Maarupadum Konangal
By Kulashekar T
()
About this ebook
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Read more from Kulashekar T
Biggboss - Oviya Varaiyum Devathai Padimam Rating: 0 out of 5 stars0 ratingsOre Kadal Rating: 0 out of 5 stars0 ratingsWhite Nights - Venmayamana Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsVikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal Rating: 5 out of 5 stars5/5Spring Autumn Winter Summer Spring Rating: 0 out of 5 stars0 ratingsMr and Mrs Iyer Rating: 0 out of 5 stars0 ratingsMulla Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsA Separation Rating: 0 out of 5 stars0 ratingsThe Day I Became A Woman Rating: 0 out of 5 stars0 ratingsCity Lights Rating: 0 out of 5 stars0 ratingsChildren of Heaven Rating: 0 out of 5 stars0 ratingsFirst Teacher Rating: 0 out of 5 stars0 ratingsTitanic - Oru Kaadhalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsOru Snegithikkaga... Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 13 Rating: 0 out of 5 stars0 ratingsTen Rating: 0 out of 5 stars0 ratingsDevadas - Azhiyaa Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Poovasam! Rating: 0 out of 5 stars0 ratingsNivethitha Rating: 0 out of 5 stars0 ratingsUyirkaadhal Rating: 0 out of 5 stars0 ratingsAadhalin Kaadhalaagalaam Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Ennai Kaangirean Rating: 0 out of 5 stars0 ratingsVaanampadi Rating: 0 out of 5 stars0 ratingsCharulatha Rating: 0 out of 5 stars0 ratingsAkira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum… Rating: 0 out of 5 stars0 ratingsBaran Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 3 Rating: 0 out of 5 stars0 ratingsCharlie Chaplin - Oru Muzhumayana Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Maarupadum Konangal
Related ebooks
Mattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Nenjinile Oonjalaai Rating: 5 out of 5 stars5/5Ammavin Sothu Rating: 0 out of 5 stars0 ratings3 கதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsOonaagi Uravaagi Uyiraagi! Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsAnthikaala Mogam Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Mayangukirean Rating: 5 out of 5 stars5/5மனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Manasellam Maya Rating: 0 out of 5 stars0 ratingsThayumanavan Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Oondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsEppodhumalla, Eppodhavathu Rating: 0 out of 5 stars0 ratingsEnaiyalum Ejamaney...! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Puyal Rating: 0 out of 5 stars0 ratingsTharkaliga Unnathangal Rating: 0 out of 5 stars0 ratingsPuriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Naan Naanavena? Rating: 4 out of 5 stars4/5Nijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsInba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5சொல்லத்தான்... நினைக்கிறேன்..! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kandu Uyirthean Rating: 4 out of 5 stars4/5Ithuvum Tajmahal Than Rating: 0 out of 5 stars0 ratingsPoothu Kottiya Paadhai Rating: 0 out of 5 stars0 ratingsKaaranamilla Kaariyangal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Maarupadum Konangal
0 ratings0 reviews
Book preview
Maarupadum Konangal - Kulashekar T
http://www.pustaka.co.in
மாறுபடும் கோணங்கள்
Maarupadum Konangal
Author:
தி. குலசேகர்
T. Kulashekar
For more books
http://www.pustaka.co.in/home/author/kulashekar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. சொல்லத் தெரியாத தவிப்பு
2. ஒரு மொட்டுக்குள்...
3. கண்ணுக்குத் தெரியாத அந்த நிஜம்
4. ஓ… பெண்ணே!
5. வெள்ளையம்மா
6. தும்மல்
7. சண்டே ஸ்பெஷல்
8. ஒரு கனவின் ஆரம்பம்
9. சுட்டால் தானே...
