Manam Ennum Arputha Sakthi
By Udayadeepan
()
About this ebook
Read more from Udayadeepan
Sakthiyulla Udalai Adaiyungal Rating: 5 out of 5 stars5/5Manithanukkulley Athisaya Sakthikal Rating: 0 out of 5 stars0 ratingsZen Thathuva Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsManithanai Kadavulakkum 6 Maha Sakkarangal Rating: 0 out of 5 stars0 ratingsArivoottum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsArasar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsTenali Raman Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Tharum Dhyanam Rating: 1 out of 5 stars1/5Endrum Sakthiyudan Irukka Vazhikal Rating: 1 out of 5 stars1/5Siruvar Neethi Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsManitha Nilaikku Appal Oru Payanam Rating: 5 out of 5 stars5/5Siththarkalin Arpudha Sithukkal Rating: 1 out of 5 stars1/5Sakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsAanmika Aatralgalal Athisiya Sakthikalai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkaiyin Thadaigalai Thaandungal Rating: 0 out of 5 stars0 ratingsThiyanathaal Ulakai Vellungal Rating: 0 out of 5 stars0 ratingsZen Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiyai Thoondum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Sakthiyudan Irukka Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsParamarthaguru Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsVeeramum Vivekamum Niraindha Vikramaadithyan Kathaikal Rating: 5 out of 5 stars5/5Akbar Birbal Stories Rating: 5 out of 5 stars5/5Thannambikkai Ennum Mahasakthi Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiyai Thoondum Arivu Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsAndraada Vazhkaiyil Vetri Pera Vazhikal Rating: 0 out of 5 stars0 ratingsUshadeepan Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsMulla Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsKundalini Sakthiyaal Ulakai Aalungal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manam Ennum Arputha Sakthi
Related ebooks
Ennangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5Manam Sinthanai Seyalpadu Rating: 0 out of 5 stars0 ratingsManathodu Oru Sitting Rating: 4 out of 5 stars4/5Manitha Nilaikku Appal Oru Payanam Rating: 5 out of 5 stars5/5ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Oru Payanam… Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Sakthi Leelai Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsVerena Neeirunthai! Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsதேடல்கள் Rating: 5 out of 5 stars5/5Krishna Jaalam Rating: 5 out of 5 stars5/5Sorgam Naduvile Rating: 0 out of 5 stars0 ratingsOru Mahaanin Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsThelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratingsThiyanathaal Ulakai Vellungal Rating: 0 out of 5 stars0 ratingsSirupanjamoolam Rating: 0 out of 5 stars0 ratingsKannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Bhagavad Gita for Dummies in Tamil Rating: 3 out of 5 stars3/5Pudhumaipithan Short Stories - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Mahashakti Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithanin Kathai Rating: 4 out of 5 stars4/5Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKantha Peruman Saritham Rating: 0 out of 5 stars0 ratingsSirikka Sindhikka 100 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5
Reviews for Manam Ennum Arputha Sakthi
0 ratings0 reviews
Book preview
Manam Ennum Arputha Sakthi - Udayadeepan
http://www.pustaka.co.in
மனம் எனும் அற்புத சக்தி
Manam Ennum Arputha Sakthi
Author:
உதயதீபன்
Udayadeepan
For more books
http://www.pustaka.co.in/home/author/udayadeepan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. மனித மனதின் பரிணாம பிறப்பு
2. மனதின் மூன்று அடுக்குகள்
3. மனதை ஒரு இலக்கில் குவிக்கும் பயிற்சி தினம் வேண்டும்
4. பாசிட்டிவ் எண்ணங்களை உங்களுக்குள்ளே உருவாக்குங்கள்
5. ஓய்வாக இருக்கையில் ஆழ் மனதுக்குள் செல்லுங்கள்
6. மனதின் தலைமைத் தகுதி
7. மனதைக் கட்டுப்படுத்தினால் அது வலிமை பெற்றுவிடும்
8. மந்திரங்களை சொல்லி மனத்தைக் கட்டுங்கள்
9. மனதுக்குள் இருவேறு சக்திகள்
10. நடக்க வேண்டியதை காட்சிகளாக நகர்த்துங்கள்
11. நல்லதும் கெட்டதும் கலந்தது மனித மனம்
12. சங்கல்பம் செய்து கொள்ளுவதில் மனோசக்தி வலிமைப்படும்
13. மனதில் நினைப்பது நிறைவேற காத்திருப்பது முக்கியம்...
