Pazhaiya Paper
By Gnani
()
About this ebook
ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.
நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.
பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.
Read more from Gnani
Ayogiyargalum Muttalgalum Rating: 0 out of 5 stars0 ratingsThavippu Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsParisukku Ponen Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5Narendra Modi Atharavu Petra Oru Kaavi Bayangaravaathiyin Oppuhal Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Part - 9 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaazhkai En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsOozhale Un Ver Enge? Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Rating: 0 out of 5 stars0 ratingsSankarachari Yar? Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malargal Rating: 0 out of 5 stars0 ratingsSandaikarigal Rating: 0 out of 5 stars0 ratingsChennai Nagara Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsBalloon(Nadagam) Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsApple Desam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pazhaiya Paper
Related ebooks
Kanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsOodaga Theni Sridhar Rating: 0 out of 5 stars0 ratingsVaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsM.P.Nirmal – Oru Thani Mara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsVaiyathul Vaazhvangu Vazha Rating: 0 out of 5 stars0 ratingsAutograph Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5Marubadiyum Rating: 0 out of 5 stars0 ratingsArul Vaakku Rating: 0 out of 5 stars0 ratingsOppanaikalin Koothu Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Gramangalil Pen Sisu Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThakkaiyin Meethu Naangu Kangal Rating: 4 out of 5 stars4/5Apple Desam Rating: 0 out of 5 stars0 ratingsMaanuda Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsVaazhathane Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsKannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Parisalil Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsAppa Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsMaadu Kaathu Kondirukkirathu Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Marabukal Rating: 4 out of 5 stars4/5Nanavodai Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsSaathanai Santhippugal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pazhaiya Paper
0 ratings0 reviews
Book preview
Pazhaiya Paper - Gnani
http://www.pustaka.co.in
பழைய பேப்பர்
Pazhaiya Paper
Author:
ஞாநி
Gnani
For more books
http://www.pustaka.co.in/home/author/gnani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முதல் பதிப்பு: ஏப்ரல் 1993
கற்பிதங்களும் தப்பிதங்களும்
பழைய பேப்பர் முதல் தொகுதியின் முன்னுரை
1. 70 களில்
2. ஃபில்மோத்ஸவ் 78 கலைப்படங்களா? சதைப்படங்களா?
3. தமிழிலில் ‘நியூவேவ்’ படங்கள்
4. என் ஜி ஓ கிளர்ச்சி
5. எது ரஜினி ஸ்டைல்?
6. பழைய கிராமங்கள் புதிய கோஷங்கள்
7. ஈ. வெ. ரா.
8. மாணவர் தேர்தலா மாநிலத் தேர்தலா?
9. எம்.ஜி.ஆர் இல்லாத தமிழ்நாடு
10. மந்திரிகள் இல்லாத பாண்டிச்சேரி
11. குடிசை
12. மூன்று பரிசுகள் மூன்று எழுத்தாளர்கள்
13. உலகத் தமிழ் மாநாடு இலக்கு ஆனந்த விகடன்
14. பரத நாட்டியத்தைக் கண்டு பிடித்தது
15. ஸ்டேட் பாங்க் வழங்கிய
16. சங்கம் வளர்த்த மதுரையில் வளரும் பல்கலைக் கழகத்தில்
17. அர்த்தமில்லாத தேர்தல் அறிக்கைகள்
18. திண்ணை
19. திக்குத் தெரியாத நாட்டில்
20. ராஜினாமா செய்யுங்கள்
முதல் பதிப்பு: ஏப்ரல் 1993
ஐந்தாவது வகுப்பைக் கூட எட்டியதில்லை. என் நினைவு தெரிந்து முப்பத்தைந்து வருடங்களில் வீட்டை விட்டு நான்கைந்து முறைக்கு மேல் வெளியே சென்றதும் இல்லை. ஆனால் கடைசி காலம் வரை என் நண்பர்கள் வாழ்க்கை முதல் உலக விவகாரம் வரை எனக்கும் தெரியாத விவரங்களைக்கூட உட்கார்ந்த இடத்திலிருந்தே கேட்டும் படித்தும் திரட்டிவைத்திருந்த என் (பெரியம்மா) கனகாவுக்கு.
