Kanaiyazhi - October 2021
By Kanaiyazhi
()
About this ebook
Read more from Kanaiyazhi
Kanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - Septembet 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2021 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanaiyazhi - October 2021
Related ebooks
Manaiviyanen Magaley! Rating: 0 out of 5 stars0 ratingsImai Nadanam Rating: 0 out of 5 stars0 ratingsVidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsKayaladum Nadhi Rating: 5 out of 5 stars5/5Vergalai Varudum Vizhuthu... Rating: 0 out of 5 stars0 ratingsNinaivin Aazhiyil Alaiyum Kayalkal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsKuzhalaagi Naan… Rating: 0 out of 5 stars0 ratingsNetri Velicham Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaagiye… Rating: 0 out of 5 stars0 ratingsNaragathin Uppu Kaattru Rating: 0 out of 5 stars0 ratingsKaiyoppam Rating: 4 out of 5 stars4/5சுதந்திர தேவி: பாரத வரலாற்று குறுங்காவியம் Rating: 0 out of 5 stars0 ratingsKannathil Muthamittal Rating: 0 out of 5 stars0 ratingsKaalathai Vendra Kavignan Kannadhasan Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Kambarin Kaatchi, Viliyin Maatchi, Sanga Pulavargalin Aatchi! Rating: 0 out of 5 stars0 ratingsVeenaikku Vekkam... Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Theriya Poovin Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Pugaiyin Kallarai Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsValaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsGangaiyai Maariya Kinaru Rating: 0 out of 5 stars0 ratingsIndia Ilainane! Un Kadamaigal Ivai!! Rating: 0 out of 5 stars0 ratingsMeengal Urangum Kulam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanaiyazhi - October 2021
0 ratings0 reviews
Book preview
Kanaiyazhi - October 2021 - Kanaiyazhi
https://www.pustaka.co.in
கணையாழி அக்டோபர் 2021
மலர்: 56 இதழ்: 07 அக்டோபர் 2021
Kanaiyazhi October 2021
Malar: 56 Idhazh: 07 October 2021
Author:
ம.ரா
Ma. Raa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
வளரும் தமிழுக்கு வாழ்க்கை கிடைத்திருக்கிறது!
உண்டு களித்து
உறங்குவதில் இல்லை.
அடுத்தவர் வாழ்க்கைக்கு
ஆதரவாக இருப்பது.
கற்றுக்கொள்ளவும்
தலைமுறைகளுக்குக்
கற்றுக் கொடுக்கவும்
கருவியாக மட்டும் இல்லாமல்
உலகைப் பார்க்கக்
கற்றுத் தருகிற
கண்ணாகவும் இருக்கிறது மொழி!
மொழி
நம்பிக்கை, விழுமியங்கள்
மதிப்பீடுகளின் கொள்கலன்!
தனக்குத் தானே நீதி சொல்ல
வந்து நிற்கும் தேவதை!
நம்மோடு நாம் பேசிக்கொள்ளவும்
நம் மனதுக்கு நாமே எடுத்துச் சொல்லவும்
தோழமை கொண்டது மொழி!
தாயின் வயிற்றில் கிடைத்த
சூடு தணியாமல்
வாழ்நாள் முழுதும் நம்மை
வளர்க்கிறது மொழி!
மனித குலம் வளர்ந்த விதம்
வாழ்க்கைமுறைகளைச்
சிந்துவெளி
ஆதிச்சநல்லூர் தொடங்கி
சிவகளை கீழடி என்று
வரலாற்றின் தொன்மையைக்
காலப் பெட்டகம் போல
பூமி வயிற்றில்
காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது
தமிழ்!
தொன்மையில் மட்டும் இல்லை
மொழியின் பெருமை!
வருடக் கணக்கில் இல்லை
வாழ்வின் பெருமிதம்!
இணக்க வாழ்க்கை
இலக்குகளைத் தேடிப் போக
வழித்தடம் காட்டும் வரைபடமாக
எப்போதும் பயன்படும் இயல்புகள் மட்டுமே
தலைமுறைகள் கொண்டாடும்
தகுதிகள் ஆகின்றன.
கருவிகள் மனிதர்களைக்
கையாள்வது இல்லை
கையில் எடுப்பவரைக்
கருவிகள் மாற்றுவதில்லை!
விருப்பத் தேர்வுகளை வரையறுப்பதில்
வாய்ப்பு இல்லை கருவிகளுக்கு.
மொழி, கருவி இல்லை
உயிர்! உணர்வு!
மனித உயிரின் அடையாளம்
பேச்சும் மூச்சும்!
பேச்சுக்கு மொழி வேண்டும்
மொழியின் உயிர் பேச்சில் இருக்கிறது!