14. கோடுகளும் வட்டங்களும், மனக்கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றன.
15. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!
16. மனக்கட்டுப்பாட்டை அடைய உள்ள விமர்சனமுறை
17. மனித மனதின் முரண்பாடான சக்திகள்
18. மன அழுத்தங்களை குறைக்க வழிகள்...
19. மனோசக்தியை உங்களின் வேலையாள் ஆக்குங்கள்
20. கற்பனைக்குள் செல்லுங்கள் மனம் அதை நிறைவேற்றும்
21. அரைத்தூக்கத்தில், ஆழ் மனதை தொடுங்கள்
22. கட்டுப்பாடில்லாத மனதினால், வரும் தொல்லைகள்
23. மனித மனத்தில் சுமைகளை நீக்குங்கள்.
24. மனோசக்தியை நம் நன்மைகளுக்கு பயன்படுத்துதல்
25. மனத்தை அடக்கி ஆண்டு, அளவற்ற சக்திகளை அடையுங்கள்
26. மனோசக்தியை உங்களின், ஆயுதமாக்குங்கள்
27. மனோசக்தியின் பலத்தில் தூரங்களைக் கடக்கலாம்
28. உடலற்ற உயிரில் மனித மனத்தின் பங்கு
29. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்
30. சந்திர நிலை மனம், அதிக சக்திகளைக்கொண்டது
31. மனித மரணத்திற்குப்பிறகும், மனிதமனம் இயக்கத்தில் உள்ளது
32. மனதின் வழியே விதியின் உலா
பதிப்புரை
மனித மனம் ஒரு புரியாத ரகசியச் சுரங்கம். அதி சூக்குமம், அதி ரகசியம், அதிக இருள் கொண்ட, ஆதி சக்தி இது. அதிக சக்தி, அதிக வலு கொண்ட இந்த சக்தி, ஒரு வேகமிக்க சக்தி, ஆற்றல் மிகக் கொண்ட ஒரு சக்தி.
புயல், ஆற்றின் சுழற்சி இவை போன்று, இது அதிவேக மெடுத்த நிலையில், இதில் மாட்டிக் கொண்டுவிட்ட மனிதனின்பாடு, அதோ கதிதான். இதில்விதியின்கரம், செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.
மனதை அடக்கியவர்கள் சித்தர்கள். மனதின்ரகசியம் படித்தவர்கள், அதன் போக்கு அறிந்தவர்கள், அதன் இயல்பு அறிந்தவர்கள், ஒரு சிலரே.
முரட்டுக் குதிரையை, லாவகமாக கையாளத் தெரிந்தவர்களுக்கு, அது, அவர்களை அவர்களின் வாழ்க்கை முழுக்கச் சுமந்து, அவர்களின் பயணத்திற்கு உதவக்கூடியது.
லாவகமாக கையாளத் தெரியாதவர்களின் வாழ்வு, இந்த மனச்சக்தியின் பிடியில், வாழ்க்கையாக இருப்பதில்லை. மனதில், உணர்வுகள் சேரும்போது, அது காற்றும், நெருப்பும் சேர்ந்தது போன்று, ஒரு அழிவை நிச்சயம் ஏற்படுத்தும்.
நிதானம், விவேகம், சிந்தனை, சகிப்புத்தன்மை என்ற பிரேக்குகளை மனிதன் அதிகம் அப்பியாசிக்கையில், இந்த மனம் என்னும் சக்தியின் ஒளி, மனிதனை சுபிட்ச பாதைக்கு, நிச்சயம் இட்டுச் செல்லும்.
