Thakkaiyin Meethu Naangu Kangal
4/5
()
About this ebook
தமிழின் பழமையே புதுமையான படைப்புக்கு எதிராக இருந்தது. ஆனாலும், எழுத்தாளர்கள் எழுதினார்கள். 1892 ஆம் ஆண்டில் 'விவேக சிந்தாமணி' தொடர்கதை வெளியிட்டது. ராஜமையர் 'கமலாம்பாள் சரித்திரம் முழுமையாக வெளிவந்தது. ஆனால், அது நாவலுக்கான பத்திரிகை இல்லை.
அதில் பல அம்சங்கள் வந்தது போல தொடர்கதையும் கவிதைகளும் கதைகளும் வந்தன. மக்களுக்குக் கதைகள் பிடித்திருந்தன. கதையில் அவர்கள் தங்களைக் கண்டார்கள். பெருமளவு கற்பனையும் இலட்சியவாதமாகக் கதைகள் இருந்தாலும் அவற்றின் உயிர்நாதமாக வாழ்க்கை இருப் பனதை அறிந்துகொண்டார்கள். அதுவே, மக்கள் கதை படிப்பதற்கு ஆதாரமாக அமைந்தது. பலர் கதைகள் எழுதினார்கள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனியான நோக்கம் - ஈடுபாடு இருந்தன.
அது போல பத்திரிகைகள் வந்தன. அவைகளும் கதைகளுக்கு ஒரு விதி வைத்துக்கொண்டன. யார் எங்கு பொருந்துவார்களோ அங்கே சென்றார்கள். சிலர் பத்திரிகை, கட்சி, இலட்சியம் என்பதில் கரைந்து போனார்கள். மற்றும் சிலர் தங்களின் படைப்பு என்பது தாம் சார்ந்ததென்றும் அது மக்களின் பொதுப்பண்போடு இணைந்து போவதென்றும் கதைகள் எழுதினார்கள்.
அவர்களின் கதைகள் இலக்கியத்தரமான கதைகள் - புரியாத கதைகள் - மக்களுக்குத் தேவையில்லாத கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். அதன் காரணமாகத் தமிழ் மக்கள் தரமான அசலான கதைகளைப் படிக்க மாட்டார்கள். அவர்களுக்கு உகந்ததெல்லாம் மலிவான நகைச்சுவை நிறைந்த - அவர்கள் வாழ்க்கையை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத கதைகள் என்று வெளியிட்டார்கள்.
அவை அதிகமாகப் படிக்கப்பட்டன என்பது தெரிகிறது. ஆனால், இலக்கியம்தாம் என்பது ஏராளமானவர்கள் படிக்கிறார்களா? குறைந்த எண்ணிக்கையினர் படிக்கிறார்களா என்பது சார்ந்தது இல்லை.
அது அவர்கள் சமூகம் சார்ந்தது. வாழ்க்கை என்பதே தரம் சார்ந்ததுதான். அந்தத் தரம் இலக்கியத்தோடும் சேர்ந்து இருக்கிறது.
படைப்பு, தரம் என்பதில் அக்கறை கொண்ட படைப்பு எழுத்தாளர்கள் தங்கள் நோக்கத்தின்படியே எழுதுகிறார்கள். அதற்காக அவர்கள் பெரிய பெரிய பத்திரிகைகள், பல்கலைக்கழகங்கள் என்று அங்கீகாரத்திற்காகத் தேடிப் போவதில்லை. தங்கள் அளவில் அச்சிடுகிறார்கள். அவர்களுக்கு எத்தனை பிரதி விற்பனையாகும்; எத்தனை பேர் படிப்பார்கள் என்ற காலாக்கெல்லாம் எடுப்பதில்லை. அவர்கள் வாசகர் பலம் சார்ந்து இருப்பதில்லை. படைப்பு பலம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் படைப்புகள் படைப்பு என்பதாலேயே நினைத்து இருக்கின்றன.