10. செத்தால் பிழைப்பான்
11. தடுமாறும் நெஞ்சம்
12. சண்டைக்கு விடுறை
13. நெஞ்சின் அருகில்
14. தேரை மனசு
15. உள்பாரம்
16. தராசு முள்
17. மனசு ஒரு தினுசு
18. ஜீவாதாரங்கள்
18. கொள்ளிவாய்ப் பிசாசு
19. அன்பழிப்பு
20. நினைப்பு
21. மாறுபடும் கோணங்கள்
22. நினைத்தது நடந்தது
23. பதட்டம்
24. அநாவசியமாய் கவலைப்படுகிறார்கள்
25. நிழலொன்று நிஜமாகி…
26. மீட்சி
27. ஒன்றோடு ஒன்று
1. சொல்லத் தெரியாத தவிப்பு
டியர் சேகர்.
…லில்லி பாட்டி ஃபாஸ்ட்டா பேசறப்போ புரிஞ்சுக்கறது கஷ்டம், அவங்க மனசின் உணர்ச்சி வெளிப்பாட்டைப் போல், அது ஒரு சங்கேத பாஷை. கூர்ந்து கவனிச்சாகனும்.
பாட்டி அந்த காலத்து பி. ஏ. லிடாச்சர். நுனிநாக்குல பெண்டன் இங்கிலீஷ் விளையாடும். சிரிச்சுக்கிட்டே தான் பேசுவாங்க வயசு எம்பதத் தாண்டி நாலைஞ்சி வருஷமாவது ஆகியிருக்கும். பஞ்சமாதிரி வெளுத்துப்போன கேசம் இன்னுங்கூட்ட அடர்த்திதான். வகிடு எடுக்காம ஏத்திச்சிவி இறுக்கமா பின்னல் போட்டு ரப்பார்பேண்ட் மாட்டியிருப்பாங்க, எப்பவும் நைட்டிதான்.
தாத்தா ஷாம் எது சொன்னாலும் ஓடனே டைமிங்கோட கமெண்ட் அடிச்சு, ஈறுதெரிய சிரிப்பாங்க, தாத்தா சென்னை ஐ…ஹெசில டாக்டரா வொர்க் பண்ணி ரிடையர் ஆனவர். இந்த வயசுலயும் தெனம் ஒரு மைல் வாக் போவாரு, லில்லிபாட்டியையும் வாக்கிங் வரணும்னு கம்பெல் பண்ணுவாரு. பாட்டி போகமாட்டாங்க மை ஹிப் இஸ் பெய்ன்ங் அது இதுனு ஏதாச்சும் நொண்டிக்காரணஞ் சொல்லி தப்பிச்சுருவாங்க, தாத்தா போனப்புறம் இதோட ஒரே இம்ஷைன்னு சொல்லி சிரிப்டாங்க.
தாத்தா ஒரு செல்ஃப் டிசிப்ளின்ட்மேன். அவரோட பழைய பிரதாபங்களெ ரொம்ப பிரியத்தோட சொல்லுவாரு எல்லார்கிட்டயும் கேக்க இன்ட்ரபுமடிப்பா இருக்கும், பாட்டிக்கி எல்லா பிரசவமும் தாத்தாதான். அவர் சிசேரியன் இல்லாம ட்ராக்ஷனிலேயே பாத்த பிரசவங்களப்பத்தி பிரமிக்கிறாப் போல் எக்ஸ்பிரஷ்னோட சொல்லுவாரு சொல்லபோதே பாட்டியை பாத்து அஸ் எ டாக்டர்ள்ஸ் வொய்ப் ஷி நோஸ் இட் வெரி வெல்' என்று சப்போர்ட்டுக்கு இருப்பார். உடனே பாட்டி டாக்டருக்கு வொய்ஃப்னு தான் பேரு. அன்டைம்ல வந்து குளிக்கறதுக்கு ஹாட்வாட்டர் போடும்பார். நல்லா தூங்கிட்டிருக்கும் போது யாராவுது கூப்பிட வந்துருவாங்க ஒடனே கோட்டான் மாதிரி கிளம்பிடுவார். நாந்தான் எல்லாம் ரெடி பண்ணி அனுப்பினும், இப்டினு தெரிஞ்சிருந்தா இவெர கல்யாணம் பண்ணியசிருக்கவே மாட்டேன் என்று சிரித்தபடி வெட்கப்படுவாங்க.