இனி, மனதை அடக்கும் கலைகள் அடங்கிய, இப்புத்தகத்தை வாசித்து, லாவகமாகமனதை உங்களின் வேலை ஆள் ஆக்குங்கள்.
பதிப்பகத்தார்.
1. மனித மனதின் பரிணாம பிறப்பு
மனம் என்னும் சக்தி தோன்றும் முன்பு, உணர்வு என்னும் சக்திதான், உயிர்களை நடத்திச் சென்றது. தொடு உணர்வு, சுவை உணர்வு, பார்வை உணர்வு, நுகரும் உணர்வு, கேட்கும் உணர்வு, இவை படிப்படியாக உயிர்களில், 5 உணர்வுகளாக வளர்ச்சி பெற்றன.
இந்த ஐந்து உணர்வுகளும் ஒரு உயிரில் வந்து சேர்ந்தபின்பு...
இந்த அதி உணர்வுகளில், குடியிருந்த சக்தி, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பஞ்ச புலன்களின் வழியாக, வெளி உலகில் பிரவேசித்து, பஞ்ச புலன்களினால், இந்த உலகின் அறிவைப் பெற்ற பின்பு, அந்தசக்தி நல்லது கெட்டதை அறியும் மனம் ஆனது. இத்துணைமாற்றங்களும் ஒருணர்வு, ஈருணர்வு, மூன்றுணர்வு, நான்குணர்வு, ஐந்தறிவு உணர்வின் வழியாக, உயிர்களின் மனம் பிறக்க, 250 கோடி, நெடிய ஆண்டுகள் ஓடிவிட்டன.
இந்த உலகில் 84 லட்ச உயிர்கள் இருக்கின்றன. இவைகளில்...
இருந்த உயிர் என்னும் சக்தி அணுக்கள், உயிர்களின் உடலின் கூட்டுக்குள், சதா சுற்றிச் சுழன்ற வண்ணம் இருந்தன. அந்த சுழற்சியில் தோன்றிய இன்னொரு சக்தியாக, உணர்வு எனும் சக்தி, ஒவ்வொன்றாக காலப் போக்கில், ஐந்து தோன்றின.
பூமியின் ஆதிக்காலம் சுமார் 200 கோடி ஆண்டுகள் பஞ்ச...
பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்னும் ஐந்து சக்திகளாக விரிந்து கிடந்தன. காலம்ஏற்படுத்திய மாற்றங்களினால், நீரில் பாசி இனம் முதலில் தோன்றி, உயிர் இனம், இந்த உலகில் அடி எடுத்து வைத்தது.
பாசி என்னும் உயிர் இனம் பின்பு...
அமீபாவாக, ஓர் அணு உயிராக மாறி, அது உண்டு, தன் இனத்தை அபிவிருத்தி செய்து, வாரிசுகளை தன் உடலில் இருந்தே, தன் ஒரு அணுவைப் பிரித்துக் கொண்டு, பெற்றுக் கொண்டது. அதாவது ஒரு அணுவானது, இரண்டாக பிளந்து கொண்டு, தனது வாரிசை உருவாக்கியது, அமீபா.
இதன் பின்பு, உயிர்கள் அபிவிருத்தி அடைந்து நீர், நிலத்தில்...
அவை விருத்தி பெற்று, எங்கும் உயிர்கள் கிளம்பின. சுமார் 6 1/2 கோடி ஆண்டுகளுக்கும் முன்பு, மிகப் பெரிய டன் கணக்கில் எடை கொண்டு, மேகத்தில் தலை பதிக்கும் அளவுக்கு, பிரம்மாண்டமான உயரத்துடன் டைனோசார்ஸ் மிருகங்கள், தம் தம் என்று பூமியில் நடந்து வலம் வந்தன.
விண்கல் ஒன்று பூமியுடன் மோத...
அதன் விளைவால், இங்கு இப்பூமியில், டைனோசார்ஸ் மிருகங்கள் எல்லாம் அழிந்து போயின, 5 உணர்வுகளுடன் பிறந்த, மிருகக் கிளையான குரங்கின் இனவழியில், மனிதன் தோன்றி, 4 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன.
