Mansatti
By Ahila D
()
About this ebook
பெண்ணெழுத்து
பெண்மக்களின் கையடக்க கற்பனையாய் காட்சிபடுத்தப்படும் பொம்மைகளுக்கு, பின்னலிட்டு, பொட்டிட்டு, சேலை கட்டி அழகு பார்க்கும் வித்தையை, வணிகமாக்கி, விதவிதமான வண்ணங்களில் உடை, தலையலங்காரம், காலணி போன்றவற்றை மாற்றச்சொல்லி, அவர்களுக்கு விளையாட கொடுத்து இதுதான் உன் உலகம் என்று பெண்ணுக்கு கோடிட்டு சொல்லும் வியாபார உலகம் இது. பின்க், நீலம் என்ற நிற இலக்கணத்தை ஆண்-பெண் பிள்ளைகளுக்கு மாற்றிவிட்டால், குறையாய் கருதும் மேலைநாட்டு கலாச்சாரக் கூறுகளை இங்கும் கடன்பெற்று, பெண்பிள்ளை என்னும் முத்திரைக்கு வலு சேர்த்து வாழ்கிறதும் இச்சமூகம்தான்.
இதிலிருந்து மீறிய சமூக கட்டுடைப்புகள் எங்கும் நிகழ்ந்து வந்தாலும், கலாச்சார தழைகள், சாதீய கூறுகள் இங்குமங்குமாய் வியாபித்து பெண்ணின் கால்களைப் பிடித்திழுக்காமல் விடுவதில்லை. பெண்ணின் தேடல், பெண்ணின் பார்வை, பெண்ணின் இன்னல், பெண்ணின் மகிழ்ச்சி என பெண்ணின் உணர்வுகளை பெண்ணே எழுத இங்கு ஏகமாய் சக்தி தேவைபடுகிறது அவளுக்கு. பெண்ணைக் குறித்த பார்வை பெண்ணினிடமிருந்தே துவங்கவேண்டும்; அப்போதுதான் பெண்ணின் மனதில் காலம்காலமாய் ஏற்றப்பட்டு புரையோடிப்போன ஆண் சிந்தனை உடையும்; பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று சொல்லித் திரியும் பட்டிமன்ற சொல்லாடல்கள் மாறும்; அதை ரசிக்கும் பெண்களின் உளப்பாங்கும் மாறுபடும் என்பனவெல்லாம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன.
இதை மாற்றி கையாளும் பெண்ணெழுத்துகள் இங்கு பிறக்கும்போதெல்லாம் இவையெல்லாம் ஓர் எழுத்தா என்னும் ஆண் விமர்சனங்களைக் கடந்துதான் வரவேண்டியுள்ளது. பெண் எழுத்துகளைக் கண்டுக்கொள்ள மனமில்லாது, ஒதுக்கிவைத்து இயங்கும் இந்த இலக்கிய உலகம் ஒரு மாபெரும் மாய உலகம்தான். எழுத்தில் என்ன ஆண் எழுத்து பெண் எழுத்து என்று கேள்விகளையும் கூட அதுவே வைக்கிறது. வீடு, குழந்தைகள் மட்டுமா உலகு என்னும் வியத்தகு கேள்வியையும் முன்னெடுக்கிறது, அதன் இயக்கத்தில், அதற்குள் முயங்கும், முடங்கும், முடங்க வைக்கப்படும் பெண்களால்தான், ஆண் உலகம் விரிந்து பரந்து தன்னிச்சையாய் இயங்குகிறது என்பதயறியாமல்.
'இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை, பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள்.’ எழுத்தாளர் அம்பையின் எதிர்க்கும் இந்த குரலுடன் இயைந்து செல்கிறது பெண் எழுத்தாளர்களின் மனபோராட்டமும். பெண்ணெழுத்துகளில் சுட்டிக்காட்டப்படும் சமூக முரண்கள் எல்லாம் அவளின் குறைகளாய் பேசப்படுகின்றன. தனிமனித சாடல்கள் அவளை நோக்கியே வருகின்றன. இதைதான் அம்பை அவர்கள் சுட்டுகிறார்.
