Vazhkkai
By Maalan
()
About this ebook
பாடப்புத்தகங்களிலும் செய்தித்தாள்களிலும் நாம் சந்தித்த ஆளுமைகளின் உளவியலை அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் கொண்டே விவரிக்கும் நூல் இது. ஒரு புதிய வகையாக (genre) தமிழுக்கு நான் தொடர்ந்து அறிமுகப்படுத்திவரும் புனைவற்ற புனைவு (nonfiction -fiction) வகையில் எழுதப்பட்டவை இவை
Read more from Maalan
Thappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsEn Jannalukku Veliye - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsJana Gana Mana Rating: 0 out of 5 stars0 ratingsM. S. Rating: 0 out of 5 stars0 ratingsManaveli Kalaignan Rating: 0 out of 5 stars0 ratingsVazhi Thavariya Vannathu Poochigal Rating: 0 out of 5 stars0 ratingsVizhven Endru Ninaithayo? Rating: 0 out of 5 stars0 ratingsMaalan Bathilgal Rating: 0 out of 5 stars0 ratingsNandhalala Rating: 5 out of 5 stars5/5Mao Zedong Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsManam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAaiyram Kagitha Kokkugal Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vettai Rating: 0 out of 5 stars0 ratingsEn Jannalukku Veliye Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalinaal... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vazhkkai
Related ebooks
Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Veduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsMann Bommai Rating: 5 out of 5 stars5/5Vaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsAmma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsMouna Vetri Rating: 0 out of 5 stars0 ratingsMansatti Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Sothu Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsVandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsThalaiyali Rating: 0 out of 5 stars0 ratingsSootchama Ulagam...! Rating: 0 out of 5 stars0 ratingsMathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Maarupadum Konangal Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Oomaiyalla Rating: 0 out of 5 stars0 ratingsமனிதமும் அறியாமையும் Rating: 0 out of 5 stars0 ratingsPazhamozhi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOonaagi Uravaagi Uyiraagi! Rating: 0 out of 5 stars0 ratingsKalyaana Varam Rating: 5 out of 5 stars5/5Sarvam Brumma Mayam Rating: 0 out of 5 stars0 ratingsOru Tharkolai Nadakka Pogirathu Rating: 5 out of 5 stars5/5Unnudane Naan Rating: 4 out of 5 stars4/5Ammavin Anbu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vazhkkai
0 ratings0 reviews
Book preview
Vazhkkai - Maalan
https://www.pustaka.co.in
வாழ்க்கை
Vazhkkai
Author:
மாலன்
Maalan
For more books
https://www.pustaka.co.in/home/author/maalan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்
சர்ச்சை நாயகி
1 மனோ
2 சாதகம் இல்லாத ஜாதகம்
3 மனதில் உறுதி வேண்டும்
4 அக்னிப் பரிட்சை
5 சர்ச்சை நாயகி
பூட்டி வைக்கப்பட்ட புயல்
1 கடமை தந்த பரிசு
2 காயத்தில் கனிந்த காதல்
3 கணவன் செய்த தியாகம்
4 வரலாற்றின் பெருமூச்சு
5 வென்றது எது?
