘Bag’

Related ebooks

Related categories

Reviews for ‘Jolly’ an wala ‘Bag’

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ‘Jolly’ an wala ‘Bag’ - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    ‘Jolly’ யன் வாலா ‘Bag’

    ‘Jolly’ an wala ‘Bag’

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கிண்டலில் சிக்கிய உப்புமா!

    2. இருமல் ஆவர்த்தனம்

    3. முட்டியுடன் ஒரு மோதல்

    4. கார்டு வாங்கலியோ? கிரெடிட் கார்டு!

    5. புளியோ'துரை'

    6. புத்தக அனகோண்டா

    7. எலெக்ஷனா? கலக்கமா?

    8. நம்ம சாதியில்லியே

    9. 'மார்க்’கண்டேயன்

    10. 'பெஞ்சு மேலே ஏறு'

    11. ‘குச்சி புடி? விட்டுப் புடி!’

    12. துணுக்கு எழுத்தாளரின் கதை

    13. மந்திரக் கோல் ஓனர்

    14. ரிசப்ஷன் ரங்கசாமி

    15. அன்புள்ள ஆ‘சிரிசிரி’யருக்கு!

    16. சிரிப்பின் நிறம் பழுப்பு!

    17. பேபி பதில்கள்

    18. பொன்னாடை போற்றி!

    19. ஆனந்தம், ஆனந்தம், பேரானந்தமே!

    20. கன்னித் தாத்தா!

    21. 'கிரைஸிஸ்' கந்தசாமி

    22. ஆட்டோலதான் போகணும்

    23. கர்நாடக சங்கீத சபா

    24. உணவுக்கு எண்ணெய்!

    25. ஞானமும் தகராறா?

    26. முத்தண்ணாவின் முகாரிகள்

    27. அந்த ஆசையை ஓட்டி விடு!

    28. 'சந்தேக சாகர' சடகோபன்

    29. (நோ)நாய்க்கு இடம் கொடேல்!

    30. டெலி 'பிறாண்டிங்!’

    31. பல்லி விழுந்தால்?

    முன்னுரை

    'வாரக் கடைசியில் சின்ன வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு கறி, மைசூர் ரசம், கெட்டித் தயிர், பொறித்த அப்பளம் கூட்டணியை ஒரு பிடி பிடித்துவிட்டு மணக்கும் கையோடு உங்கள் கட்டுரைகளைப் படித்து சிரித்து ரீசார்ஜ் ஆகி, திங்கள் கிழமை அலுப்புகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் தயாராகிறேன்' என்று விமரிசனம் செய்யும் வாசகர்களுக்கும், பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தொடர்ந்து எழுத இடமளிக்கும் வட்டார ஏடுகளின் ஆசிரியர் கே. எஸ். ராமகிருஷ்ணனுக்கும், வெற்றி எட்டு திக்கும் எட்ட என் உளமார்ந்த நன்றிகள்.

    'என்னிடம் நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்' என்ற காந்தியை, 'உமக்கு ஏனய்யா அந்த வேலை? நான் செய்து முடிக்கிறேன்' என்று சுட்டார் ஓர் இந்தியக் குடிமகனார்.

    காழ்ப்புணர்ச்சியான tumour-ஐ தன் இதயத்திலிருந்து கிள்ளி எறிந்து விட்டு humour-ஐ ஜெனரல் டயர் வளர்த்திருந்தால் ஜாலியன் வாலாபாக் என்கிற களத்தில் காலத்தால் கழுவ முடியாத ரத்தக் கறைகள் படிந்திருக்காது அல்லவா?

    இதயத்தை கனக்க வைத்த ஜாலியன்வாலாபாகை, லேசாக்கும் ‘Jolly'யன் வாலா Bag - ஆக மாற்றியுள்ளேன்.

    ஜே.எஸ். ராகவன்

    05.06.2006

    *****

    1. கிண்டலில் சிக்கிய உப்புமா!

    'ஹலோ! சுசி, எங்கே இருக்கே?'

    'ஆஃபீஸிலேதான். நீங்க?'

