Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Biggboss - Oviya Varaiyum Devathai Padimam
Biggboss - Oviya Varaiyum Devathai Padimam
Biggboss - Oviya Varaiyum Devathai Padimam
Ebook153 pages54 minutes

Biggboss - Oviya Varaiyum Devathai Padimam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003518
Biggboss - Oviya Varaiyum Devathai Padimam

Read more from Kulashekar T

Related authors

Related to Biggboss - Oviya Varaiyum Devathai Padimam

Related ebooks

Reviews for Biggboss - Oviya Varaiyum Devathai Padimam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Biggboss - Oviya Varaiyum Devathai Padimam - Kulashekar T

    http://www.pustaka.co.in

    பிக்பாஸ்

    ஓவியா வரையும் தேவதை படிமம்

    Biggboss

    Oviya Varaiyum Devathai Padimam

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar
    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்வியல் குறியீடு

    கமல் எனும் பிக்பாஸ்

    ஃபிரைடா ஹாலோ

    அறிமுகப் படலம்

    ஓவியா வரைந்து செல்லும் குறியீடு

    அன்னப் பறவையாய் நீந்திக் கடக்க வேண்டிய பிக்பாஸ்

    கற்பனையில் ஒரு பகடி

    பிக்பாஸின் கதை

    நிகழ் கதை

    கண்சிமிட்டும் மனிதம்

    சில புரிதல்

    வெளியில் தேடும் மகிழ்ச்சி

    பிக்பாஸ் டுடே

    நழுவ விடும் தருணங்கள்

    சிக்கனம் என்றொரு பாடம்

    மனதின் மறுபக்கம்

    காட்டில் அடைமழை

    ஓவியா எனும் குழந்தைமை

    சித்தபிரமைகள் விரிக்கிற படிமத்தின் கதை

    குழந்தைமையின் காதலியம்.

    அன்பின் ஏக்கமும், ஆவேசமும்

    தாள முடியாத தண்டனைகளில் தவித்தலையும் ஓவியங்கள்

    முத்தக் கதையின் கதை

    நிறைவுரை

    வாழ்வியல் குறியீடு

    பிக்பாஸ் என்கிற நிகழ்ச்சி பதினைந்து பேரை நூறு நாட்களுக்கு ஒரு வீட்டிற்குள் அவர்களின் விருப்பத்தோடே அடைத்து வைத்து அவர்களின் நடவடிக்கைகளை சோதிக்கும் நிகழ்ச்சி. அவர்களை ஒரு சமூகத்தின் பைலட் யூனிட் ஆக எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் இருக்கிற வீட்டிற்குள் கிட்டத்தட்ட 30 கேமராக்கள் பொறுத்தப்பட்டு 24 மணிநேரமும் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கும்

    அவர்களை சில தருணங்களில் பிக்பாஸ் வெளியில் இருந்து சில கட்டளைகளை பிறப்பித்து தூண்டி விடுவதற்கேற்ப, அவர்களின் செயல்பாடுகள், குணவியல்புகள் எப்படியெல்லாம் திசைதிரும்பி வெளிப்படுகின்றன என்பதை கவனிக்கிற மக்களும் தங்களை அவர்களின் ஒருவராக உணர்ந்து, தங்களுக்குள் பயணித்து, தங்களைத் தேடத் துவங்கி, தங்கள்தங்களின் சில பக்கங்களை கண்டடைவதோடு, பொழுதுபோக்கும் பெற்று நிறைவடைய வேண்டுமென்பதே, நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

    இந்த விளையாட்டு அங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்து, இந்தியாவின் மற்ற பாகங்களிலும் புகுந்து, இப்போது தமிழுக்கு வந்திருக்கிறது. இதை தலைமையேற்று நடத்துபவர் பத்மபூஷன் கமல்ஹாசன். எழுத்தாளர் அ. ராமசாமி ‘கமலென்னும் கட்டியங்காரன்’ என்கிற தலைப்பில் எழுதியிருந்த பதிவை இங்கே நினைவு கூர்வது பொறுத்தமாய் இருக்கும்.