பாட்டி சின்ன வயசுல கலையா இருந்திருட்டாங்கன்னு தோணுது. அவங்க மொசத்துல விழுந்திருக்கற சுருக்கங்கூட ஒரு அழகுதான்
பாட்டி ஆயிரந்தான் டீஸ் பண்ணாலும் தாத்தா மேலெ உசிரா இருப்பாங்க. தாத்தாவை தொட்டுத் தொட்டுத்தான் பேசுவாங்க. தாத்தாவுக்கு அரசியல் காரசாரமா பேசறப்பல்லாம் கோபம் வந்துரும். ஆனா இன்னிவரை பாட்டிகிட்ட கோபப்பட்டு யாரும் பாத்ததில்லெ. என்னதான் வசியம் பண்ணினாங்களோ தெரியல.
பாட்டியோட இங்கிலீஷ் ரொம்ப ரிமைண்ட் வாண்ட் ரீடிங் மாப்டாப் பாத்தாலும் கண்ணாடி மாட்டிக் கிட்டு ஏதாச்சும் வாசிக்க ஆரம்பிச்சுருவாங்க தாத்தாவுக்கு அடுத்தபடியா புத்தகத்ததான் காதலிக்கிறாங்கன்னு சொல்லனும், கிட்டதட்ட லைப்ரரில உள்ள புத்தகம் அத்தனையும் படிச்சிருப்பாங்க. தாத்தாதான் நெறைய படிக்காதெ… ‘கிடி - நெஸ் வந்துரும்னு' அட்வைஸ் பண்ணிக்கிட்டேயிருப்யா, பாட்டி அது பாட்டுக்க படிச்சிக்கிட்டே தான் இருப்பாங்க தாத்தாவோட கோபத்தெ ஒரு புன்னகையில் சமாளிச்சிருவாங்க.
இப்படித்தான் ஒரு நாள் பாத்ரூம் போனவங்க விழுந்துட்டாங்க -ஆளெக் காணமேனு போயிட்டாத்தா மூச்சுப் பேச்சேயில்லெ. அப்புறம் தாத்தா தான் ஃபஸ்ட் எய்டு குடுத்து ஆஸ்பிடல் கூட்டிக்கிட்டுப்போனாரு
அங்கெ டொட்ல ஒருவாரம் அட்மிட் பண்ணிட்டாங்க. பாட்டிக்கி ஒடனே வேறாம்சிச் வந்துருச்சி, மெட்ராஸ்ல இருக்கற மகளுங்களெப்பத்தி. அவங்க குடும்ப நபர்கள் பத்திலாம் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. ஒடனே தாத்தா தன் மகளுங்களுக்கு டெலகிராம் குடுத்து குடும்பத்தோட வரச்சொல்லிட்டாரு
அந்த ஒரு வாரத்துல் பாட்டி ரொம்பத்தான் எளச்சிப் போயிட்டாங்க. கண்ணெச்சுத்தி கருவளையம் விழுந்துருச்சி பேச்சு உள்ள இழுத்துக்கிச்சி, சிரிக்கவே முடியலெ என்னத்தையோ தேடறமாதிரி பரக்கப்பரக்க பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.
பாட்டியோட பிள்ளைங்க குடும்பத்தோட பதறியடிச்சிக் கிட்டு வந்துட்டாங்க பாட்டி டிஸ்சார்ஜ் ஆகிறவரை கூடவேயிருந்து கவனிச்சிக்கிட்டாங்க..
