Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maraikkathe Marukkathe
Maraikkathe Marukkathe
Maraikkathe Marukkathe
Ebook98 pages36 minutes

Maraikkathe Marukkathe

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டிரைவர் நாதன்பாபு நிரபராதி என்றும், பிணத்தை மறைத்த குற்றத்திற்காகப் பதினைந்து நாள்கள் சாதாரண சிறைவாசத்துடன் விடுதலை!

மறுநாளும் வளவன் அலுப்புடன் தூங்கிக் கொண்டிருக்க நித்யா அவனை உலுக்கி “எழுந்திரிங்கன்னா...” என்று தொல்லை பண்ணினாள்.

“ஏன்?”

"அன்னைக்கு என்னவோ சொன்னீங்களே!”

“என்ன சொன்னேன்?”

“கேஸ் முடிஞ்சுருச்சுன்னா அப்புறம் இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலைன்னு...”

“ஓ அதைச் சொல்கிறாயா?” என்று எழுந்தமர்ந்தான். “கொண்டு வா அதை” என்று ஸ்டூலை இழுத்துப் போட்டு "சரியான செஸ் பைத்யம்டி நீ. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம் வா” என்று சோல்ஜர்களை அடுக்க ஆரம்பித்தான்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580132405774
Maraikkathe Marukkathe

Read more from Nc. Mohandoss

Related to Maraikkathe Marukkathe

Related ebooks

Related categories

Reviews for Maraikkathe Marukkathe

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maraikkathe Marukkathe - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    மறைக்காதே! மறுக்காதே!

    Maraikkathe! Marukkathe!

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அது கறுத்த இரவு நேரம்.

    சந்திரனின் கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டுக் கருமேகங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு கொட்டமடித்தன. நட்சத்திரங்கள் துயிலப் போயிருந்தன.

    திருச்சி ஜங்க்ஷனருகில் ஆறு மாடிகளாய் உயர்த்திருந்தது 'பிரசாந்தி ஹோட்டல்' அங்கே மொத்தம் இருநூற்றுச் சொச்ச ரூம்கள். முன் பகுதியில் கலர் கலராய்த் தண்ணீர்கள் பீய்ச்ச, நடுவில் சிரித்தபடி ஒரு மங்கை!

    ரயிலிலிருந்து அலுப்பையும் அழுக்கையும் சுமந்து வந்தவர்கள் ஆட்டோ மற்றும் டாக்ஸியில் வந்திறங்கி ரூம் கிடைக்குமா எனக் கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இந்தாப்பா சாவி! நாங்க கலையரங்கத்துக்கு செகண்ட் ஷோ போகிறோம்.

    குறுந்தாடி ஒன்று சொல்லிவிட்டுத் தன் பெண்பாலின் இடையை அணைத்தபடி நடந்தது.

    ரூம் ஐந்நூறில்

    கிறீச்... கிறீச்சென்று ரிஸ்ட் வாட்ச் காதைச் சொறிந்து விட, எக்கச்சக்க மயக்கத்திலிருந்த வித்யாதரன் சட்டென்று எழுந்து, வாயில் ஒழுகின எச்சிலைத் துடைத்துக் கொண்டு, லுங்கியைச் சரிசெய்து கொண்டு மணி பார்த்தான்.

    பத்து பத்து.

    உடை மாற்றிக் கொண்டு தடுமாற்றத்துடன் படுக்கைக்கு வந்தான். அங்கே போர்வைக்குள் பதுங்கியிருந்த ஷெர்லியைத் தட்டி எழுப்பி, நான் கிளம்பறேன் டியர். வீட்டுக்குப் போகணும் என்றான்.

    அவள், என்ன அவசரம்...? என்று அவனைக் கட்டிக் கொண்டு முனகினாள்.

    போன் வந்தது. அப்பன் வந்திருவான். தேடுவான். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா...? காரியம் பாட்டுக்குக் காரியம், இது பாட்டுக்கு இது, ஓகே...?

    சரி, என்று அவள் எழ முயல

    வேணாம். நீ தூங்கு. மானேஜரிடம் சொல்லிவிட்டுப் போகிறேன்.

    அவன் அவளுக்கு ஒரு 'மு' கொடுத்துவிட்டு நகர, புன்னகையுடன், டாடா... வித்தி! என்று கையாட்டினாள்.

    அதுதான் அவளது கடைசிப் புன்னகை.

    அதே திருச்சி.

