Ebook349 pages2 hours
Saalaparinthu...
By Nanjil Nadan
Rating: 0 out of 5 stars
()
About this ebook
நாஞ்சில் நாடனின் கதைகளை முதலில் படிக்க நேர்ந்தபோது நான் முதிரா இளைஞன். வாசிப்பில் அதீத ஆர்வமும், அதே சமயத்தில் இலக்கியம் குறித்து திட்டவட்டமான கருத்தாக்கங்கள் கொண்டவனாகவும் இருந்தேன். எந்த ஒரு நூலையும் படித்த முதல் தடவையிலேயே அதைப் பற்றிய கறாரான ஒரு முடிவுக்கு வந்து விடும் கூருணர்வும் எனக்கு அப்போது அதிகமாகவே இருந்தது. நாஞ்சில் நாடன் என்ற அவருடைய புனை பெயர் எனக்கு அவ்வளவு உவப்பான ஒன்றாக அல்லாமல் சற்றே மனவிலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காரணம், சாதிப்பற்று, மதப்பற்று போலவே ஊர்ப் பற்று, மொழிப்பற்று, இனப் பற்று முதலிய பிற பற்றுகளும் புதுமை நாட்டமற்ற ஒரு மனம் சுமக்க விரும்பும் பழம் பெருமை என்பதான எண்ணமே அன்றிருந்தது.
சிறுகதை என்றதுமே என் மனதில் எழும் ஒரு தோற்ற வரையறையானது இறுக்கம், செறிவு, துல்லியம், ஒருமை, முடிவை நோக்கிய விரைந்த நடை என்பவை போன்ற சில அளவீடுகளைக் கொண்டிருந்தது. நாஞ்சிலின் கதைகள் பலவும் இந்த வரையறைக்குள் பொருந்தாமல் மீறியும், வழிந்தும் ஆங்காங்கே துருத்திக் கொண்டு நின்றன. கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்குத் தகவே கதையின் மொழிநடை பயின்று வரவேண்டும். கவித்துவமான முடிவும், கதை விளக்கப்படுத்தும் மேல் தளப் பிரதிக்கப்பால் ஆழமான மறைபிரதியும் கூடுதல் தகுதியாகக் கொள்ளத்தக்கவை என்பனபோல் என் வரையறைக்கு மேலதிகமான சில எதிர்பார்ப்புகளும் இருந்தன. கதாசிரியனின் பிரசன்னம் இல்லாத கதை என்பது நாஞ்சிலிடத்தில் அரிதாகவே காணக் கிடைப்பது. தவிரவும் அவருடைய கதாபாத்திரங்கள் மண்ணில் காலூன்றி எதார்த்தத்தில் அடிவைத்து நடக்கிறவர்கள். அவர்களால் தங்களது எண்ண விசாரங்களைத் தத்துவார்த்த தளங்களுக்கு நகர்த்தவோ, நம்மால் அவரது கதைகளிலிருந்து நுட்பமான மறைபிரதிகளைப் பெறவோ முடியவில்லை. எனவே அன்றைய அவ்வாசிப்பில் என்னை ஈர்த்தது அவருடைய மும்பை அனுபவத்தையொட்டிய சில கதைகள் மாத்திரமே. மற்றபடி அவர் ஒரு மரபான கதை சொல்லி என்ற மனப்பதிவே என்னிடம் தங்கியிருந்தது.
'எனது சிறுகதைகளின்மீது எனக்கிருக்கும் அபிப்பிராயம் ஒரு போதாமை; ஒரு நிறைவின்மை' என்று குறிப்பிடும் நாஞ்சில் நாடனுக்கு, வாழ்க்கை தனக்குக் கொடையளித்த அனுபவங்கள் தானுணர்ந்து உள்வாங்கிக்கொண்ட விதத்தில் எழுதிச் செல்லுதல் என்பது தனக்கு உவக்கும் பணி என்பதைத் தாண்டி தனது எழுத்துக்கள் குறித்து ஊதிப் பெருக்கப்பட்டப் பிரமைகளோ (அ) கழிவிரக்கத்துடன் கூடிய தடுமாற்றங்களோ கிடையாது. தனிப்பட்ட வாழ்வில் தானடைய முடியாத உயரங்களைத் தன் எழுத்தின் வழி அடைந்துவிடலாம் என்ற அவாவில் தன் நிழலைத் தானே தாண்ட முயலாதவர் அவர். இந்தத் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் அவருடைய எழுத்திற்கு நல்கியுள்ள வசீகரத்திற்கும் அப்பால் அவருடைய படைப்புகள் நமக்குக் கையளிக்க விரும்பும் சங்கதி ஒன்றுண்டு. நாஞ்சில் தன் தந்தையுடனான தனிப்பட்ட உரையாடல் ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.