எல்லாத்தையும் பாத்ததும், பாட்டி மொகம் சொன்னாப்ல் பளிச்சினு ஆயிருச்சி, பழைய தேஜஸ் வரவும் எழுந்து ஒக்காந்துட்டாங்க. மகளுங்களோட தோளை பிடிச்சிக்கிட்டு நடக்கக்கூட ஆரம்பிச்சுட்டாங்க. பேரன் பேத்திகள் எல்லாத்தோடயும் சிரிச்சி விளையாட ஆரம்பிச்சுட்டாங்க பழையமாதிரி, சொந்தக்காரங்க வந்ததுல் வீடு மட்டுமில்லெ, பாட்டியோட மனசும் களைகட்டிப் போயிருச்சி
ரெண்டுநாளா சலசவனு பேசிக்கிட்டிருந்த பாட்டி இன்னிக்கி என்னவோ மறுபடி சொணங்கிப் போயிருந்தாங்க ம்… வயசாகிப் போச்சி. ஆஃட்ரால் வாட்ஸ் லைஃப்? ன்னு முனங்கினாங்க. அவங்க கண்களுக்குள் வெறுமை, பயம், மிரட்சி. அடுத்த விடுமுறைக்கு இவங்க வர்றவரை இருப்போமானு நெனச்சாங்களோ என்னவோ? கண்ணுல எப்பவுந் தெரியற ஒளியில்லே.
முந்தாநாள்தான் எல்லாத்துக்கும் ரிட்டர்ன் டிக்செட் ரிசர்வ் ஆகி வந்தது. இன்னிக்கி கிளம்பறதுக்கு பேக்கிங்லாம் ஐரூரா நடந்துச்சி. எல்லாத்துக்கும் வெரைட்டி ரைஸ், பாய்ல்ட் எக் வெச்சி பார்சல் தயாராச்சி. லக்கேஜ்லாம் ஒவ்வொன்னா வெளியில வந்துச்சி.
பாட்டி யார்கூடவும் சரியா பேசலெ. பெட்ல போயி குப்புறப்படுத்துக் கிட்டாங்க, சாப்ட கூப்பிட்டதுக்கு பசிக்கலேனாட்டாங்க.
பாட்டி சொஸ்தமானது. அப்போத்துக்கும் ரொம்ப குஷி. சிரிச்சிக்கிட்டே எல்லார்ட்டையும் சொல்லிட்டுச் கிளம்பிட்டிருந்தாங்க. பாட்டி விசுக்கு எந்திரிச்சி வெளியே வந்து கூட நின்னுக்கிட்டாங்க டைம் ஆயிருச்சினு யாரோ சொன்னாங்க. உடனே பாட்டி தி ஸ் டைம் ஃபார் லீவிங்னு அவங்கனா சொல்லிக்கிட்டாங்க.
எல்லாரும், பை… டாடா, டாடா… னு திரும்பித் திரும்பி சொன்னாங்க. பாட்டி எதுவுமே சொல்லலெ. சிலை மாதிரி நின்னாங்க. தெருமுனையிலெ எல்லாரும் திரும்பறப்போ எதுக்கோ விடைகொடுக்கறாப்ல கையெ தூக்கி டாட்டா காமிச்சாங்க. டாடாவா அது? கூப்பிடுற தினுசில் விரலை ஒருமாதிரி சுரத்தில்லாமெ அசைச்சாங்க, கண்ணு ஓரம் தன்னிச்சையா கசிஞ்சிக் கிட்டிருந்துச்சி. கர்சீப் எடுத்து கண்ணாடி வழி தொடச்சிச் கிட்டாங்க
எங்க பாட்டி. அழுது நான் பார்த்ததேயில்லெ தெரியுமா?
மனசுக்குள்ள எதுவோ பிசையறாப்ல இருக்கு இதுக்கு மேல் எழுதினா அழுகை வரும் போலருக்கு… அடுத்த லெட்டர்ல எழுதறேன்.. ப்ரியா.
2. ஒரு மொட்டுக்குள்...