ஆண் எழுதும் எழுத்துகளில் பெண் பார்வை இல்லையா, அவர் எழுதவில்லையா, இவர் எழுதவில்லையா என்னும் கேள்விகள் வைக்கப்பட்டன சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு கலந்தாய்வில். மீசை முடி குறித்து எழுத ஓர் ஆணுக்கு அதிக உரிமை இருக்கிறது என்பதை மறுக்கமுடியாதவர்களால், பெண்ணுடலைக் குறித்து பெண் எழுத, அதே உரிமையும் உணர்வும் இருக்கிறதென்ற கூற்றையும் மறுக்கமுடியாது.
ஆண் பெண் எழுத்து என்று பாகுபடுத்த வேண்டிய அவசியமின்றி போகும் காலம்வரை பெண் தன் உணர்வுகளை சிந்தனைகளை சமூகபார்வையை எழுத்தாய் படைக்கவேண்டிய அதிக கட்டாயத்தில் இருக்கிறாள். இங்கே பெண்ணெழுத்து மிக தேவையாய் இருக்கிறது. பெண்ணெழுத்தை சமமாய் பாவிக்கும்வரை இந்த மெல்லிய கோடு அழிக்கப்படாமல் இருக்கும்.
என்னுடைய இந்த சிறுகதை நூலான ‘மண்சட்டி’ என்பதையும் இவ்வரிசையில் வைக்கிறேன். இதில் பெண்ணை முதன்மைபடுத்திய கதைகள், அவளை உணர்வதற்கான சந்தர்ப்பங்களைக் காட்டும் கதைகள் இருக்கின்றன என நம்புகிறேன். இந்த கதைகள் பெண்ணெழுத்தாய் உங்கள் முன் நிற்கின்றன. இதற்கு அணிந்துரையாய் வாசகனின் எண்ணவோட்டத்தையே எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.
தொடர்புக்கு,
artahila@gmail.com
9443195561
‘வலசை’ என்னும் சிறுகதை, ‘அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி 2017’ யில் இரண்டாம் இடம் பெற்றது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். இதிலிருக்கும் கதைகளில் சில, கல்கி, கணையாழி, கனவு போன்ற இதழ்களில் வெளிவந்தவை. கதைகளை வெளியிட்டு, வாசகர்களின் வாழ்த்துகளையும் கருத்துகளையும் புரிந்துக்கொள்ள உதவிய இதழாசிரியர்களுக்கு அன்பும் நன்றியும்.
அகிலா,
மனநல ஆலோசகர்,
கோவை.
Related to Mansatti
Related ebooks
Yaarum Sollatha Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMalargalile Aval Malligai Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsPani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Verillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Manthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Puyal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Oomaiyalla Rating: 0 out of 5 stars0 ratingsNila Nesam Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsVandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Kappal Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Konangal Rating: 4 out of 5 stars4/5Kathaikathaiyam Karanamam Rating: 0 out of 5 stars0 ratingsViralgalai Meettum Veenai Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Vandhanam...! Rating: 0 out of 5 stars0 ratingsVeduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naanavena? Rating: 4 out of 5 stars4/5Ingu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsKadai Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Kanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsManal Veedugal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mansatti
0 ratings0 reviews
Book preview
Mansatti - Ahila D
http://www.pustaka.co.in
மண்சட்டி
Mansatti
Author:
அகிலா
Ahila
For more books
http://www.pustaka.co.in/home/author/ahila
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
மண்சட்டி (சிறுகதைகள்)
உள்ளடக்கம்
பெண்ணெழுத்து - என்னுரை
நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க
மஞ்சள் பறவை
காயம்
கவலை என்பது யாதெனில்
வலசை
அவசரம்
மண்சட்டி
தேன்பாட்டிலும் மிஸஸ் நாயரும்
சாதீ
திமில்
பெரிய மீசை
தார்மீகம்
நூலாசிரியர் குறிப்பு
பெண்ணெழுத்து
பெண்மக்களின் கையடக்க கற்பனையாய் காட்சிபடுத்தப்படும் பொம்மைகளுக்கு, பின்னலிட்டு, பொட்டிட்டு, சேலை கட்டி அழகு பார்க்கும் வித்தையை, வணிகமாக்கி, விதவிதமான வண்ணங்களில் உடை, தலையலங்காரம், காலணி போன்றவற்றை மாற்றச்சொல்லி, அவர்களுக்கு விளையாட கொடுத்து இதுதான் உன் உலகம் என்று பெண்ணுக்கு கோடிட்டு சொல்லும் வியாபார உலகம் இது. பின்க், நீலம் என்ற நிற இலக்கணத்தை ஆண்-பெண் பிள்ளைகளுக்கு மாற்றிவிட்டால், குறையாய் கருதும் மேலைநாட்டு கலாச்சாரக் கூறுகளை இங்கும் கடன்பெற்று, பெண்பிள்ளை என்னும் முத்திரைக்கு வலு சேர்த்து வாழ்கிறதும் இச்சமூகம்தான்.
