Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayusu Poojyam
Aayusu Poojyam
Aayusu Poojyam
Ebook92 pages29 minutes

Aayusu Poojyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சம்பத் எல்.ஐ.சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். நேர்மையுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவன் சம்பத். நந்தினி என்பவள் சம்பத்தை குற்றம் செய்யத் தூண்டிகிறாள். குற்றம் செய்து பழகாத மனது, தனது தங்கைக்காக குற்றம் செய்கிறானா? அதனால் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல் என்ன? நாளை என்பது யாருக்கும் நிரந்தரமில்லாத ஒன்று. இதில் யாருக்கு ஆய்சு பூஜ்யம் வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateApr 23, 2022
ISBN6580100607831
Aayusu Poojyam

Read more from Devibala

Related to Aayusu Poojyam

Related ebooks

Reviews for Aayusu Poojyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayusu Poojyam - Devibala

    https://www.pustaka.co.in

    ஆயுசு பூஜ்யம்

    Aayusu Poojyam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    பெசன்ட் நகர் மகாலஷ்மி கோயில் ஸ்டாப்பில் வந்து நின்ற பஸ்ஸிலிருந்து அவன் உதிர்ந்தான். பஸ் புறப்பட்டுப் போனது.

    அது பகல் இரண்டு மணி.

    கூட்டம் அவ்வளவாக இல்லாத நேரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதத் தலைகள். கடலின் மெல்லிய இரைச்சல் சற்று தூரத்தில்.

    வெகு சமீபத்தில் வேளாங்கண்ணி ஆலயத்திலிருந்து மணி சப்தம். உணவு இடைவேளைக்காக கடைகள் மூடியிருந்த நேரம்

    நின்ற நிலையிலேயே பார்வையை சுழல விட்டான்.

    தூரத்தில் பச்சைப்பழத்தை சுமந்து ஒரு கை வண்டி இளைப்பாறிக் கொண்டிருக்க,

    அருகில் சென்றான். இரண்டு பழங்களை வாங்கி உரித்து அங்கேயே விழுங்கினான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். அவன் புகைக்கும் வேளையில் அவன் உருவத்தை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். பின்னாளில் உதவக்கூடும்.

    ஐந்தரையடி உயரம் இருக்கலாம். மிதமான உடம்பு. சிகப்பு என்று சேர்த்தியில்லாவிட்டாலும் நல்ல ‘பளிச்’ நிறம். டி. ராஜேந்தர்தனமான தாடி, கனத்த மீசையின் மத்தியில் ஒளிந்திருக்கும் மெல்லிய உதடுகள். தூக்கிவாரிய கேசம்.

    கறுப்பு கால்சட்டையும், இளநீல ஸ்லாக்கும் அணிந்து கால்களில் நார்த் ஸ்டார். நடக்கத் தொடங்கினான்.

    திருவான்மியூர் செல்லும் சாலையைக் குறி வைத்து நிதானமாக நடக்கத் தொடங்கினான்.

    பிரதான பஸ் ஸ்டாண்டை ஒட்டி இடது புறமாக ஒரு பெயர் பலகை,

    ‘ராகவேந்திரா அவென்யூ’ அது காட்டிய அம்புக்குறியைப் பின்பற்றி நடக்கத் தொடங்கினான்.

    சற்று ஒல்லியான பாதை, அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு தன்னை வளர்த்துக் கொண்டிருந்தது. அதன் முடிவில் அங்கங்கே தீவு தீவாக வீடுகள் போல் தெரிந்தன.

    கடைகளும் திடீரென உற்பத்தியாயின.

    சட்டைப்பையில் துழாவி அந்தக் காகிதத்தை எடுத்து விலாசம் சரி பார்த்தான்.

    எண்களை மனதில் இருத்திக் கொண்டான்.

    பார்வையை படரவிட்டபடி அவன் தொடர,

    விலாசம் பிடிபடவில்லை.

    ஒரு ஸ்வீட் ஸ்டால்காரரிடம் கேட்டான்.

    ‘மகாலக்ஷ்மி ப்யூட்டி க்ளினிக்’ எங்கே இருக்கு?

    ஓ... அதுவா? கேட்டவர் இவனை ஒரு மாதிரி பார்த்தார்.

    தெரியுமா?

    ம்! அது தெரியாம இருக்குமா? அதோ பாதி எழும்பி நிக்கற அந்தக் கட்டடத்துக்குப் பக்கத்துல பச்சை டிஸ்டம்பர் அடிச்ச பங்களா ஒண்ணு இருக்கே. அங்கேதான்!

    தேங்க்ஸ்! இவன் அதைக் குறி வைத்து முன்னேறினான். அருகில் நெருங்கியதும் பங்களாவின் நேர்த்தி கண்ணில் அறைந்தது. குட்டி பங்களாதான். முகப்பில் ‘மகாலஷ்மி ப்யூட்டி க்ளினிக்’ என்ற பெயர் பலகை ஆங்கிலத்தில். அரவமே இல்லாமல் இருந்தது.

    சிட் அவுட்டில் காலை வைத்தான்.

    ஒரு பெண் ஓடி வந்தது. பதினேழு, பதினெட்டு இருக்கக்கூடும்.

    யார் வேணும் உங்களுக்கு?

    அதை ஏற இறங்கப் பார்த்தான். நந்தினி இருக்காளா?

    தலைவி வீட்ல இல்லை. நீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா?

    எங்கே போயிருக்கா?

    அது பதில் சொல்லாமல் உள்ளே ஓடியது. திரும்பும்போது முரட்டுத்தனமான ஒருவன் வந்தான்.

    யாருய்யா நீ?

    மரியாதையாப் பேசு!

    எங்க தலைவியை அவ... இவன்னு பேசற. எலும்பை எண்ணிருவேன். சொல்லு, யார் நீ?

    நந்தினி எப்ப வருவா?

    அவன் வெகு அருகில் மூர்க்கமாக நெருங்க, ஒரு ஐம்பது ரூபாய்த் தாளை, எடுத்து நீட்டினான்.

    வந்தவன் பல்லை இளித்தான்.

    "இந்தா பிடி! நீ இங்க ‘மாமா’ வேலையா? சொல்லு!

    Enjoying the preview?
    Page 1 of 1