Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maalan Bathilgal
Maalan Bathilgal
Maalan Bathilgal
Ebook123 pages1 hour

Maalan Bathilgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கேள்வி - பதில் பகுதியைக் கையாள்வதற்கு நிறையத் திறமையும் வேண்டும், பொறுமையும் வேண்டும். வார்த்தை வித்தகமும் வேண்டும். பரந்துபட்ட வாசிப்பும் வேண்டும். இந்தக் கேள்வி - பதில்கள் பகுதியை பயன்படுத்தி, பல முக்கியமான பிரச்னைகள் குறித்து வாசகர்களுக்குப் புரிதலை ஏற்படுத்த முடியும். கொழுந்துவிட்டு எரியும் பிரச்னைகளுக்குத் தீர்வுகூடச் சொல்ல முடியும். பதிலளிப்பவர் விரும்பினால் அவரேகூடக் கேள்விகளை எழுப்பி, விளக்கம் அளித்து வாசகர்களுக்குத் தெளிவை ஏற்படுத்திவிட முடியும்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580115407996
Maalan Bathilgal

Read more from Maalan

Related to Maalan Bathilgal

Related ebooks

Reviews for Maalan Bathilgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maalan Bathilgal - Maalan

    https://www.pustaka.co.in

    மாலன் பதில்கள்

    Maalan Bathilgal

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மாலனின் இன்னுமொரு பரிமாணம்!

    மாலனின் எழுத்து நடை

    எதிர்பாராத ஆரம்பம்

    மாலன் பதில்கள்

    மாலனின் இன்னுமொரு பரிமாணம்!

    கே. வைத்தியநாதன்

    மாலனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தமிழன்' என்கிற புனைப்பெயரில் எழுதிய கேள்வி-பதில்' பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்விகள் புத்தகமாகத் தொகுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தபோது எனக்கு உள்ளூர மகிழ்ச்சியும், ஆர்வமும் ஒருசேர எழுந்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் "தமிழன்' கேள்வி பதில்களை எதிர்பார்த்து வாரந்தோறும் காத்திருந்த வாசகர்களில் நானும் ஒருவன்.

    தமிழன்' பதில்களை மீண்டும் படிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியில் திளைத்த அடுத்த சில வினாடிகளில் ஓர் அதிர்ச்சியை அளித்தார் மாலன். நீங்கள்தான் அதற்கு அணிந்துரை தர வேண்டும்' என்பதுதான் அதிர்ச்சி அடைய வைத்த அவரது கோரிக்கை. அதிர்ச்சி என்றா சொன்னேன். அதற்கு முன்னால் "இன்ப' என்கிற வார்த்தையையும் சேர்த்து கொள்ளுங்கள், ப்ளீஸ்!

    "உங்கள் புத்தகத்திற்கு நான் அணிந்துரை எழுதுவது என்பதைவிட எனக்குப் பெருமை சேர்க்கும் கெüரவம் எதுவும் இருக்க முடியாது' என்பதுதான் நான் மாலனுக்குச் சொன்ன பதில். நான் ரசிக்கும், வியக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர், தனது எழுத்துக்கு என்னை அணிந்துரை எழுதச் சொல்வது, அவரது பெருந்தன்மையையும், என்மீது அவர் கொண்டிருக்கும் சிநேகத்தையும் காட்டுகிறது.

    மாலனும் நானும் ஆசிரியர் சாவியின் பாசறையில் உருவாக்கப்பட்டவர்கள் தான். ஆனால், ஆசிரியர் சாவிக்கு எனது எழுத்தைப் பரிந்துரைத்து, அந்தப் பாசறைக்குள் என்னை இட்டுச் சென்ற பெருமைக்குரியவர் மாலன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அது குறித்து அவர் இன்றுவரை கூறியதில்லை. மாலனின் பெருந்தன்மைக்கு இதைவிடப் பெரிய சான்று என்னவாக இருக்க முடியும்?

    அதுவரை ஆங்கிலத்தில் அதிகமாக எழுதிவந்த நான், சாவி' வார இதழுக்குத் தபாலில் அனுப்பியிருந்த கட்டுரையைப் பிரித்துப் படித்து, சாவி சாரின் பார்வைக்கு அதை எடுத்துச் சென்று, அச்சுவாகனம் ஏறச் செய்தவர் மாலன். அதற்குப் பிறகுதான் நான் முழு வீச்சில் தமிழிலும் எழுதத் தொடங்கினேன். அப்போது அவர் அளித்தது எனது எழுத்துகான அங்கீகாரம். இப்போது தனது புத்தகத்திற்கு என்னை அணிந்துரை எழுதச் சொல்லியிருப்பதன் மூலம் அவர் தரவிரும்புவது எனக்கான அங்கீகாரம்!'

    மாலனுக்கும் எனக்குமான தொடர்பு ஆச்சரியமானது. நாங்கள் இருவருமே மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள். சாவி இதழுடன் தொடர்புடையவர்கள். "தினமணி' நாளிதழுடன் இணைந்தவர்கள். இதெல்லாம்கூட, அவரது புத்தகத்திற்கு அணிந்துரை எழுதும் அருகதையை எனக்கு அளிக்கிறது என்று நினைக்கிறேன்.

