Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siruvar Neethi Kathaikal
Siruvar Neethi Kathaikal
Siruvar Neethi Kathaikal
Ebook154 pages1 hour

Siruvar Neethi Kathaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580110801464
Siruvar Neethi Kathaikal

Read more from Udayadeepan

Related to Siruvar Neethi Kathaikal

Related ebooks

Reviews for Siruvar Neethi Kathaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siruvar Neethi Kathaikal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    சிறுவர் நீதிக் கதைகள்

    Siruvar Neethi Kathaikal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அச்சம்!

    2. ஆட்டைக் காணோம்!

    3. அடைந்ததை அழித்தல்

    4. உடைந்த பானை!

    5. உண்மையைச் சொல்கிறேன்!

    6. உதவி

    7. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

    8. காகமும் நாய்க்குட்டியும்

    9. கெட்டிக்கார சேவல்

    10. குரங்கும் இரண்டு பூனைகளும்

    11. கர்வம்

    12. கழுகு

    13. கொடிய பாம்பும் முனிவரும்

    14. சகுனி!

    15. சிங்கத்தின் உறுதிமொழி

    16. சுயபுத்தி!

    17. சொத்து வழக்குகளில் ஜெயிப்பவர்கள் - வக்கீல்கள் மட்டுமே!

    18. சோம்பேறி

    19. சொர்க்கமும் நரகமும்!

    20. திருந்திய திருடன்

    21. துன்பம்

    22. தேவதையின் தீர்ப்பு

    23. தோட்டக்காரனும் குரங்கும்

    24. நண்பா!

    25. நாவினால் சுட்ட வடு

    26. நன்றி மறந்த சிங்கம்

    27. நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது!

    28. நேர்மை

    29. பட்டுப் புழு!

    30. பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும்

    31. பாட்டி வடை சுட்ட கதை

    32. புகழ் போதை

    33. புகழ்ச்சிப் பேச்சில் ஏமாறலாமா?

    34. புத்திசாலி ஜிட்டு

    35. பேராசை பெரும் நஷ்டம்

    36. பொன் முட்டையிடும் வாத்து

    37. மனத்திருப்தி

    38. முட்டா! குட்டா!

    39. முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்

    40. முட்டாள்!

    41. மேதைகள்

    42. யார் அழகு?

    43. யார் சிறந்தவர்?

    44. ராஜா நல்ல ராஜா!

    45. வலிமை

    46. வன்முறைக்குத் தண்டனை மரணம்

    47. விமர்சனம்

    சிறுவர் நீதிக்கதைகள்

    1. அச்சம்!

    ஒரு மடத்தில் துறவி ஒருவர் இருந்தார். நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்று வந்தனர்.

    சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், எல்லாத் தீமைகளுக்கும் அச்சம்தான் அடிப்படைக் காரணம்; அச்சத்தால் வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம் எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது என்றார்.

    குறுக்கிட்ட சீடர் ஒருவர், ஐயா! அச்சத்தால் பேராசை உண்டாகும் என்கிறீர்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.

    அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.

    அன்றிரவு வழக்கம் போலத் துறவியும், சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர்.

    அப்போது துறவியிடம் வந்த சமையல்காரர், மடத்தில் அரிசி தீர்ந்து விட்டதை நான் கவனிக்கவில்லை. இருந்த அரிசியை வைத்து இரவு சமையலை முடித்துவிட்டேன். நாளை நகரத்திற்குச் சென்று அரிசி வாங்கி வந்தால்தான், சமையல் செய்ய முடியும். நண்பகலில் தான் உணவு தயாராகும். காலை உணவு சமைக்க வழி இல்லை என்றார்.

    பிறகு, அவர் எல்லாருக்கும் உணவு பரிமாறினார்.

    துறவியும், சீடர்களும் உண்டு முடித்தனர்.

    சீடர்களைப் பார்த்து துறவி, இன்று நீங்கள் அனைவரும் வழக்கத்தை விட அதிகமாகச் சாப்பிட்டு உள்ளீர்கள் ஏன்? என்று கேட்டார்.

    நாளை காலையில் உணவு கிடையாது என்று சமையல்காரர் சொன்னார். காலையில் பட்டினி கிடக்க வேண்டி இருக்கும். அதனால், இப்போது அதிகமாகச் சாப்பிட்டு விட்டோம் என்றான் சீடர்களில் ஒருவன்.

    "நாளை காலையில் உணவு கிடைக்காது என்று அச்சம் கொண்டீர்கள். அதனால் வழக்கத்தை விட அதிகமாகச் சாப்பிட்டீர்கள். அச்சத்தால் பேராசை வரும் என்பதை இப்போது

    புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா?" என்றார் துறவி.

    பாடம் : அச்சத்தால் பேராசை வரும் என்பதை ஒப்புக் கொண்டனர் சீடர்கள்.

    2. ஆட்டைக் காணோம்!

    முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே. இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.

    அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது.

    ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.

    அப்பொழுது, அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.

    அதற்கு முனிவர், "மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை

    மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.

    நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்" என்றார்.

    அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

    மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று? என்றன.

    உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார் என்றன.

    அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.

    நீதி : நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.

    3. அடைந்ததை அழித்தல்

    ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது.

    ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப் பார்த்து, "நீ என் விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது.

    பழங்களை முதலை சாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல்மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி இன்புற்றுக் காலம் கடத்தி வந்தன. தான் சாப்பிட்டதுபோக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டுபோய் தன் மனைவிக்குக் கொடுத்து வந்தது.

    ஒருநாள் முதலையின் மனைவி, "அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது?’’ என்று முதலையைக் கேட்டது.

    "அன்பே, ரக்தமுகன் என்றொரு குரங்கு இருக்கிறது. அது என் நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தருகிறது’’ என்றது முதலை.

    அதற்கு முதலையின் மனைவி, "அமிர்தம்போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1