கற்பிதங்களும் தப்பிதங்களும்
வரலாறு நமக்குக் கற்பிக்கப்படுகிறது. நமது சுய அனுபவங்களையே கூட அதற்கு மாறான வடிவில் முன்னிறுத்தி ஒப்புதல் தர வைக்கப்படுகிறது. மெய்யான பதிவுகளற்ற ஓர் குருட்டுச் சூழல் வரலாறு நெடுகிலும் வழிந்தோடுகிறது. எனவே உண்மையான வரலாறென்பது கனவாகவே போய்க்கொண்டிருக்கிறது.
நிகழ்வுகளின் பேரில் எழும் அபிப்ராயங்கள்-விமர்சனங்கள் மாறுபட்ட பலவாய் பதிவுபெற நேரலாம். பின்னாட்களில் அதில் நேர்மையான-சரியானவற்றை தேர்வு செய்து காலம் வழிகாட்டும். ஆனால் பொய்ப் புனைவுகளும், உண்மையற்ற வதந்திகளும் மெய்யென பதிவு பெற்றுவிடுகிற கோரமும் கொடுமையும்,
‘அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு விட்ட’ கல்விமான்களாலும் மேதைகளாலும் நடந்து விடுகிற வேதனையையும் அனுபவிக்க நேர்கிறது.
இந்த கோரம் எம்காலத்து வரலாற்றுப் பதிவுக்கும் நேர்ந்துவிடக்கூடாது. அந்தப் பரிதவிப்பின் வெளிப்பாடுதான் இந்த பழையபேப்பர்.
சாதிப்பது, சவால் விடுவதென்கிற அறிவுலக குஸ்திப் பயில்வான்களின் கோதாக் குதிப்பல்ல இந்நூல். மரண ஓலங்களை மறைத்துவிடுகிற பிறந்த நாள் விழா கோலாகலக் கூச்சல்களையும் மீறி ஒலித்தாக வேண்டிய காலத்தின் குரல் இது. இன்றைய இச்சிறு முயற்சி அங்கீகாரம் எப்படியிருப்பினும் தொடரும்.
ஏறத்தாழ இருபதாண்டு காலமாக விலகிநின்றே ஞாநியைக் கவனித்தவன் நான். கூர்மையும், நேர்மையும் கொண்ட வெடிப்புறுதல் பேச்சிலும் எழுத்திலுமாய்ப் பளீரிட அவர் மேலோங்குவதை நேசித்தவன் நான். தவறுகளைத் தட்டிக்கேட்கும் முயற்சியிலும், தகவல்களை யோக்கியமாகத் தரும் நேர்மையிலும் ஞாநிக்குள்ள ஈடுபாடே, இது போன்றதொரு தொகுப்பை தொடர்ந்து வெளியிட திராணியளித்துள்ளது.
எம் காலத்து வாக்குமூலங்களில், ஏமாற்றுப் பேர்வழிகளின் திறமையான பதிவுகளின் மோசடிகளை உடைத்தெறிய பலம் வாய்ந்த படைக்கலமாக இந்நூல் சிறிதளவேனும் உதவக்கூடும்.
இந்த முன் முயற்சி வரவேற்கப்பட்டு, பெரிதும் ஏற்கப்படும் பட்சத்தில், திட்டமிட்டுள்ள ஞாநியின் நூல்களோடு, இன்னும் பலரின் நேர்மையான பதிவு முயற்சிகளும் நூலாக்கம் பெறும். எம் முயற்சிக்கும் ஊக்கம் கிட்டும்.
பொன்விஜயன்
பழைய பேப்பர் முதல் தொகுதியின் முன்னுரை
நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது பின்னாளில் ஒரு ரயில் எஞ்சின் டிரைவராகவோ, விமானியாகவோ, டாக்டராகவோ ஆகவேண்டுமென்றெல்லாம் விரும்பியதாகவே எனக்குத் துளியும் நினைவில்லை. பத்திரிகையாளனாக ஆகித்தீருவது என்ற தீர்மானத்துடன் அதை நோக்கியே இயங்கி வந்திருக்கிறேன். என் இன்னொரு காதலான நாடகத்தில் நான் பன்னிரண்டாவது வயதில் நுழைந்தபோதுகூட எனக்குக் கிடைத்த முதல் வேடம் பத்திரிகை நிருபராகத்தான்.
