Kanaiyazhi - July 2021
By Kanaiyazhi
()
About this ebook
Read more from Kanaiyazhi
Kanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2020 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanaiyazhi - July 2021
Related ebooks
Kanaiyazhi - March 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2018 Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratingsIndiravin Kathai Rating: 0 out of 5 stars0 ratings“Thelivu” Jananesan 3 Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsKaru Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Varaintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsEnna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2019 Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Vantha Suriyangal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Sutri Pengal Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Gramangalil Pen Sisu Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsTharangini Rating: 0 out of 5 stars0 ratingsMari Varum Pengal Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsDeivangal Ezhuga Rating: 0 out of 5 stars0 ratingsVaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malargal Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsUtharayanam Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Suya Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsVeera Sudhandhiram! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Marabukal Rating: 4 out of 5 stars4/5Manthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kanaiyazhi - July 2021
0 ratings0 reviews
Book preview
Kanaiyazhi - July 2021 - Kanaiyazhi
https://www.pustaka.co.in
கணையாழி ஜூலை 2021
மலர்: 56 இதழ்: 04 ஜூலை 2021
Kanaiyazhi July 2021
Malar: 56 Idhazh: 04 July 2021
Author:
ம.ரா
Ma. Raa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
கண்ணைக் கட்டும் காலம் வரவேண்டும்!
உலகத்தையே
கண்ணைக் கட்டிப்
பின்பக்கம் கையையும் கட்டித்
தனிமைப்படுத்தி இருக்கிறது
கரோனா!
ஒருபுறம்
கரோனாவின் வழிப்பறியில்
காணாமல் போனவர்களைக்
காண முடியாத சோகம்.
மறுபுறம்
பார்த்துப் பார்த்துப்
பழகிய முகங்களில்
பாதி முகங்களைப்
பார்க்க முடியாமல் முகக் கவசம்!
மக்களை உத்தேசமாக
அடையாளம் காண்பதில்
மனதுக்கும் மூளைக்கும்
மிகக் குழப்பம்!
பள்ளிக் குழந்தைகள்
கண்ணைக் கட்டிக்
கண்டுபிடிக்கச் சொல்லிக்
கண்ணாமூச்சி ஆடுவதைப்
பார்த்திருக்கிறோம்!
ஆடியும் இருக்கிறோம்.
பாதை தெரியாமல்
பள்ளம் மேடு தெரியாமல்
தடுமாறித் தடுமாறி
கல்லிலும் முள்ளிலும்
கால்பட்டுக் கை ஊன்றி
விழுந்தும் எழுந்தும்
தேடிக் களைக்கும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
இப்போது அரசுகளும் கூட!
ஆட்சியில் இருப்பவர்கள்
கண்களையும் கட்டிக்
கல்விக் கூடங்களில்
கண்ணாமூச்சி ஆடுகிறது
கரோனா!
எப்போது திறக்கப்படும்
கல்விக் கூடங்கள்?
தேர்வு இல்லாமலே
தேர்ச்சியை எப்படித்
தீர்மானிப்பது?
மாணவர்கள் பாதிப்பின்றி
அடுத்த நிலைக்குப் போக
மதிப்பெண்ணைக் கணக்கிடும்
மாற்றுத் திட்டம் என்ன?
பன்னிரண்டாம் வகுப்பில்
தேர்வு இல்லை.
ஆனால்
மருத்துவக் கல்விக்கு
நுழைவுத் தேர்வு உண்டு!
கல்விக் கூட வகுப்பில் இருந்து
கற்கும் வாய்ப்பு
காணாமல் போய்க் கொண்டிருக்கிறது!
வீடு கல்விக் கூடமாகி
வெளிக்காற்று படாமல்
சிறுவர்கள் முடங்கிக் கிடக்கிறார்கள்!
விளையாடிய திடல்கள்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.
கல்விக் கூடம் என்பது
கட்டடம் மட்டுமில்லை
கள்ளம் இல்லாத உள்ளங்களால்
கலகலப்பாகும் இடம்!
குடும்பக் குழந்தையைச்
சமூக மனிதராக்கும்
இரசவாத வித்தையின்
பயிற்சிக் கூடம்!
இணைய வழிக் கல்வி என்று
ஒருவரோடு ஒருவர்
இணையாத வழிக் கல்விக்குக்
கரோனாவின் கண்கட்டி வித்தையில்
கட்டுண்டு கிடக்கிறது
மாணவர் உலகம்.