இரும்பு மனுஷி
1 பாட்டி சொன்ன கதை
2 தங்க தேசத்து வீர மங்கையர்
3 மனம் நிறையக் கேள்வி
4 தலைகீழாய்க் கவிழ்ந்த வாழ்க்கை
5 ஒருநாள் கோட்டைகள் திறக்கும்
முரண்பாடுகளின் மொத்த வடிவம்
1 விளையாட்டு பொம்மை அல்ல
2 ஆபத்திலும் கேலி செய்யும் ஆட்கள் உண்டு
3 நமக்கு நாம்தான்
4 என்னாலும் முடியும்
5 வலிகளை நீதான் தாங்கிக்கணும்
6 எண்ணங்களே மனிதர்கள்
7 இரண்டு வலிமையான தனிநபர்கள்
8 எனக்கும் வேண்டும் வேர்கள்
9 கறை படிந்த அத்தியாயம்
10 முரண்பாடுகளின் மொத்த வடிவம்
வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்
- மகாகவி பாரதி
வரவிருக்கும் பக்கங்களில் நீங்கள் வாசிக்க இருப்பது வருடக் கணக்கு வரிசைக்கிரமமாக அமைந்த வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. நம்முடைய ஆதார குணங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், இவை நம்முடைய வாழ்க்கைச் சூழல், அது தரும் அனுபங்கள், கற்பிக்கும் பாடங்கள் இவற்றிலிருந்தே உருவாகின்றன என்பது என் நம்பிக்கை. பாடப்புத்தகங்களிலும் செய்தித்தாள்களிலும் நாம் சந்தித்த ஆளுமைகளின் உளவியலை அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் கொண்டே விவரிக்கும் நூல் இது. ஒரு புதிய வகையாக (genre) தமிழுக்கு நான் தொடர்ந்து அறிமுகப்படுத்திவரும் புனைவற்ற புனைவு (nonfiction - fiction) வகையில் எழுதப்பட்டவை இவை. இதற்கு ஆதரவளித்த கல்கி, புதிய தலைமுறை, ராணி இதழ்களுக்கு நன்றி
மாலன்
சர்ச்சை நாயகி
மம்தா பானர்ஜி
தொடர்ந்து மூன்றாம் முறையாக வங்கத்தை வசப்படுத்திக் கொண்டிருக்கிறார் மம்தா, இந்திய அரசியலில் இப்படி மூன்றுமுறை தொடர்ந்து முதல்வரான பெண்மணி அவர் ஒருவர்தான்.
அவர் நடந்து வந்த பாதை, மலர்களால் அல்ல, முட்களால் ஆனது. ஆனால் அரசியலில் இறங்க விரும்பும் இளம் பெண்களுக்கு நம்பிக்கை தருவது
***
1 மனோ
இந்த வெள்ளைச் சீலைதான் கிடைத்ததா உனக்குக் கட்டிக்க?
மம்தாவின் கேள்விக்கு அம்மா பதில் சொல்லவில்லை. ஆனால் ‘ஏன் இதற்கு என்ன இப்போ’ என்று அவர் முகம் கேட்டது.
இது வெள்ளை இல்லை, வெளிறின பிங்க். பழசானதால கொஞ்சம் மங்கி விட்டது
என்று பதில் சொன்னர் சிறிய மெளனத்திற்குப் பிறகு.
எதிர்த்து வாதிட மம்தாவிற்குத் திராணி இல்லை. உடலும் மனமும் சோர்ந்து கிடந்தது. அம்மாவிற்கும்தான். அப்பா 9 நாள்களாக ஆஸ்பத்திரியில் கிடக்கிறார். அல்சர். இரு தினங்களுக்கு முன்தான் ஆபரேஷன் நடந்து முடிந்திருந்தது. 48 மணி நேரம் தாண்ட வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அந்தக் கெடு முடிந்து அவர் நார்மல் ஆகிவிட்டார் என்று டாக்டர்கள் சொன்ன பிறகு இன்றுதான் அம்மா வீடு திரும்பி குளித்து உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள். அந்த ஒன்பது நாளும் அம்மா ஆஸ்பத்ரியில்தான் இருந்தாள்.
ஆனால் அந்த ஒன்பது நாளில் ஒருமுறைதான் அப்பாவைப் போய்ப் பார்த்தார் மம்தா. எப்போதும் முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்புடன் கம்பீரமாக உலாவிக் கொண்டிருந்த அப்பா, உடல் நலிந்து படுக்கையில் கிடக்கிறார் என்ற நினைப்பே இம்சையாக இருந்தது. அந்த நிலையில் அவரைப் பார்க்க மனம் சம்மதிக்கவில்லை. எப்போதும் வாஞ்சையுடன், கையைப் பற்றிக் கொண்டோ, தலையைக் கோதிக் கொடுத்தோ தன்னிடம் பேசுகிற அப்பாவை எப்படி காலைக்கூட அசக்கமுடியாமல், வேதனை அப்பிய முகத்தோடு வயிற்றிலிருந்து சிறிய ரப்பர் குழாய் வழியே ஏதோ திரவம் வடிந்து கொண்டிருக்க ஆஸ்பத்ரி இரும்புக் கட்டிலில் படுத்திருப்பவராகப் பார்க்க முடியும்?