ஐம்பதாண்டுக் காலமாக சிறுகதைகள் எழுதி வரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி தக்கையின் மீது நான்கு கண்கள். இக்கதைகள் 1965-ஆம் ஆண்டிற்கும் 1872 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டாண்டுக் காலத்தில் எழுதப்பட்ட கதைகள், தமிழ்க் கதைகள், மக்கள் வாழ்க்கையைப் பற்றிய கதைகள். அவர்கள் வாழ்க்கை முறையை விமர்சனம் செய்யவோ அவர்களை மேலே கைதூக்கிவிடுவதற்கோ, புகழவோ - இகழவோ எழுதப்பட்ட கதைகள் இல்லை. அவர்கள் வாழ்க்கை, அவர்கள் நம்பிக்கைகள், அவர்கள் எதனைச் சார்ந்து வாழ்கிறார்களோ அதனை அறிந்த விதமாகவும் அறியமுடியாத அம்சத்தை அப்படியே சொல்கின்ற கதைகள்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை இருக்கிறது என்பதுதான் கதைகள் எழுதுவதற்குக் காரணமாக அமைகிறது. ஆனால், என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் கதையை எழுதிக்கொள்ளவே நான் கதையெழுதுவதாக நினைக்கின்றேன். ஆனால், அதன்படி எழுதப்பட்டிருக்கிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
படைப்பிலக்கியம் என்பது பற்றி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதுதான் அதன் அடிப்படை. அது மற்றவர்கள் சொல்வது, மதிப்பீடு செய்வது என்பதுதான் இல்லை. எழுதிய ஆசிரியனே ஒன்றும் சொல்லிவிட முடியாது என்பதுதான். அவனால் எழுதப்பட்டது என்பதற்கு மேல் படைப்பில் அவனுக்கு ஒரு அதிகாரமும் கிடையாது.
தக்கையின்மீது நான்கு கண்கள் - தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளைப் படிக்கின்றபோது வெட்கப்படவோ நிராகரிக்கவோ கூடிய கதைகள் எதுவும் சேர்ந்திருக்கவில்லை என்பது தெரியகிறது. அது தொடர்ந்து எழுத்துலகின் தொடர்ச்சியாகவே இருக்கிறது
தக்கையின் மீது நான்கு கண்கள் – ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆப் இந்தியா இதழில் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அது இந்திய தூர்தர்சனில் நவீன இலக் கியம் - என்ற தொடரில் இயக்குநர் வசந்தால் குறும்படமாக்கப் பட்டது. தேசிய திரைப்பட விழாவில் சிறந்த குறும்படம் என்று விருது பெற்றது.
தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏழு சிறுகதைகள், 1970ஆம் ஆண்டில் நாங்கள் நடத்திய கசடதபற என்ற சிற்றிதழில் வெளிவந்தவையாகும். அதன் ஆசிரியர் நா. கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி.
Read more from Sa. Kandasamy
Tholainthu Ponavargal Rating: 4 out of 5 stars4/5Karuppin Kural Rating: 0 out of 5 stars0 ratingsRambaiyum Naachiyaaryum Rating: 0 out of 5 stars0 ratingsArumugasamiyin Adugal Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Vamsam Rating: 0 out of 5 stars0 ratingsSaayavanam Rating: 0 out of 5 stars0 ratingsNeelavan Rating: 0 out of 5 stars0 ratingsVisaranai Commission Rating: 3 out of 5 stars3/5Avan Aanathu Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSolla Padatha Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsIravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsPerum Mazhai Naatkal Rating: 2 out of 5 stars2/5Ettavathu Kadal Rating: 0 out of 5 stars0 ratingsBadrinath Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thakkaiyin Meethu Naangu Kangal
Related ebooks
Ilakkiyam Moolam India Inaippu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNathiyin Pizhaiyandru Narumpunal Inmai Rating: 0 out of 5 stars0 ratingsPanuval Pottruthum Rating: 0 out of 5 stars0 ratingsKi. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli Rating: 0 out of 5 stars0 ratingsPulariyin Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsKathugal Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsThalaikeezh Vikithankal Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Ashokamitran's Puthiya Tamil Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsUnnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsSabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsAadhavan Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Sathuranga Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsOozhiyin Dhinangal Rating: 0 out of 5 stars0 ratingsEnbilathanai Veyil Kayum Rating: 0 out of 5 stars0 ratingsUpasaram Rating: 5 out of 5 stars5/5Dinosaurgal Veliyeri Kondirukindrana Rating: 4 out of 5 stars4/5Venuvanavaasam Rating: 0 out of 5 stars0 ratingsManaamiyangal Rating: 0 out of 5 stars0 ratingsNaalu Vari Note Rating: 0 out of 5 stars0 ratingsThaayar Sannathi Rating: 0 out of 5 stars0 ratingsKhan Shahib Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsNatraj Maharaj Rating: 0 out of 5 stars0 ratingsTheevugal Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsKaalavellam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thakkaiyin Meethu Naangu Kangal
1 rating0 reviews
Book preview
Thakkaiyin Meethu Naangu Kangal - Sa. Kandasamy
http://www.pustaka.co.in
தக்கையின் மீது நான்கு கண்கள்
சிறுகதைத் தொகுப்பு
Thakkaiyin Meethu Naangu Kangal
Sirukathai Thoguppu
Author:
சா.கந்தசாமி
Sa. Kandasamy
For more books
http://pustaka.co.in/home/author/sa-kandasamy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. பாய்ச்சல்
2. உயிர்கள்
3. நிழல்
4. பதுங்கும் நாய்கள்
5. பிணைப்பு
6. தக்கையின் மீது நான்கு கண்கள்.
