Matravai Thiraikku Pinnaal
()
About this ebook
N.C. Mohandoss has written more than 300 novels, more than 500 short stories, 23 novelettes, more than 3000 articles and 4 TV dramas. He has written on social topics and has to his credit more than 100 books published which have appeared in all leading Tamil magazines and newspapers. His writings are dedicatd for the students of Annamalai university tamilnadu for reaserach to obtain Phd.
N.C.Mohandoss has been conffered with doctorate for community services by The world tamil university, Meryland.
Mohandoss attributes his inspiration to the popular "Thuglak" magazine and reveres "Saavi" who encouraged him to write more and more. His success is also due to the efforts of Mr Ramesh of 'DinaMalar' and the constant support and guidance of his friend, Mr Manohar.
N.C.Mohandoss as the Founder of INDIAN FRONTLINERS, KUWAIT, a SERVICE Organisation registered with the Indian Embassy, Kuwait, has pioneered a number of social service activities and extended financial help to several orphanages, hospitals, and senior citizen homes, poor students for their educational and also for the welfare of stranded Indian workers in Kuwait.
Awarded by Dr.Kalam :
At the diamond jubilee of Anbu Paalam service organization function held on 4th oct 2013 --In acknowledgement of the support and assistance extended by NC.Mohandoss to ‘Anbu Paalam’ for the past 20 years, Dr .Kalam felicitated Founder & Writer N.C.Mohandoss with a Momento and Gold Medal . (matter and photo attached).
Mohandoss has also compiled, edited and released 23 parts of FRONTLINERS book, on Talented Indians in Kuwait, India tourism, Indian Embassy services, Indian educational institutions in Kuwait ,community services,Indian Achievers Globally and about Enviroment protection.
Mohandoss hails from a remote village called Nambukuruchy in Tiruchi District, Tamil Nadu which still lacks the post office.
He is working for Kuwait National Petroleum Company . Mohandoss feels a sense of pride in owning that his success is due to the support, patience and guidance of his wife ARULMOZHI, and their only daughter VINU, who correctly reads his mind and reflects his ambitions and aspirations in every way
Read more from Nc. Mohandoss
Kaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Kolai Magal Rating: 5 out of 5 stars5/5Thanga Thaamarai Penney! Rating: 0 out of 5 stars0 ratingsEnnavale... Ennavale... Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Mugam Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neer Kanavugal Rating: 5 out of 5 stars5/5Yeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Manam Virumbuthe... Rating: 0 out of 5 stars0 ratingsVaanathai Thottavan Rating: 0 out of 5 stars0 ratingsKadathalukku Oru Kalloori Rating: 5 out of 5 stars5/5Thavazhum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsUllathai Kollathey! Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Mithappom Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMothi Kondey Iruppean! Rating: 4 out of 5 stars4/5Arabic Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsSuthi Suthi Vandheega... Rating: 0 out of 5 stars0 ratingsVibareetha Parisu Rating: 0 out of 5 stars0 ratingsUlavu Sol Kiliye! Rating: 5 out of 5 stars5/5Purattasi, Aippasi, Kaarthiga Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Eeram Illai Rating: 0 out of 5 stars0 ratingsKangal Mayangiya Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vizhi Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsMeen Kothi! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Valam Illai Nam Thirunattil? Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Vaa... Vasanthame! Rating: 0 out of 5 stars0 ratingsYaar Andha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsVidiyattum Paarkalam! Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Matravai Thiraikku Pinnaal
Related ebooks
M. S. Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kaapatrungal! Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsInaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsKannodu Kaanpathellam Rating: 0 out of 5 stars0 ratingsNaga Keeralgal Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Nee! Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Eppadiyum Jeikka Vendum Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Valarum Paruvam Rating: 5 out of 5 stars5/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Koondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Bungalow! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Kutram Rating: 0 out of 5 stars0 ratingsMythili Rating: 0 out of 5 stars0 ratingsMayakkam Enna... Undhan Mounam Enna... Rating: 0 out of 5 stars0 ratingsUyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Koottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalukku Karuppu Kodi Rating: 5 out of 5 stars5/5Marumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsThaalattum Vennilavey Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsMr. Vedantham Rating: 5 out of 5 stars5/5Seenupayal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Matravai Thiraikku Pinnaal
0 ratings0 reviews
Book preview
Matravai Thiraikku Pinnaal - NC. Mohandoss
http://www.pustaka.co.in
மற்றவை திரைக்குப் பின்னால்
Matravai Thiraikku Pinnaal
Author:
என்.சி. மோகன் தாஸ்
NC. Mohandoss
For more books
http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தீபாவளி டெய்லர்...!
2. கொளுத்திப் போடு
3. பறந்து போனவன்
4. ஏழைக் குத்தம்
5. ஆத்ம சாந்தி
6. மத்தாப்பு
7. பெட்டிக்காரி
8. வீரமாக நடைபோடு
9. கண்ணால் காண்பதும் மெய்
10. பரவசம்
11. போட்டாப் பெட்டி
12. நினைத்தால் மட்டும் போதுமா?
13. மவளே
14. மதில் மேல் பூனை
15. குட்டிப் பிசாசு
16. வழிப்பறி!
17. பிள்ளையார் பிடிக்க...
18. மற்றவை - திரைக்குப் பின்னால்...!
1. தீபாவளி டெய்லர்...!
பண்டிகையெல்லாம் ஏன்தான் வருகிறதோ என்றிருக்கும் கமலாவிற்கு. அதிலும் தீபாவளி பற்றி சொல்லவே வேண்டாம். துணிமணி, பட்டாசு, பலகாரங்கள், புதுப்படம், டி.வி.யில் நட்சத்திரங்கள் என்று பசங்க எல்லோரும் குதூகலிப்பாங்க. சோமுவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்துவிடுவான்.
அடுப்படியிலும், உபசரிப்பிலும், தனியாய் ஒருத்தி கஷ்டப்படுகிறாளே, உதவி பண்ணுவோம் என்கிற நினைப்பே அவனுக்கு இருக்காது. அதுவும் இம்முறை மகள் நிர்மாவுக்கு தலை தீபாவளி!
ஏங்க! மகளுக்கு பட்டுப்புடவை எடுக்கணும், அப்புறம் நகை! மருமகனுக்கு கோட், சூட்... எல்லாத்துக்கும் பணம் ரெடி பண்ணுங்க!
என்றாள் போனில். பட்டுப் புடவை நீ எடுத்திரு. மாப்பிள்ளைக்கு என் கடையில் நானே கோட் தச்சுடறேனே! அளவு மட்டும் அனுப்பச் சொல்.
வேணாம் வேணாம். அவருக்கு ரெடிமேடாகவே வாங்கிரலாம்.
ஏண்டி - என் ‘கும்கும்’ டெய்லர்ஸ் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா?
அதுக்கில்லை. ஏற்கனவே நீங்க பிஸி. நாள் கணக்கா வீட்டுக்கு வரதில்லை. ராத்திரி பகலா தையல் கடையிலேயே கிடக்கீங்க! இதுவேற அதிகப்படி வேலை வேணாம்னுதான் நிர்மாவை அங்கேயே வாங்கிக்கச் சொல்லிட்டேன்!
வாங்கிக்கச் சொல்லிட்டு அப்புறம் எதுக்கு இப்போ!
பணம் தரணுமில்லே...!
நாளை கொடுத்தனுப்பறேன்! இப்போ கஸ்டமர் காத்திருக்காங்க. அப்புறம் பேசலாம்!
சோமுவின் ‘கும்கும்’ டெய்லர் கடை டவுனில் இருந்தது. அவர்களின் கிராமத்திலிருந்து முப்பது கிலோமீட்டர். வாடகை, அலங்காரம், ஏஸி, கஸ்டமர்களுக்கு கூல் டிரிங்க்ஸ், உதவிக்கு ஆட்கள் என்று செலவு எகிறினாலும் கூட வாடிக்கையாளர்களுக்கு பஞ்சமில்லை.
ஆனால் பண்டிகை என்று வந்துவிட்டால் வீட்டை மறந்துவிட வேண்டும். என்னதான் ராத்திரி பகல் என்று உழைத்தாலும் கூட சொன்ன நேரத்திற்கு கொடுக்க முடிவதில்லை.
துணை டைலர்களில் யாராவது லீவ் போடுவர். பட்டன் கட்டும் பையன் எஸ்கேப்! கரண்ட் கட், விருந்தினர் வரவு என பல இடைஞ்சல்கள்.
தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் ஊரிலிருந்து வரும் சொந்தங்கள் எங்கோ ஒரு மூலையில் வேலை வைத்துக்கொண்டு எனக்கு அங்கு பேச வராது. கொஞ்சம் துணைக்கு வாயேன்...!
என்று அழைப்பர்.
மறுக்க முடியாது. ஊர்வாய்! போகவில்லையென்றால் பொல்லாப்பாகும். சரியென்று கடையை பார்த்துக்குங்க. இதோ வந்திடறேன்
என்று கிளம்பினால் - சாமான்யத்தில் திரும்ப முடியாது.
இதற்கிடையில் உறவுகளின் போன்கள்! ‘அது வேணும், இது வேணும். வாங்கி நம்மூர் பஸ்களில் அனுப்பு’ என்பர். மருத்துவ உதவி, டாக்டர் டோக்கன், ரயிலுக்கு, பஸ்சுக்கு டிக்கட் ரிசர்வேஷன், சமையலுக்கு ஆள் பார், கல்யாண மண்டபம் பார், நாதஸ்வரத்துக்கு பேசு என உபரி வேலைகள் ஜரூராய் நடக்கும்.
எத்தனை கோபம் என்றாலும் வெளியே காட்ட முடியாது. கூடாது.
தொழில் அப்படி!
என் தூரத்தில் கஸ்டமர் ஒருவர் கூலிங்கிளாஸை ஸ்டெயிலாக கழற்றி போட்டுக் கொண்டு வர, சோமுவுக்கு பக்கென்றிருந்தது.
அவரது துணி - ரெண்டு நாள் முன்பே முடிந்திருக்க வேண்டும். இன்னும் தொடக் கூட இல்லே.
ஏய். சுப்பு! அவரோட துணியை எடு
அவன் தேடி எடுத்துக்கொடுக்க, ஏற்கனவே டேபிளில் வைத்து கோடு போட்டு வெட்டிக் கொண்டிருந்த துணியை ஒதுக்கி விட்டு, இதை பரப்பினான்.
வாங்க சார், உட்காருங்க!
என் பேண்ட், ஷர்ட் ரெடியா...?!
ஏய், சாருக்கு கூல்டிரிங்க்ஸ் வாங்கி வா!
என் சட்டை
என்று பில்லை நீட்டினார். ஷோ கேஸில் பார்வையை மேய விட்டு, தேடி இன்னும் முடியலியா…?
என்று முகம் சிவந்தார்.
இன்னைக்கு முடிஞ்சிரும். பவர்கட், ரெண்டு நாளாமழை, பசங்க வேலைக்கு வரலே!
ச்சே! கையோட வாங்கிப் போகலாம்னு வந்தேன்.
என்று கோபத்தை தலைசொறிந்து வெளிப்படுத்தினார். இவன் நெளிந்தான்.
ரெண்டு மணி நேரத்துல ரெடியாயிடும். நீங்க கடை வீதியில் வேலை இருந்தா பார்த்துவிட்டு வாங்க
என்று அனுப்பி வைத்தான்.
உறுதிதானே...?
சத்யமா கொடுத்திடறேன்!
அவர் அந்தப் பக்கம் போனதும் பசங்களை முறைப்பான். திட்ட முடியாது. கோபத்தை அடக்கி, வெளியே பொய்யாய்... போலியாய்...
இங்கே முடியாது என்று சொன்னால் வேறு கடைக்கு போய்விடுவர். அப்புறம் திரும்ப இந்த பக்கம் வரமாட்டார்கள். இல்லாவிட்டால் ரெடிமேட் சட்டை என கிளம்புவர்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எல்லா தேதிகளும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் கூட முன்கூட்டியே திட்டமிட்டு துணி தைத்துக் கொள்ளும் பழக்கம் ஜனங்களிடம் இல்லை.
ஒரு வாரம், பத்து நாள் முன்பு தான் யோசிப்பர். உடனே மோதல்! எல்லோரும் ஒரே சமயத்தில் கொடுத்தால் எப்படி முடிக்க முடியும்? அதுபற்றி வாடிக்கையாளர்களுக்கு என்ன கவலை?
தீபாவளி செலவுகள், அதுவும் தலை தீபாவளி செலவுகள், கடை பசங்களுக்கு போனஸ் என்று அனைத்தையும் ஈடுகட்ட, வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் வளைத்துப்போட வேண்டியுள்ளது.
சோமு, வீட்டிற்குப் போயே ஒரு வாரமாயிற்று. அவனது நிலைமை புரிந்திருப்பதால் கமலாவும் கோபிப்பதில்லை. எல்லாம் நமக்காகத் தானே, குடும்பத்திற்காகத் தானே என்று சமாதானம் செய்து கொள்வாள்.
***
தீபாவளிக்கு முந்தின தினம்.
கமலாவிடமிருந்து போன், ஏங்க! மாப்பிள்ளையும், பொண்ணும் வந்துட்டாங்க! நீங்க வர முடியுமா...!
இல்லை. இன்னிக்கு ராத்திரிக்குள்ள நிறைய தைச்சுக் கொடுக்க வேண்டியிருக்கு. நாளை வரேனே...!
மாப்பிள்ளை உங்களை பாக்கணும்ங்கிறார். ரெண்டு பேரையும் அங்கே அனுப்பி வைக்கறேன்!
என்று வைத்துவிட்டாள்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் நிர்மாவும், மாப்பிள்ளை விமலும் பைக்கில் வந்து இறங்கினர். அவ்வளவு சீக்கிரம் சோமு அவர்களை அங்கு எதிர்பார்க்கவில்லை.
சவரம் செய்யாமல், எண்ணெய் வழிந்து, சட்டை மாற்றாமல், கழுத்தில் மீட்டர் பட்டை, காதில் பென்சில், வியர்வை பனியன். லுங்கி, பிசிறின தலை, தூக்கம் மறந்த சிவந்த விழிகளுடன் சோமுவை பார்ப்பதற்கு நிர்மாவிற்கு சங்கடமாயிருந்தது.
நாம் சொகுசாயிருக்கிறோம். நமக்காக அப்பா எவ்வளோ கஷ்டப்படுகிறார் என்று நினைத்தபோது கண் கலங்கிற்று. வாங்க மாப்பிள்ளை! இப்படி உட்காருங்க. அதிகப்படி வேலை. அதான் வீட்டுக்கு வரமுடியலே!
பரவாயில்லை மாமா
என்று விமல் ஸ்டூலில் அமர்ந்தான். ஏய்... கூல்டிரிங்ஸ் சொல்லு! அப்படியே சமுசா!
அதெல்லாம் வேணாம் மாமா. வீட்டுல போரடிச்சுது. அப்படியே டவுனுக்கு வந்து பட்டாசு வாங்கிப் போகலான்னு!
பட்டாசு! ஓ... பாத்தீங்களா... மறந்தே போனேன்...
என்று குனிந்து கல்லாவை திறந்து பணம் எடுத்து, நிர்மா... இந்தா இதை வச்சுக்கோ
என்று நீட்டினார்.
வேணாம்ப்பா, தலை தீபாவளின்னா மாப்பிள்ளைதான் பட்டாசு வாங்கி வரணும். உங்க மாப்பிள்ளையை சோம்பேறியாவும், கஞ்சனாகவும் ஆக்கிறாதீங்க. நாங்க வரோம்!
என்று சிரித்தாள்.
ராத்திரி சீக்கிரம் வந்திருங்க மாமா. நீங்க வந்த பின்புதான் நாங்களும் சாப்பிடுவோம், தூங்குவோம். முதல் பட்டாசை கொளுத்தி எங்க தலை தீபாவளியை நீங்கதான் துவக்கி வைக்கணும்.
சொல்லிவிட்டு அவர்கள் பைக்கில் டாட்டா காட்டி பறந்தனர்.
வேறு எந்த பண்டிகையையும் விட தீபாவளிக்கு மவுசு அதிகம், மகிழ்ச்சியும். அதற்குக் காரணம் புத்தாடைகள், பட்டாசு, சின்ன பசங்க என்றில்லாமல் பெரியவர்களும், ரசித்து, தங்கள் இளமைக் காலத்தை அசைபோட்டுப் பார்த்து துள்ளும் பண்டிகை இது.
எத்தனை முயற்சித்தும் கூட சோமு வீட்டிற்கு வந்து சேர இரவு பனிரெண்டாயிற்று.
அப்பாவைப் பார்க்க நிர்மாவிற்கு சந்தோஷமாயிருந்தது. சோமு முடிவெட்டி, சவரம் செய்து பளபளவென்றிருந்தார். அவர்கள் ஒன்றாக சாப்பிட்டனர். ஒன்றாய் அமர்ந்து சீட்டுக்கட்டு!
விடியற்காலை நான்கு மணிக்கு அவர்கள் ரெடி. எண்ணெய் ஸ்நானம் முடித்து பூஜை அறை.
நிர்மாவின் பட்டுப்புடவை, விமலின் கோட் சூட், செயின், கமலாவின் புடவை எல்லாம் மஞ்சள் தடவப்பட்டு தாம்பாளத்தில் அடுக்கப்பட்டன. கமலா அப்போதுதான் யோசித்து ஏங்க, உங்க புது வேட்டி - சட்டை எங்கே
என்றாள்.
சோமுக்கு வியர்த்துப் போயிற்று. வேலை நெருக்கடியில் வாங்க மறந்து விட்டிருந்தான். ஒரு வாரமாய் கமலா நச்சரித்தும் கூட மறதி.
அவன் வாங்கியிருப்பான் என அவளும் நினைத்திருந்தாள்.
என்னங்க வாங்கலியா...?
இல்லை
என்று கையை பிசைந்தான். அவனுக்கு சங்கடமாயிற்று.
ஊர் உலகத்துக்கெல்லாம் புதுத் துணி தைச்சு கொடுத்து எல்லோரும் சந்தோஷமாக தீபாவளி கொண்டாடுறாங்க. டெய்லரான உங்களுக்கு மட்டும் சொந்தமாக தைச்சுக்க முடியலே... மாப்பிள்ளை என்ன நினைப்பார்...!
அத்தே! எதுக்கு மாமாவை கோவிச்சிக்கிறீங்க. அவர் வேணும்னா சட்டை தைச்சுக்கலே...? பிஸி. எங்களுக்கு செலவு செஞ்சு அழகு பார்க்கணும்னு தன்னையும் மறந்துட்டார். ஆனா நாங்க அவரை மறப்போமா...?
என்ன சொல்றீங்க மாப்பிள்ளை...!
ஆமா மாமா. நேத்து கடையில உங்களை பார்த்தப்பவே புரிஞ்சுது. நிச்சயம் உங்களுக்கு தைச்சிருக்க மாட்டிங்கன்னு. அதனால நானும், நிர்மாவும் உங்களுக்கு ரெடிமெட் சட்டை, பேண்ட் வாங்கி வந்தோம். இந்தாங்க...
என்று விமல் பார்சலை நீட்ட, கமலா, சோமு இருவரின் கண்களும் கலங்கின.
***
2. கொளுத்திப் போடு
சுஷ்மா, ஜீன்ஸ் - உடல் ஒட்டின (காட்டின) பனியனுடன், உலர்த்த நேரமில்லாத ஈர முடியுமாய் கிளம்ப, சுஷ்! ஒரு வாய் சாப்பிட்டுப் போடி...!
நேரமாச்சும்மா. வரேன்!
என்று செருப்பில் நுழைந்தாள். அதற்குள் அம்மா பின்னாடியே ஓடி வந்து, லாப்டாப் பையில் டிபன் பாக்ஸைச் செருகி, போன உடனே மறக்காம சாப்பிட்டிரு.
சரிம்மா. பை
என்று ஓடி, தனக்காக காத்திருந்த டிவி சேனல் வண்டியில் ஏறி - செல் ஒலிக்க இதோ கிளம்பிட்டேன் சார்!
விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து, உடனே இந்த பிரபல சேனலில் சேர்ந்த சுஷ்மா எதிர்பாராமல் திடீர் பிரபலம்! பிரபலத்திற்கேற்ப கவர்ச்சியாக வேண்டிய கட்டாயம்! அரசியல் - சினிமா - மீடியா - தொழிலதிபர்கள் என பெரும்புள்ளிகளுடன் பழகும் வாய்ப்பு. கைநிறைய சம்பளம்!
புதுப்புது யோசனைகள், யுக்திகள்! சானலில் ரேட்டிங்கை கூட்ட வேண்டி எப்போதும் ஓட்டம். ஓய்விற்கும், தூங்கவும், பசி போக்கவும் நேரமில்லை. வசதியில்லாதவர்கள் காசில்லாமல் பட்டினி. காசிருப்பவர்களுக்கு சாப்பிட நேரமில்லை அல்லது டயட்!
தொலைக்காட்சி அலுவலகம் பத்து மாடியும் பத்தாமல் இன்னும் வளர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு தளத்திலும் அவர்களது துணை - உப - குட்டிச் சானல்கள்! எதற்கு என்று தெரியாது - அலுவலர்களும் ‘லி’களும் காதில் செல்லை வைத்துக் கொண்டு இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் மலையை பிடுங்கப் போகிற அவசரம்! பிடுங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் பரப்பரப்பு.
இவர்கள் பம்பரமாய் சுழன்றால்தான் ஜனங்களுக்கு பரபரப்பு தர முடியும். இருப்பதை மறைக்கணும். இல்லாததை பெரிசு பண்ணணும்! போட்டி சானல்களுக்கு முன்பு - முந்தணும்! அவன் ஏதாவது செய்து நல்ல பெயர் வாங்கினால் உல்டா பண்ணி காலி பண்ணணும்!
தினம் தினம் கம்பிமேல் வித்தை! கரணம் போட வேண்டும். விழக்கூடாது. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது சானலாக இருக்க வேண்டும். வசதியிருக்கிறது. எவ்ளோ வேணுமானும் செலவு செய்யலாம். ஆனால் ரிசல்ட் வேணும்! எப்போதும் ஓட்டம்! இருந்தாலும் -
எதையாவது செய்து சபாஷ் பெற்றால் அது அன்றையோடு சரி. மறுநாளுக்கு வேறு மாதிரி ஓடணும்! முடிவில் ஒன்றை சாதித்தோம் என பெருமைபட முடியாது. ஓய்ந்துவிடக்கூடாது! நித்தம் நித்தம் தேடல்!
சுஷ்மா உள்ளே நுழைந்தபோது ரிஷப்ஷனிஸ்ட் டைரக்டர் விக்னேஷ் பார்க்கச் சொன்னார்!
என்று அன்பாக விரட்டினாள்.
விக்னேஷ், யெஸ் சார். நோ சார்! இந்த வாரம் செஞ்சிரலாம் சார்!
என்று சொல்லி அடிபணிந்தபடி அவளை அமரச் சொன்னான். பாவம் இளம் வயதிலேயே வழுக்கை! அவளும் கேட்கட்டும் என்று ஸ்பீக்கரை அமர்த்தி அமர்ந்தான்.
எதிர்முனையில் சேர்மன். சானலின் ஓனர். அப்போது எந்த நாட்டிலிருந்து என்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் விரட்டி கழுத்தை பிடிப்பார். காம் வியூவரில் அலுவலக அசைவுகளை அளப்பார். யாரும் பார்க்கவில்லை என்று எந்த பப்ளியும் எவனுடனும் உரசி விட முடியாது. உடன் ஓலை வரும்!
அள்ளி அள்ளி சம்பளத்தை கொடுத்துவிட்டு அனுபவிக்க நேரம் தராத குரூரம்! சானலில் ஆரம்பித்த அவரது வாழ்வு இன்று உலகம் முழுக்க பல தொழில்களில் பறக்கிறது! சிறக்கிறது.
ஆக்கவும் அதிகமாய் அழிக்கவும் அவர் தெம்பு பெற்றவர்! குடும்பம் அமெரிக்க கிரீன் கார்டில்!
விக்னேஷ்! நேத்து ஆரம்பிச்ச சானல்காரன் புகுந்து விளையாடறான். நீங்கள்ளாம் என்ன பண்றீங்க? உலகத் தமிழர்களை உசுப்பற மாதிரி ஏதாவது...
யோசிக்கணும் சார்!
செய்றீங்க - அதுவும் அதிரடியாய் - நிலநடுக்கமாய்... இன்னும் ரெண்டு நாளில்! அவனவன் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பான். நாம அதுக்கு நாலு நாள் முன்னாடியே வெடிச்சிரணும்! அது சரவெடியா இருக்கணும்!
டன் சார்
என்ன செய்யப்போறீங்கன்னு இன்னும் நாலு மணி நேரத்துல எனக்கு தெரிஞ்சாகணும்! கீப் கான்பிடன்ஸியல்!
ஓக்கே சார்.
"நம்மாளுங்களுக்கு முடியலேன்னா - சொல்லு! ஏஜென்ஸிகாரனை அனுப்பறேன்.