Nathiyin Pizhaiyandru Narumpunal Inmai
By Nanjil Nadan
()
About this ebook
கட்டுரை என்பது பழந்தமிழ் நூல்களுக்கு எழுதும் தெளிவுரை என்றெண்ணிய காலம் உண்டு. பின்பு வாசிக்க நேர்ந்த அரசியல், சமூகவியல், பொருளியல் கட்டுரைகள் எனது தலைமுறை இளைஞர்களின் சிந்தனையைக் கூர்செய்ததுண்டு. பல்வேறுபட்ட கட்டுரைகள்தாம் வாசிப்பவனின் பன்முக ஐயங்களுக்கு விளக்கங்கள் தர இயலும். கட்டுரை எழுதுபவர்கள் அவர்துறையில் அறிஞராக இருப்பதும் சரியான தகவல்களைத் தருவதும் சமூகக் கடமை என்பதால் அவை நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். எத்தகைய வரலாற்று ஆய்வு அறிஞர்களும் சமூகப் பொருளியல் அறிஞர்களும் வாழ்ந்த மண் இது! ஆனால் அவர்கள் இனமும் அழிந்துவரும் இனமோ என்று அச்சம் ஏற்படுகிறது. அந்த வேலையைப் படைப்பிலக்கியவாதி கையிலெடுத்துக் கொள்வது என்பது சாத்தியமாகும் ஒன்றல்ல. துறை சார்ந்த வல்லாண்மை ஒரு அறிஞனைப் போல இலக்கியவாதிக்கு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத நிலையில், இலக்கியவாதி எழுதும் கட்டுரைகள் அதன் எல்லைகளுக்குள்தான் இயங்க முடியும். வேறு வழியின்றி, இதைத் தெரிந்து கொண்டுதான் அவன் கட்டுரை எழுத முயல்கிறான்.
சார்பு அல்லது சாய்வு எதுவானாலும் ஒரு விஷயம் குறித்த விவாதங்கள், பார்வைகள் முன்வைக்கப்பட வேண்டும். கொள்வார் கொள்வர். அல்லார் தமக்கான விவாதங்களை எழுப்பிக் கொள்வார். படைப்பிலக்கியத்துக்கு எந்த வகையிலும் தாழ்ந்ததன்று கட்டுரை இலக்கியம் என்பது எனது கருத்து. எனது அனுபவத்தில் கூறுகிறேன், படைப்பிலக்கியத்தை விடவும் கூர்மையான பார்வையும் விரிந்த அறிவும் வாசிப்பும் சமநிலையும் வேண்டும் கட்டுரை எழுதுவதற்கு. எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் கட்டுரையாசிரியன் பொறுப்பேற்கவும் வேண்டும். இஃதெல்லாம் இருப்பதாலேயே நான் கட்டுரை எழுத வந்தேன் என்று சொல்ல வரவில்லை.
சற்று யோசிக்கும் வேளையில், சமீபகாலமாகத்தான் கட்டுரை எழுதும் உரம் எனக்கு வாய்த்திருக்கிறது. கதாநாயகிகள் முதுமையில் அம்மா வேடம் புனைவதைப் போலவா இதுவும் என்ற கேள்வியும் உண்டு. பெரும்பாலும் படைப்பிலக்கிய ஊற்று வறண்டு போன நிலையிலேயே கட்டுரை எழுத வந்ததாக வரலாறு கூறுகிறது. எனது அணுக்கமான நண்பர்கள் அனைவரும் நான் கட்டுரை எழுதுவதற்கு எதிரான மனநிலை கொண்டவராகவே இருக்கிறார்கள். என்னை அதைரியப்படுத்துகிறார்கள். ஆனால் கட்டுரை இலக்கியம் என்பது படைப்பிலக்கியம் அல்ல என்று யார் சொன்னது?
