Vazhi Thavariya Vannathu Poochigal
By Maalan
()
About this ebook
நான் என் வாழ்க்கையிலே பெரிய விலை கொடுத்து கத்துண்ட விஷயம் இது. நிறையப் பேர் காதல் காதல்னு கனாக் கண்டுண்டு உட்கார்ந்துண்டு இருக்கா. காதல் போயின் காதல்னு பிரமை பிடிச்சு, உட்கார்ந்திருக்கா. காதல்ங்கிறது ஒரு பெரிய மித், பிரம்மாண்டமான கனவு. அது வாழ்க்கையோட ஒரு பகுதிதான். அதுவே தான் வாழ்க்கைன்னு மயங்கிப் போயிடக் கூடாது. எனக்கு பின்னாலே வர்ற தலைமுறைக்கு இதுதான் நான் விட்டுப் போற செய்தி. நான் என் இளமையை விலையாய் கொடுத்து தெரிஞ்சுண்டது இது. இது துக்கம் விழுங்கி தெளிந்த வேதம், ஜுரம் நீங்கி சிரிக்கிற சிரிப்பு. என்னோட இம்சை இன்னொருத்தனுக்கு வரவேண்டாம். நீ எழுதறவன். நீ என்னிக்காவது ஒருநாள் இதை எழுதணும். ‘கள்ளுக் குடிச்சு மயங்கற மாதிரி காதல் காதல்னு மயங்கி ஒரு பெரிய இளமை சக்தி வீணாய் போயிண்டிருக்கு, இந்த தேசத்திலே’னு நீ எழுதணும்.”
Read more from Maalan
M. S. Rating: 0 out of 5 stars0 ratingsThappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsManam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vettai Rating: 0 out of 5 stars0 ratingsManaveli Kalaignan Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalinaal... Rating: 0 out of 5 stars0 ratingsMao Zedong Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsVizhven Endru Ninaithayo? Rating: 0 out of 5 stars0 ratingsNandhalala Rating: 5 out of 5 stars5/5En Jannalukku Veliye - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAaiyram Kagitha Kokkugal Rating: 0 out of 5 stars0 ratingsJana Gana Mana Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsEn Jannalukku Veliye Rating: 0 out of 5 stars0 ratingsMaalan Bathilgal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vazhi Thavariya Vannathu Poochigal
Related ebooks
Pon Maalai Mayakkam Rating: 4 out of 5 stars4/5Jatayu Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsSorkathin Kaladikalil Rating: 0 out of 5 stars0 ratingsAatril Oru Kaal Setril Oru Kaal Rating: 0 out of 5 stars0 ratingsPugarpettiyin Meedhu Paduthurangum Poonai Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsUtharayanam Rating: 0 out of 5 stars0 ratingsKakkaigalin Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAinthinai Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMithavai Rating: 0 out of 5 stars0 ratingsUnai Paarththa Kangal Rating: 0 out of 5 stars0 ratingsPaarkadal Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Thirumbuma? Rating: 0 out of 5 stars0 ratingsNandhalala Rating: 5 out of 5 stars5/5Vanamellam Sivappoo! Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kolai Maane Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Bungalow! Rating: 0 out of 5 stars0 ratingsAahayathil Aarambam Rating: 4 out of 5 stars4/5Bhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsUdaimul Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsVannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Koondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsMathorubagan Rating: 5 out of 5 stars5/5Ippadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsSirai! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vazhi Thavariya Vannathu Poochigal
0 ratings0 reviews
Book preview
Vazhi Thavariya Vannathu Poochigal - Maalan
https://www.pustaka.co.in
வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்
Vazhi Thavariya Vannathu Poochigal
Author:
மாலன்
Maalan
For more books
https://www.pustaka.co.in/home/author/maalan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
தி. ஜானகிராமன்
புது டில்லி - 1.
5-7-1980.
மாலன்,
‘மோனா’வில் வந்த உங்கள் நீள் கதையை (வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்) நேற்று இரவு படித்தேன்.