வழக்கில் இறந்த மொழி
வாழ்க்கையை இழக்கிறது!
தமிழ் மொழிக்குக் காவி ஏற்ற
கனவு கண்டார்கள்!
மும்மொழித் திட்டம் என்று சொல்லித்
தமிழின் பயன்பாட்டு
எல்லைகளைக் குறைக்கப்
புதுவழி கண்டார்கள்!
பக்தி இலக்கியங்களைப்
பாராட்டிக் கொண்டே
வழிபாட்டில் தமிழை
வரவிடாமல் செய்தார்கள்!
செம்மொழி விருதுகளை
முடக்கிப் போட்டார்கள்!
தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களிலும்
இந்தியை வளர்க்க முயன்றார்கள்!
இதோ
மொழியின் அருமை தெரிந்த
முதல்வர் கிடைத்திருக்கிறார்.
மறைந்த எழுத்தாளர்களுக்கு
மணிமண்டபம்! அரசு மரியாதை!
பாரதியார் நினைவுக்குப்
பாராட்டும் அறிவிப்புகள்!
ஆலயங்களில் தமிழ்!
அரசுப் பணியாளர் தேர்வில்
தமிழுக்கு இடம் தந்திருக்கிறார்!
அரசியல் கொரோனாவிலிருந்து
செம்மொழி நிறுவனத்தைக்
காப்பாற்றி இருக்கிறார்!
பத்தாண்டுகளாக முடக்கப்பட்டிருந்த
கலைஞர் செம்மொழி விருதுகளைத்
தகுதி உடையவர்கள் பெற
வழி திறந்திருக்கிறார்.
விடுபட்ட பத்தாண்டுக்கும்
விருதினை அறிவித்திருக்கிறார்
தமிழ் அறிஞர்கள் பத்துபேர்
ஒரே நேரத்தில் விருது பெறும்
காட்சிக்கு வித்திட்டிருக்கிறார்!
இதோ
ஜெயகாந்தன் மறைந்து
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு
சாகித்ய அகாதமி ஃபெல்லோ
இப்போதுதான்
மீண்டும் தமிழுக்குக் கிடைத்திருக்கிறது!
தமிழை
மதிப்பிழக்கச் செய்யும்
மனப்பிறட்சி கொண்டவர்முன்
செல்லாத பணத்திற்காக
சாகித்ய அகாதமி விருது பெற்று இருக்கிறார்
எழுத்தாளர் இமையம்!
1967-இல் திமுக ஆட்சிக்கு வந்த போது
அட்டைப்படத்தில் அறிஞர் அண்ணா
சிரித்துக் கொண்டிருக்க
தமிழ் நாட்டில்
அமைதியான புரட்சி என்று
கணையாழி
வாழ்த்திப் பாராட்டி இருக்கிறது!
வளரும் தமிழ் என்று அப்போதே
தொடர் எழுதியிருக்கும்
கணையாழி சிறப்பாசிரியர்
இ.பா. அவர்களுக்கு
வாழ்நாள் விருதாக
சாகித்ய அகாதமியின் ஃபெல்லொ!
இப்போது!
இதோ பத்தாண்டுகளுக்குப் பிறகு
ஆட்சிக்கு வந்திருக்கிறது
மீண்டும் திமுக!
வாடிக் கொண்டிருந்த
தமிழை
வளரும் தமிழாக்கிட
வாழ்க்கை தந்திருக்கிறார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஆம்!
வளரும் தமிழுக்கு
வாழ்க்கை கிடைத்திருக்கிறது!
அன்புடன்
ம.ரா
***
உள்ளடக்கம்
அஞ்சலி- வேத நாயக்
கவிதை - சன்மது
கவிதை - ஆர். வத்ஸலா
சிறுகதை - கன்னடத்தில்: சிவகுமார் மாவலி
குறுங்கதைகள் – ஜீவகரிகாலன்
4 குறுநாடகம் - பசு.தனபாலன்
கவிதை - கனகா பாலன்
சிறுகதை - டி.வி.ராதாகிருஷ்ணன்
கவிதை – நட்சத்திரா
நினைக்கப்படும் - மரன்
கட்டுரை - வாசுதேவன் அருணாசலம்
நினைவேந்தல் - மு. இராமசுவாமி
கவிதை - நல முத்துகருப்பசாமி
சிறுகதை - சித்ரூபன்
கட்டுரை - விஜயராணி மீனாட்சி
கட்டுரை - ஈசு
கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி
***
அஞ்சலி- வேத நாயக்
vedha.jpgபிரான்சிஸ் கிருபா
பறவைகளற்ற விடியலில் நெருப்பின் உயர்ந்து எழுந்து தாழ்ந்த பிழம்பு
இந்நாளுக்கென்று அருளப்பட்ட இத்தீங்கனியின் தேனும் சுவையும் ஒளியும் ஒரு வாழ்வுக்கே போதுமா? - கன்னி
இப்பிரபஞ்சம் மிகப் பரந்தது. நாம் ஏதாவதொன்றைத் தேடுகையில் குறிப்பிட்ட அது ஒன்று மட்டும் கையிலிருந்து விடுபட்டுப் போவதுண்டு. நாமறியாமலேயே வெளியிலிருப்பதாக நினைப்பதால் ஏற்படும் விபத்து அது. அதைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாதவரை, அதுகுறித்த விவரணைகளை அடுக்காமலிருக்க முயல்வதே அதை இலேசாகப் புரிந்து கொள்வதற்கான எத்தனமாகும்.