    முன்குறிப்புகளோடு ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி, அவர்களின் முன்னடையாளங்களோடு தொடர்புடைய ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமெனக் கலக்கியெடுத்து உருவாக்கப்பட்ட ஆரம்பம் புதுநிகழ்ச்சிக்கான ஆரம்பம் என்ற அளவில்தான் ஈர்த்தது. அந்தத் தொடக்கம், அடுத்தடுத்த வாரங்களில் நடந்த சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியாக நல்திற நாடகத்தின் முடிச்சாக(Conflict) மாறியது. அம்முடிச்சுக்குப்பின்னால் பிரிந்துநின்ற அணிச்சேர்க்கை ஒருகுடும்பத்திற்குள் பிரிந்து நிற்கும் பங்காளிகள் அல்லது உறவுகள் என்பதைத் தாண்டியது.

    குடும்ப உறுப்பினர்களின் அடையாளமாக பார்க்கப்படாமல், தமிழ்நாட்டின் சமூகப்பிரிவுகளின் அடையாளங்களாக மாறின. அந்த மாற்றத்தை நிகழ்வின் வெளியேற்றவிதி சிதைத்துக்கொண்டே இருக்கிறது. அச்சிதைவு நல்திற நாடகக்கட்டமைப்பையும் சேர்த்தே சிதைக்கும் திறன்கொண்டதாக இருக்கிறது. அதன்மூலம் நடப்பியலுக்குப் பின்னான நவீனத்துவப் போக்குகளான குறியீட்டியல், அபத்தவியல், மிகையதார்த்தக் கூறுகள் கொண்டதாக நகரும்போது ஓவியாவின் வெளியேற்றம் முதன்மையான சிக்கலாக மாற்றியது. கடைசிவரை இருந்து வெற்றிக்கனியைப் பறிக்கும் ஓரணியின் தலைமைப்பாத்திரமாக - நாயகப்பாத்திரமாக மாறிய ஓவியாவின் வெளியேற்றம் ஒருவிதத்தில் உச்சக்காட்சி போல் மாறியுள்ளது. அதனால் உச்சநிலைக் காட்சிக்குப் பின்னான இன்னும்சில உச்சநிலைக்காட்சிகள் உருவாக்கப்படலாம். அதன்மூலம் நவீனத்துவ நாடகம் என்பதைத் தாண்டிப் பின் நவீனத்துவ வெளிப்பாட்டிற்குள்ளும் நுழையலாம். அப்படியான நுழைவு- காலத்தைக் கவனத்தைக் கொள்ளும் ஒன்றாக- அமையும். அதற்கான குறிப்புகளைக் காட்டியிருக்கிறார் நிகழ்வின் கட்டியங்காரனாகச் செயல்படும் கமல்ஹாசன்.

    கமல்ஹாசனின் கட்டியங்காரத்திறன் கச்சிதமாகவும் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவும் வெளிப்பட்டது. தெற்காசிய நாடுகளின் மரபு அரங்குகளின் மையமான கூறு அது. சம்ஸ்க்ருதச் செவ்வியல் நாடகத்தில் விதூஷகன் என அழைக்கப்படும் அந்தப் பாத்திரத்தின் பரிமாணங்கள் பலவிதமானவை. கிரேக்கச் செவ்வியல் நாடகங்களில் குழுவினரின் செயல்பாட்டிலும் அந்தக் கூறுகள் உண்டு. இதன் கலவையான குணத்தைச் சேக்ஸ்பியரின் நாடகங்களிலும் பார்க்கமுடியும். குறிப்பாக அவரது கிங் லியர் அரசனில் உள்ள முட்டாள் பாத்திரம் ஆகச் சிறந்த பாத்திரம். முட்டாள் என்பவன் வெறும் முட்டாளல்ல. லியர் அரசனின் இன்னொரு பிரதி. அவரது தவறை - வீழ்ச்சியைப் புரிந்து கொண்ட பிம்பம். தேர்ந்த நடிகராக அறியப் பெற்ற கமல்ஹாசன் அப்படியான பிரதிபலிப்பாகவும், ஆகச் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வெளிப்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    ஓவியாவிற்கு மக்களின் ஏகோபித்த பாராட்டு. ஒருமித்த பாராட்டு. அவர்கள் அவர்களின் தேவதை படிமமாக ஓவியாவை எப்போதோ தேர்ந்தெடுத்துவிட்டார்கள். ஆனால் ஓவியாவோ ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு பொம்மை மிகவும் பிடித்துப்போகும். அது இல்லாமல் சாப்பிடக்கூட மாட்டோம் அல்லவா. அப்படியான குழந்தை காதலின் ஏக்கவெதும்பலில் இழக்காத தன் குழந்தைமையால் சிக்கி அவஸ்தையின் உச்சம் தொட்டு பாதியிலேயே வெளியேறினாலும், மக்களை பொறுத்தவரை பிக்பாஸ் ஓவியா தான்.