    காந்தி மார்க்கெட்டில் போன மாதம் பெய்த மழைக்கு இன்னமும் நாற்றமடித்துக் கொண்டிருந்தது. அழுகின காய்கறிகளும் பழங்களும் பன்றிகளால் புரட்டப்பட்டு ஆராயப்பட்டன. காந்தி சிலையின் மணிக்கூண்டில் நான்கு புறமும் நான்கு நேரங்களைக் காட்டின.

    லாரிகள் வெளியூரிலிருந்து லோடுகளைக் கொண்டு வந்து ரோடை பிளாக் பண்ணி ஹாரனடித்து ஹாரனடித்துக் களேபரம் பண்ணின.

    அங்கே வழியை மறித்துக்கொண்டு 'ஜெயராமன் லாரி சர்வீஸ்' நின்றிருந்தது. நாதன் பாபு-சக டிரைவர்களின் கெட்ட வார்த்தைகளுக்குப் பயந்து, பாதி பீடியை அவசரமாய்த் தூக்கி எறிந்துவிட்டு, காறித் துப்பிவிட்டு, ஓடி வந்து ஏறி-லாரியை நகர்த்தினார்.

    உள்ளே பாலு எனும் திருநாமம் கொண்ட சிறுவன் தூங்கி வழிந்து கொண்டிருக்க, அடிடா அடிடா அவனை! தரித்திரம்! கிளம்பும்போதே தூக்கமா...? என்று ஓங்கி ஒரு தட்டுத் தட்டினார்.

    அவன் அரண்டு போய்த் திக்கா பிக்காவென்று விழித்தான். ஏண்டா... இப்பவே சாமி ஆடினா, தூத்துக்குடி எப்படி போய்ச் சேர்றது?

    ரெண்டு நாளாய்த் தூக்கம் இல்லேண்ணே.

    பெரிய ரெண்டு நாள். நானுந்தான் பத்து நாளா ஓட்டறேன். தூக்கத்தைப் பார்த்தா வண்டி எப்படி ஓட்டறது? தார்ப் பாயெல்லாம் செக் பண்ணினாயா... ஒழுங்காக் கட்டியிருக்கான்களா!

    கட்டியிருக்காங்கண்ணே, என்றான் பாலு அடிக்குப் பயந்து கொண்டு.

    தூக்கக் கலக்கத்தில் அவன் போய்ப் பார்க்கவே இல்லை. கூலியாள்கள் செகண்ட் ஷோ போகிற அவசரத்தில் தார்பாயைச் சரியாய்க் கட்டவில்லையென்பதுதான் நிஜம். லாரியின் பின் பகுதியில் அது சற்றுப் பிசிறியிருந்தது.

    நாதன்பாபு வண்டியை ஓரம் கட்டி ஸ்டியரிங்கைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு உற்சாகத்துடன் கிளப்பினார்.

    அரியமங்கலம் ரோடில் நுழைந்தபோது அவருக்கு வயிறு என்னவோ பண்ணிற்று.

    சற்று முன்பு தெருக்கடையில் சாப்பிட்ட புரோட்டாவும், கார குருமாவும் உள்ளுக்குள் கலகம் செய்து உடனே நடவடிக்கை எடு என்றன.

    அவர் வேறு வழியின்றி லாரியைப் பாலத்தின் விளிம்பில் நிறுத்திவிட்டு இறங்கினார். பீடி பற்ற வைத்துக் கொண்டு புதர் மறைவில் ஒதுங்கினார்.

    அவர் கண்ணிலிருந்து மறைந்ததும் பாலு, 'அப்பாடா... நிம்மதி!' என்று விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைத் தொடர ஆரம்பித்தான்.

    சர் சர்ரென ரோடில் கார்களும் லாரிகளும் அவர்களைக் கடந்து கொண்டிருந்தன.

    அரைமணி நேரத்தில் அவஸ்தையெல்லாம் இறக்கி விட்டு, பக்கத்துக் குட்டையில் அலம்பிக் கொண்டு அவர் வருவதற்குள் அவன் எச்சரிக்கையுடன் விழித்துக் கொண்டான்.

    டயரையெல்லாம் தட்டிப் பார்த்தாயாடா...?

    பார்த்தேண்ணே.

    வண்டி கிளம்பிற்று. டோல் கேட் தாண்டி நெடுஞ் சாலையில் ஐக்யமாயிற்று.

    ஒரு மணி நேரத்தில் சன்னமாய் வழுக்கிக்கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1