Katturai Kothu 50
()
About this ebook
கட்டுரை என்பது என்ன? நம்முடைய அன்றாட வாழ்விற்குப் பயன்படக்கூடிய கருத்துகளின் பிரதிபலிப்பே. எழுத்துச் சுவடுகளே. கவிதையில் சில வார்த்தைகளில் சொல்லுவதைக் கட்டுரையில் நாம் பல உத்திகளில் சொல்லுகின்றோம். கவிதை இறுக்கமானது என்றால் கட்டுரை உருக்கமானது.
இந்தக் கட்டுரைத் தொகுப்பிலே 50 பேர்களின் கட்டுரைகளை வாங்கித் தந்துள்ளோம். கரும்பு தின்னக் கூலியா கேட்பார்கள் என்பது பழமொழி. கட்டுரையைச் சுவைக்கப் பொற்கிழியே தரலாம் இது புதுமொழி. எங்கள் முயற்சிக்கு நீங்கள் அனைவரும் பொற்கிழி தந்து உற்சாகப் படுத்துங்கள். இந்தக் கட்டுரைத் தொகுப்பினை படித்து மகிழுங்கள்.
Read more from K. Padmanabhan
Scientific Truth on Palmistry Rating: 5 out of 5 stars5/5Ullangai Ariviyal Rating: 0 out of 5 stars0 ratingsParayana Ramayanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Katturai Kothu 50
Related ebooks
Vizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsSelvam Chezhikka - Gems, Vaasthu, Vazhigal! Rating: 0 out of 5 stars0 ratingsKural Selvam Rating: 0 out of 5 stars0 ratingsThiran Koottum Dhyanam Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsUnakkul Pudhayal Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsSeppu Mozhi Ainooru + Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsEngal Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Thirukkuralum Vettriyalarkalum Rating: 0 out of 5 stars0 ratingsAthirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsUdanai Nirkindraan Rating: 0 out of 5 stars0 ratingsKaatchikku Appal Rating: 0 out of 5 stars0 ratingsArutperunjothi Agaval Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Arputha Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsChanakya Neeti In Tamil Rating: 3 out of 5 stars3/5Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul! Rating: 0 out of 5 stars0 ratingsKirupanandha Variyar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsVaazhviyal Koorum Solavukal Nooru Rating: 0 out of 5 stars0 ratingsAchyutham, Anantham, Govindham, Aanandham! Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Meesai Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsUngalukkulle Oru Arputha Manithar Rating: 0 out of 5 stars0 ratingsSiva Kali Peralai Rating: 0 out of 5 stars0 ratingsMuransuvai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Katturai Kothu 50
0 ratings0 reviews
Book preview
Katturai Kothu 50 - K. Padmanabhan
https://www.pustaka.co.in
கட்டுரைக் கொத்து 50
Katturai Kothu 50
Author:
கே. பத்பநாபன்
K. Padmanabhan
For more books
https://www.pustaka.co.in/home/author/kalaimamani-yoga
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
எங்களுரை
வணக்கம். எங்கள் எழுதுகோல்
என்கின்ற இந்தச் சிந்தனை வடிவங்கள் நமது எண்ண வார்ப்படங்கள். பல பேர்களை ஒன்று சேர்க்கின்ற பாலமாக இது அமைந்து உள்ளது. நட்புக்காக எண்ணங்களா? இல்லை எண்ணங்களுக்காக நட்பா? என்பதை இந்த எழுத்து ஓவியங்கள் நமக்குப் படம் பிடித்து நிச்சயமாகக் காட்டும்.
இதனைச் செவ்வனே உருவாக்குகின்ற நற்பணியை அந்தத் திருமாலே எங்களுக்கு அளித்தார். சென்ற வருடம் நாங்கள், எஸ். இரகுநாதன், பிட்நியூஸர் அவரது தந்தையார் திரு. சீனி. கிருஷ்ணஸ்வாமி, திரு. ஸ்ரீதரன் ஆகியோர் ஏழுமலையானை வணங்கத் திருப்பதி - திருமலை சென்றிருந்தபோது தோன்றிய எண்ண அலைகளின் ஆக்கமே இதோ உங்கள் கைகளில் தவழ்ந்து இருக்கின்றதே இந்த எங்கள் எழுதுகோல்
- கட்டுரைக் கொத்து 50.