7. வாள்
சா. கந்தசாமி
ஐம்பதாண்டுக் காலமாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர். ஆவணப் படங்கள்: குறும்படங்கள் இயக்குநர்; தயாரிப்பாளர். இவரின் முதல் நாவல் 1950 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சாயாவனம்’. சுற்றுப்புறச் சூழல் பற்றி அதிகமாக அறியப்படாத காலத்தில் அதுபற்றி நுட்பமான தொனியில் பூரண அமைதியுடன் சொல்லும் நாவல். இது இந்தியாவின் மகத்தான நாவல்களில் ஒன்றாக இருக்கிறது.
'என் கதைகளில் கதைகளே கிடையாது’ என்று சொல்லும் இவர் நூற்றியம்பது கதைகள் எழுதியுள்ளார். அவை கிழக்குப் பார்த்த வீடு, சாந்தகுமாரி, மாயவலி, ரம்பையும் நாச்சியாரும் உட்பட பத்துத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
1998 ஆம் ஆண்டில் 'விசாரணைக் கமிஷன்" நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
2006 ஆம் ஆண்டில் 'நிகழ்காலத்திற்கு முன்பு' என்ற சுற்றுப்புறச் சூழல் நூலுக்காகத் தமிழக அரசு பரிசு பெற்றார்.
சாயாவனம், சூரியவம்சம், விசாரணைக் கமிஷன் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நீரின் பேரோசை - கனடா பயண நூல், 'காவல் தெய்வங்கள்' என்னும் இவரின் குறும்படம் சர்வதேச விருது பெற்றது. 2009 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
23, ஜூலை 10.40 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் பிறந்த சாந்தப்ப தேவர் கந்தசாமி என்னும் சா. கந்தசாமி குடும்பத்தோடு சென்னை நந்தனத்தில் வசித்துவருகிறார்.
முன்னுரை
கதைகள் படிக்கவே எழுதப்படுகின்றன. ஆனால், யார் படிக்க என்பதுதான் கேள்வி. அது படைப்பு எழுத்தாளன் சம்பந்தப் பட்டதில்லை, அசலான எழுத்தாளன் யார் படிப்பார்கள் என்ற யோசனை இன்றியே எழுதுகிறான். ஆனாலும், அவன் கதைகள் படிக்கப்படுகின்றன. அது தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது என்பது நூற்றாண்டிற்கு முன்னால் எழுதப்பட்டதெல்லாம் படிக்கப்படுவது வழியாகத் தெரிகிறது.
நிகழ்காலத்தில் பெரும் வரவேற்புப் பெற்ற கதைகள், அற்புதமான கதைகள், மக்களின் இருப்பை நிலைநாட்டும் கதைகள் என்று பாராட்டப்பட்டதெல்லாம் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில் கவனிப்பற்றுப்போவதும் - பெரும்பாலானவர்கள் படிக்காமல் விட்டதும், பரிசுகள் விருதுகள் பெறாமல் போனதுமான சில சிறுகதைகள் மதிப்புப் பெறுவதும் இலக்கிய உலகத்தில் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது.
அதுதான் படைப்பிலக்கியம் என்பதின் ஆதார சுருதி. அது படைப்பில் எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கிறது. அது காலம் சார்ந்ததில்லை, எழுதப்பட்ட மொழி, பெற்ற விருதுகள் சார்ந்தும் இருப்பதில்லை. அது வாசிக்கிறவர்கள் சார்ந்திருக்கிறது.
எழுதப்பட்டதெல்லாம் இலக்கியமாக நிலைத்திருப்பது இல்லை. அது நன்றாக எடிட் செய்யப்பட்டதால் நிலைத்திருப்பது கிடையாது. எழுத்து தொழில் இல்லை, திறமையாக கொழுதி, நுட்பமாக எடிட் செய்து படைப்பை ஸ்தாபித்துவிட முடியாது. ஏனெனில், படைப்பு என்பது நேராகச் சொல்லப்படுவதோ - சொல்லப்பட வேண்டும் என்ற விதிகொண்டதோ இல்லை.
