Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavithaiyil Nanaintha Kaatru
Kavithaiyil Nanaintha Kaatru
Kavithaiyil Nanaintha Kaatru
Ebook125 pages15 minutes

Kavithaiyil Nanaintha Kaatru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மேசைக் கவிதைகள், மேடைக் கவிதைகள் என இருவகை உண்டென்பார் எனது பேராசிரியர் கவிஞர் பாலா. அவ்வகையில் இவை என் மேடைக் கவிதைகள். கவியரங்கங்களில் கண்விழித்த கவிதைகள். களம் கண்ட வேங்கைகளைப் போல கவியரங்கம் எனும் பல களங்களைக் கண்டுவந்த கவிதைகள். குரல்கள் வழியே பயணித்து செவிகளைச் சென்றடைந்த கவிதைகள். அரங்கிருந்து கேட்போரின் தலையாட்டும் ரசனைகள், ஆரவாரக் கைதட்டல்கள், வென்ற பாராட்டுக்கள், அமைதியோடிருந்த ஆமோதித்தல்கள், ஒரு உணர்ச்சியுமற்ற முக பாவனைகள், எனப் பல அனுபவங்களைப் பெற்றுவந்த கவிதைகள்.

இவைகளில் அதீத கவித்துவத்தைத் தேடியலைந்து அது கிடைக்காமல் போனால் நான் பொறுப்பல்ல. மெட்டுக்கும், காட்சிக்கேற்றார் போலும் திரைப்பாடலெழுதுவதைப்போல தரப்படுகிற அல்லது திணிக்கப்படுகிற தலைப்புக்கா எழுதப்படுகிற கவிதைகள் இவை.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116002043
Kavithaiyil Nanaintha Kaatru

Read more from Thangam Moorthy

Related to Kavithaiyil Nanaintha Kaatru

Related ebooks

Reviews for Kavithaiyil Nanaintha Kaatru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavithaiyil Nanaintha Kaatru - Thangam Moorthy

    http://www.pustaka.co.in

    கவிதையில் நனைந்த காற்று

    Kavithaiyil Nanaintha Kaatru

    Author:

    தங்கம் மூர்த்தி

    Thangam Moorthy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/thangam-moorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மலரினும் மெல்லியது

    காற்று

    நான் காணும் பாரதி

    மென்மைக் காதல் (சீதை)

    காகிதம் ஓர் ஆயுதம்

    பணம்

    காகித ஆயுதங்கர்

    புத்தகம்

    காலங்களில் வசந்தம்

    மழலைப் பருவம்

    ஒரு எளிய கவிதை பொன்னாடை

    வெளிப்படும் வேளை

    தமிழ் நம் வேர்

    பண்பாட்டுப் பொங்கல்

    மூச்சுத் தினறும் சரசுவதி தேவி

    ஒற்றுமை வேற்றுமை வரைக

    நதிகனின் மாநாடு

    மலர்களின் மாநாடு

    ஆயுதங்கனின் மாநாடு

    பொங்கட்டும் புத்தாண்டில் = தாயகப் மற்று

    சூர்ப்பனகையுடன் ஒரு சுற்றுப்பயணம்

    காகிதம் ஓர் ஆயுதம்

    புதுக்கோட்டை

    கவிதையில் நனைந்த காற்று

    கவியரங்கக் கவிதைகள்

    தங்கம் மூர்த்தி

    கவிஞர் கந்தர்வனுக்கு...

    மேசைக் கவிதைகள், மேடைக் கவிதைகள் என இருவகை உண்டென்பார் எனது பேராசிரியர் கவிஞர் பாலா. அவ்வகையில் இவை என் மேடைக் கவிதைகள். கவியரங்கங்களில் கண்விழித்த கவிதைகள். களம் கண்ட வேங்கைகளைப் போல கவியரங்கம் எனும் பல களங்களைக் கண்டுவந்த கவிதைகள். குரல்கள் வழியே பயணித்து செவிகளைச் சென்றடைந்த கவிதைகள். அரங்கிருந்து கேட்போரின் தலையாட்டும் ரசனைகள், ஆரவாரக் கைதட்டல்கள், வென்ற பாராட்டுக்கள், அமைதியோடிருந்த ஆமோதித்தல்கள், ஒரு உணர்ச்சியுமற்ற முக பாவனைகள், எனப் பல அனுபவங்களைப் பெற்றுவந்த கவிதைகள்.

    இவைகளில் அதீத கவித்துவத்தைத் தேடியலைந்து அது கிடைக்காமல் போனால் நான் பொறுப்பல்ல. மெட்டுக்கும், காட்சிக்கேற்றார் போலும் திரைப்பாடலெழுதுவதைப்போல தரப்படுகிற அல்லது திணிக்கப்படுகிற தலைப்புக்கா எழுதப்படுகிற கவிதைகள் இவை.

    அதையும் மீறி அடடே இது நல்லாயிருக்கே என்று நீங்கள் உணர்ந்தால் அது அன்றைய சூழலின் வெற்றியே தவிர எனக்கதில் பெரும் பங்கொன்றுமில்லை. கவியரங்கங்களில் வெற்றிபெறுதல் அவ்வளவு எளிதல்ல. அங்கே பரிமாறுவதைத்தான் ருசிக்கவேண்டும் என்ற நிலையில்லை. ருசியறிந்து பரிமாறியாக வேண்டும். சுவையில் குறையிருந்தால் வெளிநடப்பு செய்துவிடுவார்கள். சுவையான வரிகளும், சரியான வாசிப்பும் வாய்க்காவிடில் அரங்கத்தில் நாம் இருந்தும் இல்லாமல் போகிற ஆபத்து நேரிடலாம். வேடிக்கையாகச் சொல்வதெனில் கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும். ரசனை மிகுந்த சுவைஞர்கள் கூடவேண்டும். அவர்கள் சோர்ந்து போகாத நேரத்தில் நம் வாசிப்பு நிகழவேண்டும். அரங்கச்சூழல் அறிந்து அதையொட்டி அப்போதே ஏதேனும் எழுதி ஈர்க்கவேண்டும். நல்ல வரியை வாசிக்கிறபோது அந்தப் பகுதியின் சங்கு ஒலிக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் பல சூட்சுமங்களோடுதான் கவியரங்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

    கவியரங்கம் ஒரு கவிஞனுக்கு அவசியம் தேவைப்படுகிற அனுபவம். நல்ல கவிதைக்கான வரவேற்பை கண்ணெதிரே காணலாம். ஒலிபெருக்கி வழியே பயணிக்கும் குரல் செவிகளைச்

    Enjoying the preview?
    Page 1 of 1