வயல் அறுவடையின் போது காலில் மண்ஒட்டாத, ஆனால் காலடித்தடம் பதியும்படி உலர்ந்த வயலில், ஏராளமாக நெல்மணிகள் தொளிவதைப் பார்த்து அப்பாவிடம் கேட்டேன்:
“இவ்வளவு நெல்லும் நமக்கு சேதம் தானே? இப்பிடி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய விஞ்ஞானிகள் வழி கண்டுபிடிக்கக் கூடாதா?"
அப்பா சொன்னார், "இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்? நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மை சுத்திக் காக்கா, குருவி, எலி, பாம்பு, தவளை, புழு, பூச்சி எல்லாம் சீவிக்கணும். அதை மறந்திரப்பிடாது."
வாழ்வைத் தொடர் ஓட்டப்பந்தயமாகக் கருதித் தமக்கான இடத்தை அடைவதற்காகப் பிறரை முந்திக்கொண்டு ஓடும் நம் தலைமுறையினர் மறந்துவிட்ட அல்லது நினைவுபடுத்திக் கொள்ள விரும்பாத சேதி இது. நாஞ்சிலின் கதைகள் அளிக்கும் இலக்கிய அனுபவத்திற்கும் மேலாக நான் மதிப்பது அவரது கதைகளில் உள் பொதிந்திருக்கும் பண்பாட்டின் சாரமான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் இத்தகைய சேதிகளையே.
க. மோகனரங்கன்
சிறுகதை என்றதுமே என் மனதில் எழும் ஒரு தோற்ற வரையறையானது இறுக்கம், செறிவு, துல்லியம், ஒருமை, முடிவை நோக்கிய விரைந்த நடை என்பவை போன்ற சில அளவீடுகளைக் கொண்டிருந்தது. நாஞ்சிலின் கதைகள் பலவும் இந்த வரையறைக்குள் பொருந்தாமல் மீறியும், வழிந்தும் ஆங்காங்கே துருத்திக் கொண்டு நின்றன. கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்குத் தகவே கதையின் மொழிநடை பயின்று வரவேண்டும். கவித்துவமான முடிவும், கதை விளக்கப்படுத்தும் மேல் தளப் பிரதிக்கப்பால் ஆழமான மறைபிரதியும் கூடுதல் தகுதியாகக் கொள்ளத்தக்கவை என்பனபோல் என் வரையறைக்கு மேலதிகமான சில எதிர்பார்ப்புகளும் இருந்தன. கதாசிரியனின் பிரசன்னம் இல்லாத கதை என்பது நாஞ்சிலிடத்தில் அரிதாகவே காணக் கிடைப்பது. தவிரவும் அவருடைய கதாபாத்திரங்கள் மண்ணில் காலூன்றி எதார்த்தத்தில் அடிவைத்து நடக்கிறவர்கள். அவர்களால் தங்களது எண்ண விசாரங்களைத் தத்துவார்த்த தளங்களுக்கு நகர்த்தவோ, நம்மால் அவரது கதைகளிலிருந்து நுட்பமான மறைபிரதிகளைப் பெறவோ முடியவில்லை. எனவே அன்றைய அவ்வாசிப்பில் என்னை ஈர்த்தது அவருடைய மும்பை அனுபவத்தையொட்டிய சில கதைகள் மாத்திரமே. மற்றபடி அவர் ஒரு மரபான கதை சொல்லி என்ற மனப்பதிவே என்னிடம் தங்கியிருந்தது.
'எனது சிறுகதைகளின்மீது எனக்கிருக்கும் அபிப்பிராயம் ஒரு போதாமை; ஒரு நிறைவின்மை' என்று குறிப்பிடும் நாஞ்சில் நாடனுக்கு, வாழ்க்கை தனக்குக் கொடையளித்த அனுபவங்கள் தானுணர்ந்து உள்வாங்கிக்கொண்ட விதத்தில் எழுதிச் செல்லுதல் என்பது தனக்கு உவக்கும் பணி என்பதைத் தாண்டி தனது எழுத்துக்கள் குறித்து ஊதிப் பெருக்கப்பட்டப் பிரமைகளோ (அ) கழிவிரக்கத்துடன் கூடிய தடுமாற்றங்களோ கிடையாது. தனிப்பட்ட வாழ்வில் தானடைய முடியாத உயரங்களைத் தன் எழுத்தின் வழி அடைந்துவிடலாம் என்ற அவாவில் தன் நிழலைத் தானே தாண்ட முயலாதவர் அவர். இந்தத் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் அவருடைய எழுத்திற்கு நல்கியுள்ள வசீகரத்திற்கும் அப்பால் அவருடைய படைப்புகள் நமக்குக் கையளிக்க விரும்பும் சங்கதி ஒன்றுண்டு. நாஞ்சில் தன் தந்தையுடனான தனிப்பட்ட உரையாடல் ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.
