Yaathumaagiye…
()
About this ebook
காகிதப்பசி, குழலாகி நான், கவிதைத் தொகுப்பினைத் தொடர்ந்து "யாதுமாகியே..." எனும் கவிதைத் தொகுப்பினைத் தங்கள் இரசனைக்கு விருந்தாக்குவது மிகுந்த களிப்பைத் தருகிறது. இந்த கவிதைத் தொகுப்பானது எனது பல்வேறுபட்ட எண்ண ஓட்டங்கள் தந்த குழந்தை, எதிர்பார்ப்புகளின் ஏக்கம், கனவுகளின் மீதான காதல், படைப்புலகில் விதைக்கப்பட்ட விதையாகும். இந்த நூலானது தாயையும், தாய்மொழியாம் எம் தமிழையும் போற்றும் வண்ணத்திலும், எண்ணத்திலும் படைக்கப்பட்டது. குறுகிய காலத்தில் பல்வேறு கவியரங்கங்களை அலங்கரித்து பல விருதுகளை எனக்குப் பெற்றுத் தந்த கவிதைகளை இந்த நூலில் தங்கள் முன் பந்தி வைத்துள்ளேன்.
Related to Yaathumaagiye…
Related ebooks
Verin Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsManam Kamazhum Thirumaraigal Rating: 0 out of 5 stars0 ratingsValaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsEngey Sendrullathu Andha Pattampoochi...? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Muthaleedu Rating: 0 out of 5 stars0 ratingsVerai Thedi Vantha Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsGangaiyai Maariya Kinaru Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Muran Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Kambarin Kaatchi, Viliyin Maatchi, Sanga Pulavargalin Aatchi! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalum Veeramum Rating: 0 out of 5 stars0 ratingsNoyyalin Kanneer Rating: 0 out of 5 stars0 ratingsManam Maratha Kathamba Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKuzhalaagi Naan… Rating: 0 out of 5 stars0 ratingsKaiyoppam Rating: 4 out of 5 stars4/5Kallil Kasintha Thulikal! Rating: 0 out of 5 stars0 ratingsKattu Nerinji Rating: 0 out of 5 stars0 ratingsManam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratingsSinthaiyil Thulirthavai Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsMoongilisai Rating: 0 out of 5 stars0 ratingsUraintha Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsEllu Vayal Pookkaley Rating: 0 out of 5 stars0 ratingsVirpanai Pookal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Varudum Vizhuthu... Rating: 0 out of 5 stars0 ratingsMeengal Urangum Kulam Rating: 0 out of 5 stars0 ratingsKavithaiyil Nanaintha Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsMella Thirantha Mathakugal Rating: 0 out of 5 stars0 ratingsMakizha Malargal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Yaathumaagiye…
0 ratings0 reviews
Book preview
Yaathumaagiye… - K. Manivannan
https://www.pustaka.co.in
யாதுமாகியே...
Yaathumaagiye…
Author:
க. மணிவண்ணன்
K. Manivannan
For more books
https://www.pustaka.co.in/home/author/k-manivannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அணிந்துரை
வாழ்த்துரை
வாழ்த்துரை
உங்களுக்குள் யாதுமாகிட நான்…
என் அன்னை
அவ்வை மொழி... அஃதே நம் மொழி...!
உறவுகளை மேம்படுத்துவோம்
கவிஞனாக வேண்டி
குடும்பங்கள் ஒற்றுமைக்கு காரணம் மூத்தோர்களே...
கலாம் ஒரு சகாப்தம்
கண்ணில் தெரியும் கனவுகள்
சொல்லத்தான் நினைக்கிறேன்...!
நிலவே நீ...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
வயலோசை…
பாரதி...
காலங்களில் அவள் வசந்தம்
சித்திரையே செந்தமிழே வாழி
சோம்பித்திரியேல்
தமிழனின் பெருமை
நிவேதிதை
பல்லாண்டு தமிழ் மொழியை பரிதவிக்க விடலாமா...?
புதுயுகம் படைப்போம்
விடியலைத் தேடி
சுடும் நிலவு…! சுடாத சூரியனும்…!
தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்...
பெண்கள் நாட்டின் கண்கள்
அவளும் நானும் அமுதும் தேனும்
எங்கும் தமிழெனச் சங்கே முழங்கு...
சொல்விதைக்க ஆசை மச்சான்
தமிழ்ச்சங்கம்
பஞ்சமில்லா வாழ்வு…
ஆசை
காதலியே...
வேளாண்மை
கனவு
அறிவை அறிவோம் ஆற்றலை உயர்த்துவோம்
நான்
வாழ்க்கை
சந்தர்ப்பம்
துளிப்பா
மறையாத நினைவுகள்
இளமையெனும் பூங்காற்றே
கிராமத்து பெண்
காதல் மனைவி
நிலையிதுவோ
குடி அரசு
கல்வி
அரசங்கம்
கைபேசி
நீயின்றி நானில்லை
தாவணிப் பைங்கிளியே
பதவி
நேர்பட பேசு
திணை
வீரம் விளைஞ்ச மண்
அம்மித் துவையல்...
ஆம்
விதி
மழை
நிலவே
காதல்
அந்தி
காதல் சொல்ல வருவாயா.
விழி
கலைஞரும் இலக்கியமும்
வாழ்வில்
நீ
சட்டை
புத்தகம்
இலையுதிர் காலம்
கவிதை
என் தமிழன்
எது எது...
மழையே
ஆச்சர்யக்குறி? கேள்விக்குறி!
அவலம்
நிலை
பெண்மையே நீ!
கருப்பு நிறத்தழகி
கிராமத்து காதல்
தாவணிக்குடைக்குள் காதலின் மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
கண்மணியே வா வா...!
உயிரே நீ
யாதுமாகி நின்றாள்…
அணிந்துரை
வணக்கம்,
தமிழகம் புதுவை என பல இடங்களுக்கு நான் கவியரங்கம் செல்லும் போதெல்லாம் தமிழனுக்கே உரிய நிறம் குணம் பார்வையுடன் ஒருவரை அடிக்கடி காண நேரிடும். அவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர்; கல்லூரியில் பணியாற்றி வருபவர்; அவரது முகநூல் கவிதைகளில் உலக நாடுகளின் பிரச்சினைகளையும் கொண்டுவரும் பாங்கினைக் கண்டு நான் வியந்ததுண்டு. மிகவும் அமைதியாக அதேநேரத்தில் அழுத்தமாக ஆணித்தரமாக தனது வாதங்களை வைப்பவர். அத்தகைய இளைஞரின் கவிதைத் தொகுப்பு என் கைகளில் யாதுமாகியே… என்ற தலைப்பின்கீழ் ஒருநாள் திடீரென திணிக்கப்பட்டது, எனது அணிந்துரை வேண்டி. ஒரு பக்கம் பயமும் மறுபக்கம் மகிழ்வுடனும் கைகளில் வாங்கிக் கொண்டேன்.
திரு க.மணிவண்ணன் எனும் அந்த கவிஞனின் நூலுக்குள் செல்கிறேன். அன்னையில் தனது முதற்கவிதையைத் தொடங்குகிறார்; அன்னையிடமே தனது இறுதி கவிதையையும் நிறைவு செய்கிறார். என்ன ஒரு அரும் பண்பு. அன்னைக்குச் செலுத்தும் மரியாதை. இந்த நல்ல குணத்திற்காகவே இவரது புத்தகத்தை நாம் ஒருமுறை படிக்கலாம்.
பெரும்பாலான கவிதைகள் கவியரங்கத்தில் வாசித்த கவிதைகளாக உள்ளன. தனது கவிதைகளை ஆவணப்படுத்துதலே ஒரு கவிஞனின் தலையாயப் பணியாக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தும் அதுவே.
உயிர்வருக்கையில் இவர் அன்னையை அழகாக வர்ணனை செய்யும் பாங்கு பாராட்டுக்குரியது...
தமிழை, தமிழனை, பாரதியை,