    'நான் அப்பவே வீட்டுக்கு வந்தாச்சு. இப்போ சமையல் உள்ளிலே இருக்கேன்.'

    'மை காட். சமையல் உள்ளிலே பெரிய எலி புகுந்துடுத்தா? வேர்க் கடலை, முந்திரிப்பருப்பு, கடலை உருண்டை எல்லாம் காலியாயிண்டிருக்குமே!'

    'சீச்சீ, அதையெல்லாம் தொடுவேனா? உன் தம்பி எர்ணாகுளத்திலேயிருந்து நேந்திரங்காய் சிப்ஸ் வாங்கிண்டு வந்தானே, அதைத்தான் வாயிலே போட்டுண்டிருக்கேன். சும்மா கும்முனு வாசனை. ஒவ்வொண்ணும் வாய்க்கு மொறு மொறுன்னு ருசியாயிருக்கணுமேன்னு கொதிக்கிற தேங்காய் எண்ணெயிலே தன்னைத்தானே சொக்கத் தங்கமெடலா வறுத்து எடுத்துண்டு வந்த தியாகச் செம்மலாயிருக்கு.'

    'உங்களை யார் அதைப் பிரிக்கச் சொன்னது? முதலிலே மூடி வையுங்க. அது சரி, டிபன் சாப்பிட்டாச்சா?'

    'இதோ தயாரானவுடனே உன்னோட சேர்ந்து சாப்பிட வேண்டியதுதான்.'

    'என்னது? டிபனா? தயாரான உடனேயா? புரியலயே!'

    'சுசீலா, நான் டிபன் பண்ணிண்டிருக்கேன்.'

    'டிபன்? நீங்க பண்றேளா? என்ன புதுக்கதையா இருக்கு?'

    'சனிக்கிழமை ரொமாண்டிக் மூடிலே உனக்காக டிபன் பண்ணிண்டிருக்கேன். அதுவும் உனக்கு ரொம்பப் பிடித்த ரவா உப்புமா!'

    'ரவா உப்புமாவா? அது உங்க குல விரோதியாச்சே!'

    'அதனாலென்ன? உனக்குப் பிடிக்குமே. செய்து அசத்திடலாம்னுதான்.'

    'நெஜமாவா? உங்களுக்கு உப்புமா கிண்டத் தெரியுமா? கிண்டலடிக்கத்தானே தெரியும்?’

    'அதான் பக்கத்திலே மஞ்சுளாயிருக்காளே. நன்னா சொல்லித் தரா.'

    'ம...ஞ்சுளாவா? யாரு? மாடி வீட்டு நைட்டி மேனாமினுக்கியா? நான் இல்லாத வேளையிலே அவ எங்கே வந்தா? என்ன நடக்கிறது அங்கே? இதோ கிளம்பி வரேன்.'

    'ரிலாக்ஸ், மை டியர் சுசி. உன் தேகம் பூரா சந்தேகம். மஞ்சுளாங்கிறது மெனு இளவரசி மஞ்சுளா மதனகோபாலன். 'உப்புமா வேணுமா?'ங்கிற வழவழ புஸ்தகம் மூலமா எனக்கு டிஸ்டன்ஸ்லேர்னிங் கான்செப்டிலே சொல்லித் தந்துண்டிருக்கா.'

    'சே! என்ன நீங்க! ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போயிட்டேன். உங்களை எனக்குத் தெரியாதா? அது சரி, உப்புமா எந்த ஸ்டேஜிலேயிருக்கு?'

    'அப்பப்போ டொப் - டுப்புனு செல்ல சத்தம் போட்டுண்டு தளதளன்னு கொதிச்சுண்டிருக்கு. ஒரு முழு நீள கறிவேப்பிலையைப் பறித்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகயாக சாலை ஓம குண்டத்திலே சிவாச்சாரியார் போடற மாதிரி அப்பப்போ போட்டுண்டிருக்கேன். நம்ம வார்டு எண் 123 பூரா கும்முனு வாசனை வந்திண்டுருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னே மேலே பறந்து போன இந்தியன் ஏர்லைன்ஸ் விமானி கூட ஏக்கத்தோட குனிந்து பார்த்துட்டுப் போனார். இன்னும் கொஞ்ச நேரத்திலே மாடிவீட்டு மஞ்சுளா கூட வந்தாலும்...'