கல்விக் கூடம்
ஏழை பணக்கார
ஏற்றத் தாழ்வு இல்லாமல்
சாதி மத சகதிகளில்
மூழ்கித் திளைக்காமல்
சமுதாய சமவெளியில்
வாழக் கிடைக்கும்
சமத்துவ வாழ்க்கையின்
நாற்றங்கால்!
பாடப் புத்தகத்தை
எங்கிருந்தும் படிக்கலாம்
ஆனால்
சமூக மனித உருவாக்கத்தைச்
சாத்தியப்படுத்துவது கல்விக் கூடம்!
அடுத்தவர் நலனிலும்
அடுத்தவர் துன்பத்திலும்
அக்கரை கொள்ளவும்
ஆற்றுப்படுத்தவும்
நட்பு கொள்ளவும்
நடப்பை அறியவும்
கற்றுக் கொடுப்பது
கல்விக்கூடம்!
ஓராண்டுக்கும் மேலாக
மாணவர்களின்
கல்வி வாழ்க்கையைக்
களவாடி இருக்கிறது
கரோனா!
எப்படியோ இந்த அலையில்
தப்பித்துவிட்டோம் என்ற
நம்பிக்கை வெளிச்சத்தில்
இருட்டை மெழுக
வந்து கொண்டிருக்கிறதாம்
இன்னொரு அலை!
கண்ணைக் கட்டிக்
காட்டில் விடப்பட்ட போதும்
எப்படியாவது
கரோனாவிலிருந்து விடுபட
எல்லோருக்குமான தீர்வைக்
கண்டுபிடிக்க உலகம்
ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்து அறுபது நாட்களில்
இரண்டாவது அலையைக்
கட்டிப் போட்டிருக்கும்
தமிழக முதலமைச்சர்.
இதோ
மூன்றாவது அலைக்கு
மூக்கணாம் கயிறாக
நூறு கோடி ஒதுக்கியிருக்கிறார்.
தொடங்கும் போதே
மூன்றாவது அலையைச்
சுருட்டிப் போட
நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
ஆம்
கரோனாவுடன் உலகம்
கண்ணாமூச்சி ஆடும்
காலம் வரும்!
கரோனாவுக்குக்
கண்ணைக் கட்டும்
காலம் வரவேண்டும்!
அன்புடன்
ம.ரா
***
உள்ளடக்கம்
நினைவேந்தல் - கே.பாரதி
கவிதை - தசாமி
சிறுகதை - K.B.சிவக்குமார்
கவிதை – சன்மது
குறுநாடகம் - முனைவர் மரிய செபாஸ்டியன்
கட்டுரை - மு. இராமசுவாமி
கவிதை – நட்சத்திரா
சிறுகதை - மீனாசுந்தர்
கட்டுரை - விவேக் கனநாதன்
சிறுகதை - பாரதி வசந்தன்
கவிதை - வசந்ததீபன்
கவிதை - வீரசோழன் க.சோ.திருமாவளவன்
கட்டுரை - இரா.வீரமணி
கவிதை - ப.தனஞ்ஜெயன்
கட்டுரை - கிருத்திகா தாஸ்
கவிதை - நவீன்.ஜெ
கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி
***
நினைவேந்தல் - கே.பாரதி
மைதிலி சிவராமன்
எண்பதுகளில் கல்லூரி படிப்பை முடித்திருந்தபோதுதான் ஜனநாயக மாதர் சங்கமும், மைதிலி சிவராமனும் எனக்கு அறிமுகமானார்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். வழக்கறிஞர் குழுவுடன் அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டறிவார் மைதிலி.
அப்போதெல்லாம் மத்தியத்தர வர்க்கப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டு மாதர் சங்கத்தை நாடி வந்தார்கள். அவர்கள் எல்லோருமே சராசரிப் பெண்கள். ஏதோ இப்படி நேர்ந்துவிட்டது விதியின் செயல் என்று மௌனமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தார்கள்.
குற்றத்தை கேள்வி கேட்கவோ, குற்றவாளிகளை தண்டிக்கவோ அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. கழிவிரக்கத்தில் மூழ்கியிருந்த அவர்களின் மனத்தடைகளைத் துடைத்தெறிய அவர்களிடம் நிறைய பேசுவார் மைதிலி.
