Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

M. S.
M. S.
M. S.
Ebook147 pages57 minutes

M. S.

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘ஒரு பொண்ணூ நினைச்சா தைரியமா தனியா வாழலாம் அருள். அது பிரச்சினையே இல்ல இன்னிக்கு. ஒரு பொன்னுக்கு ஆண் துணைங்கிறது கழுத்து நகைமாதிரி. ஆனா கெளரவம், சுதந்திரம், மரியாதை எல்லாம் கட்டிக்கிற துணி மாதிரி. துணியைக் கழற்றிக் கொடுத்திட்டு நகையை வாங்க வேண்டியதில்லை’ இது ஒரு தனி மனிஷியின் கதை அல்ல. ஒரு தலைமுறையின் கதை என்பதுதான் என்னுடைய பதில்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115402621
M. S.

Read more from Maalan

Related to M. S.

Related ebooks

Reviews for M. S.

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    M. S. - Maalan

    http://www.pustaka.co.in

    எம். எஸ்.

    M. S.

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    இந்தச் செடி, லில்லி இல்லையோ, புல்தானோ என்று எனக்கு வெகு நாட்களாகவே சந்தேகம். அதை வாங்கி வந்து வைத்த புதிதில் நான் தினமும் தண்ணீர் ஊற்றி வந்தேன். புதுமையின் ஆர்வம் தளர்ச்சி கண்ட பிறகு மழைக்காலத் தூவானங்கள் அதை வளர்த்தன. சிலசமயம் அது ஷேவ் செய்து மீந்த தண்ணீருக்காகக் காத்திருந்தது. வந்த புதிதில் தினந்தினமும், பின் தண்ணீர் ஊற்றுகிற தருணங்களிலும் அது எப்போது பூக்கும் என்ற கேள்வி என்னுள் மொட்டுக் கட்டியிருந்தது. தழை மட்டும் வளர்ந்து மொட்டு ஏதும் அரும்பாததைக் கண்டு இது பூக்கவே பூக்காது என்ற சந்தேக முள் மண்டத் துவங்கியது. ஆனால் என் தங்கைக்கு மட்டும் அது புல் இல்லை, பூக்கும் என்று ஆதாரமில்லாத ஒரு நம்பிக்கை வேர் விட்டிருந்தது. ஆபீஸ் இல்லை என்ற அற்ப சந்தோஷத்தில் மெல்லத் தூங்கி எழுந்து நித்திரையைக் குளிர்ந்த நீர் விசிறிக் கழுவும் ஒரு ஞாயிற்றுக் கிழமை விடிகாலையில் எதிர்பாராத கவிதை போல, வாள் வாளாக வளர்ந்திருந்த இலைகளுக்கு நடுவே, சின்னதாய் இளம் நீலத்தில் ஒரு மொட்டுக் கண் விழித்திருந்ததைக் கண்டேன். வானமே வந்து பூத்திருப்பதாய்த் தங்கை பூரித்துப் போனாள். எனக்கென்னவோ அவளது நம்பிக்கைதான் பூத்திருப்பதாகத் தோன்றிற்று.

    எப்போது பூக்கும் என்ற எதிர்பார்ப்பையும், பூக்கவே பூக்காது என்ற அவநம்பிக்கையையும், எதிர்பாராத நேரத்தில் பூக்கிற சந்தோஷத்தையும் எப்போதும் தருவதாக இருக்கிறது இளைய தலைமுறை.

    இளைய தலைமுறை வாழ்க்கையை எதிர்கொள்கிற துணிவும், சத்தம் காட்டாமல் சாதித்துக் கொண்டே நடக்கிற தெளிவும், எத்தனையோ முறை என்னை வியக்கச் செய்திருக்கின்றன. அவர்கள் ஒரே நேரத்தில் குழந்தைகளாகவும் ஞானிகளாகவும் இருக்கிற அதிசயத்தை எண்ணி எண்ணி எனக்கு விவரிக்க முடியாத வியப்பாக இருக்கிறது. 'திசைகள்’ மைதானத்தில் அவர்களோடு விளையாடின. அப்போதும், ‘குமுதம்’ ஜன்னல் வழியே அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் இப்போதும், இந்த வியப்பு எனக்குள் விளைந்து கொண்டிருக்கிறது.