    ‘இதோ கிளம்பி வந்துண்டிருக்கேன்...'

    'ரிலாக்ஸ். சும்மா உன்னை காப்ரா பண்றேன். பார்த்தியா, நான் ஒற்றைக் கையாலேயே சமையல் பண்றேன்.'

    'ஏன், மத்த கைக்கு என்னாச்சு?’

    ‘உன்னோட பேசிண்டு இருக்கேனே. செல்ஃபோனைக் காதோட யாரு பிடிச்சுப்பா? மஞ்சுளாவா?’

    ‘இதோ வீட்டுக்குக் கிளம்பிட்டேன்.'

    'அப்பா, பெர்மிஷன் போட்டு இந்த டிராபிக்லே பின்னல் கோலாட்டமா ஸ்கூட்டர்லே புகுந்து வர்றதுக்குள்ளே பெரிய பாடு ஆயிடுச்சு. அதென்ன வாசல் வரையிலும் ஒரு மாதிரி வாசனை வருது? உப்புமாலேர்ந்தா.'

    'அதாண்டி புரியலே! கடைசி ஸ்டேஜ் வரையிலும் சரியாத்தான் இருந்தது. சாம்பிள் டோஸ் கமகமன்னு மணமாகவும், வாய்க்கு ருசியாகவும் இருந்தது. இன்னும் வாசனையா இருக்கட்டுமேன்னு ஒரு காரியம் செய்தேன். நாலு சொட்டு தேங்காய் எண்ணெயைப் பரவலா சொழட்டி உப்புமா மேலே விட்டேன். எங்கம்மா அப்படித்தான் விடுவா. அதுக்கப்பறம்தான் ஜாதி மல்லிப்பூவைத் தாளிச்சுக் கொட்டின மாதிரி வாசனை வர ஆரம்பிச்சது.'

    ‘தேங்காய் எண்ணெயா? ஏது? வீட்டிலே சொட்டுத் தேங்காய் எண்ணெய் கூட கிடையாதே?’

    ‘ஒட்டகம் மார்க் ரவை, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் எல்லாம் வாங்கினபோது இந்த குட்டி நீல பாட்டிலை நீல்கிரிஸ்லே வாங்கினேன். தேங்காய் எண்ணெய் தானே இது? செண்டட் ஃபினாயில் இல்லையே?'

    'எது இதுவா?'

    'ஏன் அப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறே? பல் சுளுக்கிக்கப் போறது.'

    'ரொம்ப அழகுதான். மை டியர் சார். இதுக்குத்தான் லேபிளை நன்னா பார்த்துப் படிச்சுட்டு வாங்கணும்கிறது. இதுவும் நீல பாட்டில்தான். இதுவும் தேங்காய் எண்ணெய்தான். ஆனால் ஹேர் ஆயில். பாவம், எல்லாம் ஒழுங்கா செய்து கடைசியிலே கஞ்சிப் பானையிலே ஹேர் ஆயிலை விட்டுட்டேளே. பரவாயில்லை. பொண்டாட்டிக்காக ஆசையாப் பண்ணினதாச்சே. ஒரு வாய் சாப்பிட்டு வைக்கட்டுமா. யார் கண்டது, முடி நன்னா வளர்ந்தாலும் வளரும்.'

    'போடி போ. சமையலுக்கு உபயோகப்படுத்தக் கூடாதுன்னு பொடி எழுத்திலே மிரட்டியிருக்கானே. ம்... ரவையூண்டு தப்பு ஆயிடுச்சு. 'ஹேர் ஆயில் உப்புமா'வைத் தூக்கிக் கடாசு. மணி நாலு ஆறது. வா, டிரைவ் இன்னுக்குப் போலாம். உனக்கு சூடா உப்புமா வாங்கித் தரேன்.

    *****

    2. இருமல் ஆவர்த்தனம்

    Enjoying the preview?
    Page 1 of 1