இதிலிருந்து மீறிய சமூக கட்டுடைப்புகள் எங்கும் நிகழ்ந்து வந்தாலும், கலாச்சார தழைகள், சாதீய கூறுகள் இங்குமங்குமாய் வியாபித்து பெண்ணின் கால்களைப் பிடித்திழுக்காமல் விடுவதில்லை. பெண்ணின் தேடல், பெண்ணின் பார்வை, பெண்ணின் இன்னல், பெண்ணின் மகிழ்ச்சி என பெண்ணின் உணர்வுகளை பெண்ணே எழுத இங்கு ஏகமாய் சக்தி தேவைபடுகிறது அவளுக்கு. பெண்ணைக் குறித்த பார்வை பெண்ணினிடமிருந்தே துவங்கவேண்டும்; அப்போதுதான் பெண்ணின் மனதில் காலம்காலமாய் ஏற்றப்பட்டு புரையோடிப்போன ஆண் சிந்தனை உடையும்; பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று சொல்லித் திரியும் பட்டிமன்ற சொல்லாடல்கள் மாறும்; அதை ரசிக்கும் பெண்களின் உளப்பாங்கும் மாறுபடும் என்பனவெல்லாம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன.
இதை மாற்றி கையாளும் பெண்ணெழுத்துகள் இங்கு பிறக்கும்போதெல்லாம் இவையெல்லாம் ஓர் எழுத்தா என்னும் ஆண் விமர்சனங்களைக் கடந்துதான் வரவேண்டியுள்ளது. பெண் எழுத்துகளைக் கண்டுக்கொள்ள மனமில்லாது, ஒதுக்கிவைத்து இயங்கும் இந்த இலக்கிய உலகம் ஒரு மாபெரும் மாய உலகம்தான். எழுத்தில் என்ன ஆண் எழுத்து பெண் எழுத்து என்று கேள்விகளையும் கூட அதுவே வைக்கிறது. வீடு, குழந்தைகள் மட்டுமா உலகு என்னும் வியத்தகு கேள்வியையும் முன்னெடுக்கிறது, அதன் இயக்கத்தில், அதற்குள் முயங்கும், முடங்கும், முடங்க வைக்கப்படும் பெண்களால்தான், ஆண் உலகம் விரிந்து பரந்து தன்னிச்சையாய் இயங்குகிறது என்பதயறியாமல்.
‘இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை, பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள்.’ எழுத்தாளர் அம்பையின் எதிர்க்கும் இந்த குரலுடன் இயைந்து செல்கிறது பெண் எழுத்தாளர்களின் மனபோராட்டமும். பெண்ணெழுத்துகளில் சுட்டிக்காட்டப்படும் சமூக முரண்கள் எல்லாம் அவளின் குறைகளாய் பேசப்படுகின்றன. தனிமனித சாடல்கள் அவளை நோக்கியே வருகின்றன. இதைதான் அம்பை அவர்கள் சுட்டுகிறார்.
ஆண் எழுதும் எழுத்துகளில் பெண் பார்வை இல்லையா, அவர் எழுதவில்லையா, இவர் எழுதவில்லையா என்னும் கேள்விகள் வைக்கப்பட்டன சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு கலந்தாய்வில். மீசை முடி குறித்து எழுத ஓர் ஆணுக்கு அதிக உரிமை இருக்கிறது என்பதை மறுக்கமுடியாதவர்களால், பெண்ணுடலைக் குறித்து பெண் எழுத, அதே உரிமையும் உணர்வும் இருக்கிறதென்ற கூற்றையும் மறுக்கமுடியாது.