கட்டுரை என்பது என்ன? நம்முடைய அன்றாட வாழ்விற்குப் பயன்படக்கூடிய கருத்துகளின் பிரதிபலிப்பே. எழுத்துச் சுவடுகளே. கவிதையில் சில வார்த்தைகளில் சொல்லுவதைக் கட்டுரையில் நாம் பல உத்திகளில் சொல்லுகின்றோம். கவிதை இறுக்கமானது என்றால் கட்டுரை உருக்கமானது.
இந்தக் கட்டுரைத் தொகுப்பிலே 50 பேர்களின் கட்டுரைகளை வாங்கித் தந்துள்ளோம். கரும்பு தின்னக் கூலியா கேட்பார்கள் என்பது பழமொழி. கட்டுரையைச் சுவைக்கப் பொற்கிழியே தரலாம் இது புதுமொழி. எங்கள் முயற்சிக்கு நீங்கள் அனைவரும் பொற்கிழி தந்து உற்சாகப் படுத்துங்கள். இந்தக் கட்டுரைத் தொகுப்பினை வாங்கிப் படியுங்கள்.
எண்ணியதை எண்ணியவாறு முடிக்கின்ற பாங்கோடு வேகம் கொண்டு விரைவாய்ப் பணிகளைச் செய்தலில் வல்லவரான திரு. கே. பத்மநாபன் (பிட்நியூஸர்) இளைஞரும், 50 அகவையை எட்டிய எஸ். இரகுநாதன் ஆகிய நாங்கள் இருவரும் செயல்பட்டு உருவாக்கிய கதம்ப மாலையே இந்த எங்கள் எழுதுகோல்
கட்டுரைக் கொத்து 50.
வாழ்த்துங்கள் உவகை பெருக! வாங்குங்கள் பொற்கிழி விளங்க! பாராட்டுங்கள் பட்டங்கள் தந்து! உற்சாகப்படுத்துங்கள் எண்ண அலைகள் பெருகிச்சிறந்திட. வாழ்க தமிழ்! வெல்க மொழி.
அன்புடன்,
எஸ். இரகுநாதன்
பிட்நியூஸர்
உள்ளுரை...
1. பக்தியில் பண்பட்ட மனம் பகவானைச் சென்றடையும்
2. இலக்கம் இரண்டு
3. அருங்கலைஞராக...
4. அன்பு
5. நட்பு
6. யானைத்தீ!
7. படிக்காத மேதை (ஓர் ஆய்வு, ஒரு தத்துவம்)
8. எழுதுவோம் இயங்(க்)குவோம்
9. சோதிட ரத்னாகரம்- ஒரு பார்வை
10. அமைதி
11. சிரித்து வாழ்வோம்
12. செய்வோம்! செய்விப்போம்!
13. முயற்சிகளுக்கு வைக்காதீர் முற்றுப்புள்ளி
14. மயக்கமா! கலக்கமா!
15. கல்விக் கலை
16. யோகிராம் சுரத்குமார்
17. வாழ்க தமிழ்
18. பற்றின்மை
19. கராத்தே
20. இறைவனடியில் கலைகளின் சங்கமம்
21. தனிமனித ஒழுக்கம் தலை நிமிரவைக்கும்
22. ஒரு பாடலுக்காக...
23. உண்மையே உன் நிலை என்ன?
24. நாளை உலகை ஆளவேண்டும்
25. கைரேகைஅறிவியல்
26. நம்பிக்கைஒரு வெற்றிக்கனி
27. டேபிள்டென்னிஸ்
28. கண்ணீரும் கதை சொல்லும்
29. கருமாரி
30. பூரண யோகம்
31. தோல்வியே வெற்றிக்கு வழி
32. இசை எல்லைகளைக் கடந்து...
