Kanaiyazhi - October 2020
By Kanaiyazhi
()
About this ebook
Read more from Kanaiyazhi
Kanaiyazhi - April 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - Apri 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2018 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanaiyazhi - October 2020
Related ebooks
Athu Mattum Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaala Vaanampadikal Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsThoothu Se(So)llaayo Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsPallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5கேட்கும் வரம் கிடைக்கும் வரை... Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsSambal Kanavugal...! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Rating: 0 out of 5 stars0 ratingsKakkaigalin Iravu Rating: 0 out of 5 stars0 ratingsNooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Sonnaye! Rating: 5 out of 5 stars5/5Unnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAppa Ennai Mannichuduppa Rating: 0 out of 5 stars0 ratingsAnicha Malar Rating: 0 out of 5 stars0 ratingsSeptember, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Malarntha Nesapoove! Rating: 0 out of 5 stars0 ratingsAbaya Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsKutra Thudippu Rating: 5 out of 5 stars5/5Vedhamadi Neeenakku! Rating: 5 out of 5 stars5/5Thanga Kaadu Rating: 5 out of 5 stars5/5Sri Sathya Sai Sangeerthanam Rating: 0 out of 5 stars0 ratingsNesikka Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsNandhalala Rating: 5 out of 5 stars5/5Ippadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsInba Puthaiyal Rating: 0 out of 5 stars0 ratingsEnnithunithal Vendum! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanaiyazhi - October 2020
0 ratings0 reviews
Book preview
Kanaiyazhi - October 2020 - Kanaiyazhi
http://www.pustaka.co.in
கணையாழி அக்டோபர் 2020
மலர்: 55 இதழ்: 07 அக்டோபர் 2020
Kanaiyazhi October 2020
Malar: 55 Idhazh: 07 October 2020
Author:
ம.ரா
Ma. Raa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
கணையாழி அக்டோபர் 2020
தலையங்கம் - ம.ரா.
காற்றாகி இருக்கிறார் எஸ்.பி.பி.!
கரோனா குறையவில்லை
ஆனால்
பயம் குறைந்திருக்கிறது.
ஊடகச் செய்திகளில்
வானிலை அறிவிப்பாக
மாறி இருக்கிறது!
ஆனாலும் வரக்கூடும்
புதிய பயமுறுத்தல்கள்!
எதற்காவது மக்களை
எப்போதும் பயமுறுத்திக் கொண்டிருக்க
ஊடகமும் அரசியலும்
துடித்துக் கொண்டே இருக்கும்!
பண மதிப்பிழப்பு முதல்
ஊரடங்கு வரையிலான பட்டியலில்
இப்போது இதோ!
வீதியில் நிற்கிறார்கள்
விவசாயிகள்!
விவசாயிகளை வேட்டையாடும்
சட்டங்கள்
ஜனநாயக நடைமுறைகளையும்
வேட்டையாடி இருக்கிறது!
தொழுது உண்டு பின் செல்பவர்களின்
வேட்டையில்
உழுது உண்டு வாழ்பவர்கள்!
பெரும்பான்மைக் கொடுங்கோன்மையின்
வேட்டையில்
மரபும் பண்பாடும்!
பிடிக்காத ஒன்றைப்
பிய்த்து எறியும் குரங்கு மனம்!
அடுத்தவர் சுதந்திரத்தைப்
பறித்து மிதிக்கும்
ஆதிக்க உணர்வு!
பரிணாமத்தில் மனிதன் ஆகியும்
பக்குவப்படாத ஆதி மனம்
அவ்வப்போது தலையெடுத்து
அமைதி குலைக்கும்!
எதற்கென்று தெரியாமலே
எதையாவது செய்து
எல்லோரது வாழ்க்கையிலும்
பம்பரம் சுற்றும்!
வேட்டையாடி
உயிர்களைக் கொன்று வாழ்ந்த
ஆதி மனித வாழ்க்கை
அடிமனதில் கிடக்கிறது!
வேட்டை தொடர்ந்தாலும்
உயிர்களையும் பயிர்களையும்
வளர்க்கவும் தொடங்கிய
நாகரிக வயல்களின்
விளைச்சல் கண்டு முதலில்
முல்லையில் பிறந்து
ஐந்திணையில் வளர்ந்தது இசை!
ஆழ்மனக் குரங்கையும்
பரிணாமத்தில் கொண்டுவர
பயிற்சி அளிப்பது இசை!
இசை என்பதற்குப்
புகழ் என்றும் பொருள் உண்டு!
இசை
பெயர்ச் சொல்லாகவும்
வினைச் சொல்லாகவும் வரும்
புகழ் என்பதைப் போல!
அதில்
ஒரு கனவு உலகத்தை
மனதுக்குக் காட்டும்
அதிசயம் இருக்கும்!
அது
மொழிகளுக்கும் முன்னால் பிறந்த
உணர்வுகளின் சுமை தாங்கி
ஊர்வலம் போகும்!