வயல் அறுவடையின் போது காலில் மண்ஒட்டாத, ஆனால் காலடித்தடம் பதியும்படி உலர்ந்த வயலில், ஏராளமாக நெல்மணிகள் தொளிவதைப் பார்த்து அப்பாவிடம் கேட்டேன்:
“இவ்வளவு நெல்லும் நமக்கு சேதம் தானே? இப்பிடி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய விஞ்ஞானிகள் வழி கண்டுபிடிக்கக் கூடாதா?"
அப்பா சொன்னார், "இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்? நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மை சுத்திக் காக்கா, குருவி, எலி, பாம்பு, தவளை, புழு, பூச்சி எல்லாம் சீவிக்கணும். அதை மறந்திரப்பிடாது."
வாழ்வைத் தொடர் ஓட்டப்பந்தயமாகக் கருதித் தமக்கான இடத்தை அடைவதற்காகப் பிறரை முந்திக்கொண்டு ஓடும் நம் தலைமுறையினர் மறந்துவிட்ட அல்லது நினைவுபடுத்திக் கொள்ள விரும்பாத சேதி இது. நாஞ்சிலின் கதைகள் அளிக்கும் இலக்கிய அனுபவத்திற்கும் மேலாக நான் மதிப்பது அவரது கதைகளில் உள் பொதிந்திருக்கும் பண்பாட்டின் சாரமான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் இத்தகைய சேதிகளையே.
க. மோகனரங்கன்
Read more from Nanjil Nadan
Panuval Pottruthum Rating: 0 out of 5 stars0 ratingsNathiyin Pizhaiyandru Narumpunal Inmai Rating: 0 out of 5 stars0 ratingsEnbilathanai Veyil Kayum Rating: 0 out of 5 stars0 ratingsEttuthikkum Madhayaanai Rating: 0 out of 5 stars0 ratingsMithavai Rating: 0 out of 5 stars0 ratingsKaavalan Kaavaan Enin Rating: 0 out of 5 stars0 ratingsKhan Shahib Rating: 0 out of 5 stars0 ratingsMamisap Padaippu Rating: 0 out of 5 stars0 ratingsSathuranga Kuthirai Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Saalaparinthu...
Related ebooks
Ranga Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Ainthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsImai Nadanam Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Oorpidaari Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratingsTheethum Nandrum Rating: 0 out of 5 stars0 ratingsMeetchi Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 4 out of 5 stars4/5India Gate Rating: 0 out of 5 stars0 ratingsKaaladheethathin Suzhal Rating: 0 out of 5 stars0 ratingsProject AK Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Malar Rating: 4 out of 5 stars4/5Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Pootha Veli Rating: 0 out of 5 stars0 ratingsKaakka Choru Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsAndru Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsOru Mudivin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsArivippu Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Pugaiyin Kallarai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Saalaparinthu...
Rating: 0 out of 5 stars
0 ratings
0 ratings0 reviews
Book preview
Saalaparinthu... - Nanjil Nadan
UV^ book_preview_excerpt.html ][oב+' 8N`/OA?@ٌō-*eoPR2l3Kû/3bɲ:3E6ɞԩW_9٣=g/oqk͝=̓>}_>nmuu[Mojv[-nm=uOoqC[϶v?y3}dw7>yD;uӺ0&~ n|Qn볭/~ZYvOtRcj<_w˸l_'KUt%TKv~nڂ =NuyQ0Ihiv'κ9OMeIX~tB8;f}G$λDiI:Ӫ)[G4tl;<I鰶]w+/ixɿyv6ҪɑSȺ{]%Y0H 3Va5ȴ[~k
_'e-49"uNoxFڑ6en+WIyƬJnk,T +7vۤrGi/ل7{ݏWdn`cx};{?s,Ty/N\uƤKv?_~MOChA]h$1ooiC`-$D{^9̸-@hVi(:';j<YtoGH2>wVMMa؛vq6;N,ᢛ,
z9?l+ ?U8F2Qa^Y )z[@%$#$xAnxv}s\mFPxoA)@#>±0229KZVbWT$F2&Kǡrs%8c;uu02+:?DGdn첑KFwαV%;a&uH