Kanaiyazhi - May 2021
By Kanaiyazhi
()
About this ebook
Read more from Kanaiyazhi
Kanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - Apri 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2023 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanaiyazhi - May 2021
Related ebooks
Kanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsMaanidar Padhitha Kaaladi Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Ooradangu Uyiradangu Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsSevviyal Aringar Oriza Balu Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsPasitha Sinthanai Rating: 4 out of 5 stars4/5Amuthey, Vazhikaattu! Rating: 0 out of 5 stars0 ratingsVeenaikku Vekkam... Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Pothumarai - Oru Oppaivu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsVidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsMaran Manamum Maranthu Pona Puratchiyum Rating: 0 out of 5 stars0 ratingsChola Venghai Rating: 0 out of 5 stars0 ratingsManida Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsChitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum Rating: 0 out of 5 stars0 ratingsPuligalin Puthalvargal Rating: 5 out of 5 stars5/5Kannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsAruvi Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsசுதந்திர தேவி: பாரத வரலாற்று குறுங்காவியம் Rating: 0 out of 5 stars0 ratingsManitham Punitham Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsPadaippu Thiranum Yerpu Kotpaadum Rating: 0 out of 5 stars0 ratingsEnnattavarkkum Iraiva Pottri! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanaiyazhi - May 2021
0 ratings0 reviews
Book preview
Kanaiyazhi - May 2021 - Kanaiyazhi
https://www.pustaka.co.in
கணையாழி மே 2021
மலர்: 56 இதழ்: 02 மே 2021
Kanaiyazhi May 2021
Malar: 56 Idhazh: 02 May 2021
Author:
ம.ரா
Ma. Raa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
உழைப்புக்கு வாழ்த்து சொல்வோம்!
அமையப் போகிற
ஆட்சிக்கு
மேதின வாழ்த்துகள்!
எல்லா நாளும் நல்ல நாளாக
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
ஒவ்வொரு நாளிலும்
ஏதாவது நல்லது இருக்கும்!
மே தினம் தொழிலாளர் தினம்
இது மற்றும் ஒரு நாள் இல்லை!
பூமியை
உயிர்கள் வாழும் உலகம் ஆக்கிய
உழைப்பைக் கொண்டாடும் நாள்!
ஆகவே உழைப்புக்கு
வாழ்த்து சொல்வோம்!
இது
கொரோனா காலம் மட்டுமில்லை
கொரோனாவை எதிர்த்துப்
போராடும் காலம்!
"பிச்சை எடுங்கள்,
திருடுங்கள்,
எதையாவது செய்து
உயிர்களைக் காப்பாற்றுங்கள்" - என்று
ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில்
டெல்லி உயர்நீதிமன்றம்
அறிவுரை சொல்லி இருக்கிறது!
திருடுங்கள்
எதையாவது செய்யுங்கள் என்று
நீதிமன்றத்தையே
சொல்ல வைத்திருக்கிறது
கொரோனா வெறியாட்டம்!
அப்பா அம்மாக்களைப்
பார்க்க விடாமல்
உடன் பிறப்புகளை
ஒதுக்கி வைத்துப்
பெற்ற குழந்தைகளைக் கூட
அருகில் வர விடாமல்
அங்கிங்கு எனாதபடி எங்கும்
கொரோனா வெறியாட்டம்!
கொரோனா!
வாழ்ந்தவர் மதிப்பை
இறப்பில் சிதைக்கிறது.
பிணம் ஆனாலும்
தனியே போகக் கூடாது என்று
ஊரும் உறவும் கூடச் சென்று
வழியனுப்பும் கல்யாணச் சாவையும்
தனிப்பயணம் ஆகுகிறது!
பிணங்களையும்
அனாதையாக்குகிறது!
இரத்த உறவுகளும்
எடுத்துப் போக விரும்பாத
கொரோனா தொற்றில்
இறந்தவர் உடல்கள்
மருத்துவ மனைகளில்
விறைத்துக் கிடக்கின்றன!
என்ன செய்யலாம்?
பிச்சை எடுங்கள்
கடன் வாங்குங்கள்
திருடுங்கள்
எதையாவது செய்து
உயிரைக் காப்பாற்றுங்கள்!
இலட்சக் கணக்கில் மக்கள்
புனித நீரில் கும்பமேளா!
தேர்தல் திருவிழா
தெருவெங்கும் பிரச்சாரம்!
ஆன்லைனில்
மீனாட்சி கல்யாணம்!
தொட்டியில் வையை ஆறு
கள்ளழகர் கொண்டாட்டம்!
பிச்சை எடுங்கள்
கடன் வாங்குங்கள்
திருடுங்கள்
எதையாவது செய்து
உயிரைக் காப்பாற்றுங்கள்!
அயோத்தியில் இராமர் கோயில்
பிரச்சினையைத் தீர்த்து இருக்கிறோம்!