நான் கட்டுரையாக எழுதுவதை இன்னொருவர் எழுதி விடவும் முடியும்தான். ஆனால் அவை எழுதப்படாமலேயே போய்விடுமோ எனும் அச்சம் ஏற்படும் போதுதான் படைப்பிலக்கியவாதி அந்தப் பணியையும் மேற்கொள்ள வேண்டியதாகிறது. மேலும் ஒரு விஷயத்தை அவன் அறிவுபூர்வமாக மட்டுமின்றி, உணர்வு பூர்வமாகவும் அணுக இயலும். கட்டுரை என்பது தீவிரமானதோர் மொழியில், அதற்கானதோர் வறட்டுத்தனத்துடன், வாசகனுக்கு அந்நியமான பாணியில் பெரும்பாலும் எழுதப்படுகிறது. படைப்பிலக்கியவாதி கட்டுரை எழுத வரும் போது, மொழி இயல்பானதாகவும் சற்று உணர்வுபூர்வமான அணுகு முறையுடனும் ஆக்கம் கொள்கிறது. எந்தக் கட்டுரையும் ஒரு சிறுகதை வாசிப்பின் ஈர்ப்பைத் தரவேண்டும் என்று கருதுபவன் நான். என்னுடைய கட்டுரைகள் அந்தவிதமான ஈர்ப்பைத் தருவதுண்டா என்பதை நீங்கள் தான் கூற முடியும்.
கட்டுரை என்பது பழந்தமிழ் நூல்களுக்கு எழுதும் தெளிவுரை என்றெண்ணிய காலம் உண்டு. பின்பு வாசிக்க நேர்ந்த அரசியல், சமூகவியல், பொருளியல் கட்டுரைகள் எனது தலைமுறை இளைஞர்களின் சிந்தனையைக் கூர்செய்ததுண்டு. பல்வேறுபட்ட கட்டுரைகள்தாம் வாசிப்பவனின் பன்முக ஐயங்களுக்கு விளக்கங்கள் தர இயலும். கட்டுரை எழுதுபவர்கள் அவர்துறையில் அறிஞராக இருப்பதும் சரியான தகவல்களைத் தருவதும் சமூகக் கடமை என்பதால் அவை நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அந்த வேலையைப் படைப்பிலக்கியவாதி கையிலெடுத்துக் கொள்வது என்பது சாத்தியமாகும் ஒன்றல்ல. துறை சார்ந்த வல்லாண்மை ஒரு அறிஞனைப் போல இலக்கியவாதிக்கு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத நிலையில், இலக்கியவாதி எழுதும் கட்டுரைகள் அதன் எல்லைகளுக்குள்தான் இயங்க முடியும். வேறு வழியின்றி, இதைத் தெரிந்து கொண்டுதான் அவன் கட்டுரை எழுத முயல்கிறான்.
கட்டுரை என்பது தீவிரமானதோர் மொழியில், அதற்கானதோர் வறட்டுத்தனத்துடன், வாசகனுக்கு அந்நியமான பாணியில் பெரும்பாலும் எழுதப்படுகிறது. படைப்பிலக்கியவாதி கட்டுரை எழுத வரும் போது, மொழி இயல்பானதாகவும் சற்று உணர்வுபூர்வமான அணுகு முறையுடனும் ஆக்கம் கொள்கிறது. எந்தக் கட்டுரையும் ஒரு சிறுகதை வாசிப்பின் ஈர்ப்பைத் தரவேண்டும் என்று கருதுபவன் நான். என்னுடைய கட்டுரைகள் அந்தவிதமான ஈர்ப்பைத் தருவதுண்டா என்பதை நீங்கள் தான் கூற முடியும்.
- நாஞ்சில் நாடன்
Read more from Nanjil Nadan
Panuval Pottruthum Rating: 0 out of 5 stars0 ratingsEnbilathanai Veyil Kayum Rating: 0 out of 5 stars0 ratingsKaavalan Kaavaan Enin Rating: 0 out of 5 stars0 ratingsEttuthikkum Madhayaanai Rating: 0 out of 5 stars0 ratingsKhan Shahib Rating: 0 out of 5 stars0 ratingsMithavai Rating: 0 out of 5 stars0 ratingsMamisap Padaippu Rating: 0 out of 5 stars0 ratingsSathuranga Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsSaalaparinthu... Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Nathiyin Pizhaiyandru Narumpunal Inmai
Related ebooks
Arumugasamiyin Adugal Rating: 0 out of 5 stars0 ratingsThakkaiyin Meethu Naangu Kangal Rating: 4 out of 5 stars4/5Rangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsThalaikeezh Vikithankal Rating: 0 out of 5 stars0 ratingsKathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsKathugal Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsLights On Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Pralayam Rating: 5 out of 5 stars5/5Jayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaattu Nila Rating: 0 out of 5 stars0 ratingsParisukkup Po! Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kuthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsSoundarya... Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nerathil Ival Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsNirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsJJ Sila Kuripugal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsKumbakonam Vakkil Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSathuranga Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsVenuvanavaasam Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiyam Moolam India Inaippu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsManaamiyangal Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsOozhiyin Dhinangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nathiyin Pizhaiyandru Narumpunal Inmai
0 ratings0 reviews