பார்க்கப் போன அந்த ஒரே முறையிலும் அப்பா, அவரை அருகில் அழைத்துப் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு, ஏம்மா, என்னை பார்க்க வரலை?
என்றார். அப்போதும் அவர் குரலில் ஏமாற்றமோ, வருத்தமோ, கோபமோ இல்லை. வாஞ்சைதான் இருந்தது.
எப்படிப்பா முடியும்? அம்மா இங்க உங்களோட இருக்காங்க. வீட்டைப் பார்த்துக்கணுமில்ல. தம்பிக்குச் சோறு போட்டு தயார் பண்ணிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பற வேலை இருகில்ல
என்றார் மம்தா.
அப்பா பதில் சொல்லவில்லை. பொறுப்பான பெண் என்று அவர் முகத்தில் ஒரு பெருமித ரேகை ஓடிற்று.
அவருக்கு எப்போதும் அவர் பெண்ணைப் பற்றி பெருமிதம்தான். சின்ன வயதில் மம்மதாவின் அண்ணனுக்கு டியூஷன் வைக்க வேண்டியிருந்தது. மம்தாவிற்கு அந்தப் பிரச்சினைகள் இல்லை. துறுதுறுவென்று, ஆனால் அதிகம் பிரச்சினை தராத, சூடிகையான பெண்ணைப் பற்றித் தகப்பனுக்குப் பெருமிதம் இருக்காதா?
பெண் எப்படி இருந்தாலும் எல்லா அப்பாக்களுக்கும் உள்ளூர ஒரு பெருமிதம் இருக்கும். சிலர் வெளியே காட்டிக் கொள்வார்கள், சிலர் உள்ளூற வைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். மம்தாவின் அப்பா புரோமிலீஸ்வர் பானர்ஜி முதல் ரகம்.
ஏவின குரலுக்கு கடை கண்ணிக்குப் போய்வருகின்ற வேலை சிறுமி மம்தாவிற்கு. வழக்கமாக ஒரு மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். மம்தா போய்க்கேட்டால் கடைக்காரர் பொருளைக் கொடுத்துவிட்டுக் கணக்கில் எழுதிக் கொள்வார். மாதம் ஒருமுறை அப்பா கணக்கை செட்டில் செய்துவிட்டு வருவார். அவர் கடைக்காரரிடம் தூண்டித் துருவி விளக்கம் கேட்பதில்லை. எவ்வளவு ஆச்சு?
என்பார். கடைக்காரர் என்ன தொகை சொல்கிறாரோ அதைக் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்.
சிறுமி மம்தாவிற்குப் பிடித்த விளையாட்டு பொம்மைக் கல்யாணம். பின்னாளில் திருமணமே வேண்டாம் என முடிவுசெய்து தனிமனுஷியாக நிற்கத் தீர்மானித்துவிட்ட மம்தா சின்ன வயதில் அக்கம் பக்கத்துத் தோழிகளோடு சேர்ந்து பொம்மைகளுக்குத் திருமணம் செய்துவைப்பதில் முனைந்து விடுவார். திருமணம் என்றால் விருந்து இல்லாமலா? மளிகைக் கடையிலிருந்து மாவு எண்ணை எல்லாம் வாங்கி ரொட்டி சுட்டு உருளைக் கிழங்கு மசாலாவோடு விருந்து தயாராகிவிடும். அதான் போய்க்கேட்டால் கொடுக்க மளிகைக் கடைக்காரர் இருக்கிறாரே.
சில நேரங்களில் மட்டும் மளிகைக் கடை பில் அதிகமாக வருவதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் அப்பா. ஒருமுறை கடைக்காரை பில்லைக் கொண்டு வரச்சொல்லி வரிவரியாக ஆராய்ந்தார். ரொட்டி மாவு, என்று பார்த்தவுடன் ஆச்சரியத்தில் புருவங்கள் நெரிந்தன. ஏனெனில் அவர் வீட்டில் ரொட்டி சுடுவதென்பது அபூர்வம். அநேகமாகக் கிடையாது. அரிசி சோறுதான். என்ன இது என்பதுபோல் கடைக்காரரைப் பார்த்தார். பாப்பாதான் வாங்கிட்டுப் போச்சு!