அது
ஓசைகள் பெற்றெடுத்த
செவி அமுது!
அது
காதுகளின் வழியே
மனதின் வர்மப் புள்ளிகளை
வசமாக்கும்!!
யார் பாடினாலும்
நம்மையும் அறியாமல்
நம் மனதையும் சேர்த்துக் கொள்ளும்!
நம்மைக் கேட்காமல்
நம் மனதும் பயணிக்கும்!
ஐம்பொறி வெற்றி கொள்ளும்
ஆற்றல் பெற்றது.!
பாரதி சொன்னார்
பாட்டினைப் போல் ஆச்சரியம்
பாரின்மிசை இல்லை என்று
பாட்டு மட்டும் அல்ல
பாடகரும் ஆச்சரியம்தான்!
மூச்சு விடாமல்
பாடுவதில் மட்டுமில்லை
பாட்டுக்கும்
மூச்சாக இருந்தவர்!
சொற்களைக் கடந்து
குரல் அதிர்வில்
உணர்வு அவிழ்க்கும்
சூட்சுமம் தெர்ந்தவர்!
அன்றைய சென்னை மாகாணத்தின்
நெல்லூர் வாசி!
கதா காலட்சேப நடிகர் குடும்பம்
அவர் பாடும்போது
குரல் உடல் அசைவுகளில்
குடும்பச் சொத்து வெளிப்படும்!
அனந்தபூர் கல்லூரியில்
பொறியாளராக விரும்பிய அவரை
இசை உலகத்துக்கு
இழுத்து வந்தது சென்னை!
கவிஞர்களைப் போல
நிலவில்
நெஞ்சம் பறிகொடுத்தவர்!
கரோனா காலத்தில்
உலகெங்கும் மக்களுக்குப்
பாடலில் விருந்தளித்தவர்!
பாடகர் எஸ்.பி.பி.
மறைந்துவிட்டார்.
வழக்கமாக
மறைந்து போனவரைக்
காலமானார் என்பார்கள்.
காலத்துக்கும் இறப்பு உண்டு
இறந்த காலம் உண்டுதானே!
ஆனால்
என்றும் மரணமில்லை காற்றுக்கு
அதுவும்
இசையில் வாழும் காற்று
எப்போதும் வாழும்.
இப்போது
காற்றாகி இருக்கிறார்
எஸ்.பி.பி.!
அன்புடன்
ம.ரா
***
உள்ளடக்கம்
நேர்காணல் - திரைக்கலைஞர் கருணாகரன்
கவிதை - கவிஞர் இலக்கியா நடராஜன்
சிறுகதை - உஷாதீபன்
கவிதை - மு. முபாரக்
கட்டுரை - தனஞ்செயன்
சிறுகதை - வாஸந்தி
கட்டுரை - மு. இராமசுவாமி
கவிதை - மிஸ்ரா ஜப்பார்
கவிதை - காரைக்குடி சாதிக்
சிறுகதை - டி.வி.ராதாகிருஷ்ணன்
கவிதை - சா.கா.பாரதி ராஜா
கவிதை - பா.தேசப்பிரியா
கட்டுரை - பா.செயப்பிரகாசம்
கட்டுரை - கவிஜி
கவிதை - சுஜா
சிறுகதை - க. அரவிந்த் குமார்
கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி
***
நேர்காணல்
கருணாகரன்.jpgஇசை மூச்சின் ஒவ்வொரு துளியிலும் எஸ்.பி.பி. - திரைக்கலைஞர் கருணாகரன்
டெய்லி ஷூட்டிங் போறப்ப காலையில ஒரு தரமாவது எஸ்.பி.பி. சார் பாட்டு கேக்குற பழக்கம். முதல்நாள் நைட் தூங்கலையோ – இல்ல டயர்டா இருந்துதோ… - எவ்வளவு டயர்டா இருந்தாலும் ஒரு பாட்டு அவரோட வாய்ஸ்ல கேட்டோம்னா அவளோ எனர்ஜிட்டிக்கா மாறிடும். அவருக்கு அப்படி ஒரு எனர்ஜி. சோகமா இருக்கும்போது அவர் பாட்டு கேட்டா அவ்வளவு ஆறுதலா இருக்கும். ரொம்ப முக்கியமா நம்ம எல்லோரையும் அட்ராக்ட் பண்ற விஷயம் என்னென்னா, ஒவ்வொரு வோர்டும் அவர் பாடுற பாட்டில லிரிக்ஸ் தெளிவா இருக்கும். லிரிக்ஸ ரசிக்க முடியும் இசையோடு சேர்த்து.
அதையெல்லாம் தாண்டி, அவர் இறந்த பிறகு தான் தெரியுது அவர் மேல அவ்வளவு அன்பு எனக்கு இருந்திருக்குன்னு. எப்பவும் நாம பேசும்போது நடிகர்கள் பேரைத்தான் சொல்வோம். ஒரு நடிகரின் ரசிகன் என்று தான் சொல்லுவோம். அவர் மறைந்த பிறகுதான் தெரியுது. அவரோட தீவிர ரசிகரா நான் இருந்திருக்கேன்னு.