ஆண் பெண் எழுத்து என்று பாகுபடுத்த வேண்டிய அவசியமின்றி போகும் காலம்வரை பெண் தன் உணர்வுகளை சிந்தனைகளை சமூகபார்வையை எழுத்தாய் படைக்கவேண்டிய அதிக கட்டாயத்தில் இருக்கிறாள். இங்கே பெண்ணெழுத்து மிக தேவையாய் இருக்கிறது. பெண்ணெழுத்தை சமமாய் பாவிக்கும்வரை இந்த மெல்லிய கோடு அழிக்கப்படாமல் இருக்கும்.
என்னுடைய இந்த சிறுகதை நூலான ‘மண்சட்டி’ என்பதையும் இவ்வரிசையில் வைக்கிறேன். இதில் பெண்ணை முதன்மைபடுத்திய கதைகள், அவளை உணர்வதற்கான சந்தர்ப்பங்களைக் காட்டும் கதைகள் இருக்கின்றன என நம்புகிறேன். இந்த கதைகள் பெண்ணெழுத்தாய் உங்கள் முன் நிற்கின்றன. இதற்கு அணிந்துரையாய் வாசகனின் எண்ணவோட்டத்தையே எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.
தொடர்புக்கு,
artahila@gmail.com
9443195561
‘வலசை’ என்னும் சிறுகதை, ‘அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி 2017’ யில் இரண்டாம் இடம் பெற்றது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். இதிலிருக்கும் கதைகளில் சில, கல்கி, கணையாழி, கனவு போன்ற இதழ்களில் வெளிவந்தவை. கதைகளை வெளியிட்டு, வாசகர்களின் வாழ்த்துகளையும் கருத்துகளையும் புரிந்துக்கொள்ள உதவிய இதழாசிரியர்களுக்கு அன்பும் நன்றியும்.
இத்தொகுப்பும், என் முந்தைய சிறுகதை தொகுப்பான ‘மிளகாய் மெட்டி’யை பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலசின் வாயிலாகவே வெளிவந்திருக்கிறது. அந்த தொகுப்பைப் போலவே இதையும் சிறப்பாய் அமைத்த டிஸ்கவரி பதிப்பகத்தின் வேடியப்பன் அவர்களுக்கு மகிழ்வான நன்றி.
அகிலா,
மனநல ஆலோசகர்,
கோவை.
நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க
புகைந்துக் கொண்டிருக்கும் தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றினாள். கடுகு, உளுந்து போட்டு தாளித்து கருவேப்பிலையைத் தேடும்போது, அது இல்லாதது நினைவில் வந்தது அமுதவல்லிக்கு. ‘வேதா’ என்றாள் சத்தமாக. பதிலே இல்லை. அடுப்பை அணைத்துவிட்டு, இங்கேதானே படிச்சுகிட்டு இருந்தா என்ற நினைப்புடன் ஹாலுக்கு வந்தபோது, வெளிச்சமற்ற மூலையில் அமர்ந்து,வேதா கணக்குடன் சமாதானம் செய்துக்கொண்டிருந்தாள்.
‘ஏய்ய்.. நான் கூப்பிட்டது காதில் விழலயா என்ன..’
‘அட போக்கா.. நான் படிக்கும்போதுதான் உனக்கு ஏதாவது வீட்டில் இல்லைன்னு தோணும்..’ தலை நிமிராமல் பேசினாள். வேதா வளர்ந்து வருவது இவளுக்குள் பயத்தை உண்டுபண்ணியது. எட்டு வயசிலேயே எடுப்பாய் இருப்பதாக பட்டது.
‘சுதர்சன் கடை வரைக்கும் போய், கருவேப்பில வாங்கிட்டு வாடி..’ என்று கெஞ்சலாக சொல்ல வெடுக்கென எழுந்து சென்றாள் வேதா. அடுத்த மாசம் முதல் நாமளும் நம்ம கடையில் காய் எல்லாம் வாங்கிவச்சுட்டா தன்னை பார்த்து பல்லிளிக்கும் ராஜுவின் முன் போய் நிற்க வேண்டியிருக்காது என்று நினைத்துக்கொண்டாள்.