என்றார். மம்தாவிடம் விசாரணை நடந்தது. பொம்மைத் திருமண விருந்தைப் பற்றி அவர் சொன்னதும் அப்பாவிற்குச் சிரிப்புத்தான் வந்தது. கோபித்துக் கொள்ளவில்லை. எது வேணும்னாலும் என்னக் கேளும்மா
என்று மட்டும் சொன்னார்.
மம்தா அதிகம் டிமாண்ட் பண்ணுகிற குழந்தை இல்லை. ஆனால் பானர்ஜி நிறையக் கொடுத்தார். பணமாகவோ, பொருளாகவோ இல்லை. அப்படிப் பணம் கொடுக்க அவர் செல்வந்தர் இல்லை. சிறுவியாபாரி. வியாபாரத்திற்கு நடுவில் நேரம் எடுத்துக்கொண்டு மகளுக்குக் கதைகள் சொன்னார். கதை என்றால் கதை அல்ல, தேசத்தின் வரலாறு, தலைவர்களைப் பற்றிய கதை. அவர் காங்கிரஸ்காரர். காந்திமீது மரியாதை உண்டு, ஆனால் மனதுக்குப் பிடித்தவர் சுபாஷ் சந்திர போஸ்தான். நேரு குடும்பத்து மீது தேவதா விசுவாசம்.
எளிமையாக இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர்தான் சொல்லிக் கொடுத்தார். நியாயமான விஷயத்திற்குக் கோபப்படுவதில் தப்பே இல்லை என்றும் சொல்வார். மனதுக்கு சரியென்றுபடுவதை செய்யத் தயக்கம் வேண்டியதில்லை என்பார். மனோபாபா என்றுதான் அவர் மம்தாவை செல்லமாக அழைத்து வந்தார்.
வரலாற்றுக்கு வெளியே என்றால் தாகூரின் கதைகளைச் சொல்வார். தாகூர் கதைகளில் வரும் குழந்தைகளைப் போலத்தான் மம்தா வளர்ந்தார். நினைத்த போது ஹூக்ளி ஆற்றில் குதித்து நீந்துவது, சமவயதுக் குழந்தைகளோடு மண்வீடு கட்டியோ, செப்பு வைத்துக்கொண்டோ, பொம்மைகள் வைத்தோ விளையாடுவது, தெருவில் தின்பண்டம் வாங்கித் தின்பது என்று குழந்தைப் பருவம் போயிற்று.
தூங்கி ஆடிக் கொண்டிருந்த மம்தாவை பதற்றத்துடன் தட்டி எழுப்பினாள் அம்மா. அவள் முகத்தில் கலவரம் பரவிக் கிடந்தது.
என்னம்மா?
அப்பா வந்திருந்தார்டி.
என்னமா உளர்றே. அவர் ஆஸ்பத்திரியில் அல்லவா இருக்கிறார். கனவு கினவு கண்டியா?
இல்லடி. வந்து ‘நான் போயிட்டு வர்றேன். குழந்தைகளைப் பத்திரமா பாத்துக்கோ’னு சொன்னார்
உனக்கு ஏதோ மன பிரமைம்மா. ஒருவாரமா நீ சரியா தூங்கலை. அதனால ஏதோ குழம்பிக்கிடக்க
இல்லை நிஜமாதான். எனக்கு பயமா இருக்கு. வா. ஆஸ்பத்ரிக்கு ஒருநடை போய்ப் பார்த்துட்டு வந்திரலாம்
ஒண்ணும் ஆயிருக்காதுமா. அதான் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டார்னு டாக்டர் சொன்னார்ல?
எனக்கு என்னவோ பயமாருக்கு?
மம்தா பதில் சொல்ல வாயெடுக்கும் முன் மளிகைக் கடைப் பையன் வந்து நின்றான்.
அக்கா! போன்!
கடைக்குப் போய் போனை எடுத்து ரிசீவரைக் காதில் வைத்தார் மம்தா.
அண்ணன்தான்.
மனோ! அப்பா போய்ட்டார்!
என்றார் அண்ணன்
2 சாதகம் இல்லாத ஜாதகம்
மம்தா அப்படிச் செய்வார் என்று அம்மா