33. புண்ணிய பூமி
34. தூதுசென்ற தூய தமிழ்
35. கதையல்ல, இதுவும் ஒரு நிஜம்
36. ஆயுள் காப்பான் தோழன்
37. நாட்டியம்
38. வானொலி சேவை
39. உழைப்போம் உயர்வோம்
40. திசை மாறிய இசைப் பறவை
41. எண்கணிதம் என்னும் சுவை அமுதம்
42. சிற்றிலக்கியங்கள் ஒரு பார்வை
43. தாய்மொழி வழிக் கல்வி
44. வள்ளலார் சொன்ன வாழ்க்கைத் தத்துவம்
45. மாயாஜாலக் (மேஜிக்) கலை
46. சைவ உணவு சன்மார்க்க உணவு
47. ஜோதிடமும் விஞ்ஞானமே
48. ஸ்ரீ அரவிந்தர்
49. அந்த ஆசிரியரின் முதல் நாவல்
50. இனி எல்லாம் சுகமே!
1. பக்தியில் பண்பட்ட மனம் பகவானைச் சென்றடையும்
பகவான் எங்கே இருக்கிறார்?கடவுள் நம் உள்ளத்தே இருக்கிறார். நம் உள்ளமே திருக்கோயில். மனக் கோயிலே மாண்புடையது. மனம் தீய எண்ணங்களால் மாசுபடாமலிருந்தால் மட்டுமே, மனம் என்னும் கோயிலில் இறைவன் இருப்பார்.
மனக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நாம் காணமுடியுமா? கடவுளைக் காண என்ன செய்ய வேண்டும்? பண்பட்ட மனத்தோடு, நாம் இறைவன் மேல் பக்தி செலுத்தினால், அவனை நிச்சயமாகக் காண முடியும்.
அறிவும் மனமும் ஒன்றிணைய வேண்டும். மனம் இறைவனிடத்திலேயே லயித்திருக்க வேண்டும். 'ஏகாக்ரசித்தம்' ஒன்றிலேயே மனத்தைச் சலனமின்றி ஒன்றுபடச் செய்தல் வேண்டும். இஃது எளிதன்று! அதற்குப் பலமுறை, பலநாள்கள் பயிற்சி செய்ய வேண்டும்.
இப்பயிற்சியை எப்போது மேற்கொள்ளலாம்? அதற்கு உரிய காலம் எது? பிரதி தினமும், உஷஸ்காலத்தில், அதிகாலையில் 4½ - 6.00 மணிக்கு (3/4 + 3/4 =1½) பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பகவன் நாமா ஒன்று மட்டுமே மனத்தில் மேலோங்கியிருக்க வேண்டும்.
'ஓம் நமோ நாராயணாய' அஷ்டாக்ஷரம் 'ஓம் நம சிவாய' பஞ்சாட்க்ஷரம் மந்திரங்கள் உதடுகள் அசையாமல், மனத்தினுள்ளேயே - நம் இரு கண்களையும் மூடி, பார்வையை உள்நோக்கி இருபுருவங்களுக்கும் மத்தியில் நிலைபெறச் செய்து, மந்திரங்களை ஐபிக்க வேண்டும். இரு புருவங்களுக்கு மத்தியில் இளம் சிவப்பாக ஒளியுடன் விரும்பும் தெய்வங்களின் வடிவம் தோன்றும். அந்த இறைவனிடம் நம் ஆத்மாவை ஸமர்ப்பிக்க வேண்டும். ஆத்மஸமர்ப்பணம் செய்பவனை ஆண்டவன் நேசிக்கின்றார்.
பக்தியில் பண்பட்ட மனமே பகவானைச் சென்றடையும். ஆத்மா முக்தி அடைய பக்தியோகம் ஒன்றே சிறந்த மார்க்கம்.
இறைவன் பரமாத்மா. நாம் ஜீவாத்மாக்கள். ஜீவாத்மா பரமாத்மாவுடன் கூடினால் சுகம்; பிரிந்தால் துக்கம். இறைவனையே சிந்தித்து, அவன் விஷயமாகவே பக்தியோகத்தைக் கடைப்பிடித்து; அவனது திருநாமங்களையே ஜபித்தல், வந்தித்தல், துதித்தல், குணகீர்த்தனம் செய்தல், ஆகிய இவற்றைக் கொண்டு ஆத்மாவைத் தரிசித்து, பிராணன்; மனம்; பத்தி; இந்திரியம்; கிரியை; ஆகிய எல்லாவற்றையும், அவ்விறைவனுக்கே உடைமை ஆக்கி; தனக்கென்று வகுத்த கர்மம் முதல், பக்திவரை அனைத்தையும் அந்தப் பரம் பொருளுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும்.
