Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andha Aayiram Watts Kangal
Andha Aayiram Watts Kangal
Andha Aayiram Watts Kangal
Ebook109 pages40 minutes

Andha Aayiram Watts Kangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் மர்மங்களும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்தது. திகிலோடு புத்தகத்தைத் திருப்பலாம் ஆயிரம் வாட்ஸ் கண்களோடு...

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580132406681
Andha Aayiram Watts Kangal

Read more from Nc. Mohandoss

Related to Andha Aayiram Watts Kangal

Related ebooks

Reviews for Andha Aayiram Watts Kangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andha Aayiram Watts Kangal - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    அந்த ஆயிரம் வாட்ஸ் கண்கள்

    Andha Aayiram Watts Kangal

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss
    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பச்சைப் பால்

    காட்டுப்பட்டி ரயில்வே ஸ்டேஷன்

    ரோஜாப்பூ

    தீர்த்துக் கட்டுகிறேன் வா!

    காமினி என் காதலி

    அந்த ஆயிரம் வாட்ஸ் கண்கள்

    அழைக்கிறேன் வா!

    அங்கே இரண்டு கண்கள்

    சொர்க்கத்தில் சந்திப்போம்

    அந்த மழை இரவு!

    ஆகஸ்ட் பௌர்ணமி

    துணை ஒன்று வேண்டும்

    வாழ்த்துரை

    நானறிந்த என். சி. மோகன்தாஸ்!

    நண்பர் மோகன்தாஸ் முன்னணி நிலையிலிருக்கும் இன்றைய குறிப்பிடும்படியான எழுத்தாளர்.

    சிறுகதைகள், தொடர் நாவல்கள் என நிறைய எழுதுகிறார். எழுதுவதே சிரமமான ஒன்று என்பது என் எண்ணம்.

    என். சி. எம். வாசகர்களையும் நிறையவே பெற்றிருக்கிறார். இவரது கதைகளை விரும்பி வாசிக்கும் உள்ளங்கள் கணிசமான அளவில் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

    வாசகர்களை இவர் பெரிதும் மதிப்பவர். வாசக விமர்சனங்களைப் பத்திரிகை அலுவலகங்களில் கேட்டு பெற்று அவற்றுக்கு விளக்கமும் பதிலும் அளிப்பது இவரது பண்பு.

    வாசக வாசகியர் இவரைத் தேடிவந்து சந்தித்து, தங்களின் வாழ்க்கைப் பிரச்னைகளைச் சொல்லி அவற்றைக் கதைகளாய் படைத்து தீர்வு காணச் சொல்வதும் உண்டு.

    இதெல்லாம் வெற்றிபெற்ற ஒரு எழுத்தாளனின் வாழ்வில் சந்திக்கக்கூடிய விஷயங்கள் தான்.

    இருந்தாலும்கூட இவரிடம் ஓர் அருங்குணம் உண்டு. அதைக் குறிப்பிடாமல் விடுவது சரியல்ல. மோகன்தாஸ் சக எழுத்தாளர்களையும் மதிப்பவர்.

    ‘அவரவருக்கு ஒரு தனி இடம் உண்டு. அதை வேறு யாரும் தட்டிப் பறிக்க முடியாது' என்று கருதுபவர். ‘அங்கே போய் அவரைப் பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்' என்று சரியான தகவல்களைக் கூறி வழிகாட்டுவார். தேவைப்பட்டால் அழைத்துச் சென்றும் அறிமுகப்படுத்தி வைப்பார்.

    தனக்கு வரும் வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடுமோ என்று இவர் ஒருபோதும் எண்ணுவதில்லை. இது ஓர் அருங்குணம் இல்லையா? இதை அவசியம் பாராட்டியேயாக வேண்டும்.

    எழுத்தாளன் முதலில் மனித நேயம் உள்ளவனாக இருக்க வேண்டும். பிறகு தான் எழுத்து-இலக்கியமெல்லாம். இந்த நற்பண்புகளுக்காகவும் கூட என். சி. மோகன்தாஸை பாராட்டி முடிக்கிறேன்.

    அன்புடன்

    கௌதம நீலாம்பரன்

    பச்சைப் பால்

    நீ ஊருக்குப் போய்த்தான் ஆகணுமாய்யா...?

    அஞ்சலை வாட்டத்துடன் கேட்டாள். அவளுடைய முகத்தில் எண்ணெய் வழிந்திருந்தது. ஈரமுடியைத் தளர்வாய்க் கொண்டை போட்டிருந்தாள்.

    பரமசிவம், ஏன் புள்ளே...? என்றானே தவிர கிளம்பிக் கொண்டுதானிருந்தான்.

