Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endrum Sakthiyudan Irukka Vazhikal
Endrum Sakthiyudan Irukka Vazhikal
Endrum Sakthiyudan Irukka Vazhikal
Ebook115 pages1 hour

Endrum Sakthiyudan Irukka Vazhikal

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

எளிமையான, நல்ல பழங்கவழக்கங்கள், எளிமையான நன்கு ஜீரணமாகும் சரிவிகித அளவை அளவாக உண்டு, மனதை அடக்கி தியானம் செய்தால், மனிதன் குறைவற்ற வாழ்க்கை வாழலாம் என்று ஆசிரியர் உதயதீபன் இந்நூலில் கூறியிருப்பது முழுக்க முழுக்க ஒரு புதுமையான முயற்சி.

இனி, இன்நூலைப் படித்து உறுதியான, வளமான வாழ்க்கை வாழ்வது அவரவர் கையில் உள்ளது.

Languageதமிழ்
Release dateSep 20, 2016
ISBN6580110801526
Endrum Sakthiyudan Irukka Vazhikal

Read more from Udayadeepan

Related to Endrum Sakthiyudan Irukka Vazhikal

Related ebooks

Reviews for Endrum Sakthiyudan Irukka Vazhikal

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endrum Sakthiyudan Irukka Vazhikal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    என்றும் சக்தியுடன் இருக்க வழிகள்

    Endrum Sakthiyudan Irukka Vazhikal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மனிதன் தன் சக்தியுடன் என்றும் இருக்க வேண்டும்

    2. பிறரிடத்தில் எதிர்பார்ப்பது, இதயத்தில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்

    3. கடந்தகால கசப்புகளை விலக்கினால், மனிதனுக்குள் சக்தி கூடும்

    5. கோபத்தில் பாழாகும், உடல் மற்றும் உள்ள உறுதிகள்

    6. பதில் பேசுபவர்கள், அடங்குவதால், அவர்களின் உள்ளத்தின், சக்தி கூடும்

    7. அதிகம் பேசுவதில் உடல், மனதில், உள்ள வலிமைகள் குறையும்

    8. தான் என்ற, ஆட்டத்தை விடுங்கள். சக்தியுடன் இருக்கலாம்

    9. சலனம் என்பது மனித சக்தியை குறைக்கும்

    10. அழகில் மூழ்காதீர்கள், அது மனித சக்தியை, உறுஞ்சி விடும்

    11. பிறரை குறைகூறி பேசுவதில், நாம் நம் சக்தியை இழக்கிறோம்

    12. மனவலிமை என்பது, பிறர் செய்த தீமைக்கு மன்னிப்பு, அளிப்பது

    13. பிறர் தவறுக்கு தண்டனை கொடுப்பதும், சக்தியற்ற, ஒரு நிலைதான்

    14. பல குழந்தைகளை, பெற்றுக் கொள்வது, வலிமைக்கு எதிரானது

    15. அவசரச் செயலில், ஒருவர் தன் சக்தியை, இழந்துவிடுவார்

    16. தான் நினைக்கிறபடி, பிறர் நடக்க வேண்டும் என்பது, ஒரு சக்தியற்ற எண்ணம்

    17. தன்னைச் சார்ந்தவருக்கு கஷ்டம் கொடுப்பது, ஒரு பெறும் பாவம்

    18. அதிகமான, மன எண்ணங்கள், ஒருவரின் மனசக்தியை கெடுக்கும்

    19. சத்தியத்தின் வழியில் நில்லுங்கள், உங்களின் சக்தி, நிலைக்கும்

    20. பிரச்சனைகளை, லைட்டாக எடுத்துக் கொண்டால், நம் சக்தியால், அவற்றை வெல்ல முடியும்

    21. எளிமையான பழக்கங்களால், சக்தியுடன் வாழ முடியும்

    22. வலுவான மனநிலைக்கு, அத்தியாவசியமான தேவைகள்

    23. சக்தி என்றைக்கும் குறையாமல், இருக்க வழிகள்

    24. புதுசக்திகளைப் பெற, எண்ணங்களையும், மொழிகளையும், கடந்து செல்லுங்கள்

    25. மகா சக்திகளைப் பெற, உண்மைக்குள்ளே, செல்லுங்கள்

    1. மனிதன் தன் சக்தியுடன் என்றும் இருக்க வேண்டும்

    மனிதன் சக்தியுடன் இருக்கவில்லை..

    கரையை அறிக்கும் கடல் அலைபோல, மனித மனதின் திடத்தை, வலுவை, சூழ்நிலைகள் பெரிதும் அழித்து விடுகின்றன. கல்யாணத்துக்கு முந்தி வரைக்கும் உறுதி, திடத்துடன் இருக்கும் மனிதன், கல்யாணத்திற்குப் பிறகு, வாழ்க்கையில் ஈடுபட்ட பிறகு, பிள்ளைக் குட்டிகள், மனைவி, குடும்பப் பொறுப்பில் ஈடுபடுகிறபோது, அவனைச் சுற்றியுள்ள சிக்கல்கள், பிரச்சினைகள் அவனை படுத்தி, தூக்கி தூண்டில் மாட்டி, அவனை தூக்கில் துடிக்க வைக்கிறபோது, மனிதன் அதில் துடித்து, துடித்து தானே, தன் வளமைகளை இழந்துவிட்டு, சவசவத்து தனது வலிமைகளை, அவன் இழந்து போகிற, ஒரு கொடுமை, ஒவ்வொரு மனிதனுக்கும், நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

    வயது 60 ஆகிறபோது, வாரிசுகள்...

