Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maranthu Ponal Iranthu Povai
Maranthu Ponal Iranthu Povai
Maranthu Ponal Iranthu Povai
Ebook73 pages25 minutes

Maranthu Ponal Iranthu Povai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் சுயநலத்துக்காக தன் நண்பனையே பழிவாங்கும் சக்ரவர்த்தி. இறந்த ராதிகாவின் உடல் எங்கே போனது? ஜேக்கப்பிடம் சிக்கும் அந்த அப்பாவி பெண் சுந்தரி யார்? கூடா நட்பு விரித்த வலையில் சிக்கினானா ஜேக்கப்? வாருங்கள் வாசிப்போம் மறந்து போனால் இறந்து போவாய்...

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580100608136
Maranthu Ponal Iranthu Povai

Read more from Devibala

Related to Maranthu Ponal Iranthu Povai

Related ebooks

Reviews for Maranthu Ponal Iranthu Povai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maranthu Ponal Iranthu Povai - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மறந்து போனால் இறந்து போவாய்

    Maranthu Ponal Iranthu Povai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    சக்ரவர்த்தி, கூண்டுக்குள் அடைபட்ட மிருகம் போல, அந்த அறையின் விஸ்தீரணத்தைக் கால்களால் அளக்கத் தொடங்கினார்.

    அதிகப்பட்ச ஏ.ஸி. இருந்தும் அவர் உடல் தகித்தது. வியர்வை மானாவாரியாக உடம்பு முழுக்க ஆக்ரமிப்பு செய்திருந்தது.

    திறந்திருந்த கப்போர்டை சாத்தினார்.

    படுக்கையில் வந்து உட்கார்ந்தார்.

    ஜக்கிலிருந்து குளிர் நீரை டம்ளரில் சரித்து மடமடவென தொண்டைக்கு அனுப்பினார். படபடப்பு அடங்கவில்லை.

    பிரிட்ஜ் திறந்து,

    ஷிவாஸ் ரீகலை கோப்பையில் கவிழ்த்து, அருந்தினார்.

    பைப்புக்குத் தீ வைத்து, ஓரத்துப் பல்லால் கடித்துக் கொண்டு, டெலிபோனை அணுகினார்.

    டயல் செய்து, எதிர் முனையின் உயிர்ப்புக்குக் காத்திருந்தார்.

    குரல் கிடைத்ததும்,

    ஹலோ, நான் சக்ரவர்த்தி பேசறேன். நீதானே?

    இன்னிக்கு என்ன நாள் நினைவிருக்கா?

    டிசம்பர் 15 என்றது எதிர்முனை.

    நான் மாசத்தையும், தேதியையும் கேட்கலை. நாள் ஞாபகம் இருக்கா?

    இல்லை.

    இடியட். இன்னிக்கு ஜேக்கப் ரிலீஸ் ஆகி வெளியே வர்ற நாள். இன்னும் கொஞ்ச நேரத்துல வெளி உலகத்தைப் பார்க்கப் போறான். சென்ட்ரல் ஜெயில்லேருந்து விடுபட்ட அவன், உன்னையோ, அல்லது என்னையோதான் தேடி வருவான் என்ன செய்யப் போற?

    சக்ரவர்த்தியின் கலவரம் எதிர்முனையைக் கூட தாக்கியிருக்க வேண்டும்.

    பதிலே வரவில்லை.

    ஜாக்ரதையா நடந்துக்கோ, பிரச்னை எதுவும் இருந்தா, எனக்கு போன் பண்ணு... ஒக்கே...?

    ரீசீவரை அதனிடத்தில் அமர்த்தினார்.

    கண்ணாடி ஜன்னல் வழியாக, வெளியே பார்வையை வீசினார். விடிந்து சற்று நேரமே ஆகியிருந்ததால், போக்குவரத்து சூடுபிடிக்கவில்லை. பனிகூட முற்றிலும் விலகாத காலையில், பேப்பர் போடும் பையன்கள், பால் பக்கெட்டுகள் என்று ஆரம்பக்காரர்கள் சைக்கிளில் பறந்து கொண்டிருந்தார்கள்.

    எதிலும் மனது ஒட்டாமல்,

    தவியாய் தவித்தது.

    ‘ஜேக்கப் முதலில் எங்கே போவான்? அவனுக்கு சரியாகத் தெரிந்த இடம் இது ஒன்றுதான்! நேராக வந்து விடுவானா?’

    ‘ஒரு வேளை அங்கே போனால்?’

    ‘ஜேக்கப் முரடன்... கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லையென்றால், மூர்க்கமாக செயல்படத் தொடங்கி விடுவான்.’

    ‘ராதிகா உளறி விட்டால்?’

    ‘பங்களாவில் ராதிகா மட்டும் தான் இருக்கிறாள். வேறு யாரும் துணையில்லை. இவனது முரட்டுத்தனத்தை அவளால் எதிர்க்க முடியாது.’

    ‘ராதிகா வாய் திறக்கக் கூடாது. சகல உண்மைகளும் ஜேக்கப்புக்குத் தெரிந்து விடக் கூடும்!’

    ‘உடனே செயல்படு!’

    உடம்பின் ஒவ்வொரு செல்லும் அவசரக் கட்டளைக்கு அடிபணிய,

    டெலிபோனை அணுகினார்.

    ஹலோ நான் சக்ரவர்த்தி, ராம்தாஸ் இருக்கானா அங்கே?

    கடமுடாவென ஏதோ சப்தித்து, சின்னச் சின்ன குரல்கள் உரசிக் கொண்டதைத் தொடர்ந்து, ‘டொடாக்’ என்று ரிசீவர் உயர்த்தப்பட்டு,

    ராம்தாஸ் பேசறேன்!

    உடனே வா!

    ரிசீவரை சாத்திவிட்டு, காத்திருந்தார்.

    அடுத்த நாப்பது நிமிடத்தை முள்ளாக உணர்ந்தார். ஒவ்வொரு நொடியும் அபாயகரமாக இருந்தது.

    வாசலில் புல்லட் ஓய்ந்தது.

    ஐந்தாவது நிமிடம் அந்த மொட்டைத் தலையன் நிதானமாக உள்ளே

    Enjoying the preview?
    Page 1 of 1