‘இது உங்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. சமூகப் பிரச்சனை. நீங்கள் துணிந்து போராடினால்தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும். அப்படிப் போராடுவது உங்கள் சமூகக் கடமையும்கூட’ என்று புரிய வைப்பார்.
தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் தீவிரப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு இளம்பெண்ணாக இருந்த மைதிலி சிவராமன் அதன்பால் ஈர்க்கப்பட்டார். எழுபதுகளில் தொடங்கி சுமார் முப்பதாண்டு காலம் ஜனநாயக மாதர் சங்கத்தின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
photo 1.jpgஎழுபதுகளில் யுனெஸ்கோ அமைப்பு சர்வதேச பெண்கள் பத்தாண்டை அறிவித்தது. பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகள் ஊடகங்களிலும் சாதாரண மக்கள் மத்தியிலும் புழங்கத் தொடங்கியது. அந்த ஆரம்ப நாட்களில் மேடைதோறும் பெண்களின் உரிமை குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டார் மைதிலி சிவராமன்.
ஒரு தொழிற்சங்கவாதியாக தொடர்ந்து இயங்கினாலும் இடதுசாரி இயக்கத்தின் பல பரிமாணங்களைப் பார்த்திருந்தாலும் மைதிலி சிவராமனின் தனித்த அடையாளமாக ஜனநாயக மாதர் சங்கம் பரவலாக அறியப்பட்டது.
பெண்ணுரிமை என்ற வார்த்தையே ஒரு விபரீத வார்த்தை போல் புருவம் நெறித்த மரபுவாதிகள் பலரது கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மைதிலி. ‘மகளிர் சிந்தனை’ என்ற பத்திரிகையைத் தொடங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாட்டில் சின்னச்சின்ன ஊர்களுக்குக் கூட பயணம் செய்து அடித்தட்டில் உழன்று கொண்டிருக்கும் பெண்களைச் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் மைதிலி. அவர்கள் மத்தியில் உணர்ச்சிகரமாக உரையாற்றிருக்கிறார்.
எங்கோ ஒரு குக்கிராமத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் ஒருத்தி மைதிலியின் கவனத்துக்கு வந்தால் அதனைச் சுலபத்தில் விட்டுவிட மாட்டார். அந்தப் பெண்ணுக்கான நியாயத்துக்காகப் பலமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாக நடந்து முதல் தகவல் அறிக்கையை உறுதி செய்வார்.
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நமது சமூக அமைப்பில் குற்றவாளிகள் எளிதாக தப்பித்துவிட முடியும். ஏற்றத்தாழ்வுக்கு எதிரான மைதிலி சிவராமன் ஒருபோதும் அவர்களைத் தப்பிக்க விடமாட்டார். சரிகா ஷா வழக்கு, சிதம்பரம் பத்மினி வழக்கு, வாச்சாத்தி பெண்களுக்கான வழக்கு என்று எத்தனையோ வழக்குகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மேடையில் ஆணித்தரமாகப் பேசுவார் மைதிலி. எழுத்தாற்றல் மிக்கவரும் கூட. தனது அத்தனை திறமைகளையும், சிந்தனா சக்தியையும் உழைக்கும் பெண்களின் உரிமைக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் தனக்கான முக்கியத்துவத்தை அவர் ஒருபோதும் முன்வைத்ததில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பரபரப்பான சூழலில் மைதிலியின் பங்கு குறிப்பிடத் தகுந்தது. நமது பெண்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்கள். அந்த நம்பிக்கை மத அடிப்படைவாதமாக உருமாறி விடுமோ என்ற அச்ச உணர்வு அவருக்கு இருந்தது. பொதுவெளியில் இயங்கிய பல்வேறு பெண்கள் குழுக்களை ஒருங்கிணைப்பது அவசியம் என்பதை உணர்ந்தார் மைதிலி.
இளம் பெண்கள் கிறிஸ்துவ அமைப்பு, பெண்ணுரிமை இயக்கம், இந்திய தேசிய பெண்கள் சம்மேளனம் ஆகியவற்றுடன் மண்டே சாரிட்டி க்ளப் போன்ற சேவை குழுக்களையும் இணைத்துக் கொண்டார்.