    அந்த வியப்பின் ஒரு சிறு துளிதான் எம்.எஸ். ‘யாரை மனதில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? எம்.எஸ். என்பது யார்? கண்டுபிடித்து விட்டேன். இவர்தானே எம்.எஸ்?’ என்று இந்த நாவல் வெளிவந்து கொண்டிருந்த காலத்திலும், இப்போதும்கூட எத்தனையோ வாசகர்கள் நேரிலும் கடிதம் மூலமும் கேட்கிறார்கள். எவரோ ஒருவருடைய கதையிது என்ற வம்பு சுவாரசியத்தைவிட, தன்னுடைய கதையோ இது என்ற சந்தேகக் குறுகுறுப்புதான் இந்தக் கேள்வியின் காரணமாக இருக்கிறது. இது ஒரு தனி மனுஷியின் கதை அல்ல, ஒரு தலைமுறையின் கதை என்பதுதான் என்னுடைய பதில்.

    இந்தப் புத்தகத்தைக் குறுகிய கால அவகாசத்தில் உருவாக்கி இருக்கும் அருமை நண்பர் கவிதா பப்ளிகேஷன் திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கும், அவருக்குத் துணை நின்ற தொழிலாள நண்பர்களுக்கும் என் பிரியம் கலந்த நன்றி.

    மாலன்

    ‘பாரதி’

    40. பத்திரிகையாளர் குடியிருப்பு

    சீனிவாசபுரம், சென்னை - 41.

    ***

    1

    மழை வரும் போலிருந்தது.

    எங்கிருந்தோ மண் வாசனை. விர்ரென்று சுழன்று எழுந்த புழுதிக் காற்று, ரோட்டில் கிடந்த காகிதங்களையும், பாலிதீன் பைகளையும் வாரிக்கொண்டு தத்தித் தத்தி நடந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே வெள்ளிச் சரிகை போலச் சரசரவென்று தூறல் இறங்கியது.

    இந்த மழை இல்லை என்று இப்போது யார் அழுதார்கள்! என்று அலுத்துக் கொண்டே உள்ளே நகர்ந்தாள், மோனா.

    மோனாவிற்கு மழை பிடிக்கும். எட்டு வயதில் இது போல் சடசடவென்று மழை உதிர ஆரம்பித்த ஒரு பிற்பகலில், எல்லாக் காரியத்தையும் அப்படியே போட்டுவிட்டு, மொட்டை மாடிக்கு ஓடி, வானத்தைப் பார்த்துக் கையை மலர்த்திக் கொண்டு தட்டாமாலை சுற்றிக் கிறுகிறுத்துச் சரிந்தபோது, ‘கோட்டியா பிடிச்சிருக்கு உனக்கு’ என்று பாட்டி முதுகில் போட்ட அறையின் உறைப்பு இன்னும் நினைவிருக்கிறது. மழை பெய்கிறபோது கடல் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் எனக் கல்லூரிச் சிநேகிதிகளுடன் கடற்கரைக்குக் கிளம்பிப் போய், குடை கையிலிருந்து ஒரு ராக்கெட்டைப்போலப் புறப்பட்டு, காற்றில் ஒரு பூவைப் போல மிதந்து மிதந்து போன இனிமை நினைவிருக்கிறது. யூத் சென்டர் கலை நிகழ்ச்சியில், பக்கத்து மறைவில் நின்று கொண்டு, ப்ரேம், டார்ச் லைட் விளக்கொளியில், பாரதியாரின் ‘திக்குகள் எட்டும் சிதறி’ யைப் படிக்க, தான் மழையாகவே மாறி ஆடிய அந்தக் கவிதை இரவு இப்போதும் நெஞ்சில் இருக்கிறது.

    என்றாலும் இன்று மழையின் ஈரம் மனதில் தெறிக்க வில்லை. காரணம் இருக்கிறது.

    ஆறரை மணிக்கே வருகிறேன் என்று சொன்ன அப்பாவை இன்னும் காணோம். இராத்திரி அப்பாவை அழைத்துக் கொண்டு ‘பீச் வேவ்ஸ்’ஸில் சாப்பிடப்போவதாகப் பேச்சு. அந்த ரெஸ்ட்டாரண்டில், ப்ரேமை அறிமுகப்படுத்தி வைப்பதும், அவளது ரகசியத் திட்டம். அப்பாவை எப்படியாவது ப்ரேம் ‘இம்ப்ரஸ்’ செய்துவிட வேண்டும் என்பது அவளது அந்தரங்க ஆசை. அதற்கப்புறம் அப்பாவிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேசுவது சுலபம்.