கங்க்ராட்ஸ் என்று கைகுலுக்கி ப்ளஸ் டூ மார்க்சிட் தந்தாள் ரமா டீச்சர். சுமதிக்கு அந்த அளிப்பு அத்தனை வியாட்டல்லதான், ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால் ரமா டீச்சர், அடுத்து என்ன செய்யபப்போறே?" என்று கேட்க, அவகாசமெடுத்துக் கொள்ளாமல். பதில் வந்தது.
'எம்பி. பி. எஸ்’
'குட் சாய்ஸ்…’
தேங்க்ஸ்
'உன் மார்க்குக்கு நிச்சயம் கிடைக்கும்' என்று நிறுத்தியவள், "ஆமா, டாக்டருக்குப் படிக்கணும்னு ஏன் டிஷைட் பண்ணினே?’ என்று ரமா டீச்சர் ஆர்வமாகக் கேட்டாள்.
சுமதியசின் நிலவில் மின்னலாய் அம்மா.
அது என் அம்மாவோட கனவு. நான் இங்க டாக்டரா வரணுமின்னும். இந்த கிராமத்துல டாக்டர்னு யார் இருக்கா சொல்லுங்கட கவர்மெண்ட் ஆஸ்பத்திரினு பேரு. மாடு கட்டிப் போட்டிருக்காங்க.
டீச்சர் பூரித்துப் போனாள்.
நீ நல்லா வருவெ சுமதி என்றவள்.'உன் அம்மாவை அனுப்பு ஜெனரல் நாலட்ஜ் கைடு தரேன். என்டரன்ஸ் டெஸ்டுக்கு உதவியா இருக்கும்.
கண்களில் நன்றி மிளிர ‘ம்' என்றாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் ஓட்டமாய் வந்து அம்மாவை சுட்டிக் கொண்டாள். வந்த வேகத்தில் அம்மாவோடு ஒரு சுற்று சுற்றித் தான் நின்றாள்.
'மார்க் என்னாச்சி அதெ சொல்லு முதல்லெ’ அம்மாவிற்கும் ஏகமாய் பரபரப்பு.
நாந்தாம்மா… ஃடள்பட்மா!
அம்மாவிற்கு உலகையே சுற்றி வந்துவிட்ட திருப்தி உள்ளே ஓடிப்போய் சர்க்கரை எடுத்து வந்து, வாயில் திணித்தாள்.
ராமாயி கண்களில் மெல்லிசாய் ஈரம்.
ஏம்மா… அழறீங்க
'அழறேனர்... ச்சேச்சே... இத்தனை சந்தோஷமான சேதி கேட்டுட்டு அழுவாங்களா?’
பின்ன ஏன் கண் கலங்கியிருக்கு
அவள் மனசுள் வடுவாய் உரக்கசிற நினைவுகளை என்றுமே வெளிக்காட்டிச் கொள்ள தோன்றியதேயில்லை.
சந்தோஷம்
என்றவள், உடனே வெளியே புடப்பட்டாள்.
'எங்சம்மா?’
நம்ம வைதேகி பாட்டி தெருக்காரங்க, உறவுக்காரங்க எல்லாத்துகிட்டயும் சொல்ல வேணாமா?
சுமதி சிரித்துக் கொண்டாள்.
இப்பொ வந்தர்றேன்
என்று வாசலுக்கு வந்தவள் திரும்பி வந்து, 'ஒனக்கு ஏதாச்சும் வாங்கியாரணுமா?" என்றாள்.
சுமதிக்கு ரமா டீச்சர் ஞாபகம் வந்தது.
போற வழில ரமா டீச்சர் வீட்ல போயி ஒரு புத்தகம் தருவாங்க. பொங்கிட்டு வந்துருங்க.
அப்பிடியே ஒரு தபால் வாங்கிட்டு வந்துருங்க. ராஜவேல் அண்ணனுக்கு எழுதனும்.
'ச்சரி' என்ற ராமாயி நடையில் துள்ளலோடு விரைந்தாள்.