ஆனால் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கிடைத்த முதல் வேலை-பத்திரிகை அலுவலகத்திலேயே என்றபோதும், பத்திரிகையாளனாக அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னைப் பதிப்பின் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை ஊழியனாக பணியாற்றிய அந்த ஓராண்டு காலம் ஜர்னலிசத்தைப் புரிந்துகொள்வதைவிட அதிகமாக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவிற்று.
பத்திரிகையாளனாகவே வாழ்வது என்ற என் தீர்மானத்துக்கு ஓரளவு காரணம் என் அப்பா பத்திரிகையாளராக இருந்தது என்றாலும் என் மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.
என் அம்மா நான் பள்ளிக்கூட ஆசிரியனாகவேண்டுமென்று விரும்பினாள். நான் பத்திரிகை ஆசிரியனானதன் முழுத் துயரத்தையும் சுமந்தவள் அவள்தான். எப்போதும் யாரோடாவது பேசிக்கொண்டிருப்பது என்ற என் விருப்பம்தான் வெவ்வேறு கட்டங்களில் என்னை பத்திரிகை, மேடைப் பேச்சு, நாடகம், வீடியோ என்று மேலும் மேலும் அதிகமான பேச்சு சிநேகிதர்களைத் தேடிப் போவதாக பல சாதனங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். நான் பத்திரிகை நிருபராக, சேர்ந்த நேரம் என் தனிவாழ்க்கையிலும் இந்தியாவின் சமூக வாழ்க்கையிலும் நெருக்கடி நேரம். நிருபர் வேலை கிடைத்த சில மாதங்களிலேயே நானும் அம்மாவும் பெரியம்மாவும் அடங்கிய குடும்பத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் கொடுத்த 250 ரூபாய்களில் பராமரிக்க வேண்டியவனாயிருந்தேன். அதே சமயம் இந்திரா அரசாங்கத்தின் தணிக்கை கெடுபிடிகளை சகித்தும் சமாளித்தும் எங்கள் பத்திரிகைப் பணி நடந்துகொண்டிருந்தது. ஆங்கில ஏட்டில் பணியாற்றி வந்தபோதும் என் மனம் தமிழ்ப் பத்திரிகைத்துறையில் ஈடுபடுவதையே அவாவியது. அதற்கு வாய்ப்பாக என்னை 1980 ஜனவரியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகம், கணையாழி, கல்கி, குமுதம் ஆகிய ஏடுகளில் எழுதியதற்காக வேலை நீக்கம் செய்தது. அதே சமயத்தில்தான் கணையாழி நிறுவனர்-ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கனை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தினமணியின் இணையாசிரியராக நியமித்த விசித்திரமும் நடைபெற்றது! நான்காண்டுகளுக்குப் பிறகு வேலை நீக்கம் தவறு என்று என் வழக்கில் நீதிமன்ற உத்தரவு வந்ததையடுத்து மறுபடியும் எக்ஸ்பிரசில் பணியாற்றிய சில மாதங்கள் நீங்கலாக அடுத்த பதின்மூன்று வருடங்களாக நான் தமிழ்ப் பத்திரிகையாளனாகவே வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திவந்திருக்கிறேன்.
அஸ்வினி, எதிரொலி, ஜூனியர் விகடன், முரசொலி, ஜூனியர் போஸ்ட் ஆகிய இதழ்களில் முழுநேரப் பணியில் அவ்வப்போது இருந்தது தவிர பல தமிழ்ப் பத்திரிகைகளுக்குத் தொடர்ந்து எழுதிப் பிழைத்து வந்திருக்கிறேன். ஜீவனத்துக்கான வேலைவேறு; நம் சொந்த நெறிமுறைகள் நம்பிக்கைகள் வேறு என்று நான் ஒருபோதும் கருதியதில்லை. இரண்டையும் இணைத்து வாழ முற்படும் வாழ்க்கையில் ரத்தினக் கம்பளங்களைவிட சரளைக் கற்களே அதிகம் தட்டுப்பட முடியும். என் பார்வையை எல்லாவிதத்திலும் ஏற்காதவர்களானபோதும் ஏற்புடைய விஷயங்களில் அவர்களுடன் ஒன்றுபட்டும் பணிபுரியும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த பத்திரிகை ஆசிரியர்கள் பலர் உண்டு. குறிப்பாக ‘முரசொலி மாறனும் ‘ஆனந்தவிகடன்’ எஸ். பாலசுப்ரமணியனும் என் கருத்துச் சுதந்திரத்தைப் பெரிதும் மதித்தவர்கள். நான் விரும்பிய சமயத்தில் வேலைக்கு சேரவும் வெளியேறவும் மறுபடியும் சேரவும் அன்போடு என்னை அனுமதித்தவர் பாலசுப்ரமணியன். எந்த விஷயத்தையும் அவர் ஏற்கப் போதுமான காரணம் காட்டி விவாதித்து ஏற்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் விதத்தில் ஆரோக்ய மான விவாதங்களை அவர் ஊக்குவித்தார்.