    எனது நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், இன்றைய ஸ்கைவாக்' மால் இருக்கும் இடத்தில் அருணா ஹோட்டல் என்கிற விடுதி இருந்தது. அதன் அடித்தளப் பகுதியில்தான் சாவி' வார இதழ் அலுவலகம் இயங்கியது.

    அப்போதைய சாவி' அலுவலகத்தைப் பார்க்க வேண்டுமே... ஜே..ஜே.. என்றிருக்கும். சாவி, சுஜாதா, பூவாளி, மோனா, விசிட்டர் லென்ஸ்' என்று ஏறத்தாழ அரை டஜன் பத்திரிகைகள். இதற்கெல்லாம் சவால் விடுவதுபோல, மாலனை ஆசிரியராகக் கொண்டு இளைஞர்களுக்காக இளைஞர்களால் நடத்தப்படும் "திசைகள்' என்கிற பத்திரிகை.

    மாலன் என்கிற எழுத்தாளனை, சாவி சார் ஆசிரியராக்கிப் பார்த்தார். ஆசிரியரான மாலன் பல திறமையான இளைஞர்களை எழுத்தாளர்களாக்கிப் பார்த்தார். இன்று பிரபல பத்திரிகையாளர்களாக, எழுத்தாளர்களாக, திரையுலகப் பிரபலங்களாக இருக்கும் பலர் மாலனின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்கள்.

    திசைகள் குழுவில் நான் இடம்பெறவில்லை. ஆனால், அந்த இளைஞர்களும், இளைஞிகளும், திடீர் பத்திரிகையாளர்களாகிவிட்ட ஜோரில் தரையிலிருந்து ஆறு அங்குல உயரத்தில் நடந்ததைப் பார்த்து மூக்கில் விரல்வைத்து ரசித்தவர்களில் நானும் ஒருவன்.

    சாவி சாருடன் பணியாற்றுவது என்பது அலாதியான அனுபவம். அண்ணாநகரிலுள்ள அவரது வீட்டு மொட்டை மாடியில் திடீரென்று எல்லோரையும் வரவழைத்து, பத்திரிகை குறித்து விவாதம் நடத்துவார். பெங்களூரூ, திருப்பதி என்று அனைவரையும் அழைத்துச் செல்வார். அங்கே சாவகாசமாக உட்கார்ந்து, அரட்டையும் கும்மாளமுமாகப் பொழுது போக்குவார். ஆனால், திரும்பி வரும்போது மூட்டை மூட்டையாகப் புதுப்புது ஐடியாக்களை அள்ளிக்கொண்டு வந்துவிடுவார்.

    சுஜாதா, ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்மா தங்கதுரை), பாலகுமாரன், ஓவியர் ஜெயராஜ், மாலன், சுப்பிரமணிய ராஜூ, அலிட்டாலியா ராஜாமணி, ராணிமைந்தன், லே-அவுட் கலைஞர்கள் மோகன், ராஜேந்திரன் என்று சாவி சார் தலைமையில் ஒரு சிந்தனைத் தடாகம் செயல்படும். இதில் மாலனின் பங்கு அமைதியானது, ஆழமானது. அலட்டிக் கொள்ளாத ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அவருடையது. அதையெல்லாம் ஓரமாக நின்று பார்த்த அனுபவஸ்தன் நான்.

    தமிழன்' கேள்வி - பதில் தொகுப்புக்கு அணிந்துரை எழுத அமர்ந்தபோது, சினிமாவில் ஃபிளாஷ் பேக்' காட்சிகள் ஓடுவதுபோல, சாவி வார இதழுடனான நினைவுகள் எனது மனத்திரையில் ஓடத் தொடங்கின. அணிந்துரைக்கு மேலே சொல்லப்பட்டிருக்கும் முன்னுரையெல்லாம் தேவையில்லைதான். ஆனால், மாலனின் இந்தத் தொகுப்புக்கு அணிந்துரை அளிப்பதற்கு எனக்குத் தகுதியுண்டு என்பதை எனக்கு நானே உணர்த்திக்கொள்ள இந்த முன்னுரை தேவைப்படுகிறது.

    இந்தியப் பத்திரிகைகளில் கேள்வி - பதில் பகுதியின் முன்னோடி பாபுராவ் படேல் என்பவர். இந்தியாவின் முதல் சினிமா பத்திரிகையான "பிலிம் இந்தியா'வின் பிரசுரகர்த்தரும் ஆசிரியருமான பாபுராவ் படேலின் பதில்களைப் படிப்பதற்காகவே அந்தப் பத்திரிகை விற்பனையாகியது. தயவு தாட்சண்யமில்லாமல் திரையுலகப் பிரமுகர்களையும், அவர்களது நடிப்பையும் விமர்சிக்கும் பாபுராவ் படேல் 1960-களில் மதர் இந்தியா என்கிற அரசியல் பத்திரிகையைத் தொடங்கினார்.

    "மதர் இந்தியா'வில் சினிமா மட்டுமல்லாமல் அரசியல், தேசியப் பிரச்னைகள் போன்றவை

    Enjoying the preview?
    Page 1 of 1