அவரோட மறைவு நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்குக் கவலையா இருந்துது. மத்தியானம் சூரியன் எப்.எம்.ல ஒரு ஆடியோ கேட்டிருந்தாங்க. அது கூட பேச முடியல.
அப்புறம் அவருடைய எந்த பாட்டா இருந்தாலும் சரி. ரேடியோவில் நான் ஸ்டாப்பா அவர் பாட்டு தான் அன்னைக்கு வந்துகிட்டு இருந்துது. எந்தப் பாட்டைக் கேட்டாலும் கண்ணுல இருந்து தண்ணி வந்துகிட்டே இருந்துது. அடக்க முடியல. இவ்வளவுக்கும் அவரை நேரில் சந்தித்ததே இல்லை. அவரோடு போட்டோ எடுத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. சரண் அண்ணா ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எனக்கு க்ளோஸ் பிரெண்ட்ஸ். கொஞ்ச நாள் முன்னாடி கேட்டு இருந்தேன். எப்ப வேணும்னாலும் எடுத்துக்கலாம் வீட்டிலேயே போய் எடுத்துக்கலாம் சொல்லுங்க நீங்கன்னாங்க. ஆனா அது கடைசி வரைக்கும் நிறைவேறாமல் போச்சு.
இந்த கொரோனா நேரத்துலே கூட்டத்துல அட்டன் பண்றது அவ்வளவு ஈசி கிடையாது. ஈசி கிடையாது என்பதைவிட சேஃப்டி கிடையாது.
நியூஸ் பார்த்துக்கிட்டே இருந்தேன். நுங்கம்பாக்கம் வீட்ல ஒரே கூட்டமா இருந்துது. அதுக்கப்புறம் போகலாம்னு நினைச்சேன் அதுக்கப்புறம் தாமரைப்பாக்கம் - அந்த இடத்துக்கு மாத்திட்டாங்க. சரி மிட்நைட் போனா கூட்டம் இருக்காது என்று நானும் பிரேம்ஜியும் இன்னொரு நண்பர் இயக்குனர் ராஜாராம் மூணு பேரும் கிளம்பிப் போனோம்.
எஸ். பி. பி. சார் தூங்கிக்கிட்டு இருந்தார், அவரோட பண்ணை வீட்டுல. ஒரு அழகான தோப்புல தூங்கிக்கிட்டு இருந்தார். போய்க் கடைசியில அஞ்சலி செலுத்திவிட்டுப் பார்த்தா கொஞ்ச நேரத்துல என்னால கன்ட்ரோல் பண்ண முடியல அழுதுட்டேன். பின்னாலே திரும்பிப்பார்த்தா பிரேம்ஜி கண்ட்ரோல் பண்ண முடியாம அழுதுக்கிட்டே இருந்தான். புலம்புனான்.
எனக்கு ரெண்டு பாட்டு பாடினார். பாடி முடிச்சதும் பேமெண்ட் எவ்வளவுன்னு கேட்டாங்க. என்னங்க இவன் மியூசிக் பண்ணி இருக்கான்! எப்படி இவன் கிட்ட பேமென்ட் எல்லாம் கேட்க முடியும்னு, என்னைப்பார்த்து நீ நல்லா வாடான்னு சிரிச்சுகிட்டே சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டார்.
யார்கிட்ட கேட்டாலும் எந்த ஒரு விமர்சனமும் இல்லாம ஒருவர் கேரியரை கம்பிளிட் பண்ணிட்டு போயிருக்கார்னு சொல்றாங்க.. ஆல் ஓவெர் இந்தியா எல்லா மொழி இண்டஸ்ரிலேயும் அவர் பண்ணியிருக்கார். அவரைப் பிடிக்காதுன்னு ஒருத்தன் சொன்னதில்லை. இவரைப் பிடிக்காது அப்படின்னு ஒருத்தர் வாயிலிருந்து வரல. அப்படி ஒருவர் வாழ்ந்துட்டு போக முடியுமாங்கிறது ரொம்ப சர்ப்ரைஸ் ஆக இருக்கு. அதுவும் இன்னைக்கு இந்த டைம்ல எல்லாரையும் எல்லாரும் விமர்சனம் பண்ற நாளில். ஒருத்தர் வந்து இப்படி ஒரு தனி முன்மாதிரியா!
அவருகிட்டே ரொம்ப பிடிச்சது, அவரு ரொம்ப ஹாப்பி பர்சன். டி.வி. யில பார்த்தா சிரிச்சுகிட்டுதான் இருப்பாரு.அதேமாதிரி அவர் வீட்டிலேயும் சரி, பிள்ளைங்க பிரெண்ட்ஸ் கிட்டேயும் சரி ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாராம். காதலன் படத்துல வர்ற அப்பா மாதிரி தான் ரியல் லைப்லையும். பிள்ளைங்க