புதிய கல்விக் கொள்கையை
நடைமுறைப்படுத்தி
மும்மொழித் திட்டத்தைத் திணிக்க
புதுப்புது உத்திகளைக்
கொண்டுவந்து இருக்கிறோம்!
மக்கள் உயிர் குடித்த
வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை
உயிர்காக்கும் காற்றுக்காகத்
திறந்து வைக்கிறோம்!
அமெரிக்காவை விடவும்
அதிக விலைக்குத்
தடுப்பூசி வாங்கும் நிலைக்குத்
தரம் உயர்ந்து இருக்கிறோம்!
தட்டுப்பாடில்லை என்று
ஆளும் கட்சிகளைப்
புதிது புதிதாகப்
பொய் சொல்ல வைக்கிறோம்.
வெளிநாட்டுக்குக் குறைந்த விலை
உள்நாட்டுக்கு அதிக விலை!
அதிலும்
மத்திய அரசுக்கு ஒரு விலை
மாநில அரசுக்கு ஒருவிலை
தனியாருக்கு ஒரு விலை என்று
உயிர்காக்கும் ஊசிக்குத்
தனித்தனி விலை போட்டு
முதலாளிகள் கொள்ளை அடிக்க
கொள்கை முடிவு எடுக்கிறோம்!
நெல், கோதுமை, கரும்பு விலைகளை
அரசே தீர்மானிக்கவும்
உயிர் காக்கும் ஊசி விலையைத்
தனியார் நிறுவனம் முடிவு செய்யவும்
தாராளம் காட்டி இருக்கிறோம்!
தனிமனித இடைவெளியைச்
சமூக இடைவெளி ஆக்கி இருக்கிறோம்!
நல்லநாள் பெரிய நாளை
இழந்து நிற்கிறோம்!
வாட்ஸ் ஆப்பில் கைகுலுக்கி
வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
மனித உயிர்களைச்
சூறையாடும் கொரோனாவோடு
சமுதாயத்தைச் சீரழிக்கும்
கொரோனாவையும் எதிர்த்துப்
போராட வேண்டிய காலம் இது.
மே தினம் உழைப்பின் அடையாளம்
உழைப்பின் மறுபெயர் போராட்டம்!
போராட்டம் என்பது
உயிரின் வெளிப்பாடு!
ஆகவே
உழைப்புக்கு வாழ்த்து சொல்வோம்!
அன்புடன்
ம.ரா
***
உள்ளடக்கம்
கட்டுரை- தமிழவன்
கவிதை-ஹரணி
குறுநாவல்-க.சி.அம்பிகாவர்ஷினி
கவிதை-ரியாஸ் அஹமது
கட்டுரை - அபிஜித் சென், தமிழில் ராம் முரளி
சிறுகதை - சிவகுமார் முத்தய்யா
கட்டுரை - மு. இராமசுவாமி
கவிதை - கி.சரஸ்வதி
குறுநாவல் -அ. நாகராசன்
கட்டுரை – சாதிக்
கவிதை – முத்தமிழ்க்குமார்
கவிதை – வசந்ததீபன்
சிறுகதை -ஸிந்துஜா
கவிதை - நட்சத்திரா
கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி
கட்டுரை- தமிழவன்
017 (2).jpgபழமையைத் தேடும் இம்மக்கள் எதைத் தேடுகிறார்கள்?
சமீபத்தில் கீழடி கண்டுபிடிக்கப்பட்டபோது தமிழர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.
அதுபோல் தமிழில் ஏதாவது ஒரு நூலின் காலத்தைப் பிந்தியது என்றால் அப்படிச்சொல்லும் அறிஞரைத் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள். தொல்காப்பியத்தின் காலமாகட்டும், சிலப்பதிகாரத்தின் காலமாகட்டும் அது பிந்தியது என்றால் அப்படிச் சொன்னவரைச் சந்தேகமாகப் பார்ப்பார்கள்.
கீழடி பழைய நகரம் என்கிறபோது மகிழ்வதும் தொல்காப்பியமும், சிலப்பதிகாரமும் மிகப் பழைய நூல்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் எதைக்காட்டுகின்றன?
பிரஞ்சுமொழி, ஜெர்மன்மொழி, போன்றன 7, 8 நூற்றாண்டுகளில் தோன்றின என்றால் அம்மக்கள் ஏற்கிறார்கள்.