மொழிக்குத்தான் இலக்கணம் இருக்கிறது. படைப்பு என்பதற்கு இலக்கணம் கிடையாது. மகத்தான படைப்பு என்பது பின்பற்றுவதற்கானது இல்லை. எந்த எழுத்தாளனும் மிகச் சிறந்ததொரு படைப்பை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு கதை எழுதுவதில்லை.
தன் கதைகளையே பின்பற்றி எழுதுவது கிடையாது. முன்மாதிரி - பின்பற்றத்தகுந்தது என்பதெல்லாம் இலக்கியத்தில் கிடையாது. அது எழுதுகிறவர்களைவிட படிக்கிறவர்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள்.
எனவேதான், புதிது என்பதை, எத்தனை காலம் ஆனாலும் அது புதுமையாகவே இருக்கிறது என்பதைப் படைப்பு வழியாகவே கண்டறிந்துவிடுகிறார்கள். எழுதப்பட்ட படைப்பில் சில சொற்கள் மாறிவிடலாம்; புது அர்த்தம் கொண்டிருக்கலாம். எழுதப்பட்ட எழுத்தின் வரி வடிவமே இல்லாமல் போய்விடலாம். என்ன நேர்ந்தாலும் படிக்கத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்துப் படித்தாலும், எழுதப்பட்ட மொழியில் படித்தாலும் படைப்பு என்பது சக்தியுடன் இருக்கிறது.
எல்லாப் படைப்பும் எப்போதும் ஜீவிதமாக இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு இல்லை என்று சொல்லிவிடலாம். மனிதர்கள் நெடுங்காலமாக எழுதிவருகிறார்கள். சமூகத்தின் மீது அக்கறையும் ஈடுபாடும் கொண்டு எழுதிவருகிறார்கள்.
அதில் அறிந்த விதமாக எழுதுகிறவர்களும், அறிந்துகொள்ள வேண்டிய விதமாக எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். எழுதப்பட்ட எழுத்து என்பதை ஐநாறு ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டு, அச்சிடும் முறை கண்டறியப்பட்டதும், படிப்பு என்பது பெற எல்லோருக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டதும் எழுதுவதும் படிப்பதும் கூடியது. பத்திரி கைகள் அச்சிடப்பட்டன.
அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார அம்சங்களை மக்களிடம் பரப்ப ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகள் கதைகள், கவிதைகளையும் வெளியிட ஆரம்பித்தன. தமிழ்நாட்டில் அரசியலுக்கு ஏற்பட்ட பத்திரிகைகள் கதை, கவிதை மீது அப்படியொன்றும் ஆர்வம் காட்டவில்லை. தமிழின் பழமையே புதுமையான படைப்புக்கு எதிராக இருந்தது.
ஆனாலும், எழுத்தாளர்கள் எழுதினார்கள். 1892 ஆம் ஆண்டில் 'விவேக சிந்தாமணி' தொடர்கதை வெளியிட்டது. ராஜமையர் 'கமலாம்பாள் சரித்திரம் முழுமையாக வெளிவந்தது. ஆனால், அது நாவலுக்கான பத்திரிகை இல்லை.
அதில் பல அம்சங்கள் வந்தது போல தொடர்கதையும் கவிதைகளும் கதைகளும் வந்தன. மக்களுக்குக் கதைகள் பிடித்திருந்தன. கதையில் அவர்கள் தங்களைக் கண்டார்கள். பெருமளவு கற்பனையும் இலட்சியவாதமாகக் கதைகள் இருந்தாலும் அவற்றின் உயிர்நாதமாக வாழ்க்கை இருப் பனதை அறிந்துகொண்டார்கள். அதுவே, மக்கள் கதை படிப்பதற்கு ஆதாரமாக அமைந்தது. பலர் கதைகள் எழுதினார்கள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனியான நோக்கம் - ஈடுபாடு இருந்தன.
