Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kilai Nila
Kilai Nila
Kilai Nila
Ebook109 pages19 minutes

Kilai Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிளைநிலாவில் எனக்குப் பிடித்த வார்த்தைகளை எனக்குப் பிடித்த வரிசையில் வைத்திருக்கிறேன். உள்ளத்தில் உள்ளதை உண்மையாகச் சொல்லி இருக்கிறேன்.

எது இலக்கியம்? இதற்குப் புதிய விடை கண்டாக வேண்டும்.

இன்றைய சமூக அவலங்களை, அடிமைத் தனங்களை, நிலைதடுமாறும் நிலைகளை இலக்காகக் கொண்டு இயம்புவதுதான் என் கவிதை; பாடுபொருள் களம் எல்லாம்.

Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580118002046
Kilai Nila

Related to Kilai Nila

Related ebooks

Reviews for Kilai Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kilai Nila - Iyyaru S. Pugalendi

    http://www.pustaka.co.in

    கிளை நிலா

    Kilai Nila

    Author:

    அய்யாறு ச. புகழேந்தி

    Iyyaru S. Pugalendi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/iyyaru-s-pugalendi
    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.
    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
    பொருளடக்கம்
    அம்மா!
    பாரதியில் தீர்க்க தரிசனங்கள்
    தவம்
    கோலங்கள்
    நாங்கள் இழிகுலத்தோர். நீங்கள்...?
    அண்ணலே
    உனக்குத் தெரியுமா?
    மழை
    மானிட சமூத்திரம் நூல் என்று கூவு
    மரங்களைப் பாடுலோம்
    இளைய பாரதமே!
    தோழனே!
    காவிரியே வா! வா!
    காசு பேசுது…
    அறிவுடைமை
    கனல்…
    மலரே, முனதில் உறுதிகொன்…
    குப்பைத் தொட்டிலிருந்து ஒரு கடிதம்…
    என்னை எனக்குப் பிடிக்கும்
    புத்தகங்களே! புத்தகங்களே!
    படிக்காத மேதை
    பெருமை
    அலைகள்
    விளையும் பயிரே!
    உழைப்பைப் போற்று
    எனக்குப் பிடித்தவை!
    பேசும் கவை!
    ஹைக்கூ
    பெண்ணுக்கு!
    எது?
    ஹைக்கூ
    கவியரசு கண்ணதாசன்

    கிளை நிலா

    அணிந்துரை

    எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

    உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாக, உரத்த சிந்தனைகளை மக்களுக்கு உரைக்கும்படி உதிர்ப்பதால், ஊர்க்குருவியாக இருப்பதாகத் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர் அய்யாறு ச புகழேந்தி, பருந்துப் பார்வையால் மக்களை, சமூகத்தை, தேசத்தைப் பார்த்து உணர்ந்த உண்மைகளை உணர்ச்சியுள்ள கவிதைகளாக்கியிருக்கிறார்.

    அய்யாறு புகழேந்தியின் கவிதைகள் சூடான விமர்சனங்களாகவும், ஒளியூட்டும் சிந்தனை வீச்சுக்களாகவும், வளமும் நலமும் நாடும் நல்லெண்ணங்களாகவும் அமைந்துள்ளன. மகாத்மா காந்தியைப் போற்றும் கவிஞர் காந்தி வழியைப் பின்பற்றாத தலைவர்களின் போக்கை உள்ளது உள்ளவாறு சுட்டுகிறார். ‘தேசம் வேடம் போடுவதால், தினந்தோறும் பொய்முகங்கள்’ எங்கும் காணப்படுவதை அவரது கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன.

    மகாகவி பாரதியை வணங்கும் கவிஞர், பாரதியின் குறிக்கோள்களையும் அவரின் ஆசைகள் - கனவுகள் - லட்சியங்களிலிருந்து பெரிதும் முரண்பட்டு வாழும் மக்களின் தன்மைகளையும் விவரிக்கிறார், உள்ளத்தில் தைக்கும் விதத்தில்;

    'நீ பராசக்தியிடம் / காணி நிலம் கேட்டாய் - எங்கள் / தலைவர்கள். மனிதர்கள் / பாரத மாதாவிடம் / பினாமி நிலம் கேட்கிறார்கள்.

    'ஒன்றுமேதராதபோது கூட / ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ / என்று நீ/ இறைவனுக்கு நன்றி கூறினாய்.

    எங்கள் மனிதர்கள்எத்தனை / கோடிவந்தாலும் – பதுக்கி / எதுவுமே இல்லாதது போன்று / உதட்டைப் பிதுக்கிக் காட்டுகிறார்கள் பாரதி’

    என்று மகாகவி பாரதியிடம் முறையிடுவது போல், நாட்டின் சீர்குலைவை உணர்த்துகிறார் புகழேந்தி.

    இளைய பாரதத்தின் நிலைமை கவிஞர் புகழேந்தியின் உள்ளத்தில் வேதனை ஏற்படுத்துகிறது. ‘துடிப்புள்ள இளைஞனின், விரக்தியில் விரிந்த வாழ்க்கைக் கிழிசல்கள், படிப்புள்ள இளைஞனின் பாதை மாறிய பயணங்கள்’ அவர் உள்ளத்தை உறுத்துகின்றன. இளைஞர்களுக்கு நல்லெண்ணத்தோடு யோசனைகள் கூறுகிறார் கவிதைகள் மூலம்.

    அறப்போராட்டம் என்று

    அரசுப் பேருந்துகளை

    அடித்து நொறுக்குகிறாய்!

    உள்ளத் தூய்மையின்றி

    ஊர்வலம் பல நடத்துகிறாய்

    கண்டனப் பேரணி என்று

    உன் கடமைகளை மறக்கிறாய் - மறைக்கிறாய்!

    வளரும் இந்தியாவை - மேலும் வளரவிடு

    தேயும் தமிழ்நாட்டை மேலும் தேயவிடாதே!

    வாழும் காலத்திலேயே வான் புகழ் எய்து!

    நம்பிக்கை கொள்

    இன்னும் இருக்கிறது வாழ்க்கை.

    இல்லை-இனிமேல் தான் இருக்கிறது வாழ்க்கை!’

    என்று அவர் அறிவுறுத்துகிறார்.

    அனைவரும் தன்னம்பிக்கை அவசியம் தேவை. ‘தன்னம்பிக்கைப் பூக்களைத் தன்னகத்தே கொண்டு, வாழ்க்கையில் வெற்றிப்

    Enjoying the preview?
    Page 1 of 1