தமிழ் மொழிக்கு எனத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அது நம் பழமையை அங்கீகரிக்கும் செயல். அப்போது கன்னடர்கள் அதனைப் பார்த்துக் கன்னடப் பல்கலைக்கழகம் தொடங்கினார்கள். வி.ஐ.சுப்பிரமணியத்தை அழைத்து என்னுடைய முனைவர்பட்ட நெறியாளரான கன்னடப் பேராசிரியர் சித்தானந்தமூர்த்தி அவர்கள் கர்னாடகக் கல்வி அமைச்சரைப்போய் பார்த்தார். அது எனக்குத் தெரியும். அப்போது சித்தானந்தமூர்த்தி கன்னடப் போராளி. கன்னடப்போராட்டத்துக்கு என ஓர் இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். எனவே கன்னடப் பெருமையை நிலைநாட்ட கன்னடப் பல்கலைக்கழகம் ஹம்பியில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், முதல் கன்னட நூலின் காலம் 8, அல்லது 9-ஆம் நூற்றாண்டுதான். சங்க இலக்கியம் போல முதல் நூற்றாண்டுவாக்கைச் சார்ந்த எந்த நூலும் கன்னடத்தில் இல்லை. முதல் 900 ஆண்டுகள் கன்னடத்தில் நூலே இல்லை.
பழமை நாடும் இந்தத் தமிழ் மக்கள்கூட்டம் எதையோ சொல்ல முனைகிறது. புதுமைப்பித்தன் முதற்குரங்கு தமிழ்க்குரங்குதான் என்று அவர் பாணியில் வேடிக்கை செய்தார். தமிழ் மக்களின் மனநிலையின் உள்ரகசியத்தைப் புதுமைப்பித்தன் புரியாமல் அப்படிச் சொன்னாரா?
பல நிகழ்ச்சிகள் ஞாபகம் வருகின்றன. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு என்று நினைக்கிறேன். ஐராவதம் மகாதேவன் அவருடைய எழுத்தாராய்ச்சியின் அடிப்படையில் தொல்காப்பியத்தில் வரும் எழுத்து – கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியதுதான் என்றார். ம.பொ.சி. அவர்கள் ஆய்வுக்கட்டுரைப் படித்த அரங்கிலேயே எதிர்ப்புத் தெரிவித்த செய்தி நாளிதழ்களில் வந்தன. அறிவியல் சா்ந்து எடுத்த முடிவாக இருந்தாலும் பழந்தமிழின் காலத்தைப் பின்னால் கொண்டு போனால் பாராட்டுக் கிடைக்காது.
இந்தப் பழமை நாடும் மனோபாவம் தமிழ் மக்களின் எந்த உளவியலைக் காட்டுகிறது? எதையோ இழந்த மக்கள் கூட்டம் தன் அடையாளத்தைப் பழமையில் நிலைநிறுத்த விரும்புகிறது. உண்மையில் இந்த உளவியல் எதைக் காட்டுகிறது என்பதை நாம் கண்டுபிடித்து அம்மக்களுக்கு இன்னும் சொல்லி விளக்கி விடவில்லை.
பழமையில் போய் ஒரு கூட்டம் மக்கள் ஏன் தஞ்சம் புகுகிறார்கள்? பழமை என்றால் ஆண்டுகளின் வரிசையில் ஏன் அமைய வேண்டும்? ஒரு காலத்தில் பெருமையாக இருந்தோம். நீண்ட காலப் பெருமை கொண்டவர்கள் நாங்கள், போன்ற உரிமை கொண்டாடல்கள் குரல்களைக் கேட்கிறோம். இங்குப் பழமையும் காலமுறையும் இணைகின்றன. அய்ரோப்பாவுக்குச் சுற்றுலா செல்பவர்களிடம் 200, 300 ஆண்டு பழைய கட்டடங்களை, சர்ச்சுகளைப் பெருமையாக அது பழமைக்கு அடையாளம் எனக் காட்டுவார்கள்.
தமிழர்களின் இலக்கிய வரலாற்றைப் பற்றிப் பலர் குறிப்பிடுவார்கள். சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய நாவல் வரை தொடர்ச்சியான வரலாற்றை கட்டமைத்திருக்கிறோம். 1.பழமை,
2.காலம், 3.வரிசைமுறை, 4.பெருமை போன்ற வேறு வேறு பண்புகள் சேர்ந்த ஒருமை தமிழர்களின் உளவியலில் காணப்படுகிறது. இத்துடன் தமிழ் பெரும்பாலும் இணைக்கப்பட்டிருக்கும். சமஸ்கிருதம் எதிர்ப்பண்பு கொண்ட பகை மொழியாய் நினைக்கப்படும். இன்று இந்தி மொழி. இவை எல்லாவற்றிற்கும் ஒரு தர்க்கம் (logic) இருக்கிறது. நியாயம் இருக்கிறது.
இதற்கு நியாயம் இல்லை என்று பேசும் தரப்பாரும் உள்ளனர். எல்லாரும் ஒன்று போலத்தான் என்பார்கள் அவர்கள். ‘ஆண்ட பரம்பரை’ என்ற போலிப் பெருமை பேசுகிறார்கள் என்று முகம் சுளிப்பவர்களும் உண்டு.
தமிழர்களின் இந்த பெருவாரி மனநிலை எப்படி