Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pappa Magizha 10 Kathaigal
Pappa Magizha 10 Kathaigal
Pappa Magizha 10 Kathaigal
Ebook96 pages31 minutes

Pappa Magizha 10 Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சின்ன வயதில் சிறுவர் மனத்தில் விதைக்கப்படும் நல்ல பண்புகள் என்னும் விதைகள், விரைந்து வளர்ந்து, விருட்சமாகி நிலைத்து நிற்கும். இந்த விதைகளாகப் பயன்படுபவை சிறந்த முறையில் எழுதப்பட்ட சிறுவர் கதைகளே என்பதில் ஐயமில்லை. எனவே குழந்தைகள் படிக்கும் பழக்கத்தைப் பெறுவதற்கு முன்பே அவைகள் கேட்டு மகிழுமாறு நல்ல கதைகளை நம் தாய்மாரும் பாட்டிகளும் சொல்லி வந்தனர். “பாப்பா மகிழ பத்துக் கதைகள்” என்னும் இந்நூல், திரு. எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், வானொலியில் குழந்தைகளுக்காகக் கூறிய கதைகளின் தொகுப்பாகும். பாப்பாக்களுக்கு விலங்குகளையும், பறவைகளையும் மிகுதியாகப் பிடிக்கும். இந்நூலிலும் எட்டு கதைகளில் விலங்குகள், பறவைகள் வருகின்றன.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580160409399
Pappa Magizha 10 Kathaigal

Read more from S.R.G. Sundaram

Related to Pappa Magizha 10 Kathaigal

Related ebooks

Reviews for Pappa Magizha 10 Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pappa Magizha 10 Kathaigal - S.R.G. Sundaram

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    பாப்பா மகிழ 10 கதைகள்

    சிறுகதைகள்

    Pappa Magizha 10 Kathaigal

    Sirukadhaigal

    Author:

    எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்

    S.R.G. Sundaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/srg-sundaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் சிறப்பு

    மதிப்புரை

    நூலாசிரியர் உரை

    1. வெல்லக்கட்டி ஒரு செல்லக்குட்டி

    2. வீணா வீட்டு லட்டு

    3. தத்தி வந்த தவளையார்

    4. புத்திசாலி பவானி

    5. நல்ல எருமை- நல்ல யானை

    6. பறக்கும் மிட்டாய்ப் பொட்டலம்

    7. ஓர் அதிசய எலி

    8. குருவிக்கூட்டில் சிவிங்கிக்குட்டி

    9. காகம் தந்த பாடம்

    10. விருந்தோ விருந்து

    பயிற்சி செய்து பழகுவோம்!

    குழந்தைகளின் அறிவுப் பசிக்குப் போதிய உணவளிக்கப்பட வேண்டும். இல்லையெனில், குழந்தைகளின் மனம் சரியான வழியில் செல்லாமல் கோணல் வழியில் செல்லும். அப்பொழுது வருந்திக் கவலைப்படுவது நோய் வந்தபோது கவலைப்படுவது போன்றது.

    டாக்டர் மு. வரதராசனார்

    ஆசிரியர் சிறப்பு

    குழந்தை இலக்கியச் செம்மல், கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், எம்.ஏ;

    (அகவை 83ல்)

    பிறந்தநாள்: 21.08.1940

    1. குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும் என்பதே இவரது குழந்தை இலக்கியப் படைப்புகளுக்கு ஆதாரமான கொள்கை.

    2. தன் பதினேழாவது அகவை முதல் இன்றுவரை தொடர்ந்து குழந்தை இலக்கியத்திற்கானப் பன்முகப் படைப்புகளில் ஈடுபட்டு வருகிறார். கதை, பாடல்கள், நாடகங்கள், விடுகதைகள், கட்டுரைகள் நூல்கள் எனப் பலப்பல.

    3. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, புலவர் தணிகை உலகநாதன், ரா. அய்யாசாமி (வானொலி அண்ணா), கூத்தபிரான் - இவர்களது வழிகாட்டுதலால் தன் குழந்தை இலக்கியப் பாதையை வகுத்துக் கொண்டவர்.

    4. குழந்தை இலக்கியத்தின் அவசியம், அதன் சிறப்பு, தமிழ் மொழிப்பற்று இவை பற்றிய சித்தனைகளைப் பரப்பி வருகிறார்.

    5. குழந்தை இலக்கிய எழுத்தாளராக, சிறுவர் சங்க அமைப்பாளராக, குழந்தைகளுக்கான நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நூல்கள் படைப்பவராக, பல பிரபல நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளுக்கு நடுவராக எனக் குழந்தை இலக்கியப் பணியில் பல கோணங்களில் ஆர்வமுடன் இன்றும் செயலாற்றி வருகிறார்.

    6. பொதிகை, ஜெயா, மக்கள், கலைஞர் தொலைக்காட்சிகளும், சென்னை வானொலியும், தென்றல் (வட அமெரிக்க மாத இதழ்) தினமணி, இலக்கியப்பீடம், உரத்த சிந்தனை, பொதிகை மின்னல், ஆத்திமாலை, அமுதசுரபி, சென்னை எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளும் இவரைப் பேட்டி கண்டுள்ளன. அளித்துள்ள பேட்டிகள்: 18.

    7. இவரது சிறுகதைகளையும், நாடகங்களையும் ஆய்வு செய்து இருவர் ‘எம்.ஃபில்.’ முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    8. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு சார்ந்த பத்து நாள் குழந்தை இலக்கியப் பட்டறையில் கலந்துகொண்டு கதையாக்கம் பற்றி உரையாற்றி, கதைகள் புனைந்து தந்துள்ளார்.

    9. அரசு மற்றும் தனியார்துறை இவருக்களித்துள்ள விருதுகள் பல. அவற்றுள் வள்ளியப்பா இலக்கியவட்ட விருது, என்.சி.இ.ஆர்.டி(NCERT) விருது, சென்னைத் துறைமுக விருது, பாரதி பணிச்செல்வர் விருது, கவிமாமணி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    10. சிறுவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 21

    11. பெரியவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 10

    12. பல நூல்கள் ஏறக்குறைய ஐம்பது பள்ளிகளில் துணைப்பாட நூல்களாக இருந்து வந்துள்ளன.

    13. இவரது படைப்புகள் வெளியாகியுள்ள சிறுவர் ஏடுகளும் பல. அண்மையில் வானொலியிலும் (நவம்பர் 2022, பிப்ரவரி 2023), பொதிகை தொலைக்காட்சியிலும் (பிப்ரவரி 2023), சிறுவர் நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.

    14. பல பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

    15. என்.சி.இ.ஆர்.டி.(NCERT) விருது பெற்ற பாப்பா மகிழ பத்துக் கதைகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.

    16. படைத்துள்ள சிறுவர் இலக்கிய நூல்கள் - 16, பெரியவர் இலக்கிய நூல்கள் - 9.

    17. புத்தகப் பூமாலை எனும் இவரது நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் சிகரம் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கு,

    Enjoying the preview?
    Page 1 of 1