ஞானிகளும், யோகிகளும் தவமியற்றுவர். லௌகிகர்களாகிய நமக்கு அது சாத்தியமில்லை. நாம சங்கீர்த்தனம், பகவன் நாமாவை ஜபித்தல் மூலமே நாம் பகவானைச் சென்றடைய முடியும். காலை-மாலை இரு வேளைகளிலும், புத்தியை ஒரு முகப்படுத்தி, பகவன் நாமாவை ஜபித்து வந்தாலே நாம் மறுபிறவியின்றிப் பகவானைச் சேரமுடியும்.
அஷ்டாக்ஷர மந்திரம் ஓம் நமோ நாராயணாய, அனவரதமும் ஜபித்துவந்தால் நலம் பயக்கும்.
மழை நீர் மேட்டு நிலத்தில் நிற்காது. பள்ளத்தை நோக்கி ஓடி விடும். ஈஸ்வர கிருபை தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் நிற்காது. பணிவுள்ளவர்களிடம் மட்டுமே தங்கிநிற்கும்.
சீவகச் செல்வர்
புலவர். சீனி. கிருஷ்ணஸ்வாமி.
(ஓய்வு பெற்ற தமிழாசிரியர்)
15, வி.எஸ். முதலித் தெரு,
சண்முகா ஃபிளாட்ஸ் - G2
சைதாப்பேட்டை, சென்னை - 600015.
ph: 23811195
2. இலக்கம் இரண்டு
உலக இயக்கத்தின் அடிப்படைத் தத்துவம் ஆதாரசுருதி எண்ணும் எழுத்தும் ஆகும். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு
- இது தமிழ் மறை கூறும் தத்துவமாகும். இன்று உலகில் நடைபெறும் அத்தனை செயல்பாடுகளும் எண்களின் அலைகளைக் கொண்டே நடைபெறுகின்றன. அருந்தமிழ் மூதாட்டி ஒளவையாரது எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
என்ற அறிவுரைப்படி, எண்ணே முதலாவதாகத் திகழ்கிறது.
மனிதர்களின் சொல், செயல், சிந்தனை விண்ணில் நிகழும் நவகிரகங்களின் இயக்கத்தை ஒட்டியே நிகழ்கின்றன. ஒன்பது எண்களும் நவகிரகங்களின் ஆதிக்கத்தின்படி செயல்படுகின்றன. எனவே எண்கணித சோதிடம் (Numerology) கிரகங்களின் விளக்கமே ஆகும்.
இந்த எழுத்து விஞ்ஞானம் மிகப் புராதனமானது மட்டுமன்று, புது முறையானதுங்கூட எனலாம். இது வாழ்க்கையில் துன்பமும் தோல்வியுங்கண்டு அவதிப்படுவோர்க்கு அல்லல்களைப் போக்கி அதிர்ஷ்டத்தைக் காண்பித்து வாழ்க்கையை வளமுள்ளதாக ஆக்குகிறது. அவலங்களைப் போக்குகிறது. இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும் நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால் கழகத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ டெழுத்தின் வனப்பே வனப்பு
என்று எண்எழுத்துகளின் ஏற்றமிகு சிறப்பினை ஏலாதி (74) என்ற இலக்கியம் சிறப்பித்துக் கூறுகின்றது.
நாம் எந்தத் தேதியில் பிறக்கின்றோமோ அந்த எண் கிரக ஆதிக்கத்தின் படியே நமது வாழ்க்கை, குணம், மணம், சிந்தனை, செயல்பாடுகள் அமையும் என அறிந்து கொள்வது அறிவுடைமையாகும். அகிலத்தில் 2,11,20,29-ஆம் தேதிகளில் பிறப்பவர்கள் இலக்கம் இரண்டு திங்களின் ஆதிக்கத்தைச் சார்ந்தவர்கள். தெய்வீகத்துறையில் இது தாயின் ஸ்தானமாகும். சந்திரன் ஒரு சுப கிரகம். சூரிய தேவனைத் தந்தை என்றால் திங்களைத் தாய் என்று கூறலாம்.