    ஓவியாவும் இந்த போட்டியின் தார்மீக வரையறையை அவரே நிர்மாணித்துவிட்டார். அவர் இந்த போட்டியில் எதிராளிகளோடு நடத்திய யுத்தம் அல்லது விளையாட்டு டிஃபீட்டிங் நோக்கியதல்ல... இன்ஃபுலன்ஷியங் தி ஷோல்ஸ் என்கிற இலக்கு நோக்கியே இருந்தது. அதில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். அவரின் தனித்தன்மையை அவர் ஒரு கணமும் இழக்காமல் இருந்ததே அதற்கான காரணம். அவர் மக்களின் மனதில் தனதான தனித்த அடையாளங்களினால் மகுடம் சூட்டப்பெற்று, நிரந்தர இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

    அந்த பாதையை நுட்பமாகவும், மனோதத்துவ ரீதியாகவும், மனோவியல் ரீதியாகவும், பொருத்தமான சின்னச்சின்ன கதைகளோடு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பாகவும் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எல்லாம் ஓவியாவின் செயல்பாடுகளை பின்பற்றிச் சென்றதில் நிகழ்ந்த ஆச்சர்யங்களே. அந்த பரவச அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறதில் உண்மையாகவே பெருமகிழ்ச்சி கொள்கிறது மனது.

    நேசத்துடன்,

    தி. குலசேகர்

    கமல் எனும் பிக்பாஸ்

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனால் பெரிய வரவேற்பு. அவரும் சரியாகவே அதை கொடுத்திருக்கிற வரையறைக்குள் நகர்த்திச் செல்கிறார். அதில் அவர் கையாளும் அரசியல் பகடிகளும், எதிரில் அமர்ந்திருப்பவர்களின் அகத்தை தனதான பாவங்களில் வெளிப்படுத்துகிற நேர்த்தி உலக நாயகனின் நிஜத்துவ நடிப்பிற்கு மேலும் ஒரு மகுடம்.

    கமலின் ட்ராக் ரிக்கார்ட் பார்த்தாலே அவர் எப்படிப்பட்ட சமூக அக்கறை கொண்டவர் என்பது தமிழ் கூறும் நல்லுலகின் மனசாட்சிகளுக்கு தெரியும். அவர் பன்முக திறமை கொண்ட இந்தியாவே கொண்டாடுகிற ஒரு கலைஞன்.

    சிலர் தேவர் மகன், விருமாண்டி படங்களில் கமல் ஒரு மேட்டுக்குடி சாதி பெருமை பேசுகிறார் என்றார்கள். கமல் அவர்கள் நினைப்பது போல முட்டாளும் அல்ல... கோழையும் அல்ல... அவர் பகுத்தறிவுவாதி, பெரியார், பாரதி, காந்தி போற்றுபவர். அதிலும் பெரியார் சொன்னது போல தாம் போற்றுபவர்களை போற்றுகிற இடத்தில் போற்றியும், உடன்படாத இடங்களில் விடுபட்டும் சுயமாய் இயங்கும் சிந்தை கொண்டவர். முற்போக்குவாதி என்று தன்னை காட்டிக் கொள்வதால் அவருக்கு ஒரு பைசா பிரயோஜனமில்லை என்பதே நிதர்சனம்.

    சந்தேகமில்லாமல் அவர் ஒரு முக்கியமான உச்சநட்சத்திரம். நூறு கோடி வியாபரம் என்கிற புள்ளியை எட்டி விட்ட ஒரு சில நட்சத்திரங்களில் அவரும் ஒருவர். அதேசமயம் பணத்தை மட்டுமே குறியாக எண்ணாமல், தரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தன்னுடைய வேட்டை வேறு என்று நெஞ்சு நிமிர்த்தி பயணிப்பவர்.

    சந்தேகமில்லாமல் தமிழ் சினிமாவின் பெருமித குறியீடு. போத்தீஸ் விளம்பரத்தில் நடிப்பதற்கு பெற்ற 16 கோடி சம்பளத்தை, ஹெச். ஐ. வி விழிப்புணர்விற்காக இயங்கி வரும் சமூகசேவை நிறுவனத்திற்கு தந்தவர். அவர் நினைத்திருந்தால் பத்து சகலகலாவல்லவன்களில் நடித்து கல்லா கட்டிவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1