அருமையாக வந்திருக்கிறது. அந்த அம்மா கோபித்துக் கொண்டு பெண்ணை முடக்கிப் போட்டு விடுவதும், ஜனா காதலைப் பற்றி தீர்மானம் செய்திருப்பதும், ஒரு மத்தளத்தின் இருபக்கம்தான். Waste of psychic energy என்பது ஒரு உண்மையான சித்தாந்தம்தான்.
ஞாபகத்தைத் தூங்க விடாமல் அடிப்பதுதான் நல்ல படைப்பு. அதனால்தான் உங்கள் கதை அருமையாக வந்திருக்கிறது என்று சொல்கிறேன், மற்றவை எல்லாம் முக்கியமில்லை என் நோக்கில்.
தி. ஜா,
ஜனா, நான் என் வாழ்க்கையிலே பெரிய விலை கொடுத்து கத்துண்ட விஷயம் இது. நிறையப் பேர் சாதல் காதல்னு கனாக் கண்டுண்டு உட்கார்ந்துண்டு இருக்கா. காதல் போயின் காதல்னு பிரமை பிடிச்சு, உட்கார்ந்திருக்கா. காதல்ங்கிறது ஒரு பெரிய மித், பிரம்மாண்டமான கனவு. அது வாழ்க்கையோட ஒரு பகுதிதான். அதுவே தான் வாழ்க்கைன்னு மயங்கிப் போயிடக் கூடாது. எனக்கு பின்னாலே வர்ற தலைமுறைக்கு இதுதான் நான் விட்டுப் போற செய்தி. நான் என் இளமையை விலையாய் கொடுத்து தெரிஞ்சுண்டது இது. இது துக்கம் விழுங்கி தெளிந்த வேதம், ஜுரம் நீங்கி சிரிக்கிற சிரிப்பு. என்னோட இம்சை இன்னொருத்தனுக்கு வரவேண்டாம். நீ எழுதறவன். நீ என்னிக்காவது ஒருநாள் இதை எழுதணும். ‘கள்ளுக் குடிச்சு மயங்கற மாதிரி காதல் காதல்னு மயங்கி ஒரு பெரிய இளமை சக்தி வீணாய் போயிண்டிருக்கு, இந்த தேசத்திலே’னு நீ எழுதணும்.
வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்
கடைசியில் அது நடந்தே விட்டது.
கொலை.
முழுசாய் ஒரு ஆளை முறித்துப் போடுகிற இம்சை.
மணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டின மாதிரி லேசான பழுப்பில் முழுசாய் நிலா மிதந்து கொண்டிருந்தது. கை கையாய் அள்ளித் தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர்கூட இதமாய் இருந்தது. மணல் இன்னும் சூடாறிப் போகவில்லை. எங்கேயோ ஒரு சிறு குயில். தம்பூர்த் தந்தியைச் சுண்டிவிட்ட மாதிரித் திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
எங்கே போனாலும், எதைத் தொட்டாலும், துரத்தித் துரத்தி வந்து, ஊசியாய்க் குத்துகிற நினைப்பைத்தான் விரட்ட முடியவில்லை.
அருணாவின் காதல் மாதிரி.
அப்பாவின் கொலை மாதிரி.
கண்ணில் விழுந்த தூசாய் உறுத்திக் குறு குறுக்கிற நினைவுகள்.
அப்பாவா? அப்பாவா ஒரு கொலை செய்தார்?
இரண்டு நாளைக்கு முன் இந்த மண்ணில் அடி எடுத்து வைத்த அந்த நிமிடத்தின் துக்கங்கள் வேறு.
அந்தத் துக்கத்தைத் தேற்ற புஸ்தகம் தேடிப் பரணில் ஏறப் போய்த்தான் பூதம் கிளம்பிவிட்டது.
