Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ayogiyargalum Muttalgalum
Ayogiyargalum Muttalgalum
Ayogiyargalum Muttalgalum
Ebook152 pages1 hour

Ayogiyargalum Muttalgalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.

Languageதமிழ்
Release dateDec 8, 2017
Ayogiyargalum Muttalgalum

Read more from Gnani

Related to Ayogiyargalum Muttalgalum

Related ebooks

Reviews for Ayogiyargalum Muttalgalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ayogiyargalum Muttalgalum - Gnani

    http://www.pustaka.co.in

    அயோக்கியர்களும் முட்டாள்களும்

    Ayogiyargalum Muttalgalum

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    தீம்தரிகிட இதழை நண்பர்கள் உதவியுடன் 1982ல் தொடங்கினேன். மறுபடியும் 1985ல். அடுத்து 2002ல். ஒவ்வொரு முறையும் சில இதழ்கள் வெளிவந்து பின்னர் நின்றுபோய்விடுவது வழக்கம். கடைசியாக வந்தபோது 51 இதழ்கள் வரை வெளியிட முடிந்தது.

    தீம்தரிகிட போன்ற சமூகத்துக்கு தேவையான கறாரான ஒரு இதழ் நின்று போவதற்குக் காரணம் நமது சமூகத்தில் அயோக்கியர்களும் முட்டாள்களும் இருப்பதாகும். அயோக்கியர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அவர்கள் கையில் பண பலமும் அதிகார பலமும் இருக்கிறது. நல்லவர்கள் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தாலும் அவர்களில் கணிசமானவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். இந்த சமனை மாற்ற வேண்டுமென்றுதான் காலம் காலமாக எல்லா சமூக சிந்தனையாளர்களும் மனித நேயர்களும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    அடுத்த தலைமுறையினருக்கு, கடந்த கால சரித்திரம் தெரிய வேண்டும். இன்று அரசியலிலும் மீடியாவிலும் கலாசாரத் துறையிலும் இருக்கும் பல பிரபலங்களின் அறிவுக் கூர்மையால் கவரப்பட்டு அவர்களைக் கொண்டாடுவது நடக்கிறதே ஒழிய, அவர்களின் உண்மையான சுயநல முகங்கள் திறமை என்ற ஒப்பனைக்குள் பத்திரமாக ஒளிந்துகொள்கின்றன. இந்த ஒப்பனைகளைக் கலைப்பதும் முகமூடிகளை நீக்குவதுமே ஒரு எழுத்தாளனின் வேலை.

    தனிப்பட்ட முறையில் ஒரு பத்திரிகையாளனாகவும், தீம்தரிகிட இதழ் ஆசிரியனாகவும் நான் எப்போதும் இந்த சமூகத்தின் மனசாட்சியாக செயல்படவே முயற்சி செய்து வந்திருக்கிறேன். வெகுஜன இதழ்கள் பலவற்றிலும் நான் கடும் போராட்டத்தால் கிட்டிய கணிசமான சுதந்திரத்துடனே எழுதி வருகிற போதிலும், அவற்றில் எழுத முடியாத தொனியிலும், கருத்துக்களையும எழுதுவதற்கான களமாக தீம்தரிகிட தான் இருந்து வந்திருக்கிறது.

    அப்படி சினிமா, இலக்கியம், ஒழுக்கம் போன்ற துறைகள் பற்றி 2002 முதல் வெளியான தீம்தரிகிட இதழ்களில் அச்சான கட்டுரைகளின் தொகுப்பு இது. நமக்கு சினிமா தேவை. இலக்கியம் தேவை. ஒழுக்கம் தேவை. ஆனால் எப்படிப்பட்ட சினிமா, எப்படிப்பட்ட இலக்கியம், எப்படிப்பட்ட ஒழுக்கம் என்று நாம் யோசிப்பதும் பிறரை யோசிக்கவைப்பதும் அவசியம். இந்தக் கட்டுரைகள் அப்படிப்பட்டவை. படித்து யோசித்து உங்கள் கருத்துக்களை உங்கள் குடும்பம் முதல் அலுவல் வரை எல்லா வட்டங்களிலும் விவாதியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து நீங்கள் எனக்குக் காட்டும் அன்பே என்னை ஓயாமலும் தலை சாயாமலும் காப்பாற்றி வருகிறது.