புறவயமான வினைகள் சொற்ப அளவுகளிலேயே பாதிப்பை ஏற்படுத்தும். தாங்கொணாத அழுத்தங்கள் அகத்தில் மோதுகையில் திசைதவறி ஸ்தம்பித்து நிற்றலின்போது நிகழ்த்திக் கொண்டிருந்ததை எவ்விதமாயும் விளிக்கலாம், விளக்கலாம். கலையனுபவம் செவ்வியலாக உருக்கொள்கையில் அதன் பிரும்மாண்டத்தின் முன்புறம் மண்டியிடத் தோன்றும். மூடிய தனியறைக்குள் நாதங்கியின் உரசல் ஒலி நம் மன இருப்பைப் பொறுத்து பதறவோ, மகிழ்ச்சி கொள்ளவோ செய்ய இயலும்.
இன்மை(Absence) எனப்படுகின்ற ஒன்றின் இல்லாமை பற்றிய இருக்கின்றோம் என்பதில் ஏற்றும் இருப்பு(Existence) நிலையை உணர்தல் பற்றிய விவரக் கையேடாக மரணம் பற்றிய ஆழ்மன இறுக்கத்தின் மேல் பொங்கிப் பிரவகித்து தளும்பும் கண்ணீர் குறிப்பாய் உருவகிக்கலாம் இதை.
மானுடத்தின் வற்றாத ஜீவசுனை கலை வெளிப்பாடு. சங்கேதங்கள் ஒலிக்குறிப்புகளாய், மொழியாய், எழுத்தாய் மாற்றமான பின் சுரக்க ஆரம்பித்த இச்சொல் கரைபுரண்டு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. பெரும் நெடுந்தொடர் சங்கிலியில் கிருபா எனும் கண்ணி அறுபட்டு விலகி விட்டது.
கலை வெளிப்பாடு குறித்த தேட்டமுள்ளவர்களுக்கு எளிதாகவே அகப்படுவராக இருந்தாலும் கற்பனாவாத கலைஞன் என்பதாலேயே மேட்டிமைகளால் நகர்த்தி வைத்துப் பார்க்கப்படுபவராக பொதுவாகக் கூறப்படுகிறது. பிரான்சிஸ் கிருபாவின் படைப்புகள் கற்பனாதீதக் கூறலால் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது பலரின் கூற்று. இருக்கையில், அக்கூறல் முறையில் உச்ச சாதனையினை தமிழ் படைப்புலகில் நிகழ்த்திக் காட்டியவர் என்பதற்கு அவரது கன்னி நாவல் மட்டுமே போதுமான ஒன்று.
பிரான்சிஸ் கிருபா ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்: ஏன் கவிதை எழுதுகிறாய்? யாருக்காக எழுதுகிறாய் என்று என்னையே அவ்வப்போது கேள்வி கேட்டுக்கொள்வதுண்டு. இன்றுவரை திட்டவட்டமாக எந்த பதிலையும் எட்ட முடியவில்லை. கவிதை எனக்குள் நிகழ்கிறது. இதை தடுக்கவோ நிறுத்தவோ தெரியவில்லை எனக்கு. நிகழ்ந்துவிட்டுப் போகட்டும்!
என்று.
இதன்படி தானே ஒரு எழுத்தாளன் தனது எழுத்துக்கு நெருக்கமாக இருக்க முனைய முடியும்? எழுதுகையில் இதுவரை சலிப்பு ஏற்படவில்லை. எனவே அதில் நம்பிக்கை குன்றவில்லையெனில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது என்பதில் ஏதோ ஒன்று எப்போதும் தொக்கி நின்றபடியே உள்ளதென்பதுதானே பொருள்?
243341924_3145534859014846_5936131790737856275_n.jpgவெளியிலிருந்து பார்ப்பதில் நமக்கு எவ்வாறு இது புலப்படுமெனில் அத்தகைய வழியை, வாழ்வைப் பற்றி