என்னிடம் உள்ளதைவிட கூடுதலான ஆற்றல் உள்ளது போல எனக்கே பிரமையை ஏற்படுத்தும் வல்லமையுள்ள நண்பர் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி, இலக்கியம்-ஜர்னலிசம் ஆட்டோ ஓட்டுதல்-விவசாயம் எல்லாமே சம அந்தஸ்துக்குரியவைதான் என்ற நிதானத்தைத் தன்னிடமிருந்து எனக்கும் தொற்றவைத்த நண்பர், எழுத்தாளர் அசோகமித்திரன், எக்ஸ்பிரஸ் வழக்கு விசாரணை நாட்களன்று என்னைத் தேடிவந்து காலை உணவும் வாங்கித்தந்து நான்காண்டுகள் என் வழக்கை நட்பின் நிமித்தம் மட்டுமே நடத்திய வழக்கறிஞர் சந்துரு போன்ற சிநேகிதர்கள் தான், பத்திரிகைத்துறையில் எனக்கு சலிப்பு ஏற்பட்ட தருணங்களில் அதிலிருந்து மீள (அவர்களையறியாமலும்) உதவியிருக்கிறார்கள். இந்தப் பதினெட்டாண்டுகளில் மூன்று முறை நண்பர்களின் உதவியுடன் சொந்தமாகப் பத்திரிகை நடத்த முயற்சித்த அனுபவங்கள் என்னை வளப்படுத்தியிருக்கின்றன.
குறிப்பாக முதல்முறையாக 1982-ல் வெளியிட்ட ‘தீம்தரிகிட’ பொருளாதார சிக்கல்களால் நின்று போகாமலிருந்திருந்தால் என்ற கற்பனை இப்போதும்கூட எனக்கு சுவாரசியமாக இருக்கிறது. 1975-ல் இருந்தது போல இன்று பத்திரிகைத்துறை இல்லை. நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சுமாரான சம்பளம்கிடைக்கும் நிலை பெருமளவு ஏற்பட்டிருக்கிறது. உறவினர்கள், குடும்ப நண்பர்கள் வட்டாரத்தில் பல பெரியவர்கள் என்னை பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எக்ஸ்பிரசில் இருந்தபோது ‘சம்பளம் மாசாமாசம் ஒழுங்கா குடுக்கறானா’ என்று அக்கறையோடு கேட்பார்கள். என் அப்பா காலத்தில் நிலைமை அப்படி இருந்ததே காரணம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவரால் தரமான நிருபராகவும் பொறுப்பான குடும்பத் தலைவராகவும் இருக்க முடிந்திருக்கிறது என்பதே எனக்கு இத்துறையில் ஈடுபட நம்பிக்கை ஊட்டியது.