பரண் நிறையச் சின்னதும் பெரிதுமாய்ப் பெட்டிகள். ஒரு சின்னப் பெட்டி நிறைய கடிதங்கள். பள்ளிக்கூடத்தில் படித்த தமிழுக்கும் அவற்றிற்கும் நிறைய வித்தியாசம். இலக்கிய நண்பர்கள் ஒருவருக்கொருவர் எழுதிக் கொண்ட, மறுபடி மறுபடி படிக்கத் தூண்டுகிற கடிதங்கள். படிக்கிறவர்களின் மன அமைப்புக்களைப் பாதிக்கச் செய்கிற கடிதங்கள்.
பெட்டி நிறையக் கிடந்த கடிதங்கள் மாதிரி, ஒரு மர பீரோ முட்டப் புத்தகங்கள். கிராம ஊழியன், சந்திரோதயம், சக்தி, கலைமகள், பைண்டு வால்யூம்கள், சரஸ்வதி, மணிக்கொடி, ஹனுமான், கலா மோகினி, தாமரை என்று உதிரி உதிரியாய்ப் பத்திரிகைப் பிரதிகள்.
நடேசன் என்று அச்சிடப்பட்ட பழுப்புக் கடிதக் காகிதங்கள், நீளமான பின்னால் வேலை தேடுகிற வயதில் வாண்டட் காலங்களில் ஒன்பதுக்கு- நாலரை ஆக உணர்ந்த- பழுப்புக் கவர்கள். அந்தக் கவரின் பசையுள்ள நாக்குப் பக்கத்தில், விரலால் தடவிப் பார்த்தால் சரித்துப் பார்த்தால் மட்டும் தெரிகிற ஒரு மயிலின் பதிவு. எதற்கென்று தெரியாத சின்னச் சின்ன தேசியக்கொடிகள்.
அசலான கேசரி நிறத்தில், அசலான பச்சையில் இருக்கிற தேசிய கொடிகள். எம்.என் என்று பொறிக்கப்பட்ட உலோக முத்திரை வில்லை. மொத்து மொத்தாய் குட்டையாய் இருக்கிற காலிகோ பைண்ட் செய்யப்பட்ட HOE &Co என்று பொறிக்கப்பட்ட டைரிகள், பிளாஸ்டிக் தலையெடுக்காத அந்த யுகத்தில் தயாரான அந்த டைரிகளின் வயிற்றுப் பகுதி உறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் புழுக்கைப் பென்சில்கள்.
இதற்கு நடுவில்தான் அதுவும் கிடந்தது. பத்திரமாய் மடக்கி சுவரில் சொருகிக் கிடந்தது. திறந்து பிரித்துப் பார்த்தான். ஜெயில் சர்டிபிகேட்.
சென்னை ராஜ்யம் என்று தலைப்பில் அரசு முத்திரை.
பெயர்: எம். நடேசன்
வயது: பத்தொன்பது
படிப்பு: பி.ஏ.
குற்றம்: கொலை
தண்டனைக் காலம்: ஏழு ஆண்டுகள்
சிறைக்கு வந்த தேதி: ஜுலை பத்தொன்பது 1948
விடுதலை ஆகிய தேதி: ஜுலை ஆறு 1955
‘தண்டனைக் காலத்தில் கைதியின் நடவடிக்கை தான் அறிந்த வரையில் திருப்திகரமாக இருந்தது’ என்று காவல் அதிகாரியின் ஒப்பம்.
அந்தக் கடுதாசியைப் பார்த்த க்ஷணம் மனம் பதறிற்று. பகபகவென்று அடிவயிற்றில் புரண்டது. காதுக்கு மேல் இரண்டு பொட்டுக்களும் படபடவென்று தெறித்தன.
நிஜமாகவா? அப்பாவா! இத்தனை படிப்பும் மென்மையும் சங்கீதமும், ப்ரியமும் கொண்ட அப்பாவா?
அப்பாவா கொலை செய்தார்?
1
இலைக் கிழிசலைச் சுருட்டி நாயனம் ஊதுகிற மாடோட்டிச் சிறுவர்கள், எதிர் மரநிழலில். எச்சிலும் சங்கீதமுமாய்த் தெறிக்கிறது குழலிலிருந்து. ஒரு