    சென்னை-41 (முதல் பதிப்பின் முன்னுரை)

    ஒரு முன் குறிப்பு

    2003 - 2005ல் எழுதி 2006ல் நூலாக்கப்பட்ட இந்த கட்டுரைகளை இப்போது 2014ல் டிசம்பரில் படித்து பார்த்த போது என் கருத்துகளின் நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை அப்போது என் எழுத்தில் தொணித்த கோபம் மட்டும் இப்போது கொஞ்சம் குறைந்து விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பொருளடக்கம்:

    அழைப்பது கமல் ஆராய்வது ஞாநி சினிமாவுக்குப் போன(ர)ல் சிற்றிதழாளு?

    'சண்டியர்' தப்பு! 'சாமி' சரியா? கேள்வி : ஞாநி டாக்டர் கிருஷ்ணசாமிக்கு

    அயோக்கியர்களும் முட்டாள்களும்: பெரியார் 125

    எது இலக்கியம்? யார் இலக்கியவாதி? கலைஞர் - ஜெயமோகன் சர்ச்சை

    பெரியவாளே சொல்லிட்டா! வெட்டு கிடாவை! விடாது கருப்பு கருத்து

    பீ! இந்தியா ஒளிர்கிறது? ஒரு சமகால ஆவணம் விடாது கருப்பு கருத்து

    '2500' வருட சங்கர மடமும் 60 வருட அண்ணா நாடகமும்

    சில நேரங்களில் சில விருதுகள்

    அய்யோ அக்ஷயா!

    யாருக்கு யார் அந்நியன்?

    பொய்யர்தம் 'மெய்'யும் அஞ்சேன் திருவாசக மோசடி

    கற்பு ஒழிக

    செக்ஸ்- தி.மு - தி.பி. என் கருத்து

    தமிழ் சினிமாவும் இலக்கியவாதிகளும்

    அழைப்பது கமல் ஆராய்வது ஞாநி சினிமாவுக்குப் போன(ர)ல் சிற்றிதழாளு?

    இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.

    லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிய சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலைத் தமிழ் - கலையாத தமிழ் என்ற தலைப்பில் பேசிய கமல் இலக்கியமும் சினிமாவும் இணைய வேண்டும். ஆரோக்கிய சினிமா உருவாக அது வழிவகுக்கும். இங்குள்ள கூட்டம் சினிமாவில் இணைய வேண்டும். இதையும் சினிமாவையும் இணைக்கத் தவறியவர்கள் நீங்கள்தான். முந்தைய காலகட்டத்தில் கல்கி போன்ற பெரிய பெரிய எழுத்தாளர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். இப்போதோ நிலை வேறு. சுஜாதாவையே நிறையக் கஷ்டப்பட்டுதான் சினிமாவுக்கு இழுத்து வர வேண்டியிருந்தது என்று பேசினார்.

    அடுத்து தீராநதி இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியிலும் 'நியாயமான பணிவுடன் சில எழுத்தாளர்களை உபசரித்து சினிமாவுக்கு வாருங்கள் என்று கூப்பிட்டிருக்கிறேன். வெகு சிலரே வந்திருக்கிறார்கள். மற்ற சிலர் இங்கு வந்தால் அசிங்கம் என்றிருக்கிறார்கள். சிலர் வெட்கப்படுவார்கள். அதில் ஏனோ சிலருக்கு பாகவதர்த் தனமிருக்கிறது. இந்த மேடையில் பாடமாட்டேன் என்கிற மாதிரி... கெஞ்சிக் கேட்டுத் தண்ணீர் தெளித்துத்தான் சுஜாதாவையெல்லாம் சினிமா பக்கம் நகர்த்திக் கொண்டு வர முடிந்தது' என்று சொல்லியிருக்கிறார் கமல். இலக்கியவாதி என்பதற்கு கமலுடைய வரையறை என்ன என்று நமக்குத் தெரியாது.