    முதலாளி மாடுகளை டவுனுக்கு ஓட்டிப் போய் ஊசி போட்டுக்கிட்டு வரச் சொல்லியிருக்கார்.

    அவர் சொன்ன உடனே போயிரணுமா...?

    போகாம முடியுமா? அவர் தானே நமக்குச் சோறு போடறார்...?

    எனக்கு இங்கே தனியா இருக்கப் பயமாயிருக்கு.

    தனியாவா? அதான் முதலாளி இருக்காரே!

    என் பயத்துக்குக் காரணமே அவர்தான்!

    என்ன சொல்றே நீ...? பரமசிவம் அதிர்ந்து போய்க் கேட்டான்.

    ஆமாய்யா; அவருடைய பார்வையே சரியில்லை.

    சேச்சே. முதலாளியைப் பத்தி அப்படியெல்லாம் பேசாதே. அவர் தங்கமான மனுஷர்!

    அவள் தலையைப் பிடித்து முத்தம் கொடுத்தான். நேரமாச்சு. நான் கிளம்பறேன்."

    என்ன செய்யப் போகிறோம், எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்று பயந்தபடியே அஞ்சலை பண்ணைக்குப் போனாள்.

    பயந்து பயந்து நுழைந்தாள்.

    அவள் வேலையைத் தொடங்கும் வரை கவனிக்காதது போல் பாசாங்கு செய்தவர், சடக்கென எழுந்து போய்க் கதவைத் தாழ் போட்டார். அவளுக்குத் திக் கென்றிருந்தது! அவர் சிரித்துக் கொண்டு அவளை நெருங்கினார்.

    அவர் கிட்டே நெருங்க நெருங்க, அவளுக்கு வியர்த்தது. கைகால்கள் நடுங்கின.

    'ஐயா... இது துரோகம். எம்புருஷன் உங்களைத் தெய்வமா நினைச்சிட்டிருக்கார். உங்களுக்கு வேண்டி அவர் உயிரையே கொடுத்து உழைக்கறாருய்யா."

    உயிரையே கொடுக்கறவன் பெண்டாட்டியைக் கொடுக்கக் கூடாதா என்ன...

    ஐயா... என்னை விட்டிருங்கய்யா...வேண்டாம்ய்யா!

    என்ன புள்ளே சொல்றே...? பரமசிவம் ஓவென்று அலறினான்.

    கொஞ்ச நேரம் அப்படியே பிரமை பிடித்து அமர்ந்திருந்தான். அவன் கண்களில் உணர்ச்சி இல்லை

    அந்த அயோக்கியனைச் சும்மா விடக்கூடாது! இந்தா கத்தி, முதல்ல போய் அவனைப் பலி போட்டுட்டு வா! ஏன்ய்யா பேசாம இருக்கே? அஞ்சலை அவனை உலுக்கினாள்.

    அவர் என் எஜமான் புள்ளே. அவரை நான் எப்படி...? இந்த உடம்பு அவர் வீட்டு உப்பைத் தின்னு வளர்ந்தது. அவரைக் கொல்ல எனக்குத் தெம்பும் இல்லை. மனதில் தைரியமும் இல்லை. என்னை மன்னிச்சிடு அஞ்சலை.

    சே! நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?

    ராத்திரி முழுவதும் பரமசிவம் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

    விடியற்காலை.

    வானத்திலும் குழப்பமிருந்தது. மேகங்கள் கூட்டணி அமைத்திருந்தன. காற்று சுண்டிச் சுண்டி அடித்தது. அந்தக் காற்றில் நட்சத்திரங்கள் துடித்துப் போயின. மின்னல்கள் மத்தாப்பு கொளுத்தின. மழைச் சாரல்கள் மண் வாசனையைக் கிளப்பின.

    வாசலில் சைக்கிள் மணி ஒலிக்க, பண்ணையாருக்குத் தூக்கம் போயிற்று. லைட் போட்டு மணி பார்த்தார்.

    அட அதுக்குள்ளே நாலாயிட்டுதா? பரமசிவம் எப்படித்தான் இத்தனை கரெக்டாய் வருகிறானோ...! என்று ஆச்சர்யத்தையும் கொட்டாவியையும் வெளியே விட்டார்.

    பின்புறம் தொழுவத்தில் மாடுகள் சங்கிலியை உதறி, ம்மா என்றன. எழுந்து நின்று சடசடவென மூத்திரம் போயின. மின்னல் ஒன்று ஜன்னல் வழி வந்து கண்ணைப் பறித்தது. அடுத்து வந்த மின்னல் மின்சாரத்தையும் தன்னுடன் அழைத்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1