5 உணர்வுகளாக மிருகங்களில்…
நடமாடிய சக்தியே, உலகின் நல்லது கெட்டதை அறியும் சக்தியுடன், மனமாக மனிதனுள், காலப்பரிணாம மாற்றம் பெற்றது. ஒருணர்வு உயிர் ஐந்து உணர்வுகளைக் கொண்டு முழு மிருகமாக மாற, சுமார் 250 கோடிநெடிய காலத்தை அது எடுத்துக் கொண்டு, 5 கால கட்டங்களில், ஒவ்வொரு கால கட்டத்துக்கும், சுமார் 50 கோடி ஆண்டுகளை, எடுத்துக்கொண்டு வளர்ந்து நிற்கின்றது.
ஆதி உணர்வு மனிதனுள் மனம் தோன்றுவதற்கு முன்னர்...
சுமார் 250 கோடி காலம், மிருகங்களில் வாழ்ந்த, அந்த ஆதி உணர்வுகளோடு, குடியேறிவிட்ட காமம், கொலை, திருடுதல், வஞ்சம் எடுத்தல், போன்ற கெட்ட குணங்கள், மனிதனுக்குள்ளும் வந்து கலந்து கொண்டு விட்டிருக்கின்றன. அவை நிலைத்தும் விட்டிருக்கின்றன.
மனிதனுள் 5 பங்குகள் அவன் மிருகமாக வாழ்ந்த...
காலத்தின் கூறுகள் அடங்கியுள்ளன. மிருகங்களின் ரத்தம், நரம்பு, சதை, இதயத்தில் தோன்றிய அத்துணை மிருக வழியிலான, கெட்ட குணங்களும் மனிதனுள்ளும் கலந்து இருக்கின்றன. மிருகங்களே மனிதனின் மூதாதையர்கள், அந்த மூதாதையரின் மிருக வழியிலான, 5 பங்கு கால கெட்ட குணங்கள் மனிதனுள், உள்ள 6 பங்கு கால அளவில், மிக அதிக பங்கை வகிப்பதால், மெத்தப் படித்த ஒரு ஐ.ஏ.எஸ்ஸும்கூட நல்லது கெட்டது என்று பார்க்காமல், லஞ்சம் வாங்கி சிறையில் இருக்கின்றான்.
மிக நல்ல மனிதனும் அவனுக்குள் உள்ள மிருக...
உணர்வுகளின் வழிகாட்டலில் ஒரு கொலையை, இல்லை ஒரு கற்பழிப்பை, இல்லை ஒரு திருட்டை செய்துவிட்டு என்ன நடந்தது எனக்குள் என்றே தெரியவில்லை. நான் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை
. ஏதோ ஒரு உணர்வு, தவறிவிட்டேன் என்று கூறி, கண் கலங்குகின்றான்.
மனிதனை கெட்ட வகைச் செயல்களை புரியத் தூண்டியது...
அவனுக்குள் உள்ள மனித உணர்வல்ல. மனிதனது மனம் அல்ல. 250 கோடி காலம் மிருகங்கள், தன்னிஷ்டத்துக்கு அலைந்து திரிந்து செய்த, யோசிக்காத செயல்களே, மனிதனுள் கடற்கரை அலை போல, ஒன்று மாற்றி ஒன்று, அவனைத் தாக்கி, அவனை தவறுகளை தாறுமாறாகத், தாராளமாக செய்ய வைக்கின்றன.
மனித மனத்தில் கலந்துள்ள இந்த
மிருக வழி உணர்வுகளை தன் விவேகம், சிந்தனை, நிதானம், பொறுமை, தன் புத்தியை செலுத்துதல் மூலமே மனிதன், தன்னுள் மிருக உணர்வுகள் எழுந்து, தன்னைக் கெட்டச் செயல்களை, செய்வதனின்றும் தடுத்துக் கொள்ள முடியும்!