‘காலையில் எழுந்து குடிக்கபோன அந்த ஆளை இன்னும் காணோம். அப்படியே அந்த ஆளு எங்காவது செத்துக்கிடக்குதான்னு பாரு’ என்றவளை திரும்பி பார்த்து வலிச்சம் காட்டிவிட்டு போனாள் வேதா. குடிச்சுட்டு சுயமில்லாம தெருவுல விழுந்துகிடக்கிறவன் செத்தவன் போலதான் அமுதாவுக்கு. அவள் வரும்வரை வாசற்படியில் உட்காரலாம் என்று அமர்ந்தாள். அம்மா இறந்ததில் இருந்தே மாரிமுத்து என்னும் அவளின் தகப்பன் வெறும் ‘ஆளு’தான் அவளுக்கு. அவனை பார்த்தாலே குமட்டலாய் இருக்கும் அமுதாவுக்கு. குடியும் சீட்டாமுமாய் தள்ளாடும் அவனிடம் தான் பட்ட பாடெல்லாம் கண்முன் ஓடும். பதினாறு வயதிலேயே தன்னை, கூட சீட்டாடும் நாற்பத்திரண்டு வயசுக்காரனுக்கு கட்டிக்கொடுத்து, அவனோடு நெகமத்துக்கு வாழப்போனதும், அஞ்சாறு மாசமா அவனின் குடியிலும் அடியிலும் வதைப்பட்டு, உண்டான கருவும் கலைஞ்சதும் அவன் வேண்டாம்னு பஞ்சாயத்து பண்ணி அறுத்துவுட்டுட்டு வந்ததும் மன்னிக்கவே முடியாத விஷயம்தான் அவளுக்கு.
அதுக்கப்புறம் இந்த கடையே சாசுவதமாய் வந்து தாய் வீட்டோடு உட்கார்ந்ததும், இந்த ஆளு ‘மூதேவி.. மூதேவி.. செலவு வச்சுட்டு இப்போ இங்கே வந்து உட்கார்ந்திருக்கு பாரு.. சனியன்..’ என்று தினம் திட்டுவதும் மனதுக்குள் ஓடியது. பெண்ணுக்கென்று எங்கும் புகலிடம் இல்லை. பெத்த வீட்டை விட்டா, புகுத்த வீடுன்னு ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு என்று ஓடிகிட்டே இருக்கணும். அவளுக்குன்னு தனியா எதுவும் இல்லாததும் யாரையாவது அண்டியே வாழவேண்டியிருப்பதும் புரிந்தபோது இந்த சமூகத்தின் மீது கோபமாக வந்தது அமுதாவுக்கு. ‘சை.. என்ன நெனப்பு இது காலைலே...’ என்று அதை உதறி எழுந்தாள்.
அம்மாவுக்கு பிறகு, வீட்டின் முன்வாசலில் உள்ள தாத்தாவின் இந்த மளிகை கடை மட்டும் இல்லேன்னா சாப்பாடே இல்லங்கிற உண்மதான் அவள எப்போவும் சுடும். அதுக்காகவே தாத்தா படத்தை கடையில் மாட்டிவைத்து அதுக்கு இரண்டு ரூபாய்க்கு ஊதுவத்தி காலைலேயும் சாயங்காலத்திலேயும் கொளுத்தலேன்னா அவளுக்கு அன்னைய பொழுது இம்சைதான்.
காலையிலே போன ஆளு சரியா பதினொரு மணிக்கு போதை தீர்ந்து, இவகிட்டே இருந்து காசு வாங்கி திருப்பியும் குடிக்கவேண்டி, இவள் வியாபாரம் பார்க்கும்போது பார்த்து, வந்து நின்னு காசு கேட்கும். கொடுக்கலைன்னா, ‘சீலையை நகத்தி கட்டி கடைக்கு வர்றவனுங்க கிட்டே காசு பண்ற சனியனே.. இழுத்து மூடிட்டு காசு குடுடி..’ என்று அங்கேயே அவளை கேவலமாக பேசும். அப்புறம் அவ அம்மாவையும் தாத்தாவையும் இழுத்து வச்சு அசிங்கமா ஆரம்பிக்கும். மரக்கடைக்கு அடுத்தாற்போல், தெருவென்றும் சொல்லமுடியாமல் சந்தென்றும் சொல்லமுடியாத வடிவில் இருக்கும் அந்த நீண்ட வீதியில் எல்லோருக்கும் இது பழக்கமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அந்த ஆளு பேசும்போதெல்லாம் இவ கூசிக்குறுகித்தான் போவாள்.
அசிங்கமான