    வெகுஜன பத்திரிகை, சிறு பத்திரிகை என்று வெவ்வேறு தளங்களில் இயங்கும் பல படைப்பாளிகளுடன் அவருக்கு நீண்ட காலமாகத் தொடர்பு இருந்து வருகிறது. மறைந்த சுப்ரமண்ய ராஜு, பாலகுமாரன், அசோகமித்திரன், புவியரசு, சுஜாதா, ரா.கி.ரங்கராஜன், ம.வே.சிவகுமார், ஞானக்கூத்தன், மதன், பிரளயன் என்று நீளுகிறது இந்த வரிசை. அண்மையில் கமல்ஹாசனை சந்தித்த இலக்கியப் பிரமுகர் சுந்தர ராமசாமி என்று சென்னை இலக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இலக்கியவாதிகளை சினிமாவுக்கு வரும்படி கமல் அழைப்பது, தொடர்ந்து நியாயமான பணிவுடன் முயற்சிப்பது எல்லாம் கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இப்படி அழைப்பதில் கமலின் நோக்கம் அவரே சொன்னபடி ஆரோக்கிய சினிமா வரவேண்டும் என்பதுதான்.

    அதாவது இலக்கியவாதிகள் ஒதுங்கி நிற்பதால் சினிமா மோசமாக இருக்கிறது என்று இதற்குப் பின்னால் ஒரு கருத்து இருக்கிறது. இவர்கள் உள்ளே போய்விட்டால் சினிமா மாறிவிடுமா?

    இந்தத் தருணத்தில் தமிழ் சினிமாவுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இருந்து வந்த உறவு எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது என்று பார்க்கலாமா?

    தமிழ் சினிமாவின் ஆரம்ப ஆண்டுகளில் அதற்குள் சென்று செயல்பட்ட இலக்கியவாதிகள் பலர். ச.து.சு.யோகி, வ.ரா. என்கிற வ.ராமஸ்வாமி, கல்கி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், பி.எஸ். ராமைய்யா, விந்தன், வல்லிக் கண்ணன் ஆகியோரைக் குறிக்கலாம்.

    (இவர்கனின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களுக்கு, மறைந்த அறந்தை நாராயணன் எழுதிய சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் நூலைப் பார்க்கவும்)

    புதுமைப் பித்தன் தன் சினிமா முயற்சிகளின் லௌகீக வெற்றி மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார் என்று தெரிகிறது. கல்கி ஒருவர்தான் சினிமாவிலும் ஜெயித்தார் என்று சொல்லலாம். பின்னாளில் ஜெயகாந்தனின் வெகு ஜன சினிமா வெற்றிக்கு பீம்சிங் பங்களிப்புபோல கல்கியின் வெற்றிக்கு (தியாக பூமி) கே.சுப்ரமணியத்தைச் சொல்லலாம்.

    கல்கி ஜெயித்தார். ஆனால் ஏன் புதுமைப்பித்தன் தோற்றார்? புதிய வரவான சினிமா வடிவத்தைப் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, அதற்கும் பழைய மரபுக்கும் இருந்த உறவைப் புரிந்து கொண்டு சம கால விஷயங்களுக்கு அந்த மரபைப் பயன்படுத்திக் கொள்ளாததும் காரணம் என்று தோன்றுகிறது.

    பாப்புலர் கல்ச்சர் என்று இன்று நவீன பண்டிதர்கள் கண்டுபிடித்திருக்கிற வெகுஜன ரசனை என்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. அதுதான் நிகழ்கலை மரபு. தமிழரின் மரபான நிகழ்கலையான கூத்தின் கதைகள் எல்லாமே இலக்கியம் சார்ந்த புராண, இதிகாச, வரலாற்றுப் புனைகதைகள்தான். இயல், இசை, நாட்டியம் என்ற மூன்றும் இணைந்த வடிவம் கூத்து. கூத்திலிருந்து சில சிதைவுகளுக்குப் பிறகு உருவானது தமிழ் மேடை நாடகம். இதன் கதைகளும் உரையாடல்களும் கூட வாய்மொழி புராண இலக்கியக் கதைகளைச் சார்ந்திருந்தன. சமஸ்கிருத மரபில் கூத்துக்கு நிகரான தொன்மை வடிவம் எதுவும் இல்லை. அதில் நாடகமும் நாட்டியமும் பிரிந்தே இருந்தன. எனினும் அதிலும் கதைப் பொருள் புராண இலக்கியம் சார்ந்ததுதான்.

    இந்தியாவுக்குள் சினிமா தொழில்நுட்பம் வெளியிலிருந்து வந்தபோது இந்த கூத்து மரபு, நாடக மரபுகளிலிருந்தே இந்திய சினிமாவின், தமிழ் சினிமாவின் கதை வசனம் பாடல்கள் கலந்த வடிவம் உருவாக்கப்பட்டது.

    இந்தக்

    Enjoying the preview?
    Page 1 of 1