    பெரியவர்களாகி விட்டிருக்கிறபோது, குடும்பத்தின் தலைமையை, தனது பையனோ, பெண்ணோ எடுத்துக் கொள்கிறபோது, குடும்பத்தில் இருக்கும் வயதான பெற்றோர்கள், ஒதுங்கி ஒதுக்குப்புரத்துக்கு தள்ளப்படும் கொடுமை, ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும், ஒரு தவிர்க்க முடியாத பிரச்சினை தான்.

    தன் வாரிசுகளுக்கு, கல்யாணம் நடந்து...

    அவர்களின் வாழ்க்கைத் துணையின் வழிகாட்டலில், வாழ்க்கையின் ஓடம், படகு வளிக்கப்படும்போது, அங்கு இருவரின் முக்கியத்துவம் கண்டிப்பாக, அவசியம் ஆகின்றது!

    கட்டிய மனைவி, நல்ல நிறம் கட்டழகு...

    என்றால், மகன் அவள் மடியில் விழுவது, தவிர்க்க முடியாத ஒரு வலியாகிவிடும். கட்டழகு மனைவியின், சுண்டு விரல் கட்டளைகளில், அவன் உங்களுக்கு வயசாச்சே தவிர்த்து, இங்கிதமாக நடந்து கொள்ள, உங்களுக்கு, ஏனப்பா மனசில்லை. இப்படியே நீங்கள் இருந்தால், நீங்கள் இங்கே தொடர்ந்து இருக்க முடியாதப்பா, பார்த்துக்கங்க என்பான், ஒரு ஆண்பிள்ளை.

    இந்த ஒரு சொல், தாய், தந்தையரை...

    உயிரோடு எரித்தே கொன்றுவிடும். தாங்கள் இவனை பெற்றெடுக்க, இவனை சிறு குழந்தையில் இருந்து வளர்க்க, பின்பு படிப்பு படிக்கவைக்க, அதுக்கு இவனுக்கு உரியதை அளிக்க, இவர்கள் பட்ட கஷ்டத்திற்கான விடிவுதானா, இந்த அவனது மதிப்பில்லாத வார்த்தைகள், என்று நினைக்கிற போது, அவர்களுக்குள்ளே ஒரு முழுமையான சித்திரவதைகள், அவர்களின் உள்ளத்திற்குள்ளே பேயாட்டம் ஆடும்.

    மகனை, தங்களை விட்டு, மனைவி பிரிக்கட்டும்...

    ஆனால், இவன் ஏன் இப்படி தங்களிடத்தில், நடந்து கொள்ள வேண்டும்? இவன் தங்களின் உழைப்பை, தியாகத்தை எல்லாம், எப்படி மறக்க முடிந்திருக்கிறது?.

    எண்ணி எண்ணி, பெருமூச்சு விட்டுத்தான்...

    இனி பொழுது விடிகிறது! இந்த துன்பத்திற்கான விடிவு மட்டும், இனி இல்லை. இனி கவலை தான், தங்களது வயதான காலத்தில், தங்களது துணை என்று, கலங்கும் பெற்றோர்கள். இவர்கள் செய்த தவறுகளே, இவர்களுக்கு இத்தகு நிலையை, கொடுத்திருக்கிறது.

    எப்போது வாலிபத்தில், இருக்கிற மகனுக்கு...

    ஒரு பெண்ணைக் கட்டி, வைத்து விட்டோமோ, அப்பொழுதே அவர்களை, தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, மகனுக்கும், தங்களுக்கும் உள்ள உறவு, அவ்வப்போது வாரம் ஒருமுறை பார்த்துக் கொள்ளக்கூடிய, ஒரு உறவாக அமைத்துக் கொண்டிருந்தால், மகனின் வார்த்தைகளில் அம்மா அப்பாவை, தன்னை விட்டுப் பிரித்துப் பார்த்து பிரிக்கும், ஒரு நிலை தோன்றியே இருக்காது.

    மகன், தங்களின் அருகினில், இருக்கத்தான்...

    வேண்டும்! தினம் அவன் முகத்தைக் காணாமல், தங்களால் இருக்கமுடியாது. அவன் தோற்றத்தை, நடையை, தாங்கள் கண்டுகொண்டே, இருக்க வேண்டும், என்று எண்ணும் பெற்றோர்களின், அதீத மகன் பற்றிய பாசமும், மகனை விட்டுப் பிரியாமல், அவன் மகன் என்று, தாங்கள் வளர்த்த உரிமையில், இவர்கள் குறுக்கிடும், ஒவ்வொரு வாழ்க்கையின் குறுக்கீடும், மருமகளுக்குப் பிடிக்காமல் போகும், ஒரு உண்மையை, இவர்கள் உணராமல் விடும்போது, அங்கே பிரச்சினை, மருமகள் வழியாக, பெற்றவர்கள் பிள்ளைகளை பிரிக்கும் நிலைக்கு, கொண்டு வந்து விட்டு விடும்.

    மகன் என்றாலும், அவனை தனிக் குடித்தனம்...

    வைத்துவிட்டு, தான் ரிடையரான பணத்தில், ஒரு 10 லட்சத்தை, தன் பெயரில் வங்கியில் போட்டுக் கொண்டு, தன் கவுரவத்தை கட்டிக் காத்து, வங்கியில் இருந்து வரும், மாத வட்டியில்,

    Enjoying the preview?
    Page 1 of 1