இன்று நிறைய இதழியல் படிப்பு வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. தொழில்நுட்பம் பல சாதனைகளை நிகழ்த்த வசதியாக இருக்கிறது. வாசகர் எண்ணிக்கை பலமடங்கு பெருகியிருக்கிறது, ஆயினும் தமிழ் இதழியல் விரிவுபெற்ற அளவுக்கு ஆழப்படவில்லை. துப்பறியும் ஜர்னலிசம் மதிப்பிழக்கும் அளவுக்கு நையப் புடைக்கப்பட்டுவிட்டது. துடிப்பும் ஆர்வமும் பரபரப்பும் உழைப்பும் அதிகரித்துள்ள போதும் தார்மீக மதிப்பு குறைந்திருக்கிறது. மொத்த சமூகத்திலும் நெறிகள் பிறழ்வதும் மதிப்பீடுகள் குலைவதும் நடந்துகொண்டிருக்கிற பத்தாண்டுகளில் பத்திரிகைத்துறை மட்டும் எப்படி விலகி நிற்கமுடியும்? சமூக சீர்குலைவை செய்திகளில் மட்டுமன்றித் தன் செயல்பாட்டிலும் அது பிரதிபலிக்கிறது என்றே கொள்ளத்தகும். இப்படிப்பட்ட தருணங்களில் எழுத்தாளனாயினும் வேறெந்தப் படைப்பாளியாயினும் சரி – இதுவரை நாம் செய்துவந்ததெற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கிறதா, இருக்க முடியுமா என்று பின்னோக்கிப் பார்ப்பது தவிர்க்க இயலாதது. நானும் அப்படித் திரும்பிப் பார்த்ததன் விளைவே இந்தத் தொகுப்பு. அப்படிப்பட்ட அலசல்களை மேற்கொள்வது மனசுக்குள் பலமுறை நடப்பதுதான் என்றாலும் அதை வாசகர்களுடனும் சஹிருதயர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் வடிவமாக இத்தொகுதியை சாத்தியப்படுத்தியிருப்பது பொன்விஜயனின் ஆர்வமும் அசைக்கமுடியாத பிடிவாதமும் அவையிரண்டுக்கும் அயராது ஆதரவளிக்கிற வேர்கள் இயக்கமும் தான். நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான வெளிச்சத்தைத் தொடர்ந்து தேடும் கடந்துபோன காலங்கள் பற்றிய ஒரு பத்திரிகையாளனின் இந்தப் பதிவுகளிலிருந்து ஒரு சிறுபொறி கிட்டினாலும் நல்லதுதான் என்று அவர்களோடு சேர்ந்து நானும் நம்புகிறேன். பத்திரிகையாளர்கள் பலர் சுயசரிதைகள் எழுதியதுண்டு. ஆனால் அவர்கள் பத்திரிகைகளில் எழுதியவற்றின் தொகுப்புகள் தொகுக்கப்பட்டது மிகவும் அரிது. இன்றும் பல விஷயங்களில் எனக்கு ஆதர்சமாக விளங்கும் சிலரில் ஒருவனான பாரதியின் பத்திரிகைக் கட்டுரைகள் பெருமளவு தொகுக்கப்பட்டு நமக்குக் கிடைத்திருப்பது பெரும் பேறென்றே தோன்றுகிறது. இதுபோல தமிழ் இதழியல் முன்னோடிகளான திரு.வி.க., டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.ஜி.வெங்கடாச்சாரி, கல்கி போன்ற பலரின் தினசரி, செய்திப்படைப்புக்கள் தொகுக்கப்பட்டிருந்தால் பல புதிய வெளிச்சங்கள் கிடைக்கக்கூடும். எழுத்தாளர் புதுமைப்பித்தன் தினசரிப் பத்திரிகையில் தினசரி என்ன எழுதினார், எப்படி எழுதினார், எந்த செய்தியை எப்படி வழங்கினார், என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும் என்றால் அது அன்றைய சமூகம் பற்றிய அவர் பார்வையை மட்டுமின்றி, ஒரு படைப்பாளி இன்னொரு துறையில் இயங்கும் விதத்திலிருந்து படைப்புமனத்தின் செயல்பாடுகளை மேலும் விளங்கவும் உதவியிருக்கக்கூடும்.
தினசரி செய்தித்தாளில் நிருபராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவங்கள் எனக்கு நான் இயங்கும் பிறதுறைகளில் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. நாடகத்திலும் வீடியோவிலும், புனைகதை எழுத்திலும் குழப்பமின்றித் தெளிவாக ஒன்றைத் தெரிவிப்பது என்ற வடிவ ரீதியான அம்சத்திலும் சரி, வாழ்க்கையின் பல்வேறு மட்டங்களில் வாழும் வெவ்வேறு மனிதர்களை சந்தித்து அவர்களை அறிகிற அரிய வாய்ப்பினால் என் சமூகப் பார்வையை-வாழ்க்கை பற்றிய தத்துவ தரிசனத்தை, செழுமைப்படுத்திக்கொள்ளவும் இந்த அனுபவங்கள் காரணமாய் இருக்கின்றன. இந்த முதல் தொகுதியில் எழுபதுகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு கட்டுரைகளைத் தொகுக்கும்போது,