அது போல பத்திரிகைகள் வந்தன. அவைகளும் கதைகளுக்கு ஒரு விதி வைத்துக்கொண்டன. யார் எங்கு பொருந்துவார்களோ அங்கே சென்றார்கள். சிலர் பத்திரிகை, கட்சி, இலட்சியம் என்பதில் கரைந்து போனார்கள். மற்றும் சிலர் தங்களின் படைப்பு என்பது தாம் சார்ந்ததென்றும் அது மக்களின் பொதுப்பண்போடு இணைந்து போவதென்றும் கதைகள் எழுதினார்கள்.
அவர்களின் கதைகள் இலக்கியத்தரமான கதைகள் - புரியாத கதைகள் - மக்களுக்குத் தேவையில்லாத கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். அதன் காரணமாகத் தமிழ் மக்கள் தரமான அசலான கதைகளைப் படிக்க மாட்டார்கள். அவர்களுக்கு உகந்ததெல்லாம் மலிவான நகைச்சுவை நிறைந்த - அவர்கள் வாழ்க்கையை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத கதைகள் என்று வெளியிட்டார்கள்.
அவை அதிகமாகப் படிக்கப்பட்டன என்பது தெரிகிறது. ஆனால், இலக்கியம்தாம் என்பது ஏராளமானவர்கள் படிக்கிறார்களா? குறைந்த எண்ணிக்கையினர் படிக்கிறார்களா என்பது சார்ந்தது இல்லை.
அது அவர்கள் சமூகம் சார்ந்தது. வாழ்க்கை என்பதே தரம் சார்ந்ததுதான். அந்தத் தரம் இலக்கியத்தோடும் சேர்ந்து இருக்கிறது.
படைப்பு, தரம் என்பதில் அக்கறை கொண்ட படைப்பு எழுத்தாளர்கள் தங்கள் நோக்கத்தின்படியே எழுதுகிறார்கள். அதற்காக அவர்கள் பெரிய பெரிய பத்திரிகைகள், பல்கலைக்கழகங்கள் என்று அங்கீகாரத்திற்காகத் தேடிப் போவதில்லை.
தங்கள் அளவில் அச்சிடுகிறார்கள். அவர்களுக்கு எத்தனை பிரதி விற்பனையாகும்; எத்தனை பேர் படிப்பார்கள் என்ற காலாக்கெல்லாம் எடுப்பதில்லை. அவர்கள் வாசகர் பலம் சார்ந்து இருப்பதில்லை. படைப்பு பலம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் படைப்புகள் படைப்பு என்பதாலேயே நினைத்து இருக்கின்றன.
ஐம்பதாண்டுக் காலமாக சிறுகதைகள் எழுதி வரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி தக்கையின் மீது நான்கு கண்கள். இக்கதைகள் 1965-ஆம் ஆண்டிற்கும் 1872 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டாண்டுக் காலத்தில் எழுதப்பட்ட கதைகள், தமிழ்க் கதைகள், மக்கள் வாழ்க்கையைப் பற்றிய கதைகள். அவர்கள் வாழ்க்கை முறையை விமர்சனம் செய்யவோ அவர்களை மேலே கைதூக்கிவிடுவதற்கோ, புகழவோ - இகழவோ எழுதப்பட்ட கதைகள் இல்லை. அவர்கள் வாழ்க்கை, அவர்கள் நம்பிக்கைகள், அவர்கள் எதனைச் சார்ந்து வாழ்கிறார்களோ அதனை அறிந்த விதமாகவும் அறியமுடியாத அம்சத்தை அப்படியே சொல்கின்ற கதைகள்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை இருக்கிறது என்பதுதான் கதைகள் எழுதுவதற்குக் காரணமாக அமைகிறது. ஆனால், என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் கதையை எழுதிக்கொள்ளவே நான் கதையெழுதுவதாக நினைக்கின்றேன். ஆனால், அதன்படி எழுதப்பட்டிருக்கிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
படைப்பிலக்கியம் என்பது பற்றி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதுதான் அதன் அடிப்படை. அது மற்றவர்கள் சொல்வது, மதிப்பீடு செய்வது என்பதுதான் இல்லை. எழுதிய ஆசிரியனே ஒன்றும் சொல்லிவிட முடியாது என்பதுதான். அவனால் எழுதப்பட்டது என்பதற்கு மேல் படைப்பில் அவனுக்கு ஒரு அதிகாரமும் கிடையாது.
தக்கையின்மீது நான்கு கண்கள் - தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளைப் படிக்கின்றபோது வெட்கப்படவோ நிராகரிக்கவோ கூடிய கதைகள் எதுவும் சேர்ந்திருக்கவில்லை என்பது தெரியகிறது. அது தொடர்ந்து