2ஆம் தேதியில் பிறக்கும் பலரும் மகான்களாக, மனிதனில் புனிதராகவும் உடல் பொருள் ஆவியைத் தியாகம் செய்யும் தேசிய தலைவராகவும், ஒப்பற்ற கவிஞர்கள், கலைஞர்கள்; உன்னத ஓவியர்கள், ஏற்றமிகு எழுத்தாளராகவும் திகழ்கின்றார்கள்.
மகத்தான மனிதநேயமும், பாசமும், நேசமும், ஊருக்கு உழைக்கும் உத்தமப்பண்பும் கற்பனைத் திறனும் காவியப் புலமையும் பெற்றவர்கள் இவர்கள் ஆவர். 2ஆம் எண் நபர்கள் எதிலும் புதுமையும் புரட்சியும் கண்டறியும் மன இயல்பு கொண்டவர்கள். நட்புரிமை கொண்டு யாருடனும் ஒத்துழைக்கும் மனோபாவம் படைத்தவர்கள். இவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சமாளித்து, பிற்பகுதியில் நல்ல வாழ்க்கையினை அமைத்துக் கொள்வர். வளர்பிறை, தேய்பிறை போன்று இவர்களின் வாழ்க்கை நிலையும் இருக்கும்.
இலக்கம் 2-ல் பிறந்தவர்கள் சந்திரன், சூரிய ஒளியினைத் தன்னகத்தே பெற்றுப் பிரகாசிப்பது போன்று இவர்கள் மற்றவர்களைச் சார்ந்தே வாழ வேண்டும். இந்த எண் கலைஞர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாகும். மிகவும் அமைதியான இயல்பினர். கள்ளம் கபடம் அற்றவர்கள், வெளுத்ததெல்லாம் பால்; கருத்ததெல்லாம் காக்காய் என நம்பும் அப்பாவிகள்.
இரண்டாம் எண் நபர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானது '7' எண் ஆகும். இவர்கள் எண்கணிதப்படி அதிர்ஷ்டமாக 1ஆம் எண்ணைப் பயன்படுத்த வேண்டும். 2ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு ஆகாத தேதிகள் 9,8 ஆகும். அதேபோல் நவமித் திதியை இவர்கள் தவிர்க்க வேண்டும்.
இவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறங்கள்:- ஆழ்ந்த பச்சை, அடுத்து வெண்மை நிறமும், மஞ்சளும் பயன்படுத்தலாம்.
அதிர்ஷ்ட இரத்தினங்கள் (1) பூனைக்கண் வைடூரியம் (Cats eye stone) (2) முத்து (Pearl) (3) சந்திரகாந்தக்கல் (moon's stone) ஆகும்.
உலக உத்தமர் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்தது அக்டோபர் 2 ஆகும். இலக்கம் 2ல் பிறந்தவர் அண்ணல் அவர்கள் எழுதிய சுயசரிதை சத்தியசோதனை புத்தகத்தினை அவசியம் படிக்கவேண்டும். இவர்களுக்கு ஒரு வழிகாட்டும் நூல் இது என அறுதியிட்டுக் கூறலாம். காந்தியடிகளுக்குக் குருவாக வழிகாட்டியாக விளங்கிய திரு வினோபாபாவே செப்டம்பர் 11ம் தேதி (இலக்கம் 2) பிறந்தவர் ஆவார்.
தமிழகத்தில் டிசம்பர் 11ஆம் தேதி பிறந்த மகாகவி பாரதியார் என்றால் அவருக்குச் சிறப்பான சீடராக விளங்கிய புதுவை பூமியில் பிறந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தோற்றம் ஏப்ரல் 29ல் (2+9=11) நிகழ்ந்தது.
பாரத தேசத்தின் பிரதம மந்திரிகளாக விளங்கிய, மறைந்த லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2) மொரார்ஜி தேசாய் (பிப்ரவரி 29) இராஜிவ் காந்தி (ஆகஸ்டு 20) ஆகியோர் இலக்கம் இரண்டில் பிறந்தவர்கள்தானே!.
தமிழ்த் திரைப்பட உலகில் சிறந்த நகைச்சுவைக் கலைஞராக விளங்கிய கலைவாணர் N.S. கிருஷ்ணன் 29ஆம் தேதியில் பிறந்ததால் கருணை உள்ளத்துடன் தன்னை நாடி வந்து உதவி