அம்மா பற்றி நினைத்ததும் பெருமிதம் நிறைத்துக் கொண்டது. எனக்காக எத்தனை இரவுகளில் விழித்திருந்து டீ போட்டுத் தந்திருக்கிறாள்? எத்தனை நாள் காலை நான்கு மணிக்கு துவாரமாய் எழுப்பி படிக்க வைத்திருக்கிறாள். பரீட்சைக்குச் செல்லும் போதெல்லாம் யுத்தத்திற்குச் செல்லும் போர் வீரனை வழியனுப்புகிற மாதிரி, எப்படியெல்லாம் வாழ்த்தியனுப்பியிருக்கிறாள்..? பரீட்சை எழுதி திரும்பியதும் ஒரு கர்ப்பிணியின் பிரசவ வேதனையோடு எப்படி எழுதினாய் என்று கேட்டு. நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று போதெல்லாம், அவள் முகத்தில்தான் எத்தனையெத்தனை மகிழ்ச்சி வெளிப்பாடுகள்.!
ராமாயி நேராக எதிர்வீட்டு வைதேகிப் பாட்டியை பார்க்கப்போனாள். அவளுக்கான வடிகால்.
ஏன்டி, இப்டி பறக்கப்பரக்க ஓடியாற?
சுமதி ஸ்கூல்லயே முதலாவதா பாஸாயிருக்கா. அடுத்து டாக்டருக்குப் படிக்கப்போறா என்று கூறிவிட்டு மெல்ல மூச்சு வாங்கினாள், பாட்டியின் விழிகளில் பெருமிதம்.
பின்னெ… என் பேத்திய உன்னை மாதிரினா நெனச்சே?
ராமாயிக்குள் அந்த மின் அதிர்ச்சி.
நானும் ஒரு காலத்துல இதே மாதிரி படிக்கணும்னு ஆசைப்படலியா என்ன? ஹும். சாமி குடுத்த சாபம் பொண்டுக பூப்டடஞ்சதும் அப்பல்லாம் படிக்க வுடுவாகளாக்கும்
என்றபோது. ராமாயர் குரல் உடைந்து கொண்டது.
இத்தனை வருஷமா பழகறேன். உன் மனசு எனக்குத் தெரியாதா. எதையும் வெளிக்காட்டிக்காம் நெஞ்சுக்குள்ள வச்சி, ஊமையா வேகறது எத்தனை கொடுமைனு எனக்கும் தெரியாம்டி? - என்று அழுத்திச் சொன்னாள். வைதேகிப் பாட்டி
'எது எப்படியோ என் மக டாக்டராகப் போறாளே. அது போதும்...' என்ற ராமாயி... ஒரு காலத்துல் டாக்டரம்மா... டாக்டரம்மானு என்னெய எப்போரும் கூப்பிடறமாதிரி சொப்பனம் வரும் அது கலஞ்சிருச்சி இருந்தாக்கூட இன்னும் அஞ்சி வருசத்துல டாக்டர் அம்மா ஆயிருவேனில்லெ..
***
கடிதம் எழுத உட்கார்ந்தவள் என்ன எழுதுதென்று தோன்றாமல் பேனா மூடியை கடித்துப்படி. நீண்ட நேரம் யோசித்தாள். ஸ்கூல் ஃபஸ்ட் வாங்கியதை கேள்விப்பட்டதும் அண்ணன் எப்படியெல்லாம் குதிக்கப் போகிறதோ! டென்த்தில் முதல் மார்க் வாங்கியதற்கே மெரூன் கலரில் பட்டுப்பாவாடை சட்டை வெள்ளை நிற தாவணி எடுத்துக் கொடுத்தார். இதற்கு என்ன கேட்கலாம். அண்ணன் என்ன வென்றாலும் செய்யும்.
ராஜவேல் விடுமுறைக்கும் கிராமம் வந்த தினமெல்லாம் சுமதிக்குள் நிழலாடியது. அவையெல்லாம்