    இப்போது ப்ரேம் அங்கே வந்து காத்துக் கொண்டிருப்பான். இங்கே அப்பா இன்னும் ஆபீசிலிருந்து வந்தபாடில்லை, இத்தனைக்கும் நாலரை மணி வாக்கில் போன் பண்ணி நினைவூட்டியிருந்தாள். பை ஆர்டர்ஸ், யுவர் எக்ஸ்செலன்சி என்று கிண்டல் தொனிக்கச் சம்மதம் சொல்லியிருந்தார்.

    அப்பாவே இப்படித்தான், ஆனால் அவருக்கு ‘டைம் சென்சே’ கிடையாது என்று ஒரேடியாகச் சொல்லிவிட முடியாது. ஆபீஸ் சம்பந்தப்பட்ட சந்திப்புக்களுக்கு ஐந்து நிமிஷம் முன்னதாகவே புறப்படுவார். ‘சனிக்கிழமை ராத்திரி ஒன்பது மணிக்குப் பேசறேன். தீர்மானம் பண்ணி வை’ என்று டெல்லியில் உள்ள தனது பிசினெஸ் பிரின்சிபலிடம் சொல்லியிருந்தால், டாண் என்று போன் பண்ணுவார். வீட்டு விஷயங்கள் என்றால் எப்போதுமே ஒரு டேக் இட் ஈஸி பாலிஸி. கேட்டால், ‘ரிலாக்ஸ்டா இருக்கத்தானே வீடு, எதுக்கு இங்கேயும் கடியாரத்தைக் கட்டிண்டு அழற!' என்று கோணல் நியாயம் பேசுவார்.

    இனியும் காத்திருக்க முடியாது. மோனா ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்தாள். டெலிபோன் பக்கத்தில் இருந்த சிறு குறிப்புப் புத்தகத்தில், 'டாட் ஐ’ம் டைனிங் அவுட் டுநைட் வில் பி பாக் பை நைன்’ என்று கிறுக்கினாள். கிழித்து டிவி. திரையின் மீது ஒட்டினாள். அப்பா வந்தால், எப்படியும் டிவி. பார்ப்பார்.

    கதவைப் பூட்டிக் கொண்டு போர்ட்டிகோவில் இறங்கிய போது, கண்களைக் கூச வைக்கும் வெளிச்சத்தோடு அப்பாவின் கார் நுழைந்தது.

    அது அவர்களுக்குள் ஒரு சிக்னல். அப்பா மட்டும் தனியாக வந்தால், கேட்டைத் திறக்கும்போதே ஹெட் லைட்டை அணைத்து விடுவார். கூட யாராவது முக்கிய விருந்தாளிகளைக் கூட்டி வந்தால், போர்டிகோ வரை ஹெட் லைட் எரிந்து கொண்டே வரும். 'வந்திருக்கிறவர்கள் முக்கியமானவர்கள். மரியாதையாக நடந்து கொள்’ என்று அதற்கு அர்த்தம்.

    வெளியே கிளம்பப் படியிறங்கும் நேரத்தில் ஹெட் லைட்டைப் போட்டுக் கொண்டு நுழைகிறார் அப்பா.

    அப்பாவுடன் காரில் இருந்து இறங்கியவருக்கு-வர் என்ன வேண்டிக் கிடக்கிறது-வன்தான்-இறங்கியவனுக்கு முப்பது வயது இருக்கும். சூட்டிங்ஸ் விளம்பரத்தில் _வருகிறவன் மாதிரி ட்ரிம்மாக உடை அணிந்திருந்தான். முகத்தில் பணத்தைத் துரத்துகிற களை.

    மீனாட்சி-சுருக்கமாக மோனா-மை டாட்டர் என்றார், அப்பா.

    மோனா சம்பிரதாயமாகக் கை குவித்தாள். மனதில் ப்ரேம் வந்து காத்துக் கொண்டிருப்பான் என்ற எண்ணம் படபடத்துக் கொண்டிருந்தது.

    மோனா, இது குமார். ரீஜனல் சேல்ஸ் மானேஜர். அக்வா புராடக்ட்ஸ்.

    அக்வா புராடக்ட்ஸ்ஸின் தயாரிப்புகளைத்தான் அப்பா ஏஜென